Jump to content

கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல்


Recommended Posts

கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் 

 
கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் 
காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி,குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன்வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில்இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம்ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்குவருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிடஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன்.எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும்தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்குமுரட்டுக் குளம்பு இருக்கிறது. இரண்டு கால் உள்ள மனுசன் செருப்பைசம்பாதிக்க வேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிட்டான்.
 
பாட்டப்பன் ஒரு கல்யாணத்திற்காக அவசரமாக போய்க்கொண்டிருந்தான்.மாப்பிள்ளை பெயர் என்ன, எந்த பெண்ணுக்கு கல்யாணம் என்றுஅவனுக்குத் தெரியாது. எந்த கல்யாண மண்டபத்திற்கு போகவேண்டும்என்றும் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று மண்டபம்தான்.ஒவ்வொரு மண்டபமாக போய் பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான்அவன் போனான்.
 
முதல் மண்டபத்தில் ஷாய்ரா பானுவுக்கும், சாகுல் அமீதுக்கும்கல்யாணம் என்றார்கள். எல்லோரும், ~சலாம் அலேக்கும்!|சொல்லிக்கொண்டு, கறுப்பு கறுப்பாய் போர்த்திக்கொண்டிருந்தார்கள்.பாட்டப்பன் என்பெயர் முகமது இஸ்மாயில் என்று சொல்லிவிட்டுமண்டபத்திற்குள் போயிருக்கலாம். நெற்றி நிறைய பட்டை பட்டையாகதிருநீறு பூசிக்கொண்டு இஸ்மாயில் என்று சொன்னால் புத்திசாலிமனிதர்கள் நம்புவார்களா? அதனால் வேறு மண்டபத்திற்கு கிளம்பினான்பாட்டப்பன்.
 
இன்னொரு மண்டபத்தில் இருந்த அத்தனைபேரும் சொல்லி வைத்ததுபோல செக்கச் செவேர் என்று இருந்தார்கள். பெயிண்ட் கடைவைத்திருக்கும், அல்லது சிவப்பு சுண்ணாம்பு சாப்பிடும், அல்லது குங்குமவியாபாரம் செய்கிற குடும்பத்தின் கல்யாணமாக அது இருக்கலாம்.அட்டைக் கறுப்பாய் பாட்டப்பன் அங்கே போய் நின்றால் பரம்பரைக்குழப்பம் வந்து கல்யாணமே நின்று போகிற அளவுக்கு கலவரம் வந்தாலும்வரும். பயந்த பாட்டப்பன் சிவப்பாக இருந்த யாரிடமும்சொல்லிக்கொள்ளாமல் மூன்றாவது மண்டபத்திற்கு நடையைக்கட்டினான்.
 
மூன்றாவது மண்டபத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் பாட்டப்பனின்சொந்தக்காரர்கள் போல கறுப்பாக இருந்தார்கள். மண்டபத்திற்குள் செல்லபாட்டப்பனுக்கு கூச்சமாக இருந்தது. கல்யாணத்திற்கு வருகிறவர்கள்வந்தோமா, கல்யாணம் பார்த்தோமா, சாப்பிட்டோமா என்றுஇருப்பதில்லை. சொந்த பந்தத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் என்றுதேடிப் பிடித்து எவன் செத்தான், எவன் உயிரோடிருக்கிறான், எவன்சவுக்கியமாய் இருக்கிறான் எவன் நாசமாய்ப் போனான் என்று நலம்விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அறிமுகமே இல்லாத பாட்டப்பன்போன்றவர்களை ~நீ யார்?| என்று சௌக்கியம் விசாரிக்கும் கும்பல்கேட்டுவிட்டால் எத்தனை கஷ்டமாகிவிடும். உறவு இல்லையென்றால்என்ன, பந்தல்காரன், சமையல்காரன், லைட் பற்றவைப்பவன் என்றுஏதாவது வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்கலாம் என்று பதுங்கிபதுங்கி உள்ளே போனவன் கடைசி இறுக்கையில் பதுவிசாகஉட்கார்ந்துகொண்டான்.
 
கல்யாணமண்டபம் ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாய்கும்மாளமடித்து ஆரவாரமாய் இருந்தது. பெண்கள் அணிந்திருந்தஏராளமான நகை மற்றும் புடவைகளைப் பார்த்து அரண்டு போனான்பாட்டப்பன். நம்மைப்போல கறுப்பாக இருப்பவர்களும் பணக்காரர்களாகஇருப்பார்களா? நம்பவேமுடியவில்லை பாட்டப்பனால். நம்பமுடிகிறதோமுடியவில்லையோ... யார் கண்ணுக்கும் அடையாளம் தெரியாமல்பதுங்கியிருந்துவிட்டு, வந்தகாரியத்தை முடித்துக்கொண்டுஓடிவிடவேண்டும் என்று கூடுமானவரை தலைதெரியாதபடி தாழ்த்திஉட்கார்ந்துகொண்டான்.
 
எத்தனை பதுங்கி இருந்தாலும் ஆந்தைக் கண்களுக்கு தவளை தப்புவதேஇல்லை. ஒரு இளம் வயது பெண் - கல்யாணம் ஆனவள் போலத்தான்இருந்தாள் - பாட்டப்பனையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.பாட்டப்பனுக்கு பயமாகிவிட்டது. பயத்தை இன்னும் கொஞ்சம்அதிகரிப்பது போல அந்தப் பெண் அவனை நோக்கி வந்தாள். வந்தவள்பாட்டப்பனை நோக்கி ஒருகையை நீட்டி, 'நீங்க... நீங்க...!" என்றுசந்தேகத்துடன் ஒரே கேள்வியை கேட்க ஆரம்பித்தாள். ஆள் வைத்துஉடம்பை உலுக்கியது போல பயத்தில் நடுக்கமெடுத்தது பாட்டப்பனுக்கு.தன் தொடையை தானே நடுங்கச் செய்து மாட்டிக்கொள்ளக்கூடாது என்றுநினைத்த பாட்டப்பன், 'அது நான் இல்லைங்க.." என்று நடு மத்தியமாக ஒருபதில் சொன்னான்.
 
