Jump to content

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு


Recommended Posts

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு

 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு
 
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா அணியில் மோர்னே மோர்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:-

1. ஜேசன் ராய், 2. ஹேல்ஸ், 3. ஜோ ரூட், 4. மோர்கன், 5. பேர்ஸ்டோவ், 6. பட்லர், 7. ரஷித், 8. வில்லே, 9. ரோலண்ட்- ஜோன்ஸ், 10. ஜேக் பால், 11. பின்.

தென்ஆப்பிரிக்கா அணி:-

1. டி காக், 2. அம்லா, 3. டு பிளிசிஸ், 4. டி வில்லியர்ஸ், 5. மில்லர், 6. டுமினி, 7. கிறிஸ் மோரிஸ், 8. பர்னெல், 9. மகராஜ், 10. ரபாடா, 11. மோர்னே மோர்கல்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29153635/1087823/ENGvSA-south-africa-won-toss-and-select-field.vpf

England 139/8 (29.2 ov)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 (31.1)

Link to comment
Share on other sites

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

 

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா.

 
3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
 
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

201705292213540591_1-parnell-s._L_styvpf
3 விக்கெட் வீழ்த்திய பர்னெல்

தொடக்கத்திலேயே இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ரபாடா வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ராய் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பர்னெல் வீசிய 2-வது ஓவரின் 5-வது பந்தில் ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

201705292213540591_1-bairstow-s._L_styvp
51 ரன்கள் அடித்து இங்கிலாந்து ஸ்கோர் உயர காரணமாக இருந்த பேர்ஸ்டோவ்

பர்னெல் வீசிய 4-வது ஓவரின் கடைசி பந்தில் மோர்கன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரபாடா வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தில் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பட்லர் 4 ரன்னிலும், ரஷித் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியே இங்கிலாந்து அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.

201705292213540591_1-roland-s._L_styvpf.
37 ரன்கள் அடித்த ரோலண்ட்- ஜோன்ஸ்

7-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வில்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வில்லே 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த அறிமுக வீரர் ரோலண்ட்-ஜோன்ஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 51 ரன்கள் எடுத்து வெளியேற, ரோலண்ட்-ஜோன்ஸ் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை போராட, மற்றவர்கள் அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து அணி 31.1 ஓவரில் 153 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

201705292213540591_1-amla-s._L_styvpf.gi
55 ரன்கள் விளாசிய ஹசிம் அம்லா

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 9 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பர்னெல், மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 95 ரன்கள் குவித்தது. அம்லா 55 ரன்கள் எடுத்த நிலையில் ரோலண்ட்-ஜோன்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். டி காக் 34 ரன்கள் எடுத்த நிலையிலும், டு பிளிசிஸ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினார்கள்.

201705292213540591_1-kock-s._L_styvpf.gi
34 ரன்கள் எடுத்த டி காக்

4-வது விக்கெட்டுக்கு டுமினியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டி வில்லியர்ஸ் அணியை 28.5 ஓவரிலேயே வெற்றிபெற வைத்தார். தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 27 ரன்னுடனும், டுமினி 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், தொடரை 2-1 என வென்றது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29221351/1087910/3rd-ODI-england-just-156-runs-allout.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.