Jump to content

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!


Recommended Posts

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

 

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவுக்குமிடையில் சூடான விவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சொற்களுக்காக சண்டையிட்டுக் கொள்ளாமல் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதே முக்கியமானது என்று நிமால் சிறிபால டி  சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தன், அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகளை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு, நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

http://thuliyam.com/?p=68934

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு வரைபுக்கு சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஒத்த பொருளடக்கமும் சமமான சட்டவலுவுள்ள மொழிபெயர்ப்புகளை வேண்டுமென்று கேட்பதே சரியான தெரிவாக இருக்கமுடியும். மற்றும்படி சம்பந்தனின் அகீயா கோரிக்கை வழமைபோல் நகைப்புக்கிடம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vanangaamudi said:

அரசியலமைப்பு வரைபுக்கு சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஒத்த பொருளடக்கமும் சமமான சட்டவலுவுள்ள மொழிபெயர்ப்புகளை வேண்டுமென்று கேட்பதே சரியான தெரிவாக இருக்கமுடியும். மற்றும்படி சம்பந்தனின் அகீயா கோரிக்கை வழமைபோல் நகைப்புக்கிடம்தான்.

இப்படியே   பொருள் தேடி அடுத்த தேர்தல் வரை  இழுத்திரலாம்...

சம்பந்தரா கொக்கா??

31/12/2016 தவணையை  தமிழினம் மறந்தே போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாமர சிங்கள மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காக சம்பந்தன் இப்படி கூறியிருக்கலாம் ....இந்த சிங்கள மக்கள் தான் பிக்குமாரையும்,இனவாத அரசியல் தலைவர்களையும் உருவாக்குபவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அனைத்துலகத்துக்கு  ஆமா போட  சம்பந்தன் தயாராக இருந்தாலும் . சிங்களம் இனவாதத்தை விட்டு வெளிவர  தயாராகவில்லை 

Link to comment
Share on other sites

13 hours ago, Athavan CH said:

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சகல ஊடகங்களில் வந்த இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்! 

சிங்கள-பௌத்த இனமத வெறியர்களும் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் சகல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும் வேண்டுவது Unitary (ඒකීය) ஏகீய தன்மைகள் கொண்ட அரசியலமைப்பை. இதையே சம்பந்தனும் வலியுறுத்தி கோபமடைந்தார் என்றால் இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்!  

கூட்டாட்சி (Federal) என்ற தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கைக்கு எதிராக செயற்பட்டு சம்பந்தனுக்கு ஜனாதிபதியாகும் ஆசை வந்திருந்தால் இதை வலியுறுத்தி கோபமடைந்திருக்கலாம்.

அல்லது செய்திகளில் முழுமையில்லாது பாரிய தவறு நடந்துள்ளது. இதை விளங்குமளவுக்கு தரமான தமிழ் ஊடகவியலாளர்கள் இல்லை!

Link to comment
Share on other sites

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சொல் தொடர்பில் முடிவில்லை!

புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிசெய்யும் நோக்கோடு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த அமர்விலும் அரசின் தன்மை குறித்து தெளிவான ஓர் இணக்கம் எட்டப்படவில்லை.

புதிய அரசமைப்பிலும் அரசின் தன்மை ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.

முன்னதாக அரசின் தன்மை ஒற்றையாட்சி என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியிருந்தது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தற்போது வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்டுவரும் இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும், 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அது 'ஏக்கிய' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆங்கிலத்தில் யுனிட்டரி (ஒற்றையாட்சி) என்ற பதத்துக்குப் பதிலாக 'ஏக்கிய' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். 'யுனிட்டரி' என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அதனை எதிர்த்தார். 'ஒற்றையாட்சி' என்று அதனைக் குறிப்பிடுவது யதார்த்தமற்றது என்று சம்பந்தன் நிராகரித்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், "வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பை முன்கொண்டுசெல்வது பற்றியே சிந்திக்கவேண்டும்" என்றார்.

இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் இடைக்கால அறிக்கையில் ஏற்கனவே 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும், 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவுகளைப்போன்றே தற்போதைய அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே ஒற்றையாட்சி என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுவதைப் போன்று கூட்டாட்சி (சமஷ்டி) என்பதையும் குறிப்பிடலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

ஆனால், அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்துவிட்டன. அந்த இரு சொற்களுமே இரு வேறு அர்த்தங்களைக் குறிப்பவை என்பதால் அதனை இடைக்கால அறிக்கையில் சேர்த்துக்கொள்வது இணக்கமொன்று எட்டப்படாதமையைக் குறிக்கும் என்று காரணம் கூறின.

இந்த விவாதத்தையடுத்து, இறுதிசெய்யப்படவுள்ள இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை குறித்த உள்ளடக்கத்தை மட்டுமே முன்வைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அரசின் தன்மை ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா (சமஷ்டியா) என்பதைக் குறிப்பிடுவதில்லை என்று இணங்கப்பட்டது.

எதுவாக இருந்தாலும் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகூடிய அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவது என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொண்டன.

http://www.tamilwin.com/politics/01/147240?ref=view-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.