வெகு காலத்திற்கு முன்பு தொலைந்துபோன யாரையோ திடீரென்றுபார்த்தது போல பரவசத்துடனும், அறைகுறையாய் அடையாளம்தெரிந்துகொண்ட சந்தேகத்துடனும் இருந்த அந்த பெண், 'நீங்க நீங்க!"என்று வார்த்தை முடிக்க முடியாமல் சந்தோஷமாகத் திணறினாள்பயமாக இருந்தாலும் பாட்டப்பனுக்கு ஆர்வத்தை அடக்கமுடியவில்லை.ஒருவேளை சின்ன வயதில் அவளுக்கு புருசன் காணாமல்போயிருப்பானோ? அவன் என்னைப் போலவே இருப்பானோ? ஆமாம்என்று சொல்லிவிட்டு கூடவே போய்விடலாமா? ஒருவேளை புருசன்தொலைந்ததில் சித்தபிரம்மை பிடித்து, பார்க்கிற புருச வயசுஆட்களையெல்லாம் தன் புருசனென்று நினைத்து ~நீங்க நீங்க| என்றுசொல்லி பைத்தியமடிக்கிறாளா? ரெண்டுங்கெட்டான் குழப்பத்தோடுபார்த்தான் பாட்டப்பன்.
 
அப்பொழுது பந்தயக்குதிரைபோல மூச்சிரைக்க வந்தாள் ஒரு கிழவி.அவளும் புருசன் தொலையுண்ட பெண்போல ஒரு கையை நீட்டி, 'நீராமசாமியா?" என்று மிரட்டுவது போல பாட்டப்பனை கேட்டாள்.அவளுக்கு வாயில் நுரை வந்திருந்தால் பந்தயக் குதிரைஎன்றுதீர்மானமாய் நம்பியிருப்பான் பாட்டப்பன். கிழட்டுக் குதிரை.
 
சொல்லு... நீ ராமசாமியா?” மீண்டும் அதட்டியது கிழட்டுக் குதிரை.
 
'இல்லை. நான் பாட்டப்பன்"
 
அடுத்த நிமிடம் இளம் பெண்ணை தரதரவேன்று தள்ளிக்கொண்டுபோனாள் கிழவி. 'நாந்தான் அப்பவே சொன்னனே! அது உங்க அப்பன்இல்லேன்னு. முப்பது வயசில உங்க அப்பன் காணாம போனான். போயிமுப்பது வருசமாச்சி. இவனப் பாத்தா ஐம்பது வயசு ஆளாட்டமாஇருக்கான். இவனப் போயி அப்பான்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டியே!"
 
ஆக, புருசனைத் தொலைத்தவள் இளவி அல்ல... இந்தக் கிழவிதான்.குதிரைமூச்சுக் கிழவி போட்ட போட்டையும், கேட்ட அதிகாரத்தையும்பார்த்தால் கிழவியின் புருசன் ஓடிப்போனது சரிதான் என்று தோன்றியதுபாட்டப்பனுக்கு. ஆனாலும் கிழவிக்கு இந்த வயதில் கொஞ்சம் கொழுப்புஅதிகம்தான். தாடி வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காக இருபத்தி ஏழுவயதுள்ள பாட்டப்பனை ஐம்பது வயதுக் கிழவன் என்று அவள்சொல்லலாமா? அதுவும் அவளே ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு இன்னும்கல்யாணம்கூட ஆகவில்லை. இப்பொழுதுதான் பன்னிரெண்டு நாட்களாககண்ணம்மா என்கிற ஒரு அடாவடி சிறுக்கியை காதலிக்கவேஆரம்பித்திருக்கிறான். அதற்குள் கிழவியிடம் கிழவன் என்கிற அசிங்கவார்த்தை. முதல் காரியமாக தாடியை சவரம் செய்துவிடவேண்டும்என்று முடிவெடுத்தான் பாட்டப்பன்.
 
கிழவி போனதும் அப்பாடா என்று நிம்மதி மூச்சுவிட்டான் பாட்டப்பன்.அதற்குள் பூதக்கண்ணாடி அணிந்திருந்த இன்னொரு கிழவன் பக்கத்தில்இரும்புச் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்துகொண்டு பாட்டப்பனைபார்த்து பெரிதாக சிரித்தான். 'நல்லா இருக்கீங்களா தம்பி. வீட்டுல அப்பாஅம்மா எல்லாம் சௌக்கியமா?" என்று கேட்டான். இன்றைக்கு கிழடுகள்எல்லாம் சாகடிக்கிற திருவிழா கொண்டாடுகிறார்களா? கடுப்பாககிழவனைப் பார்த்தான் பாட்டப்பன்.
 
பாட்டப்பன் பிறந்ததில் இருந்தே இப்படி ஒரு போங்குக் கண் கிழவனைபார்த்ததில்லை. கிழவனை தெரியாது என்று சொலலி தப்பிவிடத்தான்முதலில் நினைத்தான் பாட்டப்பன். ஆனால் அதைவிட புத்திசாலித்தனம்கிழவனின் அரைக்குருடு கண்ணை சரியாக உபயோகப்படுத்திக்கொள்வதுஎன்று முடிவெடுத்தான் முக்கால் கண் வெளிச்சமுள்ள இந்த கிழவன்யாரோ ஒரு அடையாளத்தை தன்னிடம் கண்டுகொண்டு பேசுகிறான். அதுநானேதான் என்று சமாளித்துவிட்டால் மற்றவர்கள் சந்தேகப்படாமல்இருப்பார்கள். தொந்தரவும் இருக்காது.
 
'நான் நல்லா இருக்கேன், தாத்தா. ஆனா அப்பாவுக்கும்,அம்மாவுக்கும்தான் கொஞ்சம் சௌகரியம் இல்ல. இருபத்தி மூணுவருசத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாங்க. தகவல் சொல்ல முடியல.மன்னிச்சிடுங்க!" என்றான்.
 
'என்ன தம்பி நீ. நான் உன்னோட சித்தப்பன். என்னை தாத்தாங்கறே!போனவாரம்தான் உன் அப்பா அம்மாவ கடைவீதியில பாத்தேன். இருபத்திமூணு வருசத்துக்கு முன்னாடி செத்துட்டாங்கன்னு சொல்லறே! ஆமா, நீசிவராமன் மகன்தானே!" கண் இல்லாவிட்டாலும் ஞாபகம் இருக்கிறகிழவன் தெளிவாகக் கேட்டான்.
 
'சிவராமன் மகன் இல்ல. நானே சிவராமன்தான்." என்று சொன்னான்பாட்டப்பன்.
 
தூரத்தில் நின்றிருந்த புருசனைத் தொலைத்த கிழவியும், அவள் மகளும்பாட்டப்பன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தார்கள்.சற்று முன்பு பாட்டப்பன் என்றும் இப்பொழுது சிவராமன் என்றும்ஒருத்தன் சொல்வது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கலாம்.பாட்டப்பனுக்கு சிறுவயதில் சிவராமன் என்ற பெயர் இருந்ததும்பாட்டப்பன் என்பது தொழில் நிமித்தமாய் வந்த பட்டப் பெயர் என்பதும்அவர்களுக்கு தெரியாது. வந்த இடத்தில் ஜாக்கிரதையாகஇருக்கவேண்டும் என்று முடிவெடுத்த பாட்டப்பன் போங்குக் கண் கிழவன்அறியாதபடி இடத்தை மாற்றிக்கொண்டான்.
 
