Jump to content

இனவாத முற்றுகை


Recommended Posts

இனவாத முற்றுகை

 

அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. 

 

நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது. அது மட்­டுமல்லாமல், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இனத்­து­வே­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்­களை அர­சாங்கம் களத்தில் இறக்­கி­யி­ருக்­கின்­றது.  அவர் வெளி­நா­டு­க­ளுக்குத் தப்பிச் செல்­வதைத் தடுக்கும் வகையில் நீதி­மன்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.  

 

சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டி, இன­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக அர­சாங்கம் எடுத்­துள்ள இந்த நட­வ­டிக்­கைகள் பாராட்­டுக்­கு­ரி­யவை. கடந்த சுமார் ஒரு மாத கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நாட்டின் பல பகு­தி­க­ளிலும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை, இனங்­க­ளுக்­கி­டை­யிலும், மதங்­க­ளுக்­கி­டை­யிலும் துவே­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் செயற்­பட்­டி­ருந்­ததைக் காணக் கூடி­ய­தாக இருந்­தது.

உச்­சக்­கட்ட நட­வ­டிக்­கை­யாக அவர் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­சுக்கு அமைச்சர் மனோ கணேசன் பொருத்­த­மற்­றவர் எனக் கூறி, இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­ற­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் தவ­றி­யுள்ளார் என குற்றம் சுமத்­தி­யி­ருந்தார். அமைச்­ச­ரவை அந்­தஸ்து பெற்­றுள்ள அமைச்சர் மனோ கணேசன் மீது அவ­தூறு ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்த ஞான­சார தேரர், அமைச்­சரைச் சந்­திப்­ப­தற்கு முற்­பட்­ட­போது அதனை அமைச்சர் தவிர்த்­தி­ருந்தார்.

ஆயினும் அமைச்சர் மனோ கணேசன் அலு­வ­ல­கத்தில் இல்­லாத வேளையில் அமைச்­சுக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்த ஞான­சார தேரரும், அவ­ரது சகாக்­களும் அமைச்­சரை உட­ன­டி­யாகச்

சந்­திக்க வேண்டும் என்று பிடி­வாதம் பிடித்து அட்­ட­காசம் புரிந்­தனர். இத­னை­ய­டுத்து, அமைச்­சுக்கு விரைந்த அமைச்சர் மனோ கணேசன் ஞான­சார தேர­ருடன் பேச்­சுக்கள் நடத்தி, அவர் வெளி­யிட்ட இன­வாத கருத்­துக்­க­ளுக்குத் தகுந்த பதி­ல­ளித்­தி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், தனது அமைச்­சுக்கு தான் பொருத்­த­மா­ன­வரா இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும். வேறு யாரும் அதனைத் தீர்­மா­னிக்க முடி­யாது எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

அண்­மைக்­கா­ல­மாக இனங்­க­ளுக்­கி­டையில் முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டு­களில் ஞான­சார தேரர் ஈடு­பட்­டமை, அத்­துடன் பொலிஸ் அதி­கா­ரி­களின் பணி­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை போன்ற குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அவரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த ஒரு மாத கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் அடித்து நொறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்­க­ளுக்கு எதி­ராக இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­ட­துடன், அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. குரு­ணா­கல் பகு­தியில் முஸ்லிம் பள்­ளி­வாசல் ஒன்று தாக்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்­லிம்­களும் அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ர­வுக்­க­மைய, சட்டம் ஒழுங்­குக்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல ரட்­நா­யக்­கவின் பணிப்­பு­ரை­யை­ய­டுத்து விசேட பொலிஸ் குழுக்கள் இதற்­கென நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த பொலிஸ் குழுக்கள் இப்­போது ஞான­சார தேரரைத் தேடி­வ­ரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

அதே­வேனை, இனங்­க­ளுக்­கி­டையில் முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கென விசேட பொலிஸ் பிரி­வொன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் துவே­சத்­தையும் முறுகல் நிலை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் பொலி­ஸா­ரினால் கண்டு கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. குறிப்­பாக அர­சியல் செல்­வாக்கு மிக்க பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள், பொது­பல சேனா, ராவணா பலய போன்ற பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்கள் இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் பகைமை உணர்­வையும் ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டும்­போது, அவர்­களின் செயற்­பா­டுகள் பொலி­ஸா­ரி­னதும், சட்­டத்­தி­னதும் கண்­க­ளுக்குத் தெரி­வ­தில்லை..

