Jump to content

முஸ்லிம்கள் பொறுமையை இழந்தால் ’இந்த நாடு விளைவைச் சந்திக்க நேரிடும்’


Recommended Posts

 Views - 13image_60aaba9941.jpg

 

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும்.

இந்த நாட்டிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும்  தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி  வருகின்றனர். அதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல் காரணமும் அதேபோன்று, சர்வதேசத்தின் ஆதிக்கமும் ஆகும்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜுலைக் கலவரமும் அதை அடுத்து, இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமும் அவற்றினால் ஏற்பட்ட வடுக்களும் அழிவுகளும் இன்னும் மறையாத நிலையில் மீண்டும் இந்த நாட்டில் இனவாதம் தலை தூக்கியுள்ளது.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை  நம்பியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், இனவாதிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முனைய வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்' என்றார்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/’முஸ்லிம்கள்-பொறுமையை-இழந்தால்-’இந்த-நாடு-விளைவைச்-சந்திக்க-நேரிடும்’/73-197173

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/’முஸ்லிம்கள்-பொறுமையை-இழந்தால்-’இந்த-நாடு-விளைவைச்-சந்திக்க-நேரிடும்’/73-197173

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் சுன்னத்து செய்து போடுவினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருதான் காத்தான்குடியில்..பெண்களூக்கு தனியான பீச் திறந்தவர்..ஏழு கலியாணம் கட்டுறவைக்கு தனிக்காத்துப்பிடிச்ச பெண் வேணும்....இப்ப ஆர் இனவாதி சொல்லுங்கோ......இவரு பேரே இன்சினியர் சிப்பிலி பாறூௐௐஊ...

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

Link to comment
Share on other sites

8 minutes ago, போல் said:

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

அதட்கு எம்மிடம் என்ன செயற்தியம் உண்டு? ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அதட்கு எம்மிடம் என்ன செயற்தியம் உண்டு? ???

இறைவனிடம் கையேந்துவோம்.......(அன்று தந்தை செல்வா இன்று விஜய கலா மகேஸ்வரன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

அவர்கள் பிடித்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் ஆனால் பதில் நடவடிக்கைகள் என்று எதுவும் எடுக்க வில்லை  ஆனால் தமிழர்கள் தரகு வேலை செய்து பிழைக்கிறார்கள் உதாரணம் தமிழர் காணியை தமிழர் வாங்கி  அதை முஸ்லீம்களுக்கு விற்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவ சிப்லி பாறுக்குக்கும் அக்குறனை கொம்பனிக்கும் கொழும்பான் அனுபிடுங்க பிளீஸ் 

Link to comment
Share on other sites

On 5/26/2017 at 6:43 PM, alvayan said:

இவருதான் காத்தான்குடியில்..பெண்களூக்கு தனியான பீச் திறந்தவர்..ஏழு கலியாணம் கட்டுறவைக்கு தனிக்காத்துப்பிடிச்ச பெண் வேணும்....இப்ப ஆர் இனவாதி சொல்லுங்கோ......இவரு பேரே இன்சினியர் சிப்பிலி பாறூௐௐஊ...

அவர்கள் ஏழு கலியாணம் கட்டி இன்று உலகின் பலம் பொருந்திய மக்களாக அமரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு சவாலாக நிற்கிறார்கள். தமிழர் சீதனம், சாதி என்று பல தடைகளை போட்டு ஒரு கலியாணம் கூட நடக்க விடாமல் செய்து தமது இனத்தையும் பலம் இழக்க செய்து அழிந்து போகிறார்கள்.

தமது பெண்கள் ஆண்களின் தொல்லை இல்லாமல் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் கடலில் குளித்து மகிழ அவர் கடற்கரை திறந்து இருக்கிறார். தமிழர் தீட்டு என்று பெண்களை கடலில் இறங்க கூடாது என்று தடுத்து தமிழ் பெண்களை அவர்கள் மகிழ்வாக வாழ விரும்பினால்  சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறீஸ்தவர்கள் , அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியரை கலியாணம் செய்ய தூண்டுகிறார்கள். சீதனம் மற்றும் சாதி கொடுமை வேறு.  இந்த அழியும் இனத்துக்கு அழிவு தவிர வேறு எதுவும் தெரியாது போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

On ‎26‎.‎05‎.‎2017 at 8:58 PM, Athavan CH said:
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது நோன்புக் காலம் இவர்கள் விரும்பியோ விரும்பாமலே நோன்பு முடிவுறும் வரையில் பொறுமையைக் கைவிட முடியாது. நாடு பயங்கர விளைவைச் சந்திக்காது என நம்பலாம். :grin:

Link to comment
Share on other sites

11 hours ago, Jude said:

தமிழர் சீதனம், சாதி என்று பல தடைகளை போட்டு ஒரு கலியாணம் கூட நடக்க விடாமல் செய்து தமது இனத்தையும் பலம் இழக்க செய்து அழிந்து போகிறார்கள்.

யுத்தத்தின் பின்னர் தமிழர்களில், சைவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் குறைந்துள்ளதையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் பெருகியுள்ளதையும் காணலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.