Jump to content

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர பஞ்சாயத்து நடத்தக் கூடாது


Recommended Posts

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர பஞ்சாயத்து நடத்தக் கூடாது

 
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர பஞ்சாயத்து நடத்தக் கூடாது
 

“உண்­மை­களை மறைத்­துத் தவ­றான செய்­தி­களை வழங்­கு­வ­தன் மூலம் தாம் நினைத்­த­வற்றை சாதித்­து­வி­ட­லாம் எனச் சிலர் எண்­ணி­யுள்­ளார்­கள்.

அவர்­க­ளுக்கு சகா­யம் வழங்க பத்­தி­ரி­கை­க­ளும் இணை­யத்­த­ளங்­க­ளும் முன்­னிற்­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டு­கள் தவ­றா­னவை. அவை ஒரு­வித பலாத்­கா­ரமே. கருத்­துக்­க­ளுக்­குக் கருத்­துக்­களே முன்­வைக்­கப்­பட வேண்­டுமே தவிர, கட்­டைப் பஞ்­சா­யத்து முறை­கள் அல்ல” இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்வ­ரன்.

இயக்­கங்­கள் இயங்­கிய போது பலாத்­கா­ரமே கரு­வி­யா­கப் பாவிக்­கப்­பட்­டது. இரா­ணு­வ­மும் அதே வழி­யையே பின்­பற்­றி­ யது. இனி­யும் அந்த வழி­முறை தொடர முடி­யாது. ஜன­நா­ய­கத்­தில் கருத்­துப் பரி­மாற்­றங்­களே உரிய வழி­முறை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபை­யின் தலை­மை­ய­கக் கட்­ட­டத் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் முதன்மை அதி­தி­யா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மக்­க­ளின் கோரிக்கை நியா­ய­மா­ன­தாக இருப்­பின் அவை நிச்­ச­யம் பரி­சீ­லிக்­கப்­ப­டும். பச்சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபை தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உகந்­த­தான தலைமை அலு­வ­ல­கக் கட்­ட­டம் ஒன்று இல்லை என்ற நீண்­ட­நாள் கோரிக்­கை­யும் எதிர்­பார்ப்­பும் இன்று நிறை­வே­றி­ யுள்­ளது. சுமார் 14.7 மில்­லி­யன் ரூபா செல­வில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தே­ச­ச­பை­யின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கும் ஏனைய கலந்­து­ரை­யா­டல்­கள் புதிய பிர­தேச சபைக்­கான அங்­கத்­த­வர்­கள் தெரிவு செய்­யப்­ப­டும்­போது அவர்­க­ளால் நடத்­தப்­ப­டப்­போ­கின்ற கூட்­டங்­கள் என்­ப­வற்றை சிர­ம­மின்றி நடத்­த­வும் ஏற்ற வகை­யில் இந்­தக் கட்­ட­டம் அமைந்­தி­ருப்­பது வர­வேற்­புக்­கு­ரி­யது.

பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை சுமார் 63 உத்­தி­யோக்­தர்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டிய சபை. எனி­னும் 3 உப அலு­வ­ல­கங்­கள் 3 சந்­தை­கள் என உங்­க­ளின் செயற்­பா­டு­கள் விரி­வ­டைந்­துள்ள நிலை­யில் இங்கு கட­மை­யாற்­று­கின்ற உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான ஆள­ணிப் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக அறி­கின்­றேன்.

அனு­ம­திக்­கப்­பட்ட ஆளணி 63ஆக இருக்­கும் போது, தற்­ச­ம­யம் 53 பேரே கடமை புரி­வ­தா­க­வும் இதில் குறிப்­பிட்ட ஒரு தொகை­யி­னர் மாறி மாறி தவிர்க்க முடி­யாத விடு­மு­றை­க­ளில் நிற்­ப­தா­க­வும் அறி­யந்­துள்­ளேன்.

மருத்­து­வக் கார­ணங்­க­ளுக்­கான விடு­மு­றை­கள் தவிர்க்க முடி­யா­தவை. ஆனா­லும் இருக்­கக் கூடிய ஆள­ணியை முறை­யா­கப் பயன்­ப­டுத்தி வேலை­களைத் துரி­த­மாக நிறை­வேற்­றக்­கூ­டிய ஆளு­மை­யை­யும் நிர்­வா­கத் திற­னை­யும் செய­லா­ளர்­கள் தம்­ம­கத்தே கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பது எமது எதிர்­பார்ப்பு. எனி­னும் ஆள­ணிக் குறை­பா­டு­களை நிரப்ப உரிய நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம்.

இன்று பட்­ட­தா­ரி­கள் மற்­றும் ஜி.சீ.ஈ. உயர்­த­ரப் பரீட்­சை­யில் கணித மற்­றும் விஞ்­ஞான பாடங்­க­ளில் மிகச் சிறப்­பான சித்­தி­க­ளைப் பெற்ற சிலர் அமைச்­சுக் காரி­யா­லய உத­வி­யா­ளர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­வதை நான் அறிந்­தி­ருக்­கின்­றேன்.

அவர்­கள் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக நிய­ம­னம் பெறு­வ­தற்­குத் தேவை­யான கல்­வித் தகைமை மற்­றும் ஏனைய தகைமை­கள் இருந்­தும் அதற்கு ஒப்­பான ஒரு பத­வியை நேர­டி­யா­கப் பெற்­றுக்­கொள்­வ­தற்குச் சந்­தர்ப்­பம் கிடைக்­கா­த­ தால், குறைந்த தகை­மையை எதிர்­பார்க்­கும் பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பம் செய்து பெற்று வரு­கின்­றார்­கள். இத­னால் குறைந்த தகை­மை­யு­டைய பலர் வேலை­யில்­லா­மல் அலை­கின்­றார்­கள்.

மேற்­படி தகைமை­கள் கூடிய ஊழி­யர்­கள் போட்­டிப் பரீட்­சை­க­ளில் சித்­தி­ய­டைந்து உத்­தி­யோ­கத்­தர் தர நிய­ம­னங்­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தை­யும் நாம் கண்­டுள்­ளோம் – என்­றார்.

http://uthayandaily.com/

Link to comment
Share on other sites

அட நானும் யால் கருத்துகளத்தில்  எதோ நடக்குது என்று வந்துவிட்டன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.