Jump to content

அரசு அலுவலகங்களில் நோன்பை முன்னிட்டு நிகழ்வுகள் இல்லை; இருபதாண்டு வழக்கத்தை முறித்தது ட்ரம்ப் அரசு


Recommended Posts

இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு அமெரிக்காவின் அரச அலுவலகங்கள் சார்பாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

1_V_Fasting_Rex.jpg

இஸ்லாமியர்களின் புனித நோன்புக் காலம் இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி ஒரு சமய நிகழ்வை நடத்துவதற்கு மாநிலச் செயலக அதிகாரிகள் இருவர் ரெக்ஸ் டில்லர்சனிடம் அனுமதி கோரியுள்ளனர். என்றபோதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த ரெக்ஸ், இது குறித்து பொது இடங்களில் பேசவேண்டாம் எனவும் அவ்வதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அமெரிக்காவில், கடந்த இருபது வருடங்களாக அமைந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் இஸ்லாமியர்களின் நோன்புக் காலத்தைக் கௌரவிக்கும் வகையில் இஃப்தார் அல்லது அதற்கு நிகரான ஒரு நிகழ்வு அரச அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. எனினும், இந்த ஆண்டு நோன்பைக் கொண்டாடுவதற்கு தற்போதைய ட்ரம்ப் அரசு மறுதலித்துள்ளது. 

இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தாம் கடுமையாக எதிர்த்துவருகின்றபோதும், இஸ்லாம் மீது அமெரிக்காவுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும், இதனால், வேறு வழிகளில் அமெரிக்க அரசு சார்பில் நோன்பை கௌரவிக்கும் வகையில் ஏதேனும் நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தாம் ஆராய்ந்து வருவதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/20407

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.