Jump to content

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்


Recommended Posts

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கையை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி
 
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் குஸ்னெட் சோவா(ரஷியா), சிபுல் கோவா (சுலோவாக்கியா), குவிட்டோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர். நம்பர் ஒன் வீராங்கனையான கெர்பர் தொடக்க சுற்றிலேயே வெளியேறினார்.

உலகின் 11-ம் நிலை வீரரான டிமிட்ரோவ் (பல்கேரியா) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த ஸ்டெபாரியை சந்தித்தார். இதில் டிமிட்ரோவ் 6-2, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீரர் டொமினிக் தியம் (ஆஸ்திரியா), குயில்லாமோ கார்சியா லோபஸ் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/29130248/1087788/Venus-Williams-qualifies-for-2nd-round-in-French-Open.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன்: முதல்நிலை வீராங்கனை கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி

 

பிரெஞ்ச் ஓபனில் முதல்நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

 
பிரெஞ்ச் ஓபன்: முதல்நிலை வீராங்கனை கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி
 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் (ரோலண்ட் கார்ரோஸ்) பாரிஸ் நகரில் இன்று தொடங்கியது.

முதல் சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர். இந்த தொடருக்கான தரவரிசை பெறாத ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை எதிர் கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் கெர்பர் 2-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு பிரெஞ்ச் ஓபனில் இருந்து வெளியேறினார்.

201705282217310890_ekaterina-s._L_styvpf
கெர்பரை வீழ்த்திய ரஷிய வீராங்கனை எகாடெரினா மகரோவா

இதற்கு முன் 2004-ரல் ஜஸ்டின் ஹெனின், 2014-ல் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கெர்பர் இதுபோன்று கடந்த ஆண்டும் தோல்வியடைந்துள்ளார்.

கத்திக்குத்தால் சுமார் 6 மாதங்கள் விளையாடமல் இருந்து குரோஷியாவின் குவிட்டோவா முதல் சுற்றில் 6-3, 6-2 என வெற்றி பெற்று அசத்தினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/28221729/1087702/French-Open-2017-Day-1-Top-seed-Angelique-Kerber-in.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

 

 
 
முகுருசா
முகுருசா
 
 

 

 

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

 

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச், 77-ம் நிலை வீரரான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸூடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

 

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 45-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேரை எதிர்கொண்டார். இதில் நடால் 6-1, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக் 5-7, 5-7, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரராக செக் குடியரசின் ஜெர்ரி வெஸ்லியிடம் தோல்வியடைந்தார்.

 

5-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 38-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சியஸை வீழ்த்தினார். 17-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரோபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-2, 2-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் 142-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை தோற்கடித்தார். 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லவித்யாவின் எர்னஸ்ட் குல்பிஸை வீழ்த்தினார்.

 

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில், 78-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை வீழ்த்தினார்.

 

11-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜெய்மி போர்லிஸை தோற்கடித்தார்.

http://tamil.thehindu.com/sports/பிரெஞ்சு-ஓபன்-டென்னிஸ்-2வது-சுற்றில்-ஜோகோவிச்-நடால்/article9715711.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர்.

 
 
 
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா வெற்றி
 
பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர். இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-2, 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் 152-ம் நிலை வீரர் ஜோஸ் கோவாலிக்கை (சுலோவக்கியா) சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

201705310517328213_0v6v2nvj._L_styvpf.gi

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் அல்ஜாஸ் பெதானே 6-4, 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ரையான் ஹாரிசனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். காயம் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் களம் கண்ட அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போர்டோ 6-2, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் குய்டோ பெல்லாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-4, 4-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உலக தர வரிசையில் 73-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே குஸ்னெட்சோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்) நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), கையோன் சுங் (தென்கொரியா), டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்), மார்ட்டின் கிலிசன் (சுலோவக்கியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), அலெக்சாண்டர் டோல்கோபோலோவ் (உக்ரைன்), ஜெரெமை ஷார்டி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6-1, 6-7(2-7), 4-6 என்ற செட் கணக்கில் 109-ம் நிலை வீராங்கனையான சீன தைபேயின் ஹிக் சு வெய்யிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் எலினா விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), டெய்லர் டவுன்சென்ட் (அமெரிக்கா), பிரேன்கோவா (பல்கேரியா), சிரோனா சிர்ஸ்டா (ருமேனியா), பார்பரோ ஸ்டிரிகோவா (செக் குடியரசு), ஸ்வாரஸ் நவரோவா (ஸ்பெயின்), பெட்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி கண்டனர். 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/31051728/1088146/French-Open-2017-Andy-Murray-beats-Andrey-Kuznetsov.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி

 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

 
பிரெஞ்ச் ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி
 
பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வெடோவா ஜோடி ஆஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவா - ரஷ்யாவின் அனாஸ்டாசியா பவ்லியுசென்கோவா ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை சானியா ஜோடி கடுமையாக போராடியது. இறுதியில் 6(5)-7(7) என இழந்தது. ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் 2-6 என தோல்வியடைந்து முதல் சுற்றோடு சானியா ஜோடி வெளியேறியது.

