Jump to content

' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி?


Recommended Posts

' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?'   -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி?

 
 

சசிகலா

டப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை' என விவரித்த முதல்வர், ' சட்டசபையில் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்' என்றார். அதேநேரம், 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும்' என இரண்டு அணிகளும் மோடியிடம் வலியுறுத்தியுள்ளன. " அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். ' அதுதான் அம்மாவின் விருப்பம்' எனவும் இரண்டு அணிகளின் தலைவர்களிடமும்  எடுத்துக் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் அணியினர், ' அணிகள் இணைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று கூறிக் கொண்டே, அவர்களுடன் மறைமுகத் தொடர்பில் இருக்கிறார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். அமைச்சர்கள் சிலர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கின்றனர். தலைமைக் கழகத்தில் இருந்து சசிகலா பேனரை அப்புறப்படுத்தியதோடு சரி. அதன்பிறகு, தேர்தல் ஆணையத்துக்கான பிரமாண பத்திரத்திலும் சசிகலாவையே முன்னிறுத்துகின்றனர்' என சுட்டிக் காட்டினர். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்ட பிரதமர், எந்தக் கருத்துகளையும் கூறவில்லை. 'பிரதமர