Jump to content

கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை


Recommended Posts

கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம்

தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை

மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அண்­மை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட தையிட்­டிப் பிர­தே­சக் கிணற்­றி­லி­ருந்து தொடர்ச்­சி­யா­கப் பெரு­ம­ளவு ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், எஞ்­சிய ஆயு­தங்­களை மீட்க முடி­யா­மை­யால் அவற்றை இன்று வெடிக்க வைத்து அழிப்­ப­தற்­குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சூழச் சுமார் 100 மீற்றர் தூரத்தினுள் மக்கள் எவரையும், வெடிவைத்து அழிக்கும் வரை பிரவேசிக்க வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த தையிட்டிப் பிரதேசம் கடந்த மாதம் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. மக்கள் தமது காணிகளைத் துப்பரவு செய்து வருகின்றனர். கிணற்றை இறைத்துத் துப்புரவு செய்ய முற்பட்டபோது, வெடிபொருள்கள் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மேற்படி கிணற்றிலிருந்து 300 கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. மறுநாள் 400 கைக்குண்டுகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் அந்தக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 250 கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. நேற்றைய தினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.

கிணற்றில் இன்னமும் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், அவற்றை மீட்க முடியாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள ஆயுதங்களை கிணற்றினுள்ளே வெடிக்க வைத்து அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திற்குள் இவை வெடிக்க வைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://uthayandaily.com/story/4149.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.