Jump to content

சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நண்பா!
உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!
ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!

உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;
காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான்
அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!

நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்.

நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்
உனக்காய் அழமாட்டமா?
ஆனால்;
மன்னித்துவிடு சகோதரா...
இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!

நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!

நாளை இந்த வெள்ளம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!

குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
இனியும் வரவும் மாட்டார்கள்.
இனி வரவும் தேவையில்லை!

சிங்கள சகோதரா!
உனக்காக நான் அழுவதற்கு தயார்
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை.

கொத்துக்கொத்தாய்..
பூவும் பிஞ்சுமாய்...
குஞ்சு குருமனாய்...
குடல் கிழிந்து...
சதை கிழிந்து...
வயிறொட்டி...
உயிரற்ற பிண்டங்களையாய்...
உணர்வற்ற பூச்சிகளாய்...

இதே ஒரு மாதத்தில்தான் ....
வானம் அதிர குழறினோம்!!

உண்மையை சொல்லு
உனக்கு கேட்டதா? இல்லையா??

எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே!
எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே!
எனக்காய் ஒரு குரல் கூட தெற்கில் கேட்கவேயில்லையே!!!

உனக்கும் எனக்குமா போர் நடந்தது?
இல்லையே!!!

எதற்காக மெளனமாக இருந்தாய்?
ஏன் திரும்பி நடந்தாய்?

போர்
உங்கள் முன்னால்...
எங்களை;
கடித்துக்குதறி...
கைகளை பின்னே கட்டி..
கறுப்புத்துணியால் கண்களை மூடி..
முதுகில் உதைத்து
பிடரியில் அடித்து...
சப்பித்துப்பி...
தின்று...
கைகழுவிப்போனபோது...
அம்பாந்தோட்டையிலும்...
அழுத்கமவிலும்...
நீங்கள் வெடி கொழுத்தி கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள்.

பின்னர் ஒரு நாளில்
முட்கம்பி வேலிக்குள்...
நாங்கள் வானம் அதிர..
தொண்டை கிழிய...
குழறிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் கொழுத்தி கொண்டாடிய "சீனா வெடிகளில்" ...
எங்களின் கூக்குரல்...
உங்களுக்கு கேக்கவேயில்லை!

இன்று 
உனக்காக நான் அழுவதற்கு எனக்கு விருப்பம்.
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை!

போன கிழமைதான்..
நந்திக்கடலோரம்...
நான் என் அண்ணாவுக்காய் அழுதுகொண்டிருந்தேன்.

முள்ளிவாய்க்காலில் தொலைத்த
தன் மகனை ...
தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்!

நீயோ!
கிளிநொச்சியின் வீதிகளில்
"சிங்கலே" கொடி கட்டுவதிலும்...

யாழில் விகாரைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் மும்முரமாக இருந்தாய்.

கொழும்பு வீதிகளில்...
வெடி கொழுத்துவதிலும்;

வெற்றிக்கொண்டாட்டங்களில் 
"கிரிபத்" தின்பதிலும்...
ஆரவாரமாய் இருந்தாய்!

நீ மறந்திருப்பாய்.
ஆனால் நான் மறக்கவில்லை.
மறக்கவும் முடியாது!
மறக்கவும் கூடாது!

உனக்காய் நான் அழவும்..
உனக்காய் என் கரம் நீழவும்..
உனக்காய் நான் ஓடிவரவும்...
என்னால் முடியாது.
ஏனெனில்;
என் கால்களை...
என் கைகளை இதே ஒரு மாதத்தில்தான் நீ வெட்டி எறிந்தாய்.
நீ மறந்திருப்பாய்..
ஆனால் நான் மறக்கவில்லை!
ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை!

சிங்கள நண்பா!
உனக்காய் நான் அழ விருப்பம்தான்..
என்னிடம் கண்ணீர் இல்லையே!
ஆனால்;
உன் துன்பத்தில் நானும் துணையாக வர
இனியாவது உன் கரங்களை நீட்டு...
காத்திருக்கிறேன்..

