Jump to content

கைதாவாரா ஞானசாரர்?


Recommended Posts

கைதாவாரா ஞானசாரர்?

 

நல்­லாட்­சியின் இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் ­செ­ய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அசா­தா­ரண நட­வ­டிக்­கை­களை கட்­ட­விழ்த்­துள்ளார். எனினும் இது­வ­ரையில் அவர் கைது­ செய்­யப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும் அவரை கைது­ செய்­வ­தற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆகவே இன­வா­த­மாக வீர­வ­சனம் பேசிய ஞான­சார தேரர் தற்­போது தலை­ம­றை­வாகி பதுங்­கி­யுள்ளார்.

இலங்கை சுதந்­திர நாடு என்­பதால் இங்கு சகல மக்­களும் தமது சமய கலா­சார அடையா­ளங்­க­ளுடன் வாழ்­வ­தற்­கான உரித்­துக் ­கொண்­டுள்­ளார்கள். அவ்­வு­ரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக உறு­தி­ செய்­யப்­பட்­டுள்­ளது. ஆன­போ­திலும் அச்­ சு­தந்­திரம் பல பொழு­து­களில் பறிக்­கப்­பட்­டுள்­ளன. அதன் பிர­தி­ப­ல­னாக நாட்டில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அசா­தா­ரண சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யுள்­ளன.

மேலும் இது ­போன்ற பல்­வேறு கார­ணங்­களை ஏது­வா­க­ கொண்டு ஆரம்­ப­மான யுத்தம் மூன்று தசாப்­தங்கள் மூண்­ட­துடன் அதனால் நாடு பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­ வ­ரப்­பட்ட பின்னர் நாட்டில் அமை­தியை நிலை­கொள்ளச் செய்­யலாம் என மக்கள் கரு­தினர்.

ஆன­ போ­திலும் அவ்­வெ­திர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏ­னெனில் யுத்­தத்தின் பின்னர் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் ஆரம்­பிக்­கப்பட்­ட­துடன் அதனை பெளத்த குரு­மார்கள் சிலர் முன்­னின்று வழி­ந­டத்­தினர். மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் பொது­பல சேனா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை கடு­மையான முறையில் முன்­னெ­டுத்து சென்­றது.

மேலும் கடந்த ஆட்­சியில் அவ்­வ­மைப்பு சுதந்­தி­ர­மாக தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­துடன் நாட்டின் சட்டம் ஒழுங்கு என்­ப­வற்றுக்கு எவ்­வித மதிப்பும் வழங்­க­வில்லை. அவ்­வாட்சி காலத்தில் அளுத்­கம கல­வரம் உள்­ள­டங்­க­லாக அதி­க­ள­வான வன்­முறை சம்­ப­வங்­களை அவ்­வ­மைப்பு முஸ்­லிம்­கள்­ மீது கட்­ட­விழ்த்­து­ கொண்­டி­ருந்­தது. மேலும் தாம் முன்­னெ­டுக்கும் அசா­தா­ரண நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­ன­றி­வித்தல் விடுத்­துக்­ கொண்டு செய்யும் வகையில் அவ்­வ­மைப்பு பலம் பெற்­றி­ருந்­தது. நாச­காரச் செயற்­பா­டு­களை முன்­ன­றி­வித்தல் வழங்கி தைரிய­மாக முன்­னெ­டுத்த போதும் அவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

பொது­பல சேனா அமைப்பின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள்

ஆட்­சி­ மாற்­றத்தின் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டு­களை காண­மு­டி­யா­தி­ருந்­தது. எனினும் இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் மீண்டும் அவ்­வ­மைப்பு தலை­தூக்­கி­யுள்­ளது. இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் சிலை வைப்பு விவ­கா­ரத்தின் பின்னர் அவ்­வ­மைப்பு தனது மத­வாத செயற்­பா­டு­களை கட்­ட­வி­ழ்க்க ஆரம்­பித்­துள்­ளது. அந்த வகையில் குறு­கிய காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ள­வான அசம்­பா­வி­தங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவை வரு­மாறு,

16.04.2017: 

தென் மாகா­ணத்­தி­லுள்ள கொட­பிட்­டிய, போர்வை நகரில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 4 கடைகள் மீது அதி­காலை வேளையில் பெற்றோல் குண்டு தாக்­குதல்.

17.04.2017 : 

காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்தில் அமைந்­துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் உடைப்பு.

20.04.2017 :

அம்­பாறை, இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி ­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் பௌத்த விஹா­ரையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்ப பணி­களை பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுப்பு.

25.04.2017 : 

மாயக்­கல்லி மலை­ய­டி­ வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணியில் விஹாரை நிர்­மா­ணிக்கும் பணி­களை பொதுபல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்து பார்­வை­யிடல். அத்­துடன் அம்­பாறை மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­டமை.

