Jump to content

மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு


Recommended Posts

மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு

 
 
மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடுபடத்தின் காப்புரிமைGREATER MANCHESTER POLICE

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் அரங்கத்தில் இரவில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொலை செய்த தற்கொலை குண்டுதாரி சல்மான் அபெடியின் சிசிடிவி புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதக் குற்றங்களை இழைத்ததான சந்தேகத்தின் பேரில், 11 ஆண்கள் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்தில் அபெடியின் அடையாளம் அறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் அச்சுறுத்தல் நிலை நெருக்கடி என்ற கட்டத்திலிருந்து கடுமையான நிலை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

எஃப்.ஏ கோப்பையின் இறுதி போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்தில் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎஃப்.ஏ கோப்பையின் இறுதி போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்தில் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலீஸாருக்கு ஆதரவுதரும் விதமாக நிலை நிறுத்தப்பட்ட படையினர் வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) காலை கோப்ரா எனப்படும் அரசாங்கத்தின் அவசர குழு கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அதற்கு தலைமை தாங்கியபின் இந்த அறிவிப்புகளை பிரதமர் தெரீசா மே வெளியிட்டார்.

எஃப்.ஏ கோப்பையின் இறுதி போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்திலும், ஸ்காட்டிஷ் கோப்பைக்காக ஹம்ப்டென் பூங்காவிலும், ஆவீவா ப்ரீமியர்ஷிப் ரக்பி இறுதி போட்டிக்காக டிவிக்கென்ஹாமிலும் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global-40077750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன சந்தேகம் என்டால் அந்தப் பெடியன் ஏன் நிகழ்ச்சிக்கு போய்,நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது குண்டு வைக்கேல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு என்ன சந்தேகம் என்டால் அந்தப் பெடியன் ஏன் நிகழ்ச்சிக்கு போய்,நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது குண்டு வைக்கேல்ல?

குடுத்த காசுக்கு பாட்டையாவது பாத்துட்டு ஒரேயடியாய் மேலை போவம் எண்டு நினைச்சாரோ இல்லாட்டி ஏன் இடையிலை குழப்புவான் எண்ட நல்லெண்ணமோ ஆருக்குத்தெரியும்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎/‎05‎/‎2017 at 11:49 PM, குமாரசாமி said:

குடுத்த காசுக்கு பாட்டையாவது பாத்துட்டு ஒரேயடியாய் மேலை போவம் எண்டு நினைச்சாரோ இல்லாட்டி ஏன் இடையிலை குழப்புவான் எண்ட நல்லெண்ணமோ ஆருக்குத்தெரியும்?:cool:

 
அப்படி இல்லை அண்ணா அவர் நிகழ்ச்சி முடிந்த பிற்கு தான் மண்டபத்திற்கே வந்திருக்கார்... அதுவும் இசை நிகழ்ச்சி முடிந்து பெற்றோர்கள் தனியே இசை நிகழ்ச்சி பார்க்க வந்த பிள்ளைகளை கூட்டிச் செல்வதற்காக காத்திருந்த ஒரு பக்கத்திலே தான் வெடித்திருக்கிறார்.
 
இசை நிகழ்ச்சிக்கு போகும் போது செக்கிங் இல்லை.ஏன் இவர் இசை நிகழ்ச்சி நடக்கும் போது போய் வெடிக்கேல்ல?

நிகழ்ச்சி முடிஞ்சு பிள்ளைகளை கூட்டிப் போக வந்த பெற்றோரை ஏன் குறி வைச்சு வெடிச்சவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:
 
அப்படி இல்லை அண்ணா அவர் நிகழ்ச்சி முடிந்த பிற்கு தான் மண்டபத்திற்கே வந்திருக்கார்... அதுவும் இசை நிகழ்ச்சி முடிந்து பெற்றோர்கள் தனியே இசை நிகழ்ச்சி பார்க்க வந்த பிள்ளைகளை கூட்டிச் செல்வதற்காக காத்திருந்த ஒரு பக்கத்திலே தான் வெடித்திருக்கிறார்.
 