ஆனால், அத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் தூண்­டப்­பட்டு, அதற்கு எதி­ராகச் செயற்­ப­டு­கின்ற சிறு­பான்மை இனத்­த­வர்­களின் நட­வ­டிக்­கைகள் பொலிஸா­ரி­னதும், சட்­டத்­தி­னதும் கண்­களில் மிகப் பெரி­தாகத் தோன்றி, உட­ன­டி­யாகச் செயற்­படத் தூண்­டி­யி­ருப்­பதைப் பல சம்­ப­வங்கள் நிதர்­ச­­னமாகக் காட்­டி­யி­ருக்­கின்­றன. இத்­த­கைய ஒரு போக்கில் இப்­போது மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­பதை, ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காகப் பொலிஸார் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் சுட்டிக்காட்­டு­கின்­றன.

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டி, இனங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் நிலவச் செய்­வ­தற்­கான இந்த நட­வ­டிக்கை காலம் தாழ்த்­தியே எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும், அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது. பாராட்­டுக்­கு­ரி­யது. ஆனால், இந்த நட­வ­டிக்கை எந்த அள­வுக்கு உளப்­பூர்­வ­மா­னது என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

மதத்தின் பெயரில் இன­வாதச் செயற்­பா­டுகள்  

இந்த நாட்டில் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக பௌத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனைய மதங்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, பௌத்த மதத்­திற்கு முதன்­மை­யான அந்­தஸ்து அளிக்­கப்­பட்­டுள்­ளதை எவரும் மறுக்க முடி­யாது. இந்த முன்­னு­ரி­மை­யா­னது, அர­சியல் ரீதி­யா­னது, அர­சியல் அந்­தஸ்தும், அதி­கார செல்­வாக்கும் மிக்­கது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே பௌத்த மத குருக்கள் அர­சி­யலில் தாரா­ளமாக ஈடு­ப­டு­கின்­றார்கள். பௌத்த மதக் கோட்­பா­டா­னது மத குரு ஒருவர் முற்றும் துறந்த துற­வி­யாக இருக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றது.

ஆனால், நாட்டில் உள்ள நடை­மு­றை­க­ளின்­படி, அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற பௌத்த மத குருமார்கள் உள்ளூராட்சி சபை­களின் உறுப் ­பி­னர்­க­ளாக, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளாக, பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக ஏனைய அர­சி­யல்­வா­தி­களைப் போன்று செல்­வாக்கும் வச­தி­களும் படைத்­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். முற்றும் துறந்த நிலையில் அவர்கள் அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தில்லை.  

மக்கள் பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­யப்­ப­டாமல், பௌத்த மத வணக்­கஸ்­த­லங்­க­ளுக்குப் பொறுப்­பாக உள்ள மத குருக்கள் பலர் மக்கள் பிர­தி­நி­தி­களைப் போன்று அர­சி­யலில் சாதா­ர­ண­மாக ஈடு­ப­டு­கின்­றார்கள். சாதா­ரண அர­சி­யல்­வா­தி­களைப் போன்று அடா­வ­டித்­த­னங்­க­ளிலும், இன­வாதம் தோய்ந்த அர­சியல் செயற்­பா­டு­க­ளிலும் தாரா­ள­மாக ஈடு­ப­டு­கின்­றார்கள். இதனால், சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களும், முஸ்­லிம்­களும் மத ரீதி­யா­கவும் அர­சியல் ரீதி­யா­கவும் பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார்கள்.

அர­சியல் ரீதி­யான இத்­த­கைய அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கடந்த காலங்­களில் இனங்­க­ளுக்­கி­டையில் மோச­மான முறுகல் நிலை­மையும் மோச­மான பதற்ற­மான சூழலும் ஏற்­பட்­டி­ருந்­தது. பொது­பல சேனா, ராவணா பலய, ஹெல உறு­மய போன்ற பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த காவி­யுடை தரித்த பௌத்த மத குருமார்களின் தலை­மையில் குண்­டர்கள் ஏனைய மதத்தைச் சார்ந்­த­வர்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

முன்­னைய ஆட்­சியில் இந்தச் செயற்­பா­டுகள் மிகச் சாதா­ர­ண­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. முஸ்­லிம்­களின் தர்கா நகர் மீதான தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் அடித்து நொறுக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டமை போன்ற அடா­வ­டித்­த­ன­மான சம்­ப­வங்கள் தாரா­ள­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. சட்­டத்­தையும், ஒழுங்­கையும், அமை­தி­யையும் நிலை­நாட்ட வேண்­டிய பொலி­ஸாரும், தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பான படை­யி­னரும் இவற்றை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்­தமை வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. அடா­வடிச் சம்­ப­வங்­க­ளின்­போது, பாதி­க்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பாது­காப்­ப­ளிக்கத் தவ­றி­யது மட்­டு­மல்­லாமல், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்­பா­ததை உறுதி செய்யும் நட­வ­டிக்­கை­களில் அவர்கள் ஈடு­பட்­டி­ருந்­த­மையும் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

