Jump to content

'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி


Recommended Posts

'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி

 

டி.டி.வி.தினகரன்

 

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துவருகின்றனர். அப்போது, மெலிந்து காணப்பட்ட டி.டி.வி. தினகரனிடம், 'அண்ணனை இப்படியா நாங்க பார்க்கணும்' என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். 

 இரட்டை இலை சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க, டெல்லி ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்ததாக போலீஸார் டி.டி.வி.தினகரனை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், சிறைக்குச் சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். 
 சமீபத்தில், டெல்லிக்குச் சென்ற டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், அவரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மெலிந்திருப்பதைக் கண்ட அவர்கள், 'அண்ணனை இப்படியா நாம பார்க்கணும்' என்று சொல்ல, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரைச் சந்தித்தவர்களின் கண்களில் நீர் கசிந்தன. அதைச் சமாளித்த டி.டி.வி.தினகரன், 'நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீர்களா' என்று விசாரித்துள்ளார். அதற்கு அவர்களும் 'ஆமாம்'  என்று தலையசைத்துள்ளனர். அடுத்து அவர்களது பேச்சு, அரசியலுக்குத் தாவியது. 


 இதுகுறித்து டி.டி.வி. தினகரனைச் சந்தித்தவர்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரன், யாரையும் சந்திக்க விரும்பவில்லை'' என்ற தகவலால் நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மன்னார்குடியின் முக்கிய விவிஐபி ஒருவர், டி.டி.வி.தினகரனைச் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் இருவரும், மனம்விட்டு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அ.தி.மு.க-வில் மன்னார்குடி குடும்பம் சார்பில் திவாகரனை பவர் சென்டராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரம்கட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சில அமைச்சர்கள் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளனர். கட்சிக்கு துரோகம்செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் ஒன்றிணையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 
 டி.டி.வி.தினகரனைச் சந்திக்க நாங்கள் தூதுவிட்டிருந்தோம். அதற்கு  டெல்லியிலிருந்து அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் சென்று அவரை சிறையில் சந்தித்தோம். அப்போது, அவர் மெலிந்து காணப்பட்டார். முகத்திலும் ஒருவித சோகம் தெரிந்தது. ஆனால், அதை எல்லாம் எங்களிடம் காட்டிக்கொள்ளாமல், எங்களது உடல்நலத்தை விசாரித்தார். அதன்பிறகு, தமிழகத்தில் நடக்கும் அரசியல்குறித்து கேட்டறிந்தார். சில உண்மைகளை அவரிடம் எடுத்துச்சொன்னோம். அதை அமைதியாகக் கேட்ட அவர், ''பொறுத்திருங்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் கண்காணியுங்கள். நமக்கு எதிராகச் செயல்படுவோருக்கு நாம் யார் என்று காட்டுவோம். சிறையிலிருந்து பீனிக்ஸ் பறவை போல விரைவில் வெளியில் வருவேன். அப்போது, இந்த டி.டி.வி. யார் என்று அவர்களுக்குத் தெரியும். அதுவரை, உங்களை வழிநடத்த ஒருவரை நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். அவரின் தலைமையில் ஒற்றுமையாகச் செயல்படுங்கள் என்று தெரிவித்தார்" என்றனர். 

"டி.டி.வி.தினகரன்

 சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனைச் சந்திக்க வருபவர்கள்குறித்த தகவலை அவருக்குத் தெரிவிப்போம். அவர் விருப்பப்பட்டால், அவர்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். அதன்படி மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வந்து அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். அவரது ஆதரவாளர்களும் வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு சிறையில் விதிமுறைப்படி வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவருடன் இரண்டு விசாரணைக் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தமிழ் தெரியும். அவர்களுடன் சகஜமாக டி.டி.வி.தினகரன் பேசுகிறார். ஆனால், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எதையும் அவர்களிடம் அவர் பேசுவதில்லை. மேலும், அவரது உடல் எடை குறைந்துள்ளது. 

 


வாக்கிங் செல்கிறார், விரும்பிய உணவுகளைக் கேட்டு சாப்பிடுகிறார். அதோடு, எங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்துவருகிறார். ஆங்கில, தமிழ் செய்தித்தாள்களில் தமிழக அரசியல் நிலைகுறித்து ஆர்வமாக தினமும் காலையில் படிப்பார். அவரைப் பற்றி வரும் செய்திகளை அவருடன் தங்கியிருக்கும் விசாரணைக் கைதிகளுடன் சொல்லி கமென்ட்ஸ் அடிப்பதையும் வழக்கமாக்கியுள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருந்தாலும் அவரது மனதுக்குள் வருத்தம் இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டாமல், அவரைச் சந்திக்க வருபவர்களிடம் இயல்பாகப் பேசுகிறார். நெருங்கிய நபர்கள் வரும்போது மட்டும் மனம்விட்டுப் பேசுகிறார்"என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/90667-party-officials-meet-ttv-dinakaran-in-prison.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.