Jump to content

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?


Recommended Posts

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?

image_65d60f61bb.jpg

 

“பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. 

பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். 

அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக்கலாம். இப்படித்தான் ஒவ்வொருவருடைய குடும்பச் சக்கரமும் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

அதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைத்துவிட்டால் ஒரு கொண்டாட்டம்தான். சிலருக்குக் கைகூடும்; பலருக்கு அது கூடவே கூடாது. அதுவும் குறிப்பிட்டதொரு வயதுக்கு மேல், வெளிநாட்டில் வேலை எடுப்பதென்பதும் கடினம்; அது கிடைக்காது. 

இன்னும் சிலர், தங்களுடைய குடும்பத்தையே பணயம் வைத்துவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவர். பெரும்பாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தோர், குறிப்பாக, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகப் படையெடுக்கின்றனர்.

அங்கு போய் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பல. சிலர், உயிரைக் கொடுத்துவிட்டு, சடலங்களாகத் திரும்புகின்றனர். இன்னும் சிலர், கற்பை பறிகொடுத்துவிட்டு, குழந்தைகளுடன் திரும்புகின்றனர். இன்னும் சிலரோ, உடலுறுப்புகள் இன்றித் திரும்புகின்றனர். 

சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்று, அவ்வாறான இன்னல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவரே, டபிள்யூ.டபிள்யூ.இந்திராகாந்தி. இலங்கைப் பெண்ணான இவர், தொடர்பான செய்தி, கடந்த திங்கட்கிழமையன்று (22) அநேக பத்திரிகைகளின் முன்பக்கத்தில் இடம்பிடித்திருந்தது. 

தம்புள்ளையைச் சேர்ந்த 36 வயதான டபிள்யூ.டபிள்யூ.இந்திராகாந்தி, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

இராணுவத்தில் சேவை புரியும் இளைஞனைத் திருமணம் முடித்திருந்த அப்பெண், 18, 11 மற்றும் 7 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயாவார். கணவர் பிரிந்து சென்றமையால், பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்த நிலையிலேயே, இவர் வெளிநாடு சென்றிருந்தார். 

எனினும், ஒப்பந்தக் காலம் முடிந்து நாடு திரும்பக் காத்திருந்த சந்தர்ப்பத்தில் தனக்கு நேர்ந்துள்ள கொடுமையை, அண்மையில் சமூக வலைத்தளமொன்றில் மிகச் சிறிய காணொளியாக இவர் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியை அவதானித்த தம்புளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், இந்திராகாந்தியின் வீடு தேடிச்சென்று, அவரது நிலையை, இலங்கை ஊடகங்கள் வாயிலாக வெளிக்காட்டினார். 

இந்திராகாந்தி, வேலை பார்த்த வீட்டினது எஜமானியின் சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாம். எனவே, அந்த வீட்டு எஜமானரான பாபா உள்ளிட்ட குழுவினரால், சுகதேசியான தன்னிடமிருந்து சத்திரசிகிச்சை மூலம் சிறுநீரகமொன்றைத் தருமாறு வற்புறுத்தி, அவரைப் பலாத்காரமாகத் தடுத்து வைத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமையை, எஜமானுக்குத் தெரியாமல், இரகசியமான முறையில், ஸ்கைப் மூலம் வீட்டாரைத் தொடர்புகொண்டு அவர் கூறியுள்ளார். 

தனது ஒப்பந்தக் காலமும் மார்ச் மாதத்துடன் முடிந்த நிலையிலும், இலங்கை திரும்புவதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் எஜமானர் செய்யவில்லையெவும் இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன், “எனது 4 மாத சம்பளப் பாக்கியும் தரவில்லை. கடந்த 19ஆம் திகதியிலிருந்து எனக்கு படுக்கக்கூட இடமில்லை. அறையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். நான் இந்நாட்களில் சமையலறையில் மெத்தையொன்றைப் போட்டுப் படுக்கின்றேன். 

“நான் எனது நிலைமை பற்றி எனது அம்மாவிடம் கூறினேன். அவர் இது தொடர்பாக தம்புள்ளையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளார். அவர்கள் முறைப்பாட்டை குருநாகலுக்குக் கையளித்துள்ளார்கள். 

“எனக்கு தற்போது சம்பளம் கிடைக்காததால், எனது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் செல்லவும் வழியில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமையிலிருந்து மீள, அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்” என, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பணி நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, இலங்கையர்கள் அனுபவிக்கும் எத்தனையோ இன்னல்களுக்கு, இதுபோன்று இன்னும் எத்தனையோ எத்தனையோ உதாரணங்களை முன்வைக்கலாம். 