அங்கேயும் வினை இருந்தது. கிழவர்கள் தொலைந்தால் குமரர்கள்வருகிறார்கள். ஒரு சின்ன வயசுக்காரன் பொங்குகிற மகிழ்ச்சியோடு வந்துகையைப் பிடித்துக்கொண்டு அப்புறமாகக் கேட்டான், 'உங்களை எங்கியோபார்த்த மாதிரி இருக்கே?" கேட்டுவிட்டு வானத்தில் கண்ணைசெருகிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். எங்கியோ, எவனையோபாத்துட்டு வந்து இங்க என் கழுத்தை அறுக்கறானே சள்ள கிராக்கி!பாட்டப்பன் கையை தந்திரமாக பிரித்துக்கொண்டு வேறு இடம்பதுங்கினான். சள்ளை கிராக்கியே பரவாயில்லை என்பது போலஇன்னொரு சாவுகிராக்கியின் கையில் அகப்பட்டுக்கொண்டான். அவன்ஒரு வழுக்கைத் தலை ஆசாமி. 'நான் உங்களை எங்கயுமேபாத்ததில்லையே. ஆமா, நீங்க யாரு? யாரோட சொந்தம்?" என்றுவிபரீதமாய் ஒரு கேள்வி கேட்டான். எங்கயுமே பார்க்காத ஒருத்தன்கிட்டஇவனுக்கெதுக்கு வெட்டிப்பேச்சு....? பாட்டப்பனுக்கு எத்தனை அடக்கநினைத்தாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது.
 
இது கல்யாணத்திற்கு வந்திருக்கும் கூட்டமா, இல்லை பைத்தியக்காரகூட்டமா? புதிதாக தெரிகிற ஒருத்தனைப் பார்த்து ஒருத்தி ~அப்பா|என்கிறாள். இன்னொருத்தி ~என் புருசனே இல்லை| என்கிறாள். ஒருகிழவன் எப்பொழுதோ செத்துப்போன அப்பன் சௌக்கியமா என்றுகேட்கிறான். ~எங்கியோ பார்த்திருக்கிறேன்| என்று ஒருத்தனும் ~எங்கியுமேபாக்கலையே| என்று இன்னொருத்தனும் குழப்பியடிக்கிறார்கள். இவர்கள்மனுசர்களா, இல்லை பிசாசு மேய்க்கிறவர்களா? அதெப்படி இங்கிருக்கிறஎல்லோருக்கும் நான் தெரிந்தவன் போலவே இருக்கிறேன். பாட்டப்பன்ஆதியோடு அந்தமாய் குழம்பிப்போனான். இன்னும் கொஞ்ச நேரம் இந்தபிசாசு மேய்க்கிற கும்பலில் இருந்தால் முகூர்த்தம் முடிவதற்குள் நமக்கேகல்யாணமாகிவிடும் என்று அச்சப்பட்ட பாட்டப்பன் சாப்பாட்டு பந்திஎந்தப்பக்கம் என்று யாரிடமும் விசாரிக்காமலே நழுவ ஆரம்பித்தான்.
 
இந்த கல்யாணம் யாருடையது, இங்கே யாருக்கு கல்யாணம் நடக்கிறதுஎன்று உண்மையிலேயே பாட்டப்பனுக்கு ஒரு இழவும் தெரியாது.அவனுக்கு பசியாக இருந்தது. அதனால் சாப்பிட வந்தான். சாப்பிட்டுமுடித்த பிறகு ஒரு முக்கியமான வேலையும் இருக்கிறது. அதைநினைத்தால்தான் பாட்டப்பனுக்கு திகிலாக இருந்தது. ஒருநாளும் இப்படிஒரு பழிபாவமானது செய்ததில்லை பாட்டப்பன்
 
பூமியில் இருக்கிற சாப்பாடு மொத்தத்தையும் ஒரே நாளில் தின்றுஅழித்துவிடுவது என்ற முடிவோடும் வெறியோடும் ஒரு கூட்டம் அங்கேசாப்பிட்டுக்கொண்டிருந்தது. கடைசி வரிசை, கடைசி இலையில்பாட்டப்பன் உட்கார்ந்தான். வைக்கப்பட்ட வகைதொகையான சாப்பாட்டைபார்த்ததும் வியந்துபோனான் பாட்டப்பன். வாழ்நாளில் பார்க்காத அதிசயம்அது. எச்சில் வாயில் ஊற பெரிய லட்டு ஒன்றை எடுத்து நறுக்கென்றுகடித்தான். அவ்வளவுதான் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி எழுந்துநின்று ~அய்யோ அய்யோ| என்று சத்தமாக கத்த ஆரம்பித்தாள்.
 
பதறிப்போனான் பாட்டப்பன். கை தவறி அந்த பெண் இழையில் இருந்தலட்டை எடுத்து கடித்திருப்போமோ என்று பயந்துபோனான். எமனுக்கேகேட்கிறபடி கத்திய அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நாயணக்காரன்ஊதுவதையே நிறுத்திவிட்டான் என்றால் மற்றவர்கள் என்னசெய்வார்கள். கும்பலாக கூடிவிட்டார்கள். கழுத்தில் இருந்த ஒன்பது பவுன்சங்கிலியை காணவில்லை என்று அழுதபடி சொன்னாள் அந்தப் பெண்.பாட்டப்பனுக்கு சந்தோசமாகிவிட்டது.  இது லட்டு பிரச்சினைஇல்லையா? தப்பிச்சோம். வாயில் இருந்த லட்டை உரிமையோடுமீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
 
நகை திருடுபோனது தெரிந்ததும் 'சாத்துடா கதவை" என்று ஒருத்தன்உத்தரவிட்டான். நகையை யார் எடுத்திருப்பார்கள்? ஒருவர் முகத்தைஒருவர் சந்தேகமாய் பார்த்துக்கொண்டார்கள். நல்லவன், கெட்டவன்,யோக்கியன், திருடன் யாராக இருந்தாலும் சரி ஒரே ஒரு கணம்திருடர்களாக தோற்றம் தருகிற தருமசங்கடமான சூழ்நிலை இதுதான்.எல்லோருமே ஒரு கணம் திருடர்களாக மாறிவிடுவதும் இப்படித்தான்.
 