இசை நிகழ்ச்சிக்கு போகும் போது செக்கிங் இல்லை.ஏன் இவர் இசை நிகழ்ச்சி நடக்கும் போது போய் வெடிக்கேல்ல?

நிகழ்ச்சி முடிஞ்சு பிள்ளைகளை கூட்டிப் போக வந்த பெற்றோரை ஏன் குறி வைச்சு வெடிச்சவர்?

எது எப்படியோ எங்கையோ பாதுகாப்பு குறைபாடு இருந்திருக்ககிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ எங்கையோ பாதுகாப்பு குறைபாடு இருந்திருக்ககிறது.

எங்கேயோ பாதுகாப்பு குறைபாடு இல்லை...முழுக்க,முழுக்க பாதுகாப்பு குறைவு

Link to comment
Share on other sites

31 minutes ago, ரதி said:
 
அப்படி இல்லை அண்ணா அவர் நிகழ்ச்சி முடிந்த பிற்கு தான் மண்டபத்திற்கே வந்திருக்கார்... அதுவும் இசை நிகழ்ச்சி முடிந்து பெற்றோர்கள் தனியே இசை நிகழ்ச்சி பார்க்க வந்த பிள்ளைகளை கூட்டிச் செல்வதற்காக காத்திருந்த ஒரு பக்கத்திலே தான் வெடித்திருக்கிறார்.
 
இசை நிகழ்ச்சிக்கு போகும் போது செக்கிங் இல்லை.ஏன் இவர் இசை நிகழ்ச்சி நடக்கும் போது போய் வெடிக்கேல்ல?

நிகழ்ச்சி முடிஞ்சு பிள்ளைகளை கூட்டிப் போக வந்த பெற்றோரை ஏன் குறி வைச்சு வெடிச்சவர்?

இவர் தயாரித்தது உள்ளூர் வெடி குண்டு. நட்டுகளையும் கூர்மையான உலோகத் தகடுகளையும் அதிகம் உள்ளே வைத்து சிறிய சுற்றளவில்அதிக உயிர்பலி ஏற்படுத்தும் வண்ணம் குண்டு தயாரித்து இருக்கின்றனர். இக் குண்டு நிகழ்ச்சி நடக்கும் போது வெடித்து இருந்தால்  சனம் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கும் போது வெடித்த இடத்தில் இருந்த சிறிய சுற்றளவில் பலியாவோரின் எண்ணிக்கை குறைவாக ஏற்படும். அதுவே நிகழ்ச்சி முடிந்து வாசல் பக்கமாக பார்வையாளர்கள் வெளியேறும் இடத்தில் வெடித்தால் சிறிய சுற்றளவில் அதிக உயிர்களை கொல்ல முடியும். இதனால் தான் நிகழ்ச்சி முடியும் வரைக்கும் காத்திருந்து சனம் வெளியேறத் தொடங்க்கும் போது வெடிக்க வைத்து உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இவர் தயாரித்தது உள்ளூர் வெடி குண்டு. நட்டுகளையும் கூர்மையான உலோகத் தகடுகளையும் அதிகம் உள்ளே வைத்து சிறிய சுற்றளவில்அதிக உயிர்பலி ஏற்படுத்தும் வண்ணம் குண்டு தயாரித்து இருக்கின்றனர். இக் குண்டு நிகழ்ச்சி நடக்கும் போது வெடித்து இருந்தால்  சனம் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கும் போது வெடித்த இடத்தில் இருந்த சிறிய சுற்றளவில் பலியாவோரின் எண்ணிக்கை குறைவாக ஏற்படும். அதுவே நிகழ்ச்சி முடிந்து வாசல் பக்கமாக பார்வையாளர்கள் வெளியேறும் இடத்தில் வெடித்தால் சிறிய சுற்றளவில் அதிக உயிர்களை கொல்ல முடியும். இதனால் தான் நிகழ்ச்சி முடியும் வரைக்கும் காத்திருந்து சனம் வெளியேறத் தொடங்க்கும் போது வெடிக்க வைத்து உள்ளார்.

ஓ...நீங்கள் சொன்னது சரியாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.