எஜமானியினால் உடல் முழுவதும் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பியிருந்தார் ஒரு பெண். அத்துடன், வேலைக்குச் சென்ற வீட்டுக் குடும்பத்தினரால் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண்ணொருவர் நாடு திரும்பினார். மேலும், வன்புணர்வு, கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் பெண்கள், நாடு திருப்பினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், இலங்கை அரசாங்கத்தின் செலவில், வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகக் கடந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று இவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கான முதல் புள்ளிகள், இவர்களது சொந்தக் கிராமங்களிலும் கொழும்பு நகரிலேயும் இடப்பட்டு விடுகின்றன. கிராமங்களில், நலிந்துபோன பொருளாதாரத்தில் உள்ளவர்கள், எப்படியாவது வெளிநாடு சென்று, முன்னேற வேண்டுமென எண்ணுகின்றார்கள். 

இதற்காகத் தமது தகுதியையும் மீறி, பாரியளவில் இவர்கள் கடன்படுகின்றனர். அதிலும், ஒரு சில பேர் மீற்றர்  வட்டிக்குக்கூட (சாதாரண வட்டியிலும் பார்க்க 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கும்) கடன் பெறுகின்றனர். 

பின்னர், வெளிநாடு செல்லும் கனவுகளுடன் கொழும்புக்குப் படையெடுக்கும் இவர்கள், போலியான பல முகவர்களால் ஏமாற்றப்படுவதும் இல்லாமலில்லை. இவ்வாறான சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளமை நாம் அறிந்த விடயமே. 

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் போலி முகவர்களால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள், பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மருதானைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களால் பெருவாரியான பணத்தையும் இவர்கள் இழக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கடவுச்சீட்டு (பாஸ்போட்) எடுக்கும் பொருட்டு, முதன்முறையாகக் கொழும்புக்கு வரும் அநேகர், குடும்பங்களாகவே வருகின்றனர். விடுதிகளில் (லொஜ்கள்) தங்கும் இவர்கள், அங்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பணத்தையும் வீண்விரயம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

இவ்வாறான லொஜ்கள், பெரும்பாலும் வசதி குறைந்தளவிலேயே காணப்படும். அத்துடன், சுகாதார வசதி அற்றதாகவே இருக்கும். ஓர் அறையில் 9 பேர்கூடத் தங்கவைக்கப்படுவர். 

இவ்வாறாக, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர் இலங்கையிலேயே, இவர்கள் நொந்து நூலாகிவிடுகின்றனர். எனினும், செல்லும் இடத்திலாவது விடிவு கிட்டும் என்று எண்ணினாலும், அங்கும் கார்மேகங்களே, இவர்களைச் சூழ்ந்துகொள்கின்றன. 

இலங்கையின் பொருளாதாரத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம், பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றது. அதாவது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு, 2015ஆம் ஆண்டில் 338 மில்லியன் ரூபாயும் 2016ஆம் ஆண்டில் 642 மில்லியன் ரூபாயும் இலாபமாகப் பெறப்பட்டதாகவும், இந்த இலாபம், இவ்வருடம், 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

வருமானம் அதிகரித்து விட்டதாக அரசாங்கம் பெருமை கொள்கின்றது. எனினும், சமூகக் கட்டமைப்பில் பாரிய தொய்வு நிலை ஏற்பட்டுக்கொண்டு செல்வதைக் காணக்கூடியதாய் உள்ளது. 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்கள், தமது பிள்ளைகளில் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டே பெரும்பாலும் செல்கின்றனர். எனினும், பொறுப்பற்றவர்களின் பராமரிப்பின் கீழ், தமது குழந்தைகளை இவர்கள் விட்டுச் செல்கின்றனர்.

சில குடும்பங்களில், கணவர் பராமரிப்பில் விடப்படும் குழந்தைகள், குறைந்தது முதல் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு நன்றாகக் கவனித்துக்கொள்ளப்படுகின்றனர். பின்னர், மனைவியின் பணம் அதிகளவில் புழக்கத்தில் வரத் தொடங்கியவுடன், தலைகீழாக நிற்கத்தொடங்கிவிடுவர்.

மனைவி அனுப்பும் பணத்தில், கணவன் உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார். இதனால், குழந்தைகளைக் கவனிக்காது விடுவார். சில வேளைகளில், வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனமும் நடத்தத் தொடங்கிவிடுவார். 

அதேபோல், கணவன் வெளிநாட்டு வேலைக்குச் சென்று, பிள்ளைகளின் தேவைக்காகப் பணம் அனுப்பும்போது, மனைவி தனது பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தத் தொடங்கி விடுவார். அண்மையில்கூட இவ்வாறானதொரு சம்பவத்தை எமது பத்திரிகையிலேயே வெளியிட்டிருந்தோம். 

