Jump to content

Recommended Posts


காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன்.
16.jpg
எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்...’’ மூச்சுவிடாமல் பேசினாள்.

‘‘ரொம்ப நன்றி!’’ ‘‘உங்களை ஒரு முறை... ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங்க போட்டோவைக்கூட பார்த்தது கிடையாது. இவ்வளவு புகழ்பெற்ற பிறகும் பணிவுடன் இருக்கும் உங்கள் இயல்பு பிடித்திருக்கிறது. ப்ளீஸ் ஸார். உங்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்க...’’ சக்கரவர்த்தி கொஞ்ச நேரம் யோசித்தான்.

இதுவரை ரசிகர்கள் என்று சொல்லி அவனை வயதானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். அதுவும் அவனுடைய கதைகளைப்பற்றிப் பேச ஆரம்பித்து பஸ் கட்டணம், பால் விலை, கரண்ட் பில் என்று பேசி கழுத்தறுப்பார்கள். இவளுடைய குரலைக் கேட்டாலே இசையைப் போல் இருக்கிறது. பார்ப்பதற்கும் அழகாக இருக்கலாம். ஒரு முறை நேரில் பார்க்கலாம் என்று தோன்றியது.

‘‘உங்க பெயர்?’’ ‘‘பிரியா!’’ ‘‘ஓகே. பிரியா, அடுத்த வாரம் போன் பண்ணுங்க. இப்ப நான் ஒரு கூட்டத்திற்காக ஒரிசா போறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்...’’ ‘‘தாங்க்ஸ் ஸார்...’’ என்று மகிழ்ந்தாள். அவளிடம் அப்படி பொய் சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தான் சக்கரவர்த்தி. ஒருவாரம் வரை பொறுத்திருக்க அவனால் முடியாது. அவனுக்கு பெரிதாக வேலையும் எதுவுமில்லை.

திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை விட்டால் ஏதாவது சினிமா பார்க்க போவான். அதைவிட்டால் ஹோட்டல், பீச் என்று சுற்றுவான். அவ்வளவுதான். ஒரிசாவில் மீட்டிங்காவது! அவன் கும்மிடிப்பூண்டியைத் தாண்டியது இல்லை. தானும் அப்படி பொய் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்த பிரியாவும் சக்கரவர்த்தியை நேரில் பார்க்க தவித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் என்பது அவளுக்கு ஒரு ஆயுளைப் போலத் தெரிந்தது. ஒவ்வொரு நாளையும் அவனை எண்ணியே கழித்தாள். தன்னை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பானா? இல்லை சுதாகர் என்கிற பெயரை சக்கரவர்த்தி என்று மாற்றிக் கொண்டவன் தன் மனதையும் ஒருவேளை மாற்றிக் கொண்டிருந்தால்...!

அவளை எப்படி அவனால் மறக்க முடியும்? அவள்தானே அவனது முதல் ரசிகை. கல்லூரியில் படிக்கும்பொழுது ‘மலர்ச்செண்டு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியபோது அதைப்படித்து அவள் பாராட்டியிருக்கிறாள். அதில் வரும் அவனது கதைகளைப் படித்து மகிழ்ந்து போவாள். ஒவ்வொரு படைப்பையும் படித்து முதல் ஆளாய் அவனைத் தேடிச் சென்று பாராட்டுவாள் பிரியா.

‘‘உங்களுடைய திறமையான எழுத்துக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கு சுதாகர். பத்திரிகைகளில் உங்கள் கதைகள் வரும் நாள் தொலைவில் இல்லை...’’ என்பாள். ‘‘ரொம்ப நன்றி பிரியா. நான் எழுதிய நாவல்கள், தொடர்கதைகள், ைகயெழுத்துப் பிரதியாக இருக்கின்றன. அதைப் படிச்சிட்டு உங்க அபிப்பிராயம் சொன்னா நல்லது...’’ பிரியா சம்மதித்தாள்.

அவன் கொடுத்த படைப்புகளைப் படித்து இவனிடம் இவ்வளவு திறமையா என்ற பிரமித்துப் போனாள். ஒரு மனிதனைச் சிரிக்க வைக்கவும், அழவைக்கவும், அவர்களுடைய எண்ணங்களையே மாற்றிவிடும் வலிமையும் எழுத்திற்கு இருப்பதை உணர்ந்தாள். கையெழுத்துப் பிரதியை அவனிடம் திருப்பித் தந்தபோதுதான் முதல்முறையாக பிரியாவிடம் தனது காதலை அவன் சொன்னான்.

இன்ப அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. அவனுடன் சேர்ந்து சுற்றத் தொடங்கினாள். இது அவளுடைய வீட்டிற்கும் தெரிந்தது. காதலையும், காய்ச்சலையும் மறைக்க முடியாது. ‘‘கதை, கவிதை எழுதுவது எல்லாம் படிக்க நல்லா இருக்கும் பிரியா... ஆனா, அதை வைத்து சம்பாதிக்க முடியாது...’’ என்றார் அரசு ஊழியரான அப்பா.