ஆனால், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/31205051/1088358/French-Open-Sania-Mirza-Crashes-Out-Rohan-Bopanna.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முர்ரே, ஸ்விடோலினா

 
 
 

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் முர்ரே, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

 
 
 
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முர்ரே, ஸ்விடோலினா
இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே பந்தை திருப்பி அடிக்கிறார்.
பாரீஸ் :

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-4, 7-6 (7-5), 7-5 என்ற நேர் செட்டில் அலெக்சாண்டர் டோல்கோபோலாவை (உக்ரைன்) வீழ்த்தினார். 16 ‘ஏஸ் சர்வீஸ்’ வீசி அசத்திய வாவ்ரிங்கா பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பது இது 10-வது முறையாகும். வாவ்ரிங்கா அடுத்து இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-7 (3-7), 6-2, 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானை சாய்த்தார். இந்த வெற்றியை பெற முர்ரே 3 மணி 34 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 2-வது சுற்றில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவுடன் மோதினார். இதில் இருவரும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில் கால்முட்டி காயத்தால் அல்மாக்ரோ கண்ணீருடன் விலக, டெல் போட்ரோ வெற்றி பெற்றார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் ஆடும் டெல் போட்ரோ அடுத்து ஆன்டி முர்ரேவுடன் கோதாவில் இறங்குகிறார்.

201706021006056933_svitolina._L_styvpf.g

ரஷிய வீரர் காரென் காச்சனோவ் 7-6, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் முன்னணி வீரர் தாமஸ் பெர்டிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். மரின் சிலிச் (குரோஷியா), நிஷிகோரி (ஜப்பான்), பெலிசியானோ லோப்ஸ்(ஸ்பெயின்), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோரும் 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பைரோன்கோவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செவஸ்தோவா (லாத்வியா) தன்னை எதிர்த்த கனடா புயல் பவுச்சார்ட்டை 6-3, 6-0 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), அலிஸி கார்னெட் (பிரான்ஸ்), எலினா வெஸ்னினா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/02100559/1088597/French-Open-Tennis-Murray-and-svitolina-in-3rd-round.vpf

Link to comment
Share on other sites

#FrenchOpen: நாலாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்!

 

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார், ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி, பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றுவருகின்றனர். இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்று, நாலாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றுப் போட்டியில், ஜார்ஜியாவின் நிகோலஸை 6-0, 6-1, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தினார் ரஃபேல் நடால். மகளிர் பிரிவில், பிரான்ஸின் கிறிஸ்டினா 7-5, 4-6, 8-6 என்ற செட்டுகளில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திவிஜ் சரன்- பூரவ் ராஜா காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/91200-nadal-enters-4th-round-in-french-open.html

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன்: வோஸ்னியாக்கி, சிலிச் 4-வது சுற்றுக்கு தகுதி

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வோஸ்னியாக்கி, சிலிச் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 
பிரெஞ்சு ஓபன்: வோஸ்னியாக்கி, சிலிச் 4-வது சுற்றுக்கு தகுதி
 
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 7-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) 3-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் லோபசை எதிர்கொண்டார். இதில் சிலிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 3-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) வெர்டேஸ்சோ (ஸ்பெயின்) ஆகியோரை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

உலகின் 11-ம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கி (டென்மார்க்) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பெலிசை சந்தித்தார். இதில் வோஸ்னியாக்கி 6-2, 2-6, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெல்ப் (ருமேனியா), கார்சியா (பிரான்ஸ்) ஆகியார் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

9-ம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்கா (போலந்து), 14-வது இடத்தில் இருப்பவரான வெஸ்னியா (ரஷியா) ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/04105935/1088927/Wozniacki-Cilic-qualifying-at-French-Open-4th-round.vpf

Link to comment
Share on other sites

நான்காவது சுற்றில் கரோலினா பிளிஸ்கோவா
 

image_a850f252ff.jpg

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று (04) இடம்பெற்ற, பெண்களுக்கான தனிநபர் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் வெற்றிபெற்று, நான்காவது சுற்றுக்குச் சென்றுள்ளனர்.