எல்லோரும் திருடனை தேடிக்கொண்டிருக்க, புருசனைத் தொலைத்தகிழவி ஒரு மத்தியஸ்தனிடம் குசுகுசுவென்று பேசுவதை பாட்டப்பன்பார்த்துவிட்டான். அப்பொழுதுதான் அவனுக்கு விபரீதம் உறைத்தது.இந்த கூட்டத்தில் சம்மந்தமில்லாமல் இருக்கிற ஒரே ஆள் அவன்தான்.பெயரை மாற்றிச் சொல்லி குழப்பியவனும் அவன்தான். தரும அடிநிச்சயமாகிவிட்டதடா தருமா! தயாராகிவிட்டான் பாட்டப்பன். கட்டம்கடைசியாய் ஒரு கடி லட்டைத் தின்றுவிட்டு முதுகைதயார்படுத்திக்கொண்டிருந்தபோது ஒரு விபரீதம் நடந்தது. சம்மந்தமேஇல்லாமல் பாயாசம் ஊற்றிக்கொண்டிருந்த ஒரு சின்ன பையனை இழுத்துவந்து எல்லோரும் தொபீர் தொபீர் என்று அடிக்க ஆரம்பித்தார்கள்.
 
மயக்கம் போட்ட பையனை தண்ணீர் தெளித்து எழுப்பி, 'சௌக்கியமா?"என்று விசாரித்துவிட்டு மீண்டும் அடிக்க ஆரம்பித்தார்கள். “செயினைஎடுத்தியா சொல்லுடா சொல்லுடா?” எத்தனை அடித்தும் அந்த பையன்கேள்விக்கு பதில் சொல்லவேயில்லை. அவன் ஊமையும் கிடையாது. 'அடிக்காதீங்க அடிக்காதீங்க!" என்று காட்டுக்கத்தல் கத்தினான்.
 
சமையல்காரன் ஓடிவந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி, 'அவன் செவிட்டுமகன் சாமிங்களா! நீங்க கேக்கறதுக்கு அவனால பதில்சொல்ல முடியாது"
 
யோவ் செவிடன்னா எப்படியா பேசறான்?” என்று கும்பளுக்கு வெளியேஇருந்தவன் கேட்க, “இவன் யார்றாவன்? செவிடுன்னா காதுலதான்கோளாறு இருக்கும். வாய் நல்லாதான் இருக்கும். உங்க ஊர்ல எல்லாம்காதுலதான் பேசுவாங்களா?” என்று கும்பலுக்கு உள்ளே இருந்தவன் பதில்சொன்னான்.
 
எப்பத்துல இருந்து காது கேக்கலையாம்? பிறவி செவிடா? பாதியிலன்னாதெரிஞ்ச டாக்டர் இருக்காரு..” என்று உயரமானவன் விசாரிக்க, “ஒன்பதுபவுன் செயினுக்கு வழி என்ன கேளுங்க?”சங்கிலிப்பெண் கதற,  “ஏம்பாஇங்க கொஞ்சம் பாயாசம் கொண்டார்றீய?” என்று சம்மந்தமே இல்லாமல்ஒரு பெண் குரல் கேட்க, “மூடிகிட்டு இருடி என்று உறவில் ஒட்டாதஒருத்தன் கத்த, “நான் சீரங்கத்தோட அத்தை கொஞ்சம் பாத்து பேசு,” என்றுஎந்த சீரங்கமோ வந்து குதிக்க, “இந்த பையனை யாரு அடிச்சது எனக்குதெரிஞ்சாகணும்.” என்று சமையல் காண்ட்ராக்டர் களம் இறங்க...குழுகுழப்பமாகிவிட்டது அந்த இடம். கடைசியில் அடிபட்ட பாயாசப்பையனுக்கு குளிர்பானம் கொடுத்து ரகளையை முடித்துக்கொண்டார்கள்.செவிடனை அடித்ததற்காக எல்லோருமே வருத்தப்பட்டார்கள்.
 
'செவிடன் திருடமாட்டானா?" ஒரு பெண் குசுகுசுவென்று யாரிடமோகேட்க, பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் தேவையே இல்லாமல், 'தோரெண்டாவது வரிசையில உட்கார்ந்து ஒரு கூச்சலம் காதில போட்டுக்காமசாப்பிடறானே உன் அக்கா புருசன் அனும் செவிடன்தான். அவன்திருடனாயிருப்பானா? " என்று கேட்டாள். அவர்கள் கழிப்பறைப்பக்கமாகநின்று ஆரோக்கியமாக சண்டை போட ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் அந்த செவிட்டுப் பையன் திருடன் இல்லை என்றுஎல்லோரும் பரிதாபமாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அந்த நகைஎங்கே? யார்தான் நகை திருடியது?
 
நடப்பது நடக்கட்டும் எனக்கென்ன வந்தது என்று தின்பதே தொழிலாகஇருந்த பாட்டப்பன் மீது எல்லோர் பார்வையும் விழுந்தது. 'ஸார் யாரு?யார் வீட்டு உறவு?" ஒருத்தன் எகத்தாளமாக கேட்டபடி பாட்டாப்பன்அருகில் வந்தான். பாட்டப்பனுக்கு தருமசங்கடமாகிவிட்டது. பெண்வீட்டுக்காரனிடம் மாப்பிள்ளை வீட்டு ஆள் என்றும், மாப்பிள்ளைவீட்டுக்காரனிடம் பெண் வீட்டு ஆள் என்றும் சொல்லி ஒருத்தன்தப்பிக்கலாம். இரண்டு பேரும் ஒன்றாய் இருந்தால் சமையல்காரன்,நாயணக்காரன், பந்தல்காரன் என்றும் சொல்லியும் தப்பிக்கலாம்.கல்யாணமண்டபத்தில் திருட்டு சோறு தின்பவர்களெல்லாம் அதைசொல்லித்தான் தப்பிப்பது வழக்கம். ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில்இருந்தால் எதைச் சொல்லி தப்பிப்பது? மாப்பிள்ளை வீடென்றால்கொஞ்சம் குறைச்சலாக விசாரிப்பார்கள் என்று நினைத்த பாட்டப்பன், 'மாப்பிள்ளைக்குச் சொந்தம்" என்றான்.
 
'யாரோட மாப்பிள்ளைக்கு சொந்தம்?" எகத்தாளமாய் கேட்டார்கள்எல்லோரும்.
 
'இதென்ன கேள்வி? கல்யாண மாப்பிள்ளைக்குத்தான்?" பாட்டப்பன்தெளிவாகச் சொன்னான்.
 
'யாருக்கு கல்யாணம்?" ஒரு இரட்டைக் கண்ணன் கேவலமாயக்; கேட்டான்.
 