வாற வருடம்
முள்ளிவாய்க்காலில்
என்னோடு "தீப்பந்தம்"
ஏத்தவருவாய் என
நம்பி...
ஆரியகுளத்து புத்தனிடம் 
உனக்காய் வேண்டுகிறேன்.

என்னைக்காப்பாற்றாத போதிமரத்தான் உன்னைக்காப்பாற்றக்கூடும்!!

அன்புடன்
#தமிழ்ப்பொடியன்
27/05/2017

குறிப்பு: எனக்கு சிங்களத்தில் எழுத தெரியாது. முடிந்தால் யாராவது சிங்களத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.

whatsapp ல் வந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு புள்ளிக்கும் நன்றி யாழ்கவி  மற்றவனின் ஆக்கத்தை கொண்டுவந்து இணைப்பதால் அதற்கு புள்ளி வேண்டுவது நியாயமாக படவில்லை அதற்கு  பதில் தமிழ் பொடியனை ஊக்கப்படுத்தி நாலுவரி எழுதுவது நல்லது என்று நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம்....,

நான் யாருக்காகவும் அழுவதில்லை!

 

வெறும் காவியங்களில் மட்டுமே,

தர்மங்களும்...நியாயங்களும் வெல்கின்றன!

 

கனவுகளில் மட்டுமே...,

கதாநாயகன் வெற்றி பெறுகின்றான்!

 

கதைகளில் மட்டுமே..,

கன்றை இழந்த பசுவுக்கு..,

நீதி கிடைக்கின்றது!

 

இன்று கண்ணகி....,

சிலம்புடைதிருந்தால்...,

மதுரையே அவளை எரித்து விட்டிருக்கும்!

 

புத்தன் இன்று மீண்டும்  வந்தால்....,

சீதாப் பிராட்டியைப் போல....,

அக்கினிப் பிரவேசம் செய்து..,

தன்னுயிர் துறப்பான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்ட சம்பவங்களுக்கான  வலிசுமந்த கவிதை.
தமிழ்ப்பொடியனின் ஒவ்வொருவரியும் ஆணியடிப்பது போல் உள்ளது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

මතකද නුඹට

අමතක කරලා ඇති  නුඹ

නුඹ මා මරන්න එලවද්දී

එක් අතක අත් දරුවව

එක් අතක බලු පැටවාව

ගෙන දිව්වෙමු.

 

බලු පැටවා වෙනුවෙන් ඇඩු මට

නුඹ වෙනුවෙන්  අඩන්නට නොහැක්කේද?

සමාවෙන්න සොයුර

මා සතුව කඳුළු ඉතිරිව නැත

 

නුඹ  වතුරෙන් විඳවනවා

අප කඳුළින් විඳවනවා

 

මේ ගංවතුර හිදී හෙට

සුවෙන් ඉඳී නුඹ

මුළු ලෝකයා නුඹ වෙනුවෙනුත් හෙට

 

සිහල  සොයුර

නුඹ වෙනුවෙන් අඩන්නට

සුදානම් මට

කඳුළු නැත සතුව

 

නුඹව රකින්නට

දෑත් දිගරින්නට 

එන්න තිබුණි නම්  මට 

බැරිය මට එන්නට

නැත මගේ කකුළ

කපා දැමුවේ නුඹ

අමතක කරලා ඇති නුඹ

ඒත් අමතක කරන්න බැරිය මට

ඇවිදින්නට නොහැකි මට

 

අඩ පනැතිව නන්දිකඩලෙහි ගිලෙන විට

මා වෙනුවෙන් කිසිවෙකු නැත ආවේ සහයට

තව   කවුරු ත් එන්නේ නැත අප වෙත

දැන් ඒම අවශ්යද නැති කොට

 

සිහල සොයුර

නුඹ වෙනුවෙන් අඩන්නට

සුදානම් මට

සතුව කඳුළු නැත ඉතිරිව

 

