Jump to content

முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா?


Recommended Posts

முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:-

Wigneswaran-with-Sambanthan.jpg
முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்னரே பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். உரை நிகழ்த்தும் இடத்திற்கு தலைவர்கள் நடந்து வந்த பொழுது சம்பந்தரை பேசவிடக்கூடாது என்று பாதிக்கப்;பட்ட பெண்னொருவர் விக்கினேஸ்வரனை வேண்டுவதைக் காணலாம். அது மட்டுமல்ல அவரும் உட்பட மேலும் சில பெண்கள் விக்கினேஸ்வரனின் காலில் விழுவதையும் காணலாம். இவ்வாறு விக்கினேஸ்வரனின் காலில் விழுவதன் மூலம் அந்தப் பெண்கள் அவரை எவ்வளவிற்கு நம்புகிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர்கள் எந்தளவிற்கு தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதும் காலில் விழுமளவிற்கு நிலைகுலைந்து போய்விட்டார்கள் என்பதும் தெரிய வருகிறது.

இக்கட்டுரையானது தமிழ்மக்கள் யாருடைய காலிலும் விழுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள் இவர்கள். நவீன தமிழில் தோன்றிய வீர யுகம் ஒன்றின் மாந்தர் இவர்கள். வளைவதை விட முறிவதே சிறந்தது என்று முடிவெடுத்துப் போராடிய ஓர் ஆயுதப் போராட்டத்தில் தமது உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் இன்று தலைவர்களின் கால்களில் விழும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லது தலைவர்கள் இந்த மக்களை காலில் விழுந்து நீதி கேட்கும் நிலைக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
விக்கினேஸ்வரனின் காலில் பெண்கள் விழுந்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியிருந்தது. அந்தப் பெண்கள் விக்கினேஸ்வரனை எந்தளவிற்கு நம்புகிறார்கள் என்பதை அது காட்டுகிறது என்றும் அந்த நம்பிக்கையை அவர்; காப்பாற்ற வேண்டும் என்ற தொனிப்படவும் அந்த ஆசிரியத் தலையங்கம் அமைந்திருந்தது……….’முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த தாய்மார் தங்கள் காலைப் பிடித்து அழுத காட்சி கண்டோம். இதயம் நெகிழ்ந்து போயிற்று.ஒருபுறம் எங்கள் அன்னையர்களின் துன்பம். மறுபுறம் தங்கள் மீது எங்கள் தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை…….இந்த நம்பிக்கைக்கூடாக உண்மையையும் நேர்மையையும் விசுவாசத்தையும் எங்கள் மக்கள் எந்தளவு தூரம் மதிக்கின்றனர் என்ற மெய்யுணர்வு……எனவே இந்த இடத்தில் நாம் தங்களுக்குச் சொல்லக்கூடியது தமிழ் மக்கள் உங்களைத் தங்களின் ஆபத்பாந்தவனாகப் பார்க்கின்றனர். உங்கள் வார்த்தைகள் தங்கள் வலிக்கு ஒத்தடம் என்று நம்புகின்றனர்….. எனவே நீங்கள் தமிழ் மக்களின் தனித்துவமான நம்பிக்கைக்குரிய அப்பழுக்கற்ற தலைவராக இருக்கிறீர்கள்…….’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விக்கினேஸ்வரன் எழுச்சி பெற்றிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? ஈழத்தமிழ்ப்பரப்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக எழுச்சி பெற்றவர் விக்கினேஸ்வரன் எனலாம். அவர் கீழிருந்து மேல் நோக்கி வளர்ந்து வந்த ஒரு தலைவர் அல்ல. மேலிருந்து கீழ் நோக்கி பரசூட் மூலம் இறக்கப்பட்ட ஒரு தலைவர். அவருடைய தாடியும், குங்குமப்பொட்டும் மடமடப்பான மாறுகரை வேட்டியும் சால்வையும்;; அவருடைய தோற்றத்தைக் கட்டியெழுப்பின. அதில் மத அடையாளம் உண்டு;. அவர் அண்மையில் வழங்கிய ஒரு பேட்டி அந்த மத அடையாளத்தை எதிர்மறையாக விமர்சிக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதைஇங்கு சுட்டிக் காட்டவேண்டும். எனினும் அவருடைய தோற்றம் அவர் முன்பு வகித்த பதவி அவர் இப்பொழுது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு ஆகிய மூன்றும் இணைந்து அவரை நவீன தமிழ்த் தலைவர்களில் முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக எழுச்சி பெற வைத்துவிட்டன. அவர் முதலமைச்சராக வந்த பின் முதன் முதலாக தமிழகத்திற்குச் சென்று உரையாற்றிய நிகழ்வில் பங்குபற்றிய ஒரு செயற்பாட்டாளர் பின்வருமாறு சொன்னார். ‘அவர் என்ன சொல்லப் போகிறார்? என்று முழு அரங்குமே நிசப்தமாகக் காத்துக்கொண்டிருந்தது. அவரோ கண்களை மூடி ஒரு கையை மார்பில் வைத்து ஓர் ஆன்மீகவாதியைப் போல குரு வணக்கம் செய்தார். எங்களில் கொஞ்சப் பேருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது’ என்று.