செக் குடியரசின் பிளிஸ்கோவா, 7-5, 6-1 என்ற நேர் செட்களில், ஜேர்மனியின் கரினா விட்டஃவ்ட்டை வென்றார். 

உக்ரேனின் எலினா ஸ்விட்டொலினா, 6-4, 7-5 என்ற நேர் செட்களில், போலந்தின் மகடா லினெட்டை வென்றார்.  

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான, ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 1-6, 6-4, 2-6 என்ற செட்களில், சுவிற்ஸர்லாந்தின் கரோலின் வொஸ்னியாக்கியிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், 9 தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்கச் சம்பியனான, ஸ்பெய்னின் ரஃபேல் நடால், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில், சக ஸ்பானிய வீரரான றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை வென்று, காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.   

இதேவேளை, நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற, ஆண்களுக்கான தனிநபர் மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் வெற்றிபெற்ற, உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரே, நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  

ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே, 7-6 (10-8), 7-5, 6-0 என்ற நேர் செட்களில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோவை வென்றார். 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/நான்காவது-சுற்றில்-கரோலினா-பிளிஸ்கோவா/44-197980

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆன்டி முர்ரே - சிமோனா ஹாலெப்

 

பாரீஸ் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆன்டி முர்ரே, ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆன்டி முர்ரே - சிமோனா ஹாலெப்
 
பாரீஸ் :

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் காரென் காச்சனோவை (ரஷியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 0-6, 6-4, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவையும் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-5, 7-6 (9-7), 6-1 என்ற நேர் செட்டில் கேல் மான்பில்சையும் (பிரான்ஸ்) வீழ்த்தினர். வாவ்ரிங்கா கால்இறுதியில் மரின் சிலிச்சை (குரோ ஷியா) எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி நேரம் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஆண்டில் தனது சிறந்த ஆட்டம் இது என்று ஹாலெப் வர்ணித்தார்.

201706060957368063_1French-Open-Tennis._

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை நட்சத்திரமான உக்ரைன் மங்கை எலினா ஸ்விடோலினா, தகுதி நிலை வீராங்கனையும், 290-வது தரவரிசையில் உள்ளவருமான பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். முதல் இரு செட்டுகளை தலா ஒருவர் வீதம் தனதாக்கிய நிலையில் கடைசி செட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 3-வது செட்டில் மார்டிச் 5-2 என்று முன்னிலை கண்டு வெற்றியின் விளிம்பில் இருந்தார்.

அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்ற ஸ்விடோலினா வரிசையாக 5 கேம்களை வசப்படுத்திய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார். 2 மணி 5 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஸ்விடோலினா கூறுகையில், ‘பின்தங்கி இருந்த போது மனம் தளர்ந்து விடக்கூடாது; என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு போராடினேன். முதுகுவலியால் கொஞ்சம் தடுமாறிப்போனேன். கால்இறுதியில் வலுவான வீராங்கனையாக மீண்டு வருவேன்’ என்றார்.

கால்இறுதியில் ஹாலெப்-ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

கலப்பு இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சானியா மிர்சா (இந்தியா), இவான் டோடிக் (குரோஷியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/06095733/1089229/French-Open-Tennis-Andy-Murray-Simona-halep-in-the.vpf

Link to comment
Share on other sites

காலிறுதியில் சிமோனா

பாரிஸில் நடை­பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் அந்­தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகி­ரங்க டென்னிஸ் தொடரில் ஆன்டி முர்ரே, சிமோனா ஹாலெப் ஆகியோர் காலி­று­திக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

201705130956423717_Madrid-Open-tennis-Si

இதில் நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த 4 ஆவது சுற் றில் ஒலிம்பிக் சம்­பி­யனும், முதல்­தர வீர­ரு­மான முர்ரே (இங்­கி­லாந்து) 6–-3, 6–-4, 6–-3 என்ற நேர் செட்களில் காரென் காச்­ச­னோவை (ரஷ்யா) வீழ்த்தி காலி­று­திக்கு முன்­னே­றினார்.

 

பெண்கள் ஒற்­றையர் பிரிவில் 4-ஆம் நிலை வீராங்­கனை சிமோனா ஹாலெப் 6-–1, 6–-1 என்ற நேர் செட்களில் சுவாரஸ் நவ­ரோவை (ஸ்பெய்ன்) வெளி­யேற்றி காலிறுதியை எட்டினார். 

http://www.virakesari.lk/article/20684

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி கண்டார்.