'என்னய்யா நீ லூசு மாதிரி பேசற. பொண்ணு மாப்பிள்ளைக்குதானே இங்ககல்யாணம் நடக்கும். உனக்கும் எனக்குமா நடக்கும்?"
 
'யாருடா லூசு. வளைகாப்பு நடக்கிற எடத்துக்கு வந்து கல்யாணத்துக்குவந்ததா சொல்லற நீ லூசா நான் லூசா?" கேட்டபடியே கொத்தாகபாட்டப்பன் சட்டையை பிடித்தான் ஒருத்தன். கடவுளே! கல்யாணமண்டபத்தில கல்யாணம் மட்டும்தான் நடக்கும்னு நினைச்சது எத்தனைபெரிய தப்பு. இதுக்கு பதிலா, திருநீரை அழிச்சிட்டு, சாகுல் அமீதுகல்யாணத்துக்கே போயிருக்கலாம். பாட்டப்பன் பாதி சாப்பாட்டில் எழுந்துநின்று படுஜோராக விழிக்க ஆரம்பித்தான்.
 
திருடன்தான் கிடைத்துவிட்டானே! ஒருத்தன், 'போலீஸ் போலீஸ்" என்றுகத்தினான். அதைவிட சத்தமாக இன்னொருத்தன் 'ஆம்புலன்ஸ்,ஆம்புலன்ஸ்" என்று கத்தினான். திருடனை பிடிக்க ஆம்புலன்ஸ்எதுக்காம்? உயிர் போகிறபடி அடிக்க முடிவு செய்துவிட்டார்களா?ஆம்புலன்ஸ் கூப்பிட்டவனை வெடவெடப்போடு பார்த்தான் பாட்டப்பன்.நகையை பறிகொடுத்த பெண் லட்டு லட்டாய் வாந்தி எடுத்துவிட்டு மயங்கிதரையில் விழுந்த பிறகுதான் ஆம்புலன்ஸ் எதற்கு என்று புரிந்ததுபாட்டப்பனுக்கு.
 
பாட்டப்பனை விட்டு எல்லோரும் மயங்கிய பெண் பக்கம் ஓடினார்கள்.தப்பி ஒடிவிட முடிவெடுத்தான் பாட்டப்பன். ஆனால் ஒரே சட்டையைமூன்று பேர் கொத்தாக பிடித்திருந்தால் எப்படி ஓடுவது. ஒருத்தன்புத்திசாலித்தனமாய் தாடியை வேறு பிடித்திருந்தான்.
 
'நகையை குடுத்துடுடா! உன்னால ஒரு உசிர் போயிடும் போல இருக்கே?"கதறியபடி வந்தாள் ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு பேஜாராகிவிட்டது.பாட்டப்பன் நகை திருட வந்தவனில்லை. அவன் திருடவும் இல்லை.அப்பாவி ஏழை ஒருத்தனை திருடன் என்று தீhப்பு சொல்லி இவர்கள்அடித்தால், கொழுத்த பணக்காரன் நகையோடு தப்பிவிடுவது நிச்சயம்.அதை சொன்னால் யார் நம்புவார்கள். எடுக்கவில்லை என்றாலும்நம்பமாட்டார்கள். சோதித்து பார்த்து நகை இல்லை என்றாலும் நம்பமாட்டார்கள். கூட்டாளி எங்கே என்பார்கள். அவன் தப்பிவிட்டான்என்பார்கள். விதியே என்று பாட்டப்பன் தலையில் கை வைத்தவேளையில்தான் விதி நல்லவிதமாக வேஷம் கட்டிக்கொண்டு வந்தது.
 
'அய்யைய்யோ... நகை என்கிட்டதான் இருக்கு அதுக்கு எதுக்கு இத்தனைபெரிய கூட்டம் சேத்துகிட்டு" சொன்னபடி வந்தவன் நகை பறிபோனவள்புருசனாம். அவள்தான் முகம் கழுவும்போது கழற்றிக்கொடுத்துவிட்டுபிறகு மறந்துவிட்டாளாம். ஆக நகை திருடுபோகவில்லை. ஒரேகணத்தில் எல்லோரும் நல்லவர்கள் ஆனார்கள். பாட்டப்பனும் நல்லவன்ஆனான். வீட்டுக்கு ஓடிவிடலாம் என்று நான்கு எட்டு வீசி நடந்தான்.சந்தேகப் பிசாசுகள் அவனை விடுவதாய் இல்லை.
 
'ஏய் இரு இரு. வளைகாப்புக்கு வந்துட்டு கல்யாணத்துக்கு வந்தேன்னுசொல்லறீயே அப்ப நீ யாரு? இதுவரையில நீ திருடன் இல்ல. அப்பஇனிமேதான் திருடப்போறீயா?" விவரமாகக் கேட்டான் ஒருத்தன்.
 
பெரிய மனிதன் போல இருந்த ஒருத்தர் எல்லோரையும் அடக்கினார், 'ஏய்விடுங்கடா அவன. மண்டபத்தில ஒறவு இல்லாத ஒருத்தன் ஒண்ணுபொருள் எடுக்க வருவான். இல்ல சாப்பிட வருவான். பசின்னு சாப்பிடவந்தவனை பாதி பந்தியில எழுப்பறது பாவம். நீங்க சாப்பிடுங்க, சார்"சொன்ன அவர் பாட்டப்பனை உட்காரவைத்து சோறும் பறிமாறினார்.
 
பாட்டப்பன் பசியோடு இருப்பவன்தான். ஆனால் என்றைக்கும் திருடன்என்று பெயர் எடுக்காதவன். அவனால் சாப்பிடவே முடியவில்லை.ஆயிரம் பேர் உற்று பார்த்துக்கொண்டிருக்கும்போது சர்க்கஸில் இருக்கிறகுரங்கு வேண்டுமானால் வாழைப்பழம் தின்னும். பாட்டப்பனால் அதுமுடியாது. பார்வை குறைந்ததும் அவன் சாப்பிடாமலேஎழுந்துகொண்டான். எல்லாம் கண்ணம்மா என்கிற திமிர்பிடித்தசிறுக்கியை காதலித்ததால் வந்தது. சம்சாரி ஆகவேண்டும் என்றுஒருத்தன் முடிவெடுத்தால் செய்யக்கூடாததை செய்து படக்கூடாதஅவமானம் படவேண்டிவரும் என்பது உண்மைதான்.
 