நிலை­மைகள் சீர­டை­ய­வில்லை

இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை­யையும் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­களின் செயற்­பா­டுகள் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றதன் பின்னர் சற்று குறை­வ­டைந்­தி­ருந்த போதிலும், அவைகள் முற்­றாக நிறுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எழுக தமிழ் என்ற மகு­டத்தில் தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள எரியும் பிரச்­சி­னை­களை முன்­வைத்து, தமிழ் மக்கள் பேரவை மட்­டக்­க­ளப்பில் நடத்­திய பேர­ணி­யை­ய­டுத்து, அந்தப் பேர­வையின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கிய வட­ம­ாகாண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பொது­பல சேனா அமைப்­பினர் ஞான­சார தேரரின் தலை­மையில் வவு­னியா நகரில் ஒரு பேர­ணியை நடத்­தி­யி­ருந்­தனர்.

அந்தப் பேர­ணியில் இன­வாதம் பகி­ரங்­க­மாகக் கக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னுக்கு மரண அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக அர­சியல் ரீதி­யாக எதிர்க் கருத்து வெளி­யி­டு­வ­தற்கு எவ­ருக்கும் உரிமை உண்டு. ஆனால், மதத்­த­லை­வர்­க­ளாக இருந்து கொண்டு, ஆண்கள் பெண்கள் குழந்­தை­களைத் திரட்டி தீவி­ர­வாத அடிப்­ப­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் பொது­பல சேனா அமைப்­பினர் அர­சியல் சண்­டித்­தனம் காட்டும் வகையில் வவு­னி­யாவில் பேரணி நடத்­தி­யி­ருந்­தனர். நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும், மதங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க செயற்­பட்டு வரு­வ­தாகக் கூறு­கின்ற அரசும், சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான பொலி­ஸாரும் அந்தப் பேர­ணிக்குப் பாது­காப்பு வழங்­கி­யி­ருந்­தனர். இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் நடத்­தப்­பட்ட அந்தச் செயற்­பாட்­டுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வப்­போது இது­போன்ற இன­வாதச் செயற்­பா­டுகள் பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்க­ளினால் தாரா­ள­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன் தொடர்ச்­சி­யா­கவே, கடந்த ஒரு மாத கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பல சம்­ப­வங்கள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­றி­ருந்­தன. இதனை அரச தரப்­பி­னரோ அல்­லது பொலி­ஸாரோ கண்­டு­கொள்­ள­வில்லை. அத்­த­கைய சம்­பவங்­களில் ஒன்­றா­கவே அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்­சுக்குள் ஞான­சார தேரர் குழு­வி­ன­ரு­டைய அடா­வ­டித்­த­னமும் இடம்­பெற்­றி­ருந்­தது.

முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­களை அமெ­ரிக்கா கண்­டித்­தி­ருந்­தது. அதே­போன்று ஏனைய தரப்­புக்­களில் இருந்தும் கண்­ட­னங்கள் எழுந்­தி­ருந்­தன. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மல்­லாமல் பெரும்­பான்மை இன அர­சியல் தலை­வர்­க­ளும்­கூட இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். இந்த இன முறுகல் நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி­யி­ருந்­தனர்.

பொலிஸார் மீது குற்­றச்­சாட்டு....,?

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்தில் முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் பற்­றிய விடயம் விவா­திக்­கப்­பட்­ட­போது, இந்த அத்­து­மீறல் செயற்­பா­டு­க­ளுக்கு பொலி­ஸாரே காரணம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காரணம் கூறி­யி­ருந்தார். இதன்மூலம் பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதி­யிலும் முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகை­யிலும் நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேண வேண்­டிய பொறுப்பை பொலிஸார் மீது அவர் தட்­டிக்­க­ழித்­துள்ளார் என அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர்.

மோச­மான ஒரு நீண்ட யுத்தம் ஒன்று முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் இன்னும் நல்­லி­ணக்­கமும் நல்­லு­றவும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கமும் அச்ச உணர்வும் நீக்­கப்­பட்டு, அனை­வரும் இந்த நாட்டு குடி­மக்கள் என்ற ரீதியில் இணைந்து ஐக்­கி­ய­மாக வாழ்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதை அர­சாங் கம் உணர்ந்­தி­ருக்­கின்­றது. அதன் கார­ண­மா­ கவே நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை அர­சாங் கம் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது.  

நல்­லி­ணக்­கத்­திற்கு அடித்­த­ள­மாக யுத்­த­மோ­தல்­க­ளின்­போது இடம்­பெற்ற உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் ஊடாக சர்­வ­தேசம் அழுத்தம் கொடுத்து வரு­கின்­றது. இந்த பொறுப்புக்கூறல் செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதில் தீவிர அக்­க­றையும் கரி­ச­னையும் செலுத்த வேண்­டிய ஒரு சூழலில், நல்­லி­ணக்­கத்­துக்­கான முயற்­சி­களைப் பாழ­டிக்­கின்ற நட­வ­டிக்­கை­களை அனு­ம­திப்­ப­தென்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல.

அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நாட்டில் இடம்­பெ­று­வதை அறிந்­தி­ருந்தும், ஆரம்ப நிலை­யி­லேயே அ­வற்­றுக்கு முற்­றுப்­புள்ளி இடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­யி­ருப்­பது அர­சாங்­கத்தின் பல­வீ­னத்­தையே காட்­டு­கின்­றது.

முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­ட­போது, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வதில் அரசு பல­வீ­ன­மாக இருக்­கின்­றது என்­பதை சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல ரட்­நா­யக்க ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

ஆனால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்தில், இன­வாதத் தாக்­கு­தல்­களில் இருந்து முஸ்­லிம்கள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக முஸ்லிம் மக்­களின் மூத்த தலை­வர்­க­ளை­விட இளம் அர­சி­யல்­வா­தி­களே அதிக ஈடு­பாடு காட்­டி­ய­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக பெரும்­பான்மை இன அர­சி­யல்­வா­தி­களும் குரல் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்தச் சந்­தர்ப்­பத்­தி­லேயே இடம்­பெற்ற நிகழ்­வு­களைத் தடுத்து நிறுத்­து­வதில் இருந்து பொலிஸார் தவ­றி­யி­ருக்­கின்­றனர் என்ற வகையில் பொலிஸார் மீது ஜனா­தி­பதி பொறுப்பை சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

பொறுப்­பான செயற்­பாடு அவ­சியம்

நாட்டில் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பெரி­யண்ணன் தோர­ணையில் நடந்து கொள்­வ­தற்கு அர­சாங்­கத்தின் பேரி­ன­வாதக் கொள்கை ரீதி­யான செயற்­பாடே கார­ண­மாகும். பெரும்­பான்மை இன மக்கள் பின்­பற்­று­கின்ற பௌத்த மதத்­திற்கு அதி­கா­ர­பூர்­வ­மான மேல் நிலையும், பௌத்த மதத் தலை­வர்கள் அர­சியல் ரீதி­யாக இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்கும், செயற்­ப­டு­வ­தற்கும் அர­சாங்­கமே இட­ம­ளித்­தி­ருக்­கின்­றது.

அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப் ப­தற்கு எந்த அர­சாங்­கமும் முன்­வந்த­ தில்லை. பௌத்த மதத் தலை­வர்கள் -அவர்கள் மூத்­த­வர்­க­ளாக இருந்­தா­லும்­சரி, புதி­ய­வர்­க­ளாக இள வய­தி­ன­ராக இருந்­தா­லும்­சரி அவர்­க­ளு­ டைய செயற்­பா­டுகள் எந்­த­வி­த­மான கேள்­வி­யு­மின்றி அர­சாங்கத்­தி­னாலும் அதிகாரிகள், அமைச்சர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படு கின்றன. அவர்கள் தவறான வழியில் செயற் பட்டிருந்தாலும்கூட, அதனைக் கண்டிப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அரச நிர்வாகம் முன்வருவதில்லை. இதுவரையில் முன்வந்தது மில்லை

அரசியல் ரீதியாகவும் மதரீதியாகவும் சிறு பான்மையினங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கி யொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியி லேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.

அத்தகையதோர் அரசியல் நிர்வாகப் போக் கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக முடுக்கிவிடப் பட்டுள்ள நடவடிக்கை காட்டுகின்றது. இனங்க ளுக்கிடையில் முறுகலையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்  டும். அந்த வகையில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படுமாக இருந்தால் நாட்டில் சிறுபான்மையின மக்கள் எதிர் கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிடும். அதேவேளை இனவா  தச் செயற்பாடுகள் காரணமாகப் பல்கிப்  பெருகுகின்ற பிரச்சினைகளின் எண்ணிக் கை யும் குறைவடைவதற்கு வழியேற்படும். 

எனவே, முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஏற்  பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஞானசார தேரரைக்  கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாக அமையக்கூடாது. அரசு மீதான அழுத்தங்களே இந்த நிலைப்பாட்டை எடுப்ப தற்கு அரசாங்கத்தைத் தூண்டியிருக்கலாம். ஆனால் இனவாதத்திற்கும், இனங்களுக் கிடை யில் முறுகல்நிலை ஏற்படுவதற்கும் இடமளிக் கப்படமாட்டாது என்ற நிலைப்பாட்டை, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அரசாங்கம் உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும்.  

அத்தகைய ஒரு நிலைப்பாட்டின் மூலம் மாத் திரமே நாட்டில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த முடியும். இல்லையேல் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை யாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.