அதே சமயம் வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பாடசாலை அதிபர் ஒரு அரசியல்கட்சித் தலைவரிடம் சொன்னாராம் விக்கினேஸ்வரனைப் பார்க்கும் பொழுது ஆறுமுகநாவலரின் நினைவு வருகிறது என்று. இவ்வாறாக ஒருவித மத அடையாளத்தோடு காட்சியளித்த போதிலும் கூட கடந்த எட்டாண்டுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகம் ஜனவசியம் மிக்க ஒருவராக விக்கினேஸ்வரன் எழுச்சி பெற்றிருக்கிறார். அவரை வைத்துத்தான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கலாம் என்று கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் நம்புமளவிற்கு அவர் மேலெழுந்து விட்டார்.

ஆனால் ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று எதிர்பார்ப்பிற்கு அவர் இன்று வரையிலும் உறுதியான பதில் எதையும் கூறியிருக்கவில்லை. எனது கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டது போல அவர் கதைப்பது சில சமயங்களில் ரஜனிகாந்தை ஞாபகப்படுத்துகிறது. அண்மையில் கூட ரஜனிகாந் அவ்வாறு வழுவழுத்துக் கதைத்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். விக்னேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்குவது தொடர்பில்; இன்று வரையிலும் துலக்கமான சமிக்ஞைகளை காட்டாதது ஏன்?

அவர் ஒரு தொழில்சார் அரசியல்வாதி இல்லை என்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம் அவருடைய தலைமைத்துவத்தில் நெளிவு சுழிவு குறைவு என்பது. கடந்த மூன்றாண்டுகளிற்குள் குறைந்தபட்சம் மாகாண சபைக்குட் கூட தமக்குச்சாதகமான ஒரு விசுவாசிகளின் அணியை அவரால் உருவாக்க முடியவில்லை.மூன்றாவது காரணம்-அவருடைய அரசியல் பாரம்பரியம் புரட்சிகரமானது அல்ல என்பது. அவர் ஒரு மிதவாதப் பாரம்பரியத்திற்கு உரியவர். அதிரடியாக கலகத்தனமான முடிவுகளை எடுக்கும் ஒரு பாரம்பரியத்துக்கு உரியவர் அல்ல. அவர் மெல்ல மெல்லத்தான் வளைவார். ஒரேயடியாக வளைய மாட்டார். நாலாவது காரணம் – சம்பந்தரே அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தார். சம்பந்தரை மேவி எழ அவர் தயங்குகிறார். சம்பந்தரை முறித்துக் கொண்டு ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்க சம்பந்தருக்கும் அவருக்கும் உள்ள வர்க்க உறவு தடையாக உள்ளது. ஐந்தாவது காரணம் -அவர் கடந்த மூன்றாண்டுகளாக முன்னெடுத்து வரும் அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு கற்றலின் அடிப்படையிலானது. (டுநயசniபெ) அவர் அடிக்கடி கூறுவது போல கொழும்பு மையத்தில் வாழ்ந்த அவர் வடக்கு மையத்தில் அரசியல் செய்ய வந்தபொழுது கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கின்றார். அந்த முடிவுகளை அவற்றுக்குரிய கோட்பாட்டு விளக்கங்களோடு அவர் எடுக்கிறாரா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