கண்ணம்மாவை முதன் முதலில் பார்த்தபோதே டவுசர் ஆகிவிட்டான்பாட்டப்பன். சுழற்றிவிட்ட பம்பரத்தின் சுறுசுறுப்பில் அவள் உடம்புஇருந்தது. சண்டைக் குருவியின் படபடப்பில் அவள் பேச்சு இருந்தது.அவளிடம் தனக்கு பிடித்த எதோ இருக்கிறது என்று தெரிந்தபிறகு தன்வைராக்கியத்தை கைவிட்டு கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தான்பாட்டப்பன். அவள் போகும்போது வரும்போது விடாமல் பார்த்தான்.கண்ணம்மாவும் பார்க்கிறாள் என்பதை புரிந்துகொண்டான். பிறகுதைரியமாக அவளிடம் சென்று, 'என்ன நீ கல்யாணம் கட்டிப்பியா,கண்ணம்மா?" என்று கேட்டான்.
 
'என் அப்பன் கசாப்பு கடை வெச்சிருக்கிறது உனக்கு தெரியும்தானே?ஆட்டுக்கு தோல் உரிச்சிட்டு மொதல்ல என் அப்பன் எதை அறுப்பான்னுதெரிஞ்சா நீ இப்படி கேட்டிருக்க மாட்டே"
 
'எந்த மாமனாரும் தன் மருமகனுக்கு குடும்பக் கட்டுப்பாடுசெய்யமாட்டாருங்கற தைரியத்திலதான் கேக்கிறேன். உன் பதில் என்னசொல்லு."
 
'கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேக்க ஒரு மொகறை வேணாம்? ஒருலட்சணம் வேணாம்? சோம்பேறிப் பய புள்ளை உனக்கு எதுக்குகல்யாணம்?"
 
'கை நீட்டி காசு சம்பாதிக்கிறவன் நானு?" தன் பெருமை சொன்னான்பாட்டப்பன்.
 
'! பிச்சைக்காரன்னு தெளிவா சொல்லு. கோயில்ல துண்டு விரிச்சி, நாலுபேத்துகிட்ட பிச்சை எடுத்து வயிறு வளக்கிறவன் நீ. உன்கிட்ட உடுத்தநல்ல துணி இருக்கா? ஒரு வீடிருக்கா? மூணுவேளை திங்க சாப்பாடுஇருக்கா? செருப்பு போட வக்கில்லாத உனக்கு கல்யாணம் ஒரு கேடா?"
 
'! செருப்பு போட எனக்கா வக்கில்ல? பூமாதேவி கோச்சிப்பான்னுதான்நான் செருப்பு போடறதில்ல."
 
'ஆமா, துர்காதேவி கோவிச்சுப்பான்னு துணி போடாம இருக்கிறதுதானே?"
 
'ரொம்ப பேசாத கண்ணம்மா. நீ மட்டும் என்ன எம்எல்ஏ மகளா? உங்கப்பன்ஆட்டு தோல் உரிக்கிறவன். நீ காயிதம் பொறுக்கி காசு சேக்கிற சிறுக்கி..."
 
காகிதம் பொறுக்கும் சிறுக்கி என்றதும் கண்ணம்மாவுக்கு கோபம்வந்துவிட்டது. அதுவரை சரிக்கு சரி வாயாடிக்கொண்டிருந்தவள்சட்டென்று வார்த்தை நிறுத்திவிட்டு, காகிதச் சாக்குப்பையை தோளில்போட்டுக்கொண்டு  வெடுக் வெடுக்கென்று நடையைக்கட்டினாள்பாட்டப்பனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. காகிதம் பொறுக்குவதைகேவலமாக நினைக்கவில்லை பாட்டப்பன். இரண்டுபேருமே ஏழைக்கடவுள் பெற்ற பிள்ளைகள் என்றுதான் சொல்ல நினைத்தான். தப்பர்த்தம்ஆகிவிட்டது. உன் தொழில் தெய்வத்திற்குச் சமம் என்பதை குப்பைபொறுக்கியாவது அவளுக்கு நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தபாட்டப்பன் பிச்சை எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு தானும் ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சுற்றிச் சுற்றி காகிதம்பொறுக்க ஆரம்பித்தான்.
 
'இதா... எதுக்கு இப்படி என்னை சுத்திகிட்டு இருக்கே?"
 
'உன்ன மாதிரி உன் புருசனும் காகிதம் பொறுக்கி உழைச்சி திங்கப்போறான். "
 
'என் புருசனா? அட கெரகத்தே! செருப்பு போட வக்கில்லாதபிச்சைக்காரன்னு மொதவே சொல்லிட்டனே. மொத ஒரு செருப்பைசாம்பாதிச்சிகிட்டு வா. பிறகு புருசன், அரசன்னு பேசலாம்."விரட்டிவிட்டாள் கண்ணம்மா.
 
பாட்டப்பனால் ஒரு செருப்பு வாங்க முடியாதா? “இரண்டு ஜோடி செருப்புவாங்கியாறேன் கண்ணம்மா. உனக்கு ஒண்ணு. எனக்கு ஒண்ணு.கல்யாணச் செருப்பு சவடால் விட்டு, சாம்பாதித்த காசு எல்லாம்எடுத்துக்கொண்டு செருப்பு கடைக்கு போனான் பாட்டப்பன். கடைக்காரன்பாட்டப்பனின் காலைப் பார்த்துவிட்டு, 'அடேங்கப்பா! ஒரு முழு எருமையசேதாரமில்லாம தோல் உரிச்சி செருப்பு தெச்சாத்தான் உன் காலுக்கு போடமுடியும். நீ செருப்பு தெக்கிற கடைக்கு போயிடு" என்று துரத்திவிட்டான்.
 
செருப்பு தைக்கிறவன் சிங்கத்து தோல் எடுத்து செருப்பு தைப்பவன்போலமுகறையை வைத்துக்கொண்டு, ஒரு ஜதை செருப்பு நாநூறு ரூபாய்ஆகும் என்றான். இத்தனை வருடப் பிச்சைக்காரப் பிழைப்பில் மிச்சம்பிடித்து வைத்திருந்த இருபத்தி ஏழு ரூபாயை எண்பத்தெட்டு முறைஎண்ணிப்பார்த்த பாட்டப்பன் கண்ணம்மா! நீ சொன்னது சரிதான்டீ...செருப்பு போட வக்கத்த நாயீ நான்.” என்று புலம்பினான். செருப்பில்லைஎன்பதற்காக நடக்காமல் போய்விடுவமா ஒரு கல்யாணம்.அதற்காகத்தான் ஒரு பெரிய திட்டம் போட்டான் பாட்டப்பன்.கல்யாணமண்டபத்திற்கு போய் மூக்கு பிடிக்க தின்று கால் அகலத்திற்குசெருப்பை போட்டுக்கொண்டுவந்துவிடவேண்டும். வந்தான். தின்றதுசவுகரியம்தான். பட்டதுதான் அசிங்கம்.
 
