Jump to content

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு


Recommended Posts

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

 
201705261406597305_Kamal-Hassan-words-of
 
கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது.

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. யார் வரவேண்டும்? யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் அரசியலுக்குள்தான் வந்திருக்கிறேன்.

201705261406597305_kamal223-X._L_styvpf.

அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை எங்களுக்காக பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதைவிடுத்து தியாகம் செய்ய வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

மேலும், ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. அது வேறு என்று சொல்லி பேட்டியை முடித்தார்.

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் கூறியதை வைத்து பார்க்கும்போது, அவர் மறைமுகமாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படுகிறது. 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/26140651/1087296/Kamal-Hassan-words-of-support-for-Rajinikanth.vpf

Link to comment
Share on other sites

அரசியல் சிஸ்டம் பற்றி ரஜினி சொன்னது சரியா? கமல்ஹாசன் அதிரடி பதில்

IMG_%2828%29_17162.jpg

 


'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனுக்கும் இந்தி வெர்ஷனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?

மொழியே ஒரு வித்தியாசம் தான். மொழியைத் தாண்டி பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை.

இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் யாருடைய நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருந்தது?

அமிதாப்பை பல நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே பார்த்து விட்டதால் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் எனக்கு பிடித்திருந்தது. சல்மான் கான்  எளிமையாகவும், எதார்த்தமாகவும் செய்து இருந்தார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அரசியல்வாதி யாராவது பங்கேற்பார்களா?

அரசியல்வாதிகள் யாரும் இருக்க மாட்டாங்கனு நம்புறேன். பிரபலங்களுடன் சாமான்ய மனிதர் யாராவது இருப்பாங்கனு நினைக்கிறேன்.

30 கேமராக்கள் இருக்கும் ஒரு வீட்டில் பிரபலங்கள் எப்படி எதார்த்தமாக இருக்கவும், பேசவும் முடியும்?

முடியும். நாங்களே சில நேரம் கேமரா இருப்பது தெரியாமல் மனதில் இருப்பதே வெளிப்படையாக பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதில்லையா? அதே மாதிரிதான் கேமரா இருக்கு என்பதையே போட்டியாளர்கள் மறந்து விடுவார்கள்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பதிலாக சமூக அக்கறையுடைய 'சத்யமேவ ஜெயதே' போன்ற நிகழ்ச்சியை நடத்தலாமே?

நான் என் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் செய்வதைவிட பல நல்ல விஷயங்களை செஞ்சிட்டுதான் இருக்கேன். இதை நான் என் தனிப்பெருமைக்காக இங்கே சொல்லலாம்.

இன்றைய அரசியல் சூழலில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

போட்டி அரசியலில் நான் இல்லை. தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை. சேவை செய்யும் இடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதைப் பற்றி?

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதில் தவறு ஏதுமில்லை. அது வித்தியாசமானது இல்லை.

ஜூன் 25 ஆம் தேதி முதல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான பிரமாண்ட செட் சென்னையில் போடப்பட்டுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.
 

http://www.vikatan.com/news/cinema/90485-there-is-nothing-wrong-in-rajinis-words-says---kamal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

கமல் சார்?

தமிழகத்தை ஆளுவதற்கு ஏன் சார் தமிழ் உணர்வு வேண்டும்?

சொல்லுங்க சார்........உருது உணர்வு அரபு உணர்வுகள் சரி வராதா சார்....... சொல்லுங்க சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வு கொண்ட எவனும் மனிதனை ஆளலாம்.

அது இல்லாத ..........******** ஆளுவதை பற்றித்தான் இப்ப பேசிகிட்டு இருக்கோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.