ஆறாவது காரணம் – அப்படியொரு மாற்று அணியை உருவாக்கினாலும் அதை வைத்து அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்துவது என்பது தொடர்பில் துலக்கமான அரசியல் தரிசனம், வழிவரைபடம் எதுவும் அவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஒரு மாற்று அணி ஏன் தேவை? என்பதற்கு இப்பொழுது பல பொருத்தமான விடைகள் உண்டு. ஆனால் ஒரு மாற்று அணி என்ன செய்யப் போகிறது? என்பது தொடர்பில் பொருத்தமான கோட்பாட்டு விவாதங்கள் எதுவும் இன்று வரையிலும் தமிழ்ப்பரப்பில் நடக்கவேயில்லை. அதாவது 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய தமிழ் மிதவாதத்தைக் குறித்து கோட்பாட்டு அடிப்படையிலான விவாதங்கள் இனிமேல்தான் நடக்கவேண்டியுள்ளது.

மேற்சொன்ன காரணங்களை விட வேறு உப காரணங்களும் இருக்க முடியும். ஆனால் சம்பந்தர் அணிக்கு எதிரான ஒரு மாற்று அணியை உருவாக்க முடியாமல் இருப்பதற்குரிய பிரதான காரணங்களில் ஒன்று விக்கினேஸ்வரன் இது தொடர்பில் இன்று வரையிலும் வெளிப்படையாக முடிவுகளை அறிவிக்கத் தவறியமைதான். ஒரு மாற்று அணியைக் குறித்து அதிகரித்த எதிர்பார்ப்புக்கள் கட்டியெழுப்பப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார். ஆனால் அப்படியொரு அணி இன்று வரையிலும் உருவாகாமல் இருப்பதற்கும் அவரே காரணமாக இருக்கிறார்.

எனினும் ஆகக்கூடிய பட்சம் பதினேழு மாதங்களுக்கே அவர் அவ்வாறு முடிவெடுப்பதை ஒத்தி வைக்கலாம். ஏனெனில் அடுத்த மாகாணசபை தேர்தல் வரும்பொழுது அவரை நிறுத்துவதா? இல்லையா? என்பதை சம்பந்தர் முடிவெடுக்க வேண்டியிருக்கும். தென்னிலங்கையில் தேர்தல்கள் நடக்குமோ இல்லையோ வடக்கு கிழக்கில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தக்கூடும். கடந்த மேதினக் கூட்டங்களின் பின் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு ஒன்றுக்குப்பல தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே காணப்படும் வடக்கு கிழக்கில் தேர்தல்களை நடாத்தலாம். வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் அநேகமாக மகிந்தவிற்கு எதிரானவைதான். முஸ்லீம் வாக்குகளும் அப்படித்தான். பொதுபலசேனா புதிதாக உருவாக்கியிருக்கும் ஓர் அரசியற் சூழலில் முஸ்லீம் வாக்குகள் ரணில் மைத்திரி அணியை நோக்கியே அதிகமாக விழும். எனவே மகிந்தவின் பலப்பரீட்சைக்குரிய ஒரு களமாகக் காணப்படாத வடக்கு கிழக்கில் அரசாங்கம் தேர்தல்களை வைக்கலாம். இதை முன்னுணர்ந்த காரணத்தினால்தான் தமிழ் அரசியல்வாதிகள் அவசர அவசரமாக போராட்டக்களங்களிலும், நினைவுகூரல் களங்களிலும் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நினைவுகூர்தலில் சம்பந்தருக்கு ஏற்பட்ட அவமதிப்பு தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் எதிரொலிக்குமா? சம்பந்தர் இவ்வாறு அவமானப்பட்டது இதுதான் முதற்தடவையல்ல. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ; பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வந்த பொழுது யாழ் நூலகத்தை அண்மித்த சாலைகளில் சம்பந்தர் அவமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னர் நடந்த இரண்டு தேர்தல்களிலும் கூட்டமைப்பே வென்றது. ஆனால் இனிவரும் தேர்தல்களின் போது பல புதிய வளர்ச்சிகளையும் கவனத்தில் எடுத்தே முடிவிற்கு வரவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சி; இரண்டு எழுகதமிழ்கள்; தலைவர்களை பின்தள்ளிவிட்டு போராடும் மக்கள்; விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவரும் ஜனவசியம்; முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு ஏற்பட்ட அவமதிப்பு போன்ற பல புதிய வளர்ச்சிகளினதும் திரண்ட விளைவாகவே வாக்களார்கள் சிந்திக்கக்கூடும்.

