Jump to content

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து


Recommended Posts

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

உலக சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை தயாரித்துள்ளனர்.
மருந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
 

ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி அதன் ஒரு ''மேஜிகல்' பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாகளை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வான்கோமைசினின் புதிய பதிப்பானது வித்தியாசமான வழிகளில், சுமார் ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலுடன் தாக்கும். அதனால் நோய் தொற்றுகள் இந்த மருந்தை எதிர்த்துப் போராடுவது என்பது சிரமம்தான்.

ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் பாக்டீரியாகள்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது ஆயிரம் மரணங்களை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

http://www.bbc.com/tamil/science-40089639

Link to comment
Share on other sites

 

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் உலகளாவிய அளவில் மூன்று நொடிகளுக்கு ஒருவர் நோய் எதிர்ப்பு மருந்து பலனளிக்காததால் உயிரிழப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசின் ஆய்வொன்று கணக்கிட்டிருக்கிறது.

எனவே நோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பதை பிரிட்டிஷ் மருத்துவர்கள் குறைக்கவேண்டுமென இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவை அழுத்தம் தருகிறது.

அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ்ஆய்வக விஞ்ஞானிகள் தற்போதைய நோய் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றை மாற்றியமைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பாக்டீரியாவுக்கு எதிரான தன் வீரியத்தை இந்த மருத்து இழந்துவிட்டிருந்த நிலையில் மாற்றப்பட்ட புதுரக மருந்தான வான்கோமைசின் தற்போது மிக வீரியமானதாக மாறியிருப்பதால் அதை அதிசயமருந்து என்று அவர்கள் அழைக்கின்றனர்.


முன்பைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்திவாய்ந்த இது மூன்று வழிகளில் செயற்படுவதால் குறிப்பிட்ட ரக பாக்டீரியாவால் தாக்கு பிடிக்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட மருந்தை மருத்துவர்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு முக்கியமான முன்னேற்றம் தான் என்றாலும் காசநோய், மலேரியா, எயிட்ஸ் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துகள் படிப்படியாக செயலிழந்துவரும் போக்கு மருத்துவ உலகின் கவலையை நீடிக்கவே செய்கிறது.

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இது ஒரு பழைய செய்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் இது பற்றி அறிய விரும்புகிறேன் ... மூலம் ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்படி ஒரு பரீட்ச்சார்த்தம் 3 மாதம் முன்பு வெற்றி கண்டது 
வெற்றி என்பது ..... செயல்பட கூடிய சாத்தியம் கண்டு அறியப்பட்டது 
ஆனால் அதன் பக்க விளைவுகள் ....
எப்படி செயல் படும் என்பதட்கான ஆய்வுகள் என்பன இன்னமும் 
சரியாக முடியவில்லை.

இந்த படிப்பில் இருக்கும் ஒரு பார்மா கொம்பனியின் பங்குகள் வாங்கி இருந்தேன் 
மேற்கொண்டு சாத்தியமான முன்னேற்றமான செய்தி எதையும் அவர்கள் இன்னமும் 
பல வாரமாக வெளிவிடாததால் பங்கு சரிந்துகொண்டு வருகிறது 
எனக்கும் நிறைய பண நட்டமாக போய்க்கொண்டு இருகிறது. 

இப்போது இந்த செய்தியை இங்கு பார்க்கும்போது குழப்பமாக இருக்கிறது. 

Scientists and physicians at University of California San Diego School of Medicine, working with colleagues at the U.S. Navy Medical Research Center -- Biological Defense Research Directorate (NMRC-BDRD), Texas A&M University, a San Diego-based biotech and elsewhere, have successfully used an experimental therapy involving bacteriophages -- viruses that target and consume specific strains of bacteria -- to treat a patient near death from a multidrug-resistant bacterium.

The therapeutic approach, which has been submitted to a peer-reviewed journal, is scheduled to be featured in an oral presentation at the Centennial Celebration of Bacteriophage Research at the Institute Pasteur in Paris by Biswajit Biswas, MD, one of the case study's co-authors and chief of the phage division in the Department ?Genomics and Bioinformatics at NMRC-BDRD. April 27 is Human Phage Therapy Day, designated to mark 100 years of clinical research launched by Felix d'Herelle, a French microbiologist at Institute Pasteur who is credited with co-discovering bacteriophages with British bacteriologist Frederick Twort.