08.05.2017 :

இலங்கை கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் எனவும் அக­திகள் எனும் போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிப்­ப­தா­கவும் கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்­தமை

14.05.2017 : 

பொல­ன­றுவை, ஓனே­கம பகு­திக்கு விஜயம் செய்த பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­துடன் கால்­நடை கொட்­டில்­க­ளுக்கும் சேதம் ஏற்­ப­டுத்­தினார். அத்­துடன் 'அல்லாஹ்'வை அவ­ம­திக்கும் வகையில் ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டமை.

15.05.2017 :

தோப்பூர் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டு­ வரும் குடி­யி­ருப்பு காணியில் பௌத்த பிக்­குகள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து வேலி­களை உடைத்­தெ­றிந்­தமை.

15.05.2017 :

பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது அதி­காலை 3 மணி­ய­ளவில் பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

16.05.2017 : 

கொழும்பு, வெல்­லம்­பிட்டி, கொஹி­ல­வத்தை அல் இப்­ரா­ஹீ­மிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது அதி­காலை 1.45 மணி­ய­ளவில் சுமார் 8 பேர் அடங்­கிய குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யமை.

16.05.2017 :

பொதுபல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றி ஞான­சார தேரர், மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ராக வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை முன்­வைத்­தமை.

16.05.2017 : 

செல்­வ­நகர், நீணாக்­கேணி பிர­தே­சத்­திற்குள் கூரிய ஆயு­தங்கள் மற்றும் தடி­க­ளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்­பட்ட கும்பல் அப் பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களின் வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை. அதில் சிலர் காய­ம­டைந்­த­துடன் 16 வீடுகள் சேத­ம­டைந்­தன. அன்­றி­ரவு அக் கிராம முஸ்­லிம்கள் அச்சம் கார­ண­மாக அங்­கி­ருந்து வெளி­யேறி பள்­ளி­வா­ச­லிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தமை.

17.05.2017 : 

பாணந்­துறை, எலு­வில பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பேக்­கரி ஒன்றும் தொலைத்­தொ­டர்பு நிலையம் என்­ப­வற்றின் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

18.05.2017 : 

வென்­னப்­பு­வவில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை 2 மணி­ய­ளவில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

21.05.2017

குரு­ணாகல் மல்­ல­வப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சல்­ மீது அதி­காலை வேளையில் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் பெற்றோல் குண்டு தாக்குதல்.

மேலும் அன்­றைய தினம் அதி­காலை வேளையில் காலி பெந்­தோட்டை எல்­பிட்டி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

22.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவின்ன சந்­தியில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை வேளையில் தீக்­கிரை.

23.05.2017

இரத்­தி­ன­புரி கஹ­வத்தை நக­ரி­லுள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் மற்றும் தமிழ் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் என்­பன அதி­காலை வேளையில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

24.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாவின்ன நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்தகரின் மருந்தகத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்.

அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா?

மேற்­கு­றிப்­பி­ட்ட அசம்­பா­வி­தங்கள் அண்­மைக்­கா­ல­மாக நடந்­தே­றி­ய ­போதும் அதற்­கெ­தி­ராக அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ளது. நாட்டில் அமை­தியை மீண்டும் சீர்­கு­லைக்க விளையும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­ அத்தே ஞான­சார தேரரை கைது ­செய்­வ­தற்கு அர­சாங்கம் தாமதம் காட்­டு­கி­றது. அத­னை­யிட்டு மக்கள் மத்­தியில் ஆட்­சி­யா­ளர்கள் மீது நம்­பிக்­கை­யீனம் அதி­க­ரித்து வரு­கி­றது.

மேலும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்­சிகள் மற்றும் ஏனைய கட்­சி­களும் அர­சாங்கம் மீது மிகுந்த விமர்­ச­ன­ங்­களை முன்­வைத்­துள்­ள­துடன் உரிய நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ள­தாக குற்றம் சாட்டி வரு­கின்­றன. சிவில் சமூக அமைப்­பு­களும் இது விட­யத்­தில் அர­சாங்­கத்தின் அச­மந்தப் போக்­கினை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன.

மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­டோர் நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். எனினும் இது­வ­ரையில் அவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட­வில்லை.

பொது­பல சேனா­விற்கு அர­சாங்­கத்தின் மறை­முக ஒத்­து­ழைப்பு உள்­ளதா?