தன்னைப் போலவே ஓர் அரசு ஊழியனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்தால், அவள் சந்தோஷமாக வாழ்வாள் என்பது அவரது நினைப்பு. ‘‘பணம் மட்டும் வாழ்க்கையில்லை...’’ என்று மறுத்துப் பேசினாள். அப்பா கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவரது கோபம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த தூரத்து சொந்தமான அருண்குமாருக்கு அவளை வலுக்கட்டாயமாகக் கட்டி வைத்தார். அவளுடைய படிப்பும் நின்றது. சென்னையிலிருந்த அருணுடைய வீட்டிற்குச் சென்றாள். அங்கிருந்து தபால் மூலம் படித்து முடித்தாள். நேரம் நிறைய இருந்தது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்தாள். அருண் பெரும்பாலும் வெளிநாட்டிலேயே இருப்பான்.

எப்பொழுதாவதுதான் வருவான். அவள் மீது அவனுக்கு காதல் கிடையாது. வெறும் காமம் மட்டுமே. அது தீர்ந்ததும் அவளிடமிருந்து விலகிவிடுவான். எதுவும் பேசமாட்டான். அவசரப்பட்டு அப்பாவிடம் தன் காதலுக்காக சண்டை போட்ட தவறை உணர்ந்தாள். முதலில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பிறகு, தன் காதலை அவர் ஏற்கும்படி நடந்துகொண்டிருக்க வேண்டும்... பாவம் சுதாகர்... எப்படி துடிக்கிறானோ... அவனைப் பார்க்க ஆசைப்பட்டவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பத்து வருடங்கள் ஓடிவிட்டன. எட்டு வயதில் பிரியாவிற்கு ஒரு மகளும் இருக்கிறாள். கடந்த ஒரு வருடமாகத்தான் சுதாகருடைய கதைகள், நாவல்கள் சக்கரவர்த்தி என்ற பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.

புனைப் பெயரில் எழுதலாமே என்று அவள்தான் அவனுக்கு முதலில் யோசனை சொன்னாள். எல்லாம் அவள் எப்பொழுதோ படித்து ரசித்த கதைகள். ஆனால் மறக்க முடியாத கதைகள். அவனைச் சந்திக்கப் புறப்பட்டபோது ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இன்னும் அழகாகத்தான் இருக்கிறாள். அவனும் அப்படியே இருப்பானா..? ‘சுதாகர்’ என்று அழைத்தால் எப்படி சந்தோஷப்படுவான்... ஹோட்டலுக்குள் சென்றதும் சுதாகரைத் தேடினாள். அவனைக் காணவில்லை.

அவளை நோக்கி நடுத்தர வயதுள்ள ஒரு புதியவன் நெருங்கினான். ‘‘ஹாய், நான்தான் சக்கரவர்த்தி...’’ அவள் அதிர்ந்துவிட்டாள். ‘‘நீங்களா?’’ ‘‘யெஸ் நான்தான் பிரபல எழுத்தாளன் சக்கரவர்த்தி. நீங்க இவ்வளவு அழகான எழுத்தாளரை எதிர்பார்க்கலையா?’’ பிரியாவுக்கு குமட்டலாக வந்தது. அழகா..? வழுக்கைத் தலையும், தொப்பையும், கீழே பேண்ட்டை அவன் இழுத்து விடுவதும், கறை படிந்த பற்களும்... யார் இந்த கோமாளி? இவனை சுதாகருடன் பார்த்திருக்கிறோம்.

அவனுடைய நண்பனல்லவா? ‘‘ஓகே பிரியா என்ன சாப்பிடறீங்க? ஆர்டர் கொடுத்துட்டு பேசுவோமே...’’ என்ற சக்கரவர்த்தி, சப்ளையரை அழைத்தான். அவரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு பிரியாவைப் பார்த்துச் சிரித்தபடி ‘‘என் கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?’’ என்றான். ‘‘உங்கள் கதைகளிலா? நீங்க கதைகூட எழுதுவீங்களா..?’’

சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்தான். ‘‘ஜோக்கிங்...’’ ‘‘நோ... ஐ ஆம் சீரியஸ். சுதாகர் எங்கே?’’ பிரியா கேட்டதும் நிலைகுலைந்தான் சக்கரவர்த்தி. ‘‘யார் சுதாகர்?’’ ‘‘இந்தக் கதைகளை உண்மையில் எழுதியவர்!’’ ‘‘அதெல்லாம் கிடையாது. எல்லாம் நான் எழுதிய கதைதான்...’’ ‘‘அப்படி நீங்க உலகத்தை ஏமாற்றலாம்.

என்னையில்லை. ஏன்னா சுதாகருடைய முதல் ரசிகை நான்தான். உண்மையை சொல்லுங்க...’’ சக்கரவர்த்தி பயந்து போனான். தன் முகத்தில் படர்ந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்தான். ‘‘அவன் இல்லை...’’ ‘‘பொய்...’’ ‘‘நிஜம். அவன் தற்கொலை செஞ்சு செத்துட்டான்... நீதான் அவனைக் கொன்ன...’’ ‘‘நானா?’’ ‘‘ஆமா...’’ பிரியாவுக்கு அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டவள் சட்டென்று எழுந்தாள். ‘‘அவர் தன் எழுத்துக்கள் மூலமா வாழ்ந்துட்டுதான் இருக்கார். அதுக்கு நீங்கதான் காரணம். இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்...’’ திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள். சக்கரவர்த்தி அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

www.kungumam.co.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ..... நடப்பதற்கு சாத்தியம் குறைவு.....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.