எழுகதமிழ் ஏற்பாடுகளுக்காக கிராமங்கள் தோறும் மக்களைத் திரட்டிய செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. இது தவிர நிலைமாறுகால நீதி தொடர்பாகவும் நல்லிணக்கச் செய்முறைகள் தொடர்பாகவும் கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்திப்புக்களின் போது அடிமட்ட மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருவதை அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த அதிருப்திகளையும், வெறுப்பையும், கோபத்தையும் ஒருமுகப்படுத்தவல்ல ஒர் அணியோ அல்லது அமைப்போ அல்லது கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் பேரவைக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. அது ஒரு கட்சியாக மாறாது என்று விக்கினேஸ்வரன் அடிக்கடி கூறுகின்றார். இது முதலாவது. இரண்டாவது பேரவைக்குள் செல்வாக்கோடு இருக்கும் பிரதானிகள் பலரும் அரச ஊழியர்கள். அரச ஊழியர்களுக்கென்று அரசியலில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இவ்விரண்டு வரையறைகளுக்கூடாகப் பார்த்தால் பேரவையானது ஒரு முழு நிறைவான அரசியல் இயக்கமாக மேலெழுவதற்கு தடைகள் உண்டு. ஆனால் அதிருப்தியாளர்களும், செயற்பாட்டாளர்களும் ஒன்றுகூடிக் கதைப்பதற்குரிய ஒரு பொது அரங்கு அது. தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியொரு பொது அரங்கு இதற்கு முன் இருந்ததே இல்லை.

பேரவை ஓர் இறுக்கமான கட்டமைப்பு அல்ல. பேரவைக்குள் எடுக்கப்படும் பல முக்கிய தீர்மானங்களை அதில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளே முன்மொழிகின்றன. அல்லது முன்னெடுக்கின்றன. யாப்பு வரைவில் தொடங்கி எழுகதமிழ் வரையிலும் இதுதான் நிலமை. அரசியற்கட்சிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பேரவை வேறொன்றாகவே இருக்கும். அதற்கு இப்போதிருக்கும் அடையாளமும் இருக்காது. பேரவைக்குள் இருக்கும் அரசியற் கட்சிகளுக்கும், விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான இடையூடாட்டமும் பலமானது அல்ல. பேரவைக் கூட்டங்களில் கூடிக்கதைப்பதற்குமப்பால் அதில் உள்ள அரசியற்கட்சித் தலைவர்களும், விக்கினேஸ்வரனும் இறுக்கமில்லாத மனம் விட்டுப் பேசும் சந்திப்புக்களில் ஈடுபடுவது மிகக் குறைவு என்றே கூறப்படுகின்றது. இதுவும் பேரவைக்குள் காணப்படும் ஒரு பலவீனம் தான்.

இத்தகையதோர் பின்னணியில் அரசாங்கம் தேர்தல்களை ஒத்தி வைக்கும் காலம் வரையிலும் விக்கினேஸ்வரனும் முடிவெடுப்பதை ஒத்தி வைக்கப் போகிறாரா? அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் கூறுவது போல ‘விக்கினேஸ்வரனும் சம்பந்தரும் ஒன்றுதான். இவர் ஒரு நாள் சால்வையை உதறி விட்டு கொழும்பிற்கு சென்று விடுவார். பேரவைக்குள் நிற்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் இருவரும் தெருவிற்கு வருவார்கள்’ என்பது சரியா? அதாவது அவர் தன்னியல்பில் என்னவாக இருக்கிறாரோ அதைவிட அதிகமாகத் தமிழ் மக்கள் அவரிடம் எதிர் பார்க்கிறார்களா?அல்லது தனது காலில் விழும் மக்களின் நம்பிக்கைகளுக்குத் தலைமை தாங்கி தமிழ்மக்கள் இனியெப்பொழுதும் யாருடைய கால்களிலும் விழத்தேவையில்லாத ஓர் அரசியலை அவர் முன்னெடுப்பாரா?

http://globaltamilnews.net/archives/28205

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.