Jump to content

தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: Top News 
[Tuesday 2015-05-26 07:00]
இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.

இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.   

டென்சிகாவின் தந்தையார் தேவதாஸ் (சின்னவன்) சிறந்த உதைபந்தாட்ட வீரர் ஆயினும் விபத்தொன்றின் காரணமாக அவர் விளையாட முடியாதவராகிவிட்டார்.

 

thevathas-densika-250515-seithy-(2).jpg

 

தன் விளையாட்டு கனவை தன் பிள்ளைகள் மூலம் அவர் காணமுனைவதன் அடையாளமே டென்சிகா. ஏழ்மையான குடும்பத்தின் நட்சத்திரமாக இப்பொழுது டென்சிகா சாதித்திருக்கின்றாள். இந்த மாணவியின் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க நிர்வாகம் அதனது வாழ்த்துச் செய்தியில் பின்வரும் வேண்டுகோளை விடுத்து இருக்கின்றது.

"எமது அன்புக்குரிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று உலகெலாம் பரந்திருக்கும் பழைய மாணவர்களே மற்றும் சமுக ஆர்வலர்களே! மாணவி டென்சிகாவை இன்னும் மேலும் சிறந்ததொரு சாதனையாளராக மாற்றவேண்டுமாயின் அவருக்கு உங்களால் முடிந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லோருக்கும் உண்டு. அவருக்கு பயிற்சிக்கும் போட்டிக்குமான விலையுயர்ந்த சப்பாத்துக்கள் துறைக்கான ஆடைகள் போஷாக்கான உணவு என்பன அவசியம் என்பதால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனுசரணைகளை வழங்க வேண்டியது எமது கடமையென்பதையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

thevathas-densika-250515-seithy-(1).jpg

 

எம் மண்ணில் இருக்கும் மாணவர்கள் யுத்த கால வடுக்களை சுமந்து வாழும் நிலையிலும் போசாக்கு இல்லாத நிலையிலும் சாதனைகள் படைத்து வருகின்றார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள்.

எம் மாணவ செல்வங்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியை அனைவருமாக ஒன்றிணைந்து ஆற்றுவோம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132765&category=TopNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.