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெறும் அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் என அர­சாங்கம் குறிப்­பிட்ட போதிலும் இது­வ­ரையில் நட­வ­டிக்கை இல்லை. ஆகவே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற அதே செயற்­பா­டுகள் தற்­போதும் தொடர்ந்­து ­கொண்­டி­ருக்­கி­றது. எனவே நல்­லாட்சி அர­சாங்கம் பொது­பல சேனா அமைப்­புக்கு மறை­மு­க­மாக ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றதா என்­கின்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

மேலும் ஞான­சார தேரரின் கைது விட­யத்தில் சில அமைச்­சர்கள் சட்ட நுணுக்­கங்­களை பயன்­ப­டுத்தி அவரை பாதுகாக்க முனை­வ­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர். அத்­துடன் அம்­பாறை மாவட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் சிலை­வைப்பு விவ­கா­ரங்­களின் பின்­ன­ணியில் செயற்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் அமைச்­சர்கள் சிலர் பொது­பல சேனா அமைப்­புக்கு மறை­மு­க­மான ஒத்­தாசை வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.

இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முடி­வு­கட்ட வேண்டும்

இவ்­வா­றாக நாட்டில் இடம்­பெறும் இன­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு உட­ன­டி­யாக முடிவு கட்­டப்­பட வேண்டும். அல்­லாது அச்­செ­யற்­பா­டுகள் தொடர்ந்தால் நாடு பின்­னோக்­கிய நகர்­வு­களை மீண்டும் சந்­திக்க வேண்­டிய அபாயம் உள்­ளது.

அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், “முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நாட்டில் கட்­ட­விழ்க்­கப்பட்­டுள்ள அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக முடி­வு­கட்ட வேண்டும். அல்­லாது போனால் இளை­ஞர்கள் பொறுமை இழந்து அவ்­வா­றான அட்­ட­கா­சத்­திற்கு முடிவு கட்­டு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கு தூண்­டப்­ப­டு­கின்ற மிக அபா­ய­க­ர­மான சூழல் உள்­ளது.

மேலும் இவ்­ வி­வ­காரம் தொடர்பில் சில அதி­கா­ரி­களும் ஒரு சில மதத்­தை­சார்ந்­த­வர்­களும் தங்­க­ளுக்கு ஏற்ற வகையில் வியாக்­கி­யானம் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வி­யாக்­கி­யா­னத்தை நம்பி நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய பொலிஸார் அச­மந்­தப்­போக்­கினைக் கடைப்­பி­டிக்­கின்­றனர். அதனால் நாட்டில் அமைதி சீர்­கு­லைந்து செல்­வ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

அசா­தா­ரண சம்­ப­வங்­களை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள்

நாட்டில் தொல்­பொருள் பிர­தேசம் மற் றும் காட­ழிப்பு உள்­ளிட்ட விவ­கா­ரங்­களை முதன்­மைப்­ப­டுத்­தி­கொண்டு முஸ்­லி­ம­்க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் பாரா­ளு­மன்றில் தெரி­வுக்­குழு அமைத்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இவ்­வி­வ­கா­ரங்­க­ளினால் ஆத்­தி­ர­ம­டைந்­துள்ள முஸ்­லிம்­களை அமைதி காக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இதே­வேளை அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த புதன் கிழமை கிழக்கு மாகா­ணத்­திலும் வியா­ழக்­கி­ழமை ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்கள் ஹர்த்தால் அனுஷ்­டிப்­ப­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அது கைவி­டப்­பட்­டது.

முஸ்லிம் எம்.பி.க்களின் சந்­திப்பு

குறித்த அரா­ஜக நட­வ­டிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் கடந்த 20 ஆம் திகதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். அதன்­போது கடந்த காலங்­களை போன்று நல்­லாட்­சி­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அடா­வ­டித்­த­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. இவ்­வாறு தொடர்ந்து சென்றால் அனைத்து உறுப்­பி­னர்­களும் தீர்க்­க­மான முடி­வுக்கு வரு­வ­தற்கும் இணக்கம் காணப்­பட்­டது.

மேலும் எதிர் ­நோக்கும் புனித ரமழான் மாதத்தில் முஸ்­லிம்கள் இடையூறின்றி தமது வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான வச­திகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஞான­சார தேரரை கைது ­செய்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள்