පොකුරු පොකුර ලෙස

ලපටි දරු දළු

කෑලි කෑලිව

ඉරී බඩවැල

ඉරී හැම හම

ගොස් හැකිළී

පන නැති ඔළු ගෙඩිව

හැගීම් අහිමි කෘමීන්  ලෙස

මෙවැන් වූ මසකදී

අඩුවේ අපි අහසත් දෙදරන්න

 

ඇත්ත කියාපන් නුඹ

අසුනේද හඬ නොඇසුනේද

 

මා වෙනුවෙන් නුඹ

එක් අතක්වත් දිගු කරේ නෑ නේද?

 

මා වෙනුවෙන් නුඹ

එක් කඳුළු බිදක්  වත් හැලුවේ නෑ නේද?

 

මා වෙනුවෙන් දකුණෙන්

එක් හඬක්වත් ඇහුණේ නෑ මට

 

කියාපන් නුඹ

යුද්ධ කෙරුණේ

නුඹත් මාත් අතරද ?

එහෙනම්, ඇයි නිහඬව හිටියේ නුඹ ?

එහෙනම්, ඇයි හැරුණේ නුඹ ?

 

යුද්ධය නුඹ 

ඉදිරියේ මාව  

සපා කා

බැඳ අත් පිටුපස

කළු රෙද්දෙන් වසා ඇස් දෙක

පයින් ගසා පිටට

ගසා පිටු පස ඔළු ගෙඩියට

කා උරා විසි කර

අත් සෝදා ගිය විට

හම්බන්තොට අළුත්ගම

රතින්ජා පත්තු කර

සමරමින් සිටියා නුඹ

 

පසු එක් දිනයක

දෙදරන්න අහස

ඉරෙන්න උගුරු දණ්ඩ

හඬා වැලපෙන විට

පත්තු කර සතුටු වූ

චීන වෙඩි හඬ

නොඅසුනේය  අපගේ මර ලතෝනි හඬ

 

නුඹ වෙනුඑන් අඩන්නට අද

සුදානම් මට

සතුව නැත කඳුළු ඉතිරිව

 

ගිය සතියේ නන්දිකඩලෙහි

මගේ අයියා වෙනුවෙන් අඩමින් ඉන්නා විට

අම්මා කෙනෙකු තම පුතු සොයා මුල්ලිවායික්කාල් වල

 

සොයුර නුඹ

කිළිනොච්චියේසිංහ ලේකොඩි දමන්න

යාපනයේ විහාර වලට මුල් ගල් තියන්න

සිතන් සිටියා නේද?

 

කොළඹ වීදි වල

වෙඩි පත්තු කර

කිරි බත් කන්න ජය සැමරුම් වල

බලා සිටියා නේද?

 

නුඹ අමතක කරලා ඇති එය

ඒත්,මා  අමතක කරේ  නැති  එය

අමතක කරන්නට මට බැරි එය

අමතක කරන්නට හොඳ නැති  එය 

 

නුඹ වෙනුවෙන් අඩන්නට

සුදානම් මට

නුඹ වෙනුවෙන් අඩන්නට

නුඹ වෙනුවෙන් දෑත් දිගරින්නට

බැරිය මට

නැත කකුල් හා දෑත්

මෙවැන් මසකදී නුඹ

කපා විසි කළ

 

නුඹ අමතක කරලා ඇති එය

ඒත් බැරිය අමතක කරන්නට මට

ඇවිදින්නට කකුල් නැති කොට

 

සිහල යාළුවේ,

නුඹ වෙනුවෙන් අඩන්නට

කැමති මට සතුව නැත

කඳුළු ඉතිරිව

 

නුඹේ දුකේ දී මම

අත දෙන්නට නුඹට

මින් මතුවට වත් නුඹ

දිගු කරන්නේ දෑත

බලා ඉන්නෙමි මම

 

ලබන අවුරුද්දේ මුල්ලිවායික්කාල් වල

මා කැටුව පහන

දල්වන්නට නුඹ

පැමිණෙන්නේ යැයි සිතා

 

ආරියකුලමේ බුදුන්ගෙන්

නුඹ වෙනුවෙන් මම

ප්රර්ථනා කරන්නම් අද

මා රැක නොගත් බෝරජාණෝ

රැක ගනීවී නුඹව හෙට

 

written  by දෙමළ කොල්ලා

 

---/////----

 

My dear Sinhalese Friend!