Authors say the case study could be another catalyst to developing new remedies to the growing global threat of antimicrobial resistance, which the World Health Organization estimates will kill at least 50 million people per year by 2050. Based on the success of this case, in collaboration with NMRC, UC San Diego is exploring options for a new center to advance research and development of bacteriophage-based therapies.

"When it became clear that every antibiotic had failed, that Tom could die, we sought an emergency investigational new drug application from the FDA to try bacteriophages," said lead author Robert "Chip" Schooley, MD, professor of medicine, chief of the Division of Infectious Diseases in the UC San Diego School of Medicine and primary physician on the case.

original_84317861.png?1495817825

AmpliPhi Biosciences Corporation (APHB)

0.75-0.05 (-6.86%)
As of 1:13PM EDT. NYSE MKT Real Time Price. Market open.
 
 
 
 
 
Link to comment
Share on other sites

37 minutes ago, Maruthankerny said:

இந்த செய்தியை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இது ஒரு பழைய செய்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் இது பற்றி அறிய விரும்புகிறேன் ... மூலம் ஒன்றும் கிடைக்கவில்லை.

 
 

https://www.theguardian.com/society/2017/may/29/modified-antibiotic-brings-fresh-hope-to-battle-against-drug-resistance

http://www.genengnews.com/gen-news-highlights/vancomycin-modified-to-combat-growing-antibiotic-resistance-threat/81254414

http://www.bbc.com/news/health-40091179

 

Link to comment
Share on other sites

நன்றி நிழலி.. நானும் இதைத்தான் தேடி இணைக்க முற்படும்போது நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

3 minutes ago, நிழலி said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

1 hour ago, நவீனன் said:

நன்றி நிழலி.. நானும் இதைத்தான் தேடி இணைக்க முற்படும்போது நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

 

இது ஏற்கனவே இருந்ததுதான் 
இப்போ மோடிபாய்ட் பண்ணி இருக்கிறார்கள்.
பக்ரியாவும் தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது 
இப்போது இருக்கும் பாக்டீரியா விற்கு உகந்தாற்போல் வடிமைத்து இருக்கிறார்கள்.
இது பழைய செய்திதான் 
இப்போதான் மார்க்கெட்டிங் இற்கு வருகிறது ...இப்போ பார்மசியில் இதை வாங்க முடியும்.
அதைத்தான் செய்தி ஆக்கி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

நான் இந்த தலைப்புக்குள்ளேயே நின்றுவிடடேன் ....அதுதான் குழப்பம்.

இன்னொன்று முயறசித்து வருகிறார்கள் ..அதுதான் நான் கூறியது.
நாம் ஏற்கனவே அண்டி பயாட்ரிக்  எடுத்து இருப்பின் ... அப்போது 
சில பாக்ட்ரியா மற்றும் வைரஸ்கள் அதை எதிர்த்து வெல்லுகின்றன 

இப்போது இன்னொரு ஆன்டி பயோட்டிக்கை எமது உடல் ஏற்றுக்கொள்ளாது 
எமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் அது அழிக்க முற்படும் 
அப்போது எமது உடல் சிஸ்டம் மேலும் பாதிப்பை அடையும் 
அப்படி ஆன்டி பயாடிக் ரெஸிஸ்டண்ட்ஸால் பல மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது 

எம்மை போல தேசம் விட்டு தேசம் வாழ்வோருக்கு இதில் இன்னமும் நிறைய 
ஆபத்து உண்டு காரணம் எமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தற்போதைய 
தேசத்து பாக்டீரியாவிலும் கொஞ்சம் வித்தியாசமக இருக்கும் அதே நேரம் 
எமக்கு இப்போ ஏற்பட்ட தொற்று நோய் என்பது புதிய தேசத்தின் பாக்டீரியாவாக இருக்கும் 
அப்போ இரண்டுக்கும் இடையேயான ஒரு குழப்பம் உடலில் தோன்ற சாத்தியம் அதிகம்.

