Jump to content

கிளிநொச்சியில் செவ்வாயன்று அனைத்து மதவழிபாடுகள் அனைவரையும் பங்கேற்குமாறு காணாமற்போனோரின் உறவுகள் அழைப்பு


Recommended Posts

கிளிநொச்சியில் செவ்வாயன்று அனைத்து மதவழிபாடுகள்

அனைவரையும் பங்கேற்குமாறு காணாமற்போனோரின் உறவுகள் அழைப்பு

 
கிளிநொச்சியில் செவ்வாயன்று அனைத்து மதவழிபாடுகள்
 

“வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் தொடர் போராட்­டத்­தின் நூறா­வது நாளான நாளை­ம­று­தி­னம் கிளி­நொச்சி கந்­த­சுா­வமி ஆலய முன்­ற­லில் அனைத்­து­மத வழி­பா­டு­க­ளுக்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த வழி­பா­டு­க­ளில் அனைத்து மாவட்­டங்­க­ளின் உற­வு­க­ளும் கலந்­து­கொள்ள வேண்­டும்” இவ்­வாறு கிளி­நொச்சி மாவட்ட வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் சங்­கம் அழைப்­பு­வி­டுத்­துள்­ளது.

வடக்­கில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தமக்­கான நீதி­யைக் கோரி தொடர்­சி­யான போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.ஆனால் இது­வரை அர­சி­டம் இருந்து உரிய பதில் வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளின் தொடர் போராட்­டம் நாளை ­ம­று­தி­னம் செவ்­வாய்­கி­ழமை 100 ஆவது நாளை எட்­ட­வுள்­ளது. அந்­தத் தினத்­தில் அனைத்­து­மத வழி­பா­டு­களை கிளி­நொச்சி கந்­த­சாமி கோவில் முன்­ற­லில் மேற்­கொள்ள அவர்­கள் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

“இந்த வழி­பா­டு­க­ளின் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு எமது பிரச்­ச­னையை மீண்­டு­மொரு முறை எடுத்­துக்­கூறி எமக்­கான தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­மாறு அவர்­க­ளி­டம் கோர­வுள்­ளோம். வழி­பா­டு­க­ளில் பொது­மக்­கள், அர­சி­யல் தலை­வர்­கள், சிவில் சமூக உறுப்­பி­னர்­கள், மாண­ வர்­கள் அனை­வ­ரும் பங்­கேற்­குமாறுஅழைப்பு விடு கின்றோம் என்று கிளி­நொச்சி மாவட்ட வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் கேட்­டுள்­ள­னர்.

http://uthayandaily.com/story/4378.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.