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை கைது­செய்­வ­தற்­கான சில நட­வ­டிக்­கை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இவ் ­வா­ரத்தின் ஆரம்­பத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குருணாகல் தம்­புள்ளை வீதியில் தோர­யாய எனும் இடத்­திற்கு சென்­றி­ருந்­தனர். எனினும் அதன் போது பொலி­ஸாரின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யதன் விளை­வாக அவரை கைது செய்ய முடி­ய­வில்லை. அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்ய பாதாள உலக குழு­வி­னரை கட்­டுப்­ப­டுத்த ஏற்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவின் 4 குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சர் பிரி­யந்த லிய­ன­கேவின் கீழ் குறித்த நான்கு பொலிஸ் குழுக்­களும் நேற்­று­ முன்­தினம் முதல் ஞான­சா­ர­ தே­ரரை கைதும் செய்யும் நட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ளன.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை, இனம் மதங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் தொடர்ச்­சி­யாக கருத்­துக்­களை வெளி­யிட்­டமை, நீதி­மன்றை அவ­ம­தித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்­வதை தடுக்கும் வகையில் அவ­ரது கட­வுச்­சீட்டை பொலிஸார் முடக்­கி­யுள்­ளனர். நேற்று முன்­தினம் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் இது தொடர்பில் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரி­வினர் அறிக்கை தாக்கல் செய்து ஞான­சார தேரரின் கட­வுச்­சீட்டை முடக்­கு­வ­தற்­கான உத்­த­ரவைப் பெற்­றுக் ­கொண்­டனர்.

இந் நிலையில் இன மத வாதத்தை தூண்­டு­வோரை பார­பட்­ச­மின்றி கைது செய்ய அமைச்­ச­ரவைத் தீர்­மானம் ஊடாக பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்ட நிலையில் ஞான­சார தேரரை கைது செய்ய நட­வ­டிக்­கை­யெ­டுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்­நி­லையில் ஞான­சார தேரரை கைது செய்ய பொலிஸார் பல இடங்­களில் தேடுதல் நடத்­தி­யுள்­ள­போதும் அவரை கண்­ட­றிய முடி­ய­வில்லை. இதே­வேளை ஞான­சா­ரரை கைது செய்து சிறைச்­சா­லைக்குள் அவரை கொலை­ செய்­வ­தற்­கான திட்டம் உள்­ளது. எனவே அவர் தற்­போ­தைக்கு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே தெரி­வித்துள்ளார்.

இருந்­த­ போ­திலும் நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­காற்­றிய படைப்­பி­ரிவு மற்றும் புல­னாய்­வுத்­துறை என்­பன கட­மையில் உள்­ளன. ஆகவே ஞான­சார தேரரை தேடிக்­கண்டு பிடித்து அவரை கைது செய்­வ­தென்­பது கடி­ன­மான விட­ய­மல்ல.

மேலும் அவரைக் கைது­செய்­வ­தற்கு விசேட ஏற்­பா­டு­களை வகுக்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. ஏனெனில் அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் நடை­மு­றையில் உள்ள சாதா­ரண சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அவரை கைது செய்­தி­ருக்­கலாம். எனினும் அர­சாங்கம் அது தொடர்பில் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ளது. அதனால்தான் தற்­போது விசேட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது.

ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டால் பதற்றம் ஏற்­ப­டுமா?

பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் கைது­செய்­யப்­பட்டால் நாட்டில் பதற்றம் ஏற்­படும் என சிலர் தெரி­விக்­கின்­றனர். ஏனெனில் அவ்­வா­றான மாயையை அவ்­வ­மைப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேலும் ஞானசார தேரர் தனது கைது தொடர்பில் கருத்து தெரிவித்த போது “தன்னைக் கைது செய்தால் நாட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும்” என்ற வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால், அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் எவ்வித பதற்றமான சூழ்நிலையும் நாட்டில் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் பொதுபல சேனா அமைப்பு தொடர்பிலும் அவ்வமைப்பின் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அவ்வமைப்பின் செயற்பாடுகளை சிங்கள மக்களில் அதிகளவானோர் கடுமையாக விமர்சிக்கின்றனர். மேலும் பல சிங்கள பொது அமைப்புகளும் பொதுபல சேனாவிற்கு எதிரான கொள்கையில் உள்ளன.

எனினும் பொதுபல சேனாவுடன் இனவாத நோக்கம் கொண்ட சிறிய கூட்டம் ஒன்றே உள்ளது. அவ்வமைப்பின் செல்வாக்கு இனவாத சிந்தனை கொண்ட சிறிய கூட்டத்துடன் மாத்திரம் சுருங்கியுள்ளது. ஆகவே ஞானசார தேரரின் கைதின் பிரதிபலனாக நாட்டில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை.

தீர்வு

இனவாத நோக்கம் கொண்டு செயற்படும் பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நடவடிக்கையில் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மேலும் இதுபோன்ற இனவாத நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளவர்கள், அவ்வமைப்புகளுக்கான நிதிக் கட்டமைப்பு என்பது பற்றி மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை வேண்டும்.

ஏனெனில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளினால் தான் நாடு கடந்த காலங்களில் மோசமான நிகழ்வுகளை எதிர் கொண்டது. ஆகவே கடந்த கால அனுபவங்களை கருத்திற் கொண்டு இது குறித்த உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு மாத்திர மன்றி சமூகத்திற்கும் உள்ளது.எம்.சி.நஜி­முதீன்

எம்.சி.நஜி­முதீன்

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.