 
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
 
பாரீஸ் :

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் 10-வது நாளான நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 19 வயதான லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஒஸ்டாபென்கோவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 2-5 என்ற கணக்கில் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பலத்த மழை கொட்டியதால் சில மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது. முதல் செட்டை இழந்த ஜெலீனா ஒஸ்டாபென்கோ பின்னர் அபாரமாக செயல்பட்டு வெற்றியை தனதாக்கினார். முடிவில் ஜெலீனா ஒஸ்டாபென்கோ 4-6, 6-2, 6-2 என்ற கணக்கில் வோஸ்னியாக்கிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

201706070939551925_12Caroline-Wozniacki.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று மழை குறுக்கிட்டது. ரசிகர்கள் குடைப்பிடித்தபடி ஆட்டத்தை காண காத்து நின்ற காட்சி.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை டிமா பாசின்ஸ்கி, பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா மாடெனோவிச்சை எதிர்கொண்டார். இதில் டிமா பாசின்ஸ்கி 6-4, 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்த அந்த ஆட்டத்தில் டிமா பாசின்ஸ்கி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கிறிஸ்டினா மாடெனோவிச்சை சாய்த்து அரை இறுதிக்குள் நுழைந்தார்.

மழை காரணமாக நேற்று நடக்க இருந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்கள் நாளை (இன்று) தள்ளிவைக்கப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/07093950/1089404/French-Open-tennis-Caroline-Wozniacki-defeated-in.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன்: நடால் அரையிறுதிக்கு முன்னேறினார் - நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

 
பிரெஞ்சு ஓபன்: நடால் அரையிறுதிக்கு முன்னேறினார் - நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வி
 
பாரிஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உலகின் முன்னணி வீரரும் 9 முறை பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ரபேல் நடால் (ஸ்பெயின்), சக நாட்டு வீரர் பப்லோ கரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார் நடால். இந்த செட் முடியும் தருவாயில் பஸ்டாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த வலியுடன் இரண்டாவது செட்டில் ஆடினார். இந்த செட்டில் நடால் 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, பஸ்டாவால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதனால், அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே, நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
201706071832470194_nadal._L_styvpf.gif
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலியாவின் டோம்னிக் தீமும் மோதினர். 7 ஆம் நிலை வீரரான டோம்னிக் தீம், ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை டோம்னிக் தீம் தோற்கடித்தார்.

இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதியில் டோம்னிக் தீம், ரஃபேல் நடாலை சந்திக்க உள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/07183242/1089550/Rafael-Nadal-into-French-Open-semi-finals-after-Pablo.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முர்ரே-வாவ்ரிங்கா அரைஇறுதியில் மோதல்

 

பிரெஞ்சு ஓபன் டென்னிசின் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும் மூன்றாம் நிலை வீரரான வாவ்ரிங்காவும் மோதுகிறார்கள்.

 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முர்ரே-வாவ்ரிங்கா அரைஇறுதியில் மோதல்
 
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) கால்இறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே, ரபெல் நடால், வாவ்ரிங்கா ஆகியோர் கால்இறுதியில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஒரு அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)- மூன்றாம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

மற்றொரு அரை இறுதியில் 9 முறை சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- டொமினிக் மோதுகிறார்கள்.

பெண்கள் அரை இறுதி போட்டிகளில் ஹெலப் (ருமே னியா)- பிளிஸ் கோவா (செக்கு டியரசு) ஒஸ்டா பென்கோ (லாத் வியா)- பாசின்ஸசி (சுவிட் சர்லாந்து) மோதுகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/08120613/1089648/French-Open-tennis-2017-Andy-Murray-to-face-Stan-Wawrinka.vpf

Link to comment
Share on other sites

முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!

 

பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரிலா டப்ரோஸ்கியுடன் ஜோடி சேர்ந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில் போபண்ணா - கேப்ரிலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா, ஜெர்மனியின் லினா  கிரோயின்ஃபெல்ட் ஜோடியை  எதிர்கொண்டது.
 

ரோகன் போபண்ணா

முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா - கேப்ரிலா ஜோடி, அதன்பின் சுதாரித்தது. இரண்டு மேட்ச் பாயின்ட்களைப் பாதுகாத்து, முடிவில் 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தன் டென்னிஸ் வாழ்வில் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் போபண்ணா. அவர் வயது 37.  