வளைகாப்பு மண்டபம் மீண்டும் ஆரவாரத்திற்கு வந்திருந்தது.பாட்டப்பனை மறந்திருந்தார்கள். மண்டப வாசலுக்கு வந்தான். ஜோடிஜோடியாய் செருப்பு இருக்குமே... எடுக்காமல் போவதா எடுத்துக்கொண்டுபோவதா? சாப்பாடு போட்ட நல்லவர்கள் செருப்பை திருடவேண்டுமா?முன் பின் குழப்பமாய் இருந்தது பாட்டப்பனுக்கு. நல்லவன் என்றுசொன்னதற்காக ஒருத்தன் நல்லவனாகவே இருக்க முடியுமா? செருப்பைகண்ணம்மா என்ற காதல் சிறுக்கிக்காக திருடியேவிடுவது என்றுமுடிவெடுத்தபோதுதான் நெஞ்சு வெடிக்கிறபடி அதிர்ச்சி வந்ததுபாட்டப்பனுக்கு. அங்கிருந்த எல்லோருமே தங்கள் செருப்பை தங்கள்காலிலேயே போட்டிருந்தார்கள். செருப்புக் காலோடு மண்டபத்திற்குள்போலாம் என்று சொல்லிக்கொடுத்த அவர்களின் அம்மாக்களைகண்டபடிக்கு திட்ட ஆரம்பித்தான் பாட்டப்பன். இனி எங்கே போய்திருடுவான் செருப்பை?
 
நாதஸ்வரம் சத்தம் கேட்ட பக்கம் பாட்டப்பனுக்கு அதிர்ஷ்டம்காத்திருந்தது. சிமெண்ட் மேடை மீது ஜமுக்காளம் விரித்து தவில்வாசித்துக்கொண்டிருந்தவர்கள் செருப்பை மேடைக்கு கீழேவிட்டிருந்தார்கள். அவன் சந்தோசமாய் அங்கே போனான். இரண்டுநாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு ஸ்ருதி பெட்டி, ஒரு ச்சைங், சப் என்றுமொத்தம் ஆறு பேர் மேடையில் இருந்தார்கள். கீழே இருந்தது ஏழு ஜோடிசெருப்பு. நான்கு செருப்பு போடுகிற நாலுகால் ஆசாமி யாராகஇருக்குமென்று தவில் கோஷ்டியில் தேட அவகாசமில்லைபாட்டப்பனுக்கு. தன் காலுக்கு சரியாக இருக்கிற செருப்பைபோட்டுக்கொண்டான். தன்னுடைய செருப்பு களவு போவது கூடதெரியாமல் ரசித்து நாதஸ்வரம் வாசித்தவர்களை பரிதாபமாக அவன்பார்த்தான். இசை, கலை, ரசனை என்று சில விசயங்களில் மனசைபறிகொடுத்தால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதைஇழந்துவிடுவோமென்று அவர்கள் புரிந்துகொள்ளட்டுமென்று அவன்மண்டபத்திற்கு வேளியே வந்தான்.
 
ஆடாகவோ, மாடாகவோ பிறக்காமல் ஒரு மனுசனாக பிறந்ததற்காகமுதல் முறையாக சந்தோஷப்பட்டான் பாட்டப்பன். ஒரு மாடு தன்காதலுக்காக என்றைக்குமே செருப்பை திருடியிருக்காது. அடுத்ததெருவுக்கு வந்து கடையில் பீடி வாங்கி கம்பீரமாக புகைத்துக்கொண்டேகாலில் செருப்பில்லாமல் வருகிற சம்சாரிகளை அவன் கேவலமாகப்பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு கிழவன் செருப்பில்லாமல்வந்ததையும், வெறும் காலில் அவன் சிகரெட் நெருப்பை மிதித்துவேதனையோடு துடித்ததையும் கண்டான். சிகரெட் நெருப்பின் சூடுஎத்தனை கொடுமையானது என்பது காலில் செருப்பில்லாமல்நடந்தவர்களுக்குத்தான் தெரியும். பாட்டப்பன் காரியத் திருடன் இல்லை.அப்பாவித் திருடன். அதவும் குய்யென்று ஒரு நாய் பசியில் கத்தினாலும்இருக்கிற மொத்த சோற்றையும் அதற்கு கொட்டிவிடுகிற கேணைக்கிறுக்கன். சிகரெட் நெருப்பை மிதித்து ஒரு கிழவன் துடிக்கிறான் என்றுதெரிந்ததும் ஓடினான் பாட்டப்பன். கிழவன் முன்பாக செருப்பை கழற்றிவிட்டு, 'இதை போட்டுக்கோ பெரிசு" என்றான்.
 
அடப்பாவமே! கண்ணம்மாவின் காதல் என்னாவது? அவன் மனசுக்குள்பசுமாடொன்று கத்தியது. பாட்டப்பனுக்கு தெரியாத சூதா? பாட்டப்பன்தந்திரக்கார நடிகன். பாட்டப்பன் செருப்பு போட்டுக்கொண்டிருப்பதையும்,அவன் ஒரு கிழவனுக்கு அதை தானமாக தருவதையும் கண்ணம்மாதூரத்தில் காகிதம் பொறுக்கியபடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.அதை பார்த்தும் பார்க்காதவன் போலத்தான் பாட்டப்பன் அப்படிசெய்கிறான். ஆனால் நாமே நடத்துகிற நாடகத்தில் கண்டவனும்போனவனும் கண்ணாபின்னாவென்றுதானே நடிப்பார்கள். பாட்டப்பன்செருப்பைக் கொடுக்க, அந்தக் கிழவனோ செருப்பை தானம்வாங்குவதில்லை என்ற பாட்டியிடம் சத்தியம் செய்தவன் போலமுறைத்துக்கொண்டு நின்றான். பிறகு பாட்டப்பன் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விட்டான். சோகத் திரைப்படம் பார்க்கத்தெரியாதவர்கள் அழுகைக்காட்சியில்தான் சிரிப்பார்கள். கிழவன் விட்ட அறைச் சத்தத்தைவிடபெரும் சத்தத்pல் கண்ணம்மா சிரிக்க ஆரம்பித்தாள். ஒரே நேரத்தில்இன்பமும் துன்பமும் வந்ததில் குழம்பிப்போனான் பாட்டப்பன்.
 
'ஏன்டா, என்னோட செருப்பையே திருடிகிட்டு வந்து எனக்கே தருமம்செய்யறீயா நீ. உன்னால பாருடா வெறுங்கால்ல வந்து நெருப்பைமிதிச்சேன்."
 
'செருப்பு உன்னோடதா பெரிசு. அப்ப நீ நாயணக்காரனா?"
 
திபீரென்று இன்னொரு அடி விழுந்தது பாட்டப்பனுக்கு. 'ஏன்டா, அரசனட்டிநாட்டாமை என்னப்பாத்து நீ நாயணக்காரன்னா கேக்கறே!" நாட்டாமை ஊர்கூட்டி பஞ்சாயத்துக்கு கத்த ஆரம்பித்துவிட்டான். அப்பொழுதுதப்பித்தாலும் தருமப்படி மீண்டும் திருடனாகிவிட்டான் பாட்டப்பன். 'தருமம் வாழ்க!" என்று சொல்லிக்கொண்டே அவன் தரும அடிக்குதயாரானான்.
 
இந்த தருமம் நியாயம் சத்தியம் எல்லாம் ஊமைகளிடம்தான் தன்வேலையைக் காட்டும். வாயுள்ளவர்களைக் கண்டால் தருமம் என்பதுரத்த வாந்தி எடுத்துவிடுகிறது. பாட்டப்பன் ஒப்புக்கொண்டதால் அவன்செருப்பு களவானிதான். ஆனால் கண்ணம்மா அதைஒப்புக்கொள்ளாவிட்டால் தருமம் கால் கிளப்பிக்கொள்ளும். வேடிக்கைபார்த்த கண்ணம்மா காகித சாக்கை போட்டுவிட்டு ஓடிவந்து அந்தநாட்டாமைக் கிழவனை வாங்கு வாங்கு என்று வாங்கினாள், 'ஏய்யாகெழட்டு முண்டம். நீ செருப்பை கேணையனாட்டம் எங்கியோ விட்டுட்டுவந்து இங்க நாந்தான் நாட்டாமைன்னு சொல்லுவே! அதை இந்த மகராசன்கொண்டாந்து குடுத்தா அடிப்பியா நீ? அறிவு கெட்டவனே... இப்படியேநெலவரமில்லாம போகாத பஸ்சுன்னு நெனைச்சி த்ரோவா பாடையிலஏறிடுவே..." என்று அவள் போட்ட கூச்சலில் நாட்டாமைக் கிழவன்ஆடிப்போனான். ஆளை விட்டால் போதுமென்று செருப்பை காலில்போட்டுக்கொண்டு ஓடிப்போனான். மீண்டும் பாட்டப்பன் யோக்கியனாகமாறிவிட்டான்.
 
'எவன் அடிச்சாலும் மொகறைய காட்டிக்கிட்டு நிக்கிறியே கேணப்பயலே!வெக்கமாயில்லே" அடுத்து பாட்டப்பன் மீது பட்டாசு விட்டாள்கண்ணம்மா.
 
'நீதானே செருப்பு போட வக்கில்லாத பிச்சைக்காரனை கட்டிக்கமாட்டேன்னு சொன்னே"
 
'அதுக்காக? செருப்பு போட்டவன் பின்னாடியே போக பொண்ணு என்னகுதிரை லாடமா? நீ ஒழுக்கமா ஒரு காசு சம்பாதிக்கணுன்னுதான் நான்அப்படி சொன்னேன். நீ செருப்புத் திருடனா வந்து நிக்கறே! அடி உதைக்குபயப்படாம திருடப்போற நீ வேர்வை வெயிலுக்கு பயப்படாம உழைக்கமாட்டியா? நீயெல்லாம் ஒரு மனுசன்தானே... உனக்கு உடம்புல சூடுசொறணை இருக்குதானே... வாயால திங்கற மனுசன் உடம்பாலஉழைக்கணுன்னு உனக்கு எந்த பொறம்போக்கும் சொல்லித் தரலையா?வாய்யா, என் பின்னாடி வா... குப்பை பொறுக்கிற சேவலுக்கு எட்டுபெட்டைக் கோழி இருக்கு பாரு! எதனால... கம்பீரம் வேணும்யா...குப்பையக் கிளறியாவது பொட்டச்சிய மயக்கற கம்பீரம் வேணும்.இருக்கா? உனக்கு இருக்கா..." கண்ணம்மா ஓயாத அறிவை சொல்லிபாட்டப்பனின் செவிட்டில் ஈரம் காயாமல் அடித்துக்கொண்டே இருந்தாள்.
 
எட்டு வயதில் அனாதையாகி, பதினாறு வயதுவரை சித்தப்பன் வீட்டுதண்டச்சோறு தின்று, இன்றுவரை அரைச் சாமியாராக பிச்சை எடுத்து,மானத்தோடு வாழ்ந்துவரும் பாட்டப்பனைப் பார்த்து தெருநாய்குழைத்தாலும் சரி அதன் மண்டை மேல் கல் போட்டு கொன்றுவிடுவான்.ஆனால் கண்ணம்மாளின் அறிவு இன்று அவனுக்கு தித்திக்க ஆரம்பித்தது.புண் வந்த முதுகு, வண்டல் படிந்த பாதம், நாற்றக்கறை பிடித்த பற்கள்,பரட்டைத் தலை, யாசிக்கிற கைகள், பிச்சைக் குரல் எழுப்பும் வாய் என்றுசீரழியத் தயாராக இருந்த தன் முதுமையை திசை திருப்பி, குப்பைக்குள்ரத்தினம் தேடுவது போல காகிதங்கள் தேடவைத்துகுடும்பஸ்தனாகப்போகும் எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும்கண்ணம்மாவின் கட்டளை வசவுகளையும், அதை மந்திரம் போலஉச்சரிக்கிற அவளின் சிவந்த வாயழகையும் கண் இமைக்காமல்,பாவென்று வாய் பிளந்து பார்த்தபடி நின்றிருந்தான் பாட்டப்பன். முரட்டுச்செருப்பணிந்தபடி சண்டைக்கார கறுப்பியின் பாதங்களுக்குப் பின்னால்ஒரு குப்பைச் சேவலாக மாறி தத்திச் செல்வது போன்ற பிரம்மை வந்ததுஅவனுக்கு.
 
நான் சேவலா மாறி குப்பைய கிளறினா நீ என்னை அறுத்து குழம்புவெச்சிட மாட்டியே?”
 
 
பாட்டப்பன் கேட்க, பயந்த கிறுக்கனின் கேள்வியில் திகைத்த கண்ணம்மாவயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓவென்று சிரித்தாள். அவள் சிரித்தசிரிப்பில் சில குழந்தைகளின் முகம் தெரிந்து மறைந்தது பாட்டப்பனுக்கு.அது பாட்டப்பனின் சாயல் கொண்ட குழந்தைகள்.
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வறியவர்களின் காதலை சொல்லும் வளமான கதை.....அருமை....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.