ஏற்கனவே உடலில் இருக்கும் ஆண்டி பயோட்ரிக்கை செயல் இழக்க செய்து 
உடலுக்கு பாதகம் இல்லாமல் இன்னொரு ஆண்டிபயாடிக் மூலம் பாக்டீரியாவை அழிப்பது 
என்பதுதான் நான் ... கூறிய விடயம்.
அதன் முழு ஆய்வும் இன்னமும் முடியவில்லை.
முடிந்தால்தான் நானும் கொஞ்சம் மீளலாம். 

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் விடயம் தொடர்பான செய்தியையும் நான் இங்கு இணைத்த நினைவு இருக்கு. தேடி பிடித்தால் இங்கு இணைத்து விடுகிறேன்.

6 minutes ago, Maruthankerny said:

 

இது ஏற்கனவே இருந்ததுதான் 
இப்போ மோடிபாய்ட் பண்ணி இருக்கிறார்கள்.
பக்ரியாவும் தன்னை மாற்றி கொண்டே இருக்கிறது 
இப்போது இருக்கும் பாக்டீரியா விற்கு உகந்தாற்போல் வடிமைத்து இருக்கிறார்கள்.
இது பழைய செய்திதான் 
இப்போதான் மார்க்கெட்டிங் இற்கு வருகிறது ...இப்போ பார்மசியில் இதை வாங்க முடியும்.
அதைத்தான் செய்தி ஆக்கி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

நான் இந்த தலைப்புக்குள்ளேயே நின்றுவிடடேன் ....அதுதான் குழப்பம்.

இன்னொன்று முயறசித்து வருகிறார்கள் ..அதுதான் நான் கூறியது.
நாம் ஏற்கனவே அண்டி பயாட்ரிக்  எடுத்து இருப்பின் ... அப்போது 
சில பாக்ட்ரியா மற்றும் வைரஸ்கள் அதை எதிர்த்து வெல்லுகின்றன 

இப்போது இன்னொரு ஆன்டி பயோட்டிக்கை எமது உடல் ஏற்றுக்கொள்ளாது 
எமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவையும் அது அழிக்க முற்படும் 
அப்போது எமது உடல் சிஸ்டம் மேலும் பாதிப்பை அடையும் 
அப்படி ஆன்டி பயாடிக் ரெஸிஸ்டண்ட்ஸால் பல மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது 

எம்மை போல தேசம் விட்டு தேசம் வாழ்வோருக்கு இதில் இன்னமும் நிறைய 
ஆபத்து உண்டு காரணம் எமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தற்போதைய 
தேசத்து பாக்டீரியாவிலும் கொஞ்சம் வித்தியாசமக இருக்கும் அதே நேரம் 
எமக்கு இப்போ ஏற்பட்ட தொற்று நோய் என்பது புதிய தேசத்தின் பாக்டீரியாவாக இருக்கும் 
அப்போ இரண்டுக்கும் இடையேயான ஒரு குழப்பம் உடலில் தோன்ற சாத்தியம் அதிகம்.

ஏற்கனவே உடலில் இருக்கும் ஆண்டி பயோட்ரிக்கை செயல் இழக்க செய்து 
உடலுக்கு பாதகம் இல்லாமல் இன்னொரு ஆண்டிபயாடிக் மூலம் பாக்டீரியாவை அழிப்பது 
என்பதுதான் நான் ... கூறிய விடயம்.
அதன் முழு ஆய்வும் இன்னமும் முடியவில்லை.
முடிந்தால்தான் நானும் கொஞ்சம் மீளலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

நீங்கள் சொல்லும் விடயம் தொடர்பான செய்தியையும் நான் இங்கு இணைத்த நினைவு இருக்கு. தேடி பிடித்தால் இங்கு இணைத்து விடுகிறேன்.

 

நன்றி அண்ணா !
தேவை இல்லை அந்த செய்தியை நான் தினமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் ....

இந்த செய்தியை பார்த்தவுடன் ...எனக்கு ஒரு சிறிய குழப்பம் வந்துவிட்ட்து 
அதுதான் அப்படி எழுதினேன்.

இது வேறு 
அது வேறு என்பதை நிழலி இணைத்த பின்பு தெரிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.