இத்தனை ஆண்டு டென்னிஸ் வாழ்வில் போபண்ணா இரண்டு முறை மட்டுமே கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்  2010 அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் பாகிஸ்தானின் குரேஷியுடன் ஜோடி சேர்ந்த போபண்ணா, அமெரிக்காவின் பிரயன் சகோதரர்களிடம் தோல்வியைத் தழுவினார். அதன்பின் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது முதன்முறையாக, பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறினார். இந்தமுறை வெற்றி வசமானது. 

போபண்ணா, பிரெஞ்ச் ஓபன் வென்றதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் வென்ற நான்காவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா மட்டுமே கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்தனர். தற்போது போபண்ணா அந்த வரிசையில் இணைந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்கள் பட்டியில் போபண்ணா இணைந்ததுமே, சானியா மிர்ஸா ட்விட்டரில் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

 

 

sania_17106.png
 

http://www.vikatan.com/news/tamilnadu/91730-rohan-bopanna-wins-first-grand-slam-title.html

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென் கோவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்
 
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரூமேனியா)- 2-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர்.

இதில் ஹாலெப் 6-4, 3-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப்போட்டியில் லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென் கோவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.

201706091213533939_7cenlgfu._L_styvpf.gi

சிமோனா ஹாலெப் கோப்பையை வென்றால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி வீராங்கனை கெர்பரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிப்பார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதி போட்டிகள் நடக்கிறது. இதில் ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்)- டொமினிக் திம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/09121346/1089853/Simona-Halep-and-Jelena-Ostapenko-reach-French-Open.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாதனை

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெலினா ஆஸ்டாபென்கோ பாக்சின்ஸ்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லாத்வியா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

 
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாதனை
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 7-6 (7-4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பாக்சின்ஸ்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

2 மணி 24 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது. லாத்வியா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். உலக தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள ஆஸ்டாபென்கோவுக்கு நேற்று 20-வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/09093947/1089816/Latvias-Jelena-Ostapenko-record-in-French-Open-tennis.vpf

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் முர்ரேவை வீழ்த்தி, வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரைஇறுதி போட்டியில் வாவ்ரிங்கா தன்னை எதிர்த்து போட்டியிட்ட இங்கிலாந்து வீரரான ஆன்டிமுர்ரேவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் முலம் அவர் இறுதிபோட்டிக்கு முன்னேரியுள்ளார்.

 
பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் முர்ரேவை வீழ்த்தி, வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
 
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதி போட்டிகள் நடந்தது. இதில் ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்)- டொமினிக் திம் (ஆஸ்திரியா) மோதினார்கள்.

பரபரப்பான ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்கா ஆன்டி முர்ரேவை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இறுதி சுற்றிற்கு முன்னேரியுள்ளார். இதன் மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மூத்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் நிகி பிலிக் 44 ஆண்டுகளுக்கு முன் தகுதி பெற்றார். எனினும் இவர் இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் மட்டுமே பிடித்திருந்தார்.

இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் 6-7 (8-6), 6-3, 5-7, 7-6 (7-3), 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/09233939/1089972/French-Open-Wawrinka-beats-Murray-to-enter-finals.vpf

Link to comment
Share on other sites

ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று 'புதிய வரலாறு' படைத்த ஜெலீனா ஆஸ்டாபென்கோ

 

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ஜெலீனா ஆஸ்டாபென்கோபடத்தின் காப்புரிமைAFP Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ஜெலீனா ஆஸ்டாபென்கோ

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ஜெலீனா ஆஸ்டாபென்கோபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற ஜெலீனா ஆஸ்டாபென்கோ

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ''எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sport-40235358

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் பைனல் துவங்கியது

 
Tamil_News_large_1788369_318_219.jpg
 

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-3' சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1788369

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன்: 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று நடால் சாதனை

வாவ்ரிங்காவை வீழ்த்தி 10-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று ரபெல் நடால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

 
பிரெஞ்ச் ஓபன்: 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று நடால் சாதனை
 
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நடால் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

செம்மண் தரையில் ஜாம்பவான் ஆன நடால் 10-வது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் நோக்கத்தில் களம் இறங்கினார். அவரை எதிர்த்து 2-வது முறையாக பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வாவ்ரிங்கா களம் இறங்கினார்.

201706112132141960_nadalwin1-s._L_styvpf

ஆனால் நடாலின் வேகத்திற்கு வாவ்ரிங்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. நடால் 6-2, 6-3, 6-1 நேர்செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த சாம்பியன் பட்டம் மூலம் நடால் 10-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் எந்தவொரு வீரரும் ஒரே தொடரை 10 முறை வென்றது கிடையாது. முதன்முறையாக நடால் சரித்திர சாதனை படைத்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/11213213/1090256/Nadal-won-10th-french-open.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.