I want to cry for you.

But I have no tears to shed!

I could have extended my hands

to save you ..

I could have rushed to save you

But I couldn't,

I couldn't come to save you as it is in this month you severed my legs

You may have forgotten.

But I couldn't

Because I can't walk anymore!

Do you remember my friend?

You may have forgotten

When you were pursuing us with murderous intent.

We were running with an infant in one hand and a puppy in another.

We cried for our puppy.

Wouldn't we cry for you my friend?

However,

Forgive me my friend

We don't have any more tears to shed !

You are swaying in water, but

We swayed in tears my friend.

Tomorrow the floods will recede and you shall recover,

The whole world will come to your aid!

When we were  bleeding to death in "Mullivaikal",

No one came to our  rescue.

They won't come anymore.

We don't need them either!

My dear Sinhalese Friend!

I want to cry for you...

But I have no tears to shed.

We lost thousands of our

Young and old...

Babies and infants,

Torn intestinal and

Bleeding wounds...

Starved stomachs...

Lifeless bodies ...

We are Senseless insects!

We are cursed slaughters!

 

It is  in this month

Our cries shaking the skies!

Be honest my dear friend

Didn't you hear our pleas?

 

There was no arm...

extended towards me!

No tear shed for me !

No voice raised for me!

from South.

Was the war between you and me?

No it wasn't.

Why were you silent  my friend?

Why did you walk away?

When War

Teared...

Handcuffed...

Blindfolded...

Kicked and

Destroyed us...

Right in front of

your eyes!

You were lightening fire crackers in

"Hambantota" and "Aluthgama"

Celebrating its victory !!

Days  later

We were lamenting

Behind barbed wires ...

You couldn't hear our lament.

In the midst of the sound from fire crackers!!

 

My dear Sinhalese Friend!

I want to cry for you...

But I have no tears to shed!

Last week

In "Mullivaikal"

I was mourning my Brother,

Who died in this shores.

A mother was

Searching for her son...

She Lost in the "Mullivaikal" coast.

However you were busy

Raising the "Singha le" flags

 in the street of "Killinochi"!

And...

Laying foundation for a "vihara" in jaffna !

You were celebrating the victory

By lightening crackers

And eating "kiri buth" in the streets of Colombo!

You may have forgotten.

But I haven't.

I shouldn't forget,

I can't forget either !!

I can't cry for you

I can't extend my arm to help you

I can't rush to be with you.

Because;

It is in this month

You severed  my legs!

It is in this month

You severed my hands !

You may have forgotten.

But I haven't.

Because I can't walk !

My dear Sinhalese friend!

I want to cry for you ...

But I have no tears left !

However,

I am waiting for you

to extend your arm towards me,

So that I can solace you in future!

I hope and pray to the Lord Buddha!

Next year 

you will

Join me in lightening 

a flame of remembrance

In "Mullivaikal".

Again i pray to the Lord Buddha !

Who failed to save me

May rescue you !!!

 

Your dearest;

Tamilfriend.

(Vimale)

அன்புடன்

#தமிழ்ப்பொடியன்

Sabaratnam vimaleswara

Australia.

27/05/2017

Whatsapp வந்த மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொடி யாழிலும் இருந்தது என நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையில் எழுதிய அத்தனை வரிகளும் நிஜம் .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனி ஒருவன் said:

தமிழ் பொடி யாழிலும் இருந்தது என நினைக்கிறேன் 

ஆமாம். யாழில்தான் நான் முதலில் வாசித்தேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.