Jump to content

சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பது குறித்து ஜனாதிபதி – ஆஸி.பிரதமர் கலந்துரையாடல் இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்து


Recommended Posts

சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை தடுப்­பது குறித்து ஜனா­தி­பதி – ஆஸி.பிர­தமர் கலந்­து­ரை­யாடல்

 

இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­களும் கைச்­சாத்து

சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் மற்றும் இரு தரப்பு பாது­காப்பு ஒத்­து­ழைப்­புகள் தொடர் பில் அவுஸ்­தி­ரே­லியா சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்­நாட்டு பிர­த  மர் மெல்கம் டேர்ன்­புல்­லுடன் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லின்­போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது கல்வி, பாது­காப்பு, விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் மருத்­துவ ஆய்வு உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் கூட்­டு­றவை விரி­வு­ப­டுத்த ஜனா­திபதி மற்றும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.  

கென்­ப­ராவில் அமைந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இரு தரப்பு கலந்­து­ரை­யா­டலின் போதே இந்த இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது.  

இரு நாட்டு தலை­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான தனிப்­பட்ட சந்­திப்பைத் தொடர்ந்து இரு­த­ரப்புப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. இப்­பேச்­சு­வார்த்­தையில் இரண்டு தரப்­பு­களில் இருந்தும் அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டனர்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டேர்ன்புல் முன்­னி­லையில் ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான கூட்­டு­றவை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பான இணைந்த பிர­க­ட­னத்தில் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீலியா பிசொப் மற்றும் இலங்கை பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி. சில்வா ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

சிறு­நீ­ரக நோய்த்­த­விர்ப்பு தொடர்­பான கூட்­டு­றவு நிகழ்ச்­சித்­திட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் அவுஸ்­தி­ரே­லிய அணு விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­திற்கும் இலங்­கையின் சிறு­நீ­ரக நோய் தவிர்ப்பு ஜனா­தி­பதி செய­ல­ணிக்­கு­மி­டையே ஒப்­பந்தம் ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

 அவுஸ்­தி­ரே­லிய அணு விஞ்­ஞான, தொழில்­நுட்ப நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி காலா­நிதி ஆதிரன் பெட்சன் மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் சோம­சுந்­தரம் ஸ்கந்­த­குமார் ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர். இலங்கை சுரங்கப் பணி­ய­கத்­திற்கும் அவுஸ்­தி­ரே­லிய மண்­ணியல் ஆய்வு நிலை­யத்­திற்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் அவுஸ்­தி­ரே­லிய நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் ஸ்கந்­த­குமார் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

அவுஸ்­தி­ரே­லிய பிர­த­மரின் செய­லாளர் கலா­நிதி மார்டீன் பார்க்­கின்சன் பிர­தமர் மற்றும் அமைச்­ச­ர­வையின் சிரேஷ்ட ஆலோ­சகர் சிஹன் ஸ்டாமர் வெளி­வி­வ­காரச் செய­லாளர் பிரான்சஸ் அடம்சன் இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஐட்சன் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜஸ்டின் பாஷி மற்றும் பிர­த­மரின் சிரேஷ்ட ஆலோ­சகர் பிலிப்பா கிங் ஆகியோர் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்கு உத்­தி­யோ­க­பூர்வ வரவேற்பு அரச மாளிகையில் நேற்று காலை அளிக்கப்பட்டது. ஜனாதிபதியை ஆளுநர் நாயகம் சேர் பீற்றர் குரொஸ்குரோ வரவேற்றார். ஜனாதிபதி அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு தேசிய கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன் 21 பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-26#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.