அதாவது, ஐந்து மற்றும் மூன்று வயதுகளுடைய பெண் பிள்ளைகள் உள்ள தமது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, 26 வயதான குடும்பத்தலைவன், மத்திய கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்குச் சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், 23 வயதான தன்னுடைய மனைவி,  அவருடைய ஆசை நாயகனுடன், கட்டிலில் இருப்பதைக் கண்ட கணவன், அவ்விருவரையும் கையும்மெய்யுமாகப் பிடித்து, இருவரினதும் கரங்களையும் பற்றிப் பிடித்து ஒன்றாக சேர்த்துவைத்ததன் பின்னர், பிள்ளைகளை அவர்களுக்கே சீதனமாகக்  கொடுத்துவிட்டு, அவ்வீட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றிருந்தார். இச்சம்பவம், காலி - மஹியங்கனைப் பகுதியில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. 

சில சந்தர்ப்பங்களில், உறவினர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் சிறு பிள்ளைகளை, அவர்கள் வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதும் நடைபெறாமலில்லை. இன்னும் சில சந்தர்ப்பங்களில், இவ்வாறு வேலைக்குச் செல்லும் கணவனோ அல்லது மனைவியோ பல வருடங்கள் கழிந்தும் வராமலே போய்விடுவார்கள். 

இவ்வாறான மோசமான சம்பவங்களால், பிள்ளைகள் அநாதைகளாக்கப்படுகின்றனர். மேலும், தாத்தா, தந்தை, மாமா மற்றும் தனயன் உள்ளிட்ட பாதுகாவலர்களாலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது.

இவ்வாறு வெளிநாடு சென்ற பலரது குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இவற்றுக்கான தீர்வுகளையும் நாம் தேட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று பல இன்னல்களுக்கு உள்ளாவதைப் பார்க்கிலும், உள்நாட்டிலேயே மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கு முனையலாம்.

குடும்பமாய் ஆவதற்கு முன்னரே ஓரளவுக்குச் சம்பாதித்து, கட்டுக்கோப்பான குடும்பத்தை அமைத்துக்கொண்டால், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 
அரசாங்கமும் இந்த விடயத்தில் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும்.

உள்நாட்டிலேயே பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். 

குறிப்பாக பெண்களுக்கு ஏற்றாற்போல், கொஞ்சமாவது வருமானம் கூடியதாய் இருக்கத்தக்க வகையில், ஆடைத் தொழிற்சாலைகளிலேனும் வேலைவாய்ப்புகளை அதிகரித்துக்கொடுக்க வேண்டும். 

மேலும், யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூடுவிழா கண்டுள்ள அல்லது கண்டுகொண்டு வருகின்ற சீமெந்து, செங்கல் மற்றும் கரும்பு போன்ற பல தொழிற்சாலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.  

இலங்கையின் தற்போதைய சட்டத்தின்படி, சிறுபிள்ளைகளைக் கொண்டிருக்கும் தாய்மார்கள், பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 25 வயதுக்குக் குறைந்தவர்களும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முடியாது. 

எனினும், இது எவ்வளவு தூரம் நடைமுறையில் உள்ளது என்பது கேள்விக்குறியே. கிராம சேவகர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக, வயது தொடர்பில் போலியான தகவல்கள் வழங்கப்பட்ட நிலையிலேயே பலர், பணியாளர்களாகச் சென்று விடுகின்றனர். 

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டுத்தான், சவூதி அரேபியாவில், போத்தல் மூலம் பால் பருக்கும்போது, குழந்தையொன்று இறந்த விவகாரத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, சவூதி அரேபியா - றியாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான 17 வயதுடைய றிசானா நபீக். 

முகவர் ஒருவரது மோசடியான செயல் காரணமாக, வயது குறைவான றிசானா நபீக்கை, கூடிய வயதுடையவரென்று, அவரது கடவுச்சீட்டில் காட்டப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்ததாலேயே, அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. 

இந்திராகாந்தியின் சிறுநீரகத்துக்கு 50,000 சவூதி றியால் (2,035,143.46 இலங்கை ரூபாய்) தருவதாக, அடாவடியாக பாபா (எஜமான்) வற்புறுத்தியுள்ளார். “என்னை மிகவும் துன்புறுத்துகின்றார்கள். எனது உயிர் தொர்பாகவும் எனக்கு நம்பிக்கை இல்லை” என இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். 

எனவே, சவூதி அரேபியா, குவைத் மற்றும் யோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது, இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களில் புலப்பட்டு நிற்கின்றது. இவர்களது உயிர்களை யார் காப்பாற்றுவார்?

எனினும், இந்திராகாந்தி கொடுத்து வைத்தவர். இவரது விடியலுக்கான வாசல் தற்போது திறந்துள்ளது. அதாவது, சிறுநீரகங்களைக் கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தம்புள்ளை, கந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.டபிள்யூ.இந்தராகாந்தி என்பவரும் அவருடைய தொழில்தருநரும், றியாத்திலுள்ள டிறியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக, அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் மேற்படி பெண், இலங்கைத் தூதரக அதிகாரிகளால்,  தொழில்தருநரிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், செவ்வாய்க்கிழமை (23) அறிவித்துள்ளது. 

பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு அமைய, இந்திராகாந்தி குறித்து உடனடியாக ஆராயுமாறு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல, சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவருக்கு, விடுத்த பணிப்புரைக்கு அமைய, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. 

image_923680ee1a.jpg

எனினும், இலங்கை சென்று, பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வேன் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்திராகாந்தியை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மத்திய-கிழக்கில்-இலங்கையர்களின்-உயிர்கள்-ஊசலாடுகின்றன--காப்பாற்றுபவர்-யார்-/91-197316

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோகாவுக்கு போற பிளேனில ஏறிப் பாருங்கோ.. தெரியும். ஊரில தட்டிவானில போற மாதிரி இருக்கும். ஆனால்.. டோகாவின் பளபளப்புக்குப் பின்னால்.. இவர்களின்.. வியர்வை உள்ளது என்பதை டோகா எயார்ப் போர்ட்டிலேயே காணலாம். :rolleyes:

அண்மையில் எங்கடை ஒன்று கண்டம்.... படிச்ச  கிரவுட்.. ஊரில இருந்து முருங்கக்காய் கட்டிக் கொண்டு.. வந்திச்சு. அதுவும் டோகாவுக்கால தான். தாங்க முடியல்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில் மத்திய கிழக்கில் வீட்டுப்பணி பெண்களாக செல்லும் பெண்கள் அனுபவிக்கும்  துயரங்கள் சொல்லி கொள்ள முடியாது அரபிகளின் உடுப்புகள் அயண் பண்ணும் போது ஒரு மடிப்பு கூட இருக்க கூடாது அப்படி இருந்தால் அதை கசக்கி மீண்டும் கழுவி அயண் பண்ண சொல்லுவார்கள்

எனது அனுபவம் ஒரு நாள் வேலை விட்டு வரும்  போது ஒரு இந்தோனிசியா பெண் ஒருத்தி வழியும்  தெரியாமல் பாஷையும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தாள்  அரபி வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அவளுக்கு ஒரு வாகனத்தை பிடித்து வழிய காட்டி  எம்பசிக்கு போக சொன்னோம் அந்த இடத்தில் பாஷை புரியவில்லை அவள் உடலின் தோற்றப்பாடுகளை கண்டு கொண்டோம் அவள் பட்டிருக்கும் துன்ப துயரங்களை ( மத்திய கிழக்கில் இருக்கும் போது )

ஆனால் எல்லா அரபிகளும் அப்படி இல்லை ஒரு சிலர் மட்டுமே அரபிகளுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை அவர்களுக்கு கணணி கூட அரபி மொழிய்ல்தான் மாற்றி வைத்திருப்பார்கள் ஆங்கிலம் சிலருக்கு சுட்டு போட்டாலும் வராது  ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்தவ்ர்களாகவும் பண்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில முஸ்லிம்களை கண்ணில காட்டமுடியாது ...துட்டுக்கு மட்டும் அரபிகள் தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

டோகாவுக்கு போற பிளேனில ஏறிப் பாருங்கோ.. தெரியும். ஊரில தட்டிவானில போற மாதிரி இருக்கும். ஆனால்.. டோகாவின் பளபளப்புக்குப் பின்னால்.. இவர்களின்.. வியர்வை உள்ளது என்பதை டோகா எயார்ப் போர்ட்டிலேயே காணலாம். :rolleyes:

அண்மையில் எங்கடை ஒன்று கண்டம்.... படிச்ச  கிரவுட்.. ஊரில இருந்து முருங்கக்காய் கட்டிக் கொண்டு.. வந்திச்சு. அதுவும் டோகாவுக்கால தான். தாங்க முடியல்ல. tw_blush:

ஊரில்... அவரின் காணிக்குள், காய்த்த முருங்கை காயாக இருக்கும். 
ஆசைக்கு.. லண்டனில்,  வைத்து சமைத்து சாப்பிட்டிருக்க கொண்டு வந்திருப்பார். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.