Jump to content

ஊர்க்காவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே  இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட  சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி  சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும்  என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை.Image result for அன்னதானம் images

சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக்கத்து கிராமத்து பெடியள் எமது ஏரியா பெண்களை பார்க்க வந்தால் அவர்களின் பருமனை பார்த்து  அவர்களை வெருட்டி திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களை பொது நோக்குடன்  செய்வது எங்களது வழக்கம்.

முற்போக்கு இலக்கிய ஆர்வாளர்கள் கூட்டம் ஆறு மணிக்கு நடை பெறுவதாக இணையத்தளத்தில் விளம்பரத்தை பார்த்த நான் ஐந்தரைமணிக்கு மண்டப வாசலில் போய் நின்றேன். இலவச அனுமதி என்றபடியால் அதிக சனம் வரும் என்று எதிர் பார்த்தேன் ஆனால் எதிர் பார்த்தபடி ஆர்வாளர்கள் சமுகமளிக்கவில்லை.    பி.எம் .டபிள்யு  காரிலிருந்து நஷனல் போட்டு குறுந்தாடியுடன் ஐம்பத்தைந்து வயதுமதிக்க தக்க ஒருத்தர் இறங்கி வந்தார்.அதே நடை, எங்கயோ பார்த்த முகம் கையில் ஒரு தொகுதி புத்தகத்துடன் மண்டபத்தினுள் நுழைந்தார்.

பாடசாலையில் பின்வாங்கிலிருந்த பழக்கதோசம் இங்கும் மண்டபங்களில் பின் வரிசையை நோக்கி எனது கால்கள் என்னை அழைத்து இருத்திவிடும்.ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.குறுந்தாடி வைத்தவருடன் இன்னும் சிலர் மேடையில் அமர்ந்திருந்தனர்.ஏற்பாட்டாளர்கள் ஒவ்வோருத்தரையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள்..பொன்னாடை போடவில்லை மகிழ்ச்சியாக இருந்தது.

எனது தவிப்புக்கு விடை கிடைக்கும் தருணம் வந்தது அதாவது  தாடியை அறிமுகம் செய்யும் நேரம்.மெல்பேர்னிலிருந்து வந்திருக்கும் முற்போக்கு எழுத்தாளர்,புரட்சிகர சிந்தனையாளர் சி.  என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.நினைவில் யார் என்று இன்னும் வரவில்லை.எல்லொரும் கை தட்டினார்கள் நானும் கைதட்டினேன்.

கைதட்டாவிடில் அறிவிப்பாளர்கள் இப்பொழுதெல்லாம் "எங்கே உங்கள் பலத்த கரகோசம்"எனகேட்டு வாங்குகிறார்கள்.

என்னுடைய கிறுக்கலுக்கு பச்சை புள்ளிகளும் பாரட்டுகளும் கிடைக்கும் பொழுது ஏற்படும் மன சந்தோசம் போன்று ஒவ்வோரு மேடை பேச்சாளர்களுக்கும்  ஏற்படுவதில் தப்பில்லை என்று நினைத்து மீண்டும் ஒரு பலத்த கைதட்டலுடன் விசிலும் அடித்தேன்.

மைக்கை வாங்கிய சி.தா,தோழர்களே வணக்கம் ,என்னை இன்று தோழர் .பா அவர்கள் தனது  "சிறகொடிந்த காகம்" என்ற புத்த வெளியீட்டுக்கு தலமை தாங்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நிற்கின்றேன்..பா எனக்கு சிறு வயது முதலே தெரியும் பல களம் கண்ட போராளி ,நானும் அவனும் வன்னிகாடுகளில் அலைந்த நாட்களை எழுத வரிகள் இல்லை.

எங்கயோ கேட்ட  பரீட்சையமான  குரல் யாராக இருக்கும்?மனது விடை காணதுடித்தது.

    எமது போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் எகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அருவருடிகளான எம் இன முதலாளிகளும் தான், சிங்கள  மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர் அவர்களை கெடுப்பது எகாதிபத்தியவாதிகளின் கைக்கூலிகள்.உண்மையை சொல்லப்போனால் இன்று முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்திற்காக அதிகமான சிங்களவர் கண்ணீர் சிந்துகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தவில்லை ஒரு இயக்கம்தான் போராடியது. மக்கள் போராடியிருந்தால் அதுவும்  சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் நாம் இன்று விடுதலை அடைந்திருப்போம்.

பழக்கப்பட்ட அதே கருத்து அடே உவன் எங்கன்ட "கருத்து கந்தசாமி"

சி.தாமோதரம் போல கிடக்கு இருந்தாலும் பக்கத்திலிருந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள அவரை பார்த்தேன்.அவரை சிட்னியில் கண்டிருக்கிறேன் ஆனால் ஒருநாளும் கதைக்கவில்லை.ஒரு புன்முறுவலைபோட்டு

"உங்களுக்கு உவரை தெரியுமோ"

"இவரின்ட பெயர் தாமோதரம் தானே ஊர் மானிப்பாய் "

"ஓம் அவரும் நானும் பேரதேனியாவில் ஒன்றாக படித்தனாங்கள்"

இடைவேளை அறிவித்தார்கள் இருவரும் தேனீர் அருந்தியபடியே

சி.தாவைப்பற்றிய விடுப்புக்களை பகிர்ந்து கொண்டோம்.

"வன்னி காட்டுக்குள் நின்ற போராளி என்று சொல்லுறார் பிறகு எப்படி பேரதேனியாவில் படிச்சிருப்பார்"

"தம்பி ஒரு மாதம் காடுகளில் திரிஞ்சு போட்டு போராளி என்று சொல்ல ஏழுமோ , உமக்கும் ஆளை தெரியும்போல கிடக்கு"

ஓமோம்,என்னை விட இரண்டு மூன்று வயசு அதிகம் எங்கன்ட ஊர் கோவில் மண்டபங்களில் ஒன்று கூடியிருக்கும் பொழுது அரசியல் கருத்துக்களை சொல்லிகொண்டிருப்பார்.மக்களை பாதுகாக்க மக்கள் போராட்டம் வெடிக்க வேணும் என்பார் .நாங்கள் கோவிலில் நின்றால் ஏனடா கோவிலில் நின்று நேரத்தை வீணடிக்கிறியள் மக்களை திரட்டி மக்கள் போராட்டத்தை முன்னேடுப்போம் என்று ஒரே சொற்பொழிவாக இருக்கும்.பிறகு கொஞ்ச நாட்களாக ஆளை காணவில்லை .பெடியங்கள் சொன்னார்கள் தாமு இயக்கத்தில சேர்ந்திட்டான்  என்று.அதற்கு பிறகு இப்பதான் முதல் முறையாக ஆளை பார்க்கிறேன்."

"பொலிஸ் தேடுது என்று காட்டுவழியாக கண்டி வந்து அண்ணனுடனிருந்து /எல் பாஸ் பண்ணி பெர்தேனியாவில் படிச்சவன்,அங்கயும் சிங்களவருடன் ஆள் நல்ல ஒட்டு,நாடகம் ,கதை ,கவிதைஎன்று எல்லாத்துக்கும் முன்னுக்கு நிற்பான்"

அக்கம்பக்கம் திரும்பி பார்த்துவிட்டு காதருகே வந்து

"காய்க்கு ஒரு சிங்கள படுவும் இருந்தது"

"அந்த படுவைத் தான் கட்டியிருக்கிறாரா"

"என்ன தம்பி விசர் கதை கதைக்கிறீர் கொழுத்த சீதனத்துடன் கொழும்பு பெட்டையை கட்டினவன்" 

"கொழும்பு என்றால் சிங்களபிள்ளையையா?"

"சீ சீ எங்கன்ட யாழ்ப்பாணத்து பிள்ளை கொழும்பில செட்டில், தகப்பன் கஸ்டம்ஸில் வேலை பார்த்தவர்."

சி.தாவை சூழ பலர் நின்றனர் .என்னுடன் கதைத்துகொண்டிருந்தவரும்  அவரை சந்திப்பதற்கு செல்ல தயாரானார்

"வாருமன் சி.தாவுடன் கதைப்போம்"

"இல்லை நீங்கள் போங்கள் நான் வெளிகிடப்போறன்"

"இனி எப்ப சந்திக்கலாம்"

"அடுத்த கிழமை சிட்னிமுருகன் கோவிலில் சொற்பொழிவு இருக்கு தாயகத்திலிருந்து சொற்செல்வர் வந்திருக்கிறார்"

"அப்ப அங்க சந்திப்போம் நான் வாரன்"

பெடியளுடன் ஊர் சுற்றும் காலத்தில் ஒரு நாள் சுதுமலை , இனுவில் மருதனாமடம் வரை சென்று திரும்பிகொண்டிருக்கும் பொழுது எங்களது சைக்கிள்களுக்கு  பின்னால் "சி 90" கொன்டா மொட்டர் சைக்கிள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்னாள் நாங்கள் நிறுத்தியவுடன் அவரும் முன்னுக்கு வந்து மொட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

Image result for images of honda c90 motorbike

என்னை கண்டவுடன்

" நீங்களா"

"ஒமோம் எப்படியிருக்கிறீங்கள்"

"நல்லாயிருக்கிறன் ,தோட்டத்தில் நின்றனான் சைக்கிளில் குறுப்பா உங்கன்ட கோஸ்டியை அந்த பக்கம் கண்டனான் அதுதான் யார் என்று பார்க்க வந்தனான்,இப்ப யார் யார் என்றில்லை ஊருக்குள்ள வந்து போறாங்கள்"

"அண்ணவின்டகடிதம் வந்ததோ"

"ஒம் வந்தது அடுத்த மாதம் வாரார்"

"அண்ணர் வந்த பிறகு சந்திப்போம்"

விடை பெற்று மீண்டும் பெடியளுடன் சைக்கிள் சவாரி தொடங்க

"யாரடா மச்சான் உந்த ஊர்க்காவலன்"

"உவரின்ட அண்ணர் என்னுடைய அண்ணருடன் சவுதியில் வேலை செய்கிறார் அந்த பழக்கம்"

. "நீ இல்லாட்டி எங்களுக்கு இருட்டடி விழுந்திருக்கு ஊர்காவலனிடமிருந்து"

என்ற பெடியளின் நக்கலுடன்

ஒருத்தரிடமும் இருட்டடி வாங்காமல் வீடு வந்து சேர்ந்தோம்.

கார் பார்க்  பி.எம்.டபிள்யூ,பேண்ஸ்,டோயொட்டா,வொல்வொ என்று நிறைந்திருந்தது.எனது காருக்கு இடத்தை தேடி பார்க் பண்ணிபோட்டு மண்டபத்தினுள் சென்றேன்.கார்பார்க்கை போன்று மண்டபமும் நிறைவாகவே காணப்பட்டது.

கடந்த கிழமை அறிமுகமான தோழர் கூட்டதினுள் இருக்கின்றாரோ என பார்த்தேன்.மக்கள் கூட்டத்தினுள் அவரை காண்பது கடினமாக இருந்தது.

 

பலத்தகரகோசத்துடன் சொற்செல்வர் தனது உரையை தொடங்கினார்.புலம்பெயர்ந்த மக்களை புகழ்ந்து பாராட்டி பேசினார்.மனசு சந்தோசமடைந்தது.வழமையாக புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் அல்லது உங்களால்தான் நாட்டில பட்டினி என்று கூறும் சில புரட்சியாளர்களின் குற்றைச்சாட்டை கேட்டு பழகிய மனசுக்கு பெரியவரின் பாராட்டு மகிழ்ச்சியை தந்தது.  எமது குழந்தைகளின் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டினார்.தாயக மக்களுக்கு சிவனின் பெயரால் பல உதவிகளை தனிமனிதானாக நின்று எனைய தனிநபர்களின் பணபங்களிப்புடன் அவர் செய்யும் செயல்களை கேட்ட பொழுது எங்களது புரட்சிகளும் சித்தாதங்களும் ஏட்டு சுரக்கை என்பது  வெள்ளிடைமடை.

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதை தாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர் ஒர் இனத்தின் காவலன்.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கிறுக்கல்...வழமை போல இல்லாது...சீரியசான விசயத்தை தொட்டுச் செல்கின்றது!

நான் அடிக்கடி நினைப்பது போல..எம்மைக் கொன்றவர்களை விடவும்...எம்மை மென்றவர்களும், தின்றவர்களும் தான் அதிகம்!

ஈர மூஞ்சியைக் காவிக்கொண்டு....எம்மிடம் வந்தவர்கள்...இன்று எமது மூஞ்சிகளை ஈரமாக்கி விட்டு..நன்றாக வாழ்கின்றார்கள்!

தாமோதரம் போன்றவர்கள்...முதலாவது வகையைச் சேர்ந்தவர்கள்! எமது துயரங்களைத் தங்கள் முதாலீடாக்கிக் கொண்டவர்கள்!

ஊர்க்காவலன் போன்றவர்கள் இன்னொரு வகை!

இவர்கள் போன்ற சிலரால் தான் ....இன்னும் எமது மண்ணில்..கொஞ்சமாவது மிஞ்சியிருக்கின்றது!

புத்தனின் கோவில் பற்றிய புரிதல் உண்மை தான் எனினும்.....கோவில்கள் எம்மவரின் மனச்சாட்சிகள் அவர்களை நோக்கியே காறித் துப்பாமல் வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே நான் நினைக்கிறேன்!

தொடர்ந்தும்  எழுதுங்கள்...புத்ஸ்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கிறுக்கல் இந்த தடவை "பாகுபலி" போன்று சுப்பர்கிட் ஆகவில்லையே  என் மனம்தளர்ந்தேன் இருந்தும் எனது வழ்மையான ஆசானின் கருத்து என்னை உற்சாகமடைய செய்துள்ளது....நன்றிகள் புங்கையுரான்...

1 hour ago, புங்கையூரன் said:

புத்தனின் கிறுக்கல்...வழமை போல இல்லாது...சீரியசான விசயத்தை தொட்டுச் செல்கின்றது!

நான் அடிக்கடி நினைப்பது போல..எம்மைக் கொன்றவர்களை விடவும்...எம்மை மென்றவர்களும், தின்றவர்களும் தான் அதிகம்!

ஈர மூஞ்சியைக் காவிக்கொண்டு....எம்மிடம் வந்தவர்கள்...இன்று எமது மூஞ்சிகளை ஈரமாக்கி விட்டு..நன்றாக வாழ்கின்றார்கள்!

தாமோதரம் போன்றவர்கள்...முதலாவது வகையைச் சேர்ந்தவர்கள்! எமது துயரங்களைத் தங்கள் முதாலீடாக்கிக் கொண்டவர்கள்!

ஊர்க்காவலன் போன்றவர்கள் இன்னொரு வகை!

இவர்கள் போன்ற சிலரால் தான் ....இன்னும் எமது மண்ணில்..கொஞ்சமாவது மிஞ்சியிருக்கின்றது!

புத்தனின் கோவில் பற்றிய புரிதல் உண்மை தான் எனினும்.....கோவில்கள் எம்மவரின் மனச்சாட்சிகள் அவர்களை நோக்கியே காறித் துப்பாமல் வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே நான் நினைக்கிறேன்!

தொடர்ந்தும்  எழுதுங்கள்...புத்ஸ்..!

 

என்னுடைய கிறுக்கல் இந்த தடவை "பாகுபலி" போன்று சுப்பர்கிட் ஆகவில்லையே  என் மனம்தளர்ந்தேன் இருந்தும் எனது வழ்மையான ஆசானின் கருத்து என்னை உற்சாகமடைய செய்துள்ளது....நன்றிகள் புங்கையுரான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

என்னுடைய கிறுக்கல் இந்த தடவை "பாகுபலி" போன்று சுப்பர்கிட் ஆகவில்லையே  என் மனம்தளர்ந்தேன்

 

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

On 26.5.2017 at 0:56 PM, putthan said:

.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

 

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதைதாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர்ஒர் இனத்தின் காவலன்.

ஊர்காவலன் போன்ற சிலரின் செயல்கள் ஊரில் மட்டுமல்ல அவர்கள் செல்லும்  இடமெங்கும் பொதுப்பணியாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும். நாம்தான் கவனிக்கத் தவறி விடுகின்றோம்....! 

மேலும் கோவில்கள் வெறுமனே வணக்கத்தலங்கள் மட்டுமல்ல பல நண்பர்கள், உறவுகளை சில நிமிடங்களாவது சந்தித்து உறவாடும் இடம் பல தெருவிலும் இருக்கும் பேரிளம் பெண்கள் தமது நன்மை தீமை சுமைகளை பகிர்ந்து பரிமாறும் இடம். ....!

நல்லதொரு பகிர்வு புத்தன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து வழமைக்கு மாறாக பலரையும் சிந்திக்க வைக்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்களால் உதவி செய்ய மனமிருந்தும் பலர் பின்னடிக்கிறார்கள்.

பொதுநலத்தில் தான் சுயநலம்
சுயநலத்தில்த் தான் பொதுநலம்

எப்போதாவது உங்கள் படம் ஓடலையா?

கவலையே விடுங்கள்.தலைப்பில் சின்னதாக

வயது வந்தவர்கள் மட்டும் என்று போட்டுவிட்டால் ஓகோ என்று பிச்சுக் கொண்டு ஓடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.5.2017 at 0:56 PM, putthan said:

கைதட்டாவிடில் அறிவிப்பாளர்கள் இப்பொழுதெல்லாம் "எங்கே உங்கள் பலத்த கரகோசம்"எனகேட்டு வாங்குகிறார்கள்.

-----மைக்கை வாங்கிய சி.தா,தோழர்களே வணக்கம் ,என்னை இன்று தோழர் .பா அவர்கள் தனது  "சிறகொடிந்த காகம்" என்ற புத்த வெளியீட்டுக்கு தலமை தாங்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நிற்கின்றேன்..பா எனக்கு சிறு வயது முதலே தெரியும் பல களம் கண்ட போராளி ,நானும் அவனும் வன்னிகாடுகளில் அலைந்த நாட்களை எழுத வரிகள் இல்லை.

எங்கயோ கேட்ட  பரீட்சையமான  குரல் யாராக இருக்கும்?மனது விடை காணதுடித்தது.

    எமது போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் எகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அருவருடிகளான எம் இன முதலாளிகளும் தான், சிங்கள  மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர் அவர்களை கெடுப்பது எகாதிபத்தியவாதிகளின் கைக்கூலிகள்.உண்மையை சொல்லப்போனால் இன்று முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்திற்காக அதிகமான சிங்களவர் கண்ணீர் சிந்துகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தவில்லை ஒரு இயக்கம்தான் போராடியது. மக்கள் போராடியிருந்தால் அதுவும்  சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் நாம் இன்று விடுதலை அடைந்திருப்போம்.

பழக்கப்பட்ட அதே கருத்து அடே உவன் எங்கன்ட "கருத்து கந்தசாமி"

-----"வன்னி காட்டுக்குள் நின்ற போராளி என்று சொல்லுறார் பிறகு எப்படி பேரதேனியாவில் படிச்சிருப்பார்"

"தம்பி ஒரு மாதம் காடுகளில் திரிஞ்சு போட்டு போராளி என்று சொல்ல ஏழுமோ , உமக்கும் ஆளை தெரியும்போல கிடக்கு"

-----பலத்தகரகோசத்துடன் சொற்செல்வர் தனது உரையை தொடங்கினார்.புலம்பெயர்ந்த மக்களை புகழ்ந்து பாராட்டி பேசினார்.மனசு சந்தோசமடைந்தது.வழமையாக புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் அல்லது உங்களால்தான் நாட்டில பட்டினி என்று கூறும் சில புரட்சியாளர்களின் குற்றைச்சாட்டை கேட்டு பழகிய மனசுக்கு பெரியவரின் பாராட்டு மகிழ்ச்சியை தந்தது.  எமது குழந்தைகளின் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டினார்.தாயக மக்களுக்கு சிவனின் பெயரால் பல உதவிகளை தனிமனிதானாக நின்று எனைய தனிநபர்களின் பணபங்களிப்புடன் அவர் செய்யும் செயல்களை கேட்ட பொழுது எங்களது புரட்சிகளும் சித்தாதங்களும் ஏட்டு சுரக்கை என்பது  வெள்ளிடைமடை.

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதை தாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர் ஒர் இனத்தின் காவலன்.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

அருமை புத்தன்.... பலரின் போலி முகங்களை, அழகாக உங்கள் எடுத்து நடையில் எழுதியுள்ளீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-29 at 9:51 PM, வாத்தியார் said:

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

உந்த தாடிக்காரார் சைக்கிள் கப்பில் மீண்டும் கிளர்தெழுகின்றனர் போல தெரிகின்றனர்...எது எப்படியோ தாடிக்காராரில் வேலையில்லை.....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

On 2017-5-29 at 9:51 PM, வாத்தியார் said:

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் வாத்தியார் ....இந்த தாடியின் பயணம் தொடரும்.....

On 2017-5-30 at 3:00 AM, suvy said:

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதைதாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர்ஒர் இனத்தின் காவலன்.

ஊர்காவலன் போன்ற சிலரின் செயல்கள் ஊரில் மட்டுமல்ல அவர்கள் செல்லும்  இடமெங்கும் பொதுப்பணியாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும். நாம்தான் கவனிக்கத் தவறி விடுகின்றோம்....! 

மேலும் கோவில்கள் வெறுமனே வணக்கத்தலங்கள் மட்டுமல்ல பல நண்பர்கள், உறவுகளை சில நிமிடங்களாவது சந்தித்து உறவாடும் இடம் பல தெருவிலும் இருக்கும் பேரிளம் பெண்கள் தமது நன்மை தீமை சுமைகளை பகிர்ந்து பரிமாறும் இடம். ....!

நல்லதொரு பகிர்வு புத்தன்....!  tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் சுவி ....உங்களது ஆதரவும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்துகின்றது

On 2017-5-30 at 3:58 AM, ஈழப்பிரியன் said:

புத்து வழமைக்கு மாறாக பலரையும் சிந்திக்க வைக்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்களால் உதவி செய்ய மனமிருந்தும் பலர் பின்னடிக்கிறார்கள்.

பொதுநலத்தில் தான் சுயநலம்
சுயநலத்தில்த் தான் பொதுநலம்

எப்போதாவது உங்கள் படம் ஓடலையா?

கவலையே விடுங்கள்.தலைப்பில் சின்னதாக

வயது வந்தவர்கள் மட்டும் என்று போட்டுவிட்டால் ஓகோ என்று பிச்சுக் கொண்டு ஓடும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் எனதுஅடுத்த படம் வயது வந்தவர்களுக்கு  மட்டுமே ......உங்களது ஆதரவும் கருத்து பகிர்வும் என்னை மீண்டும் கிருக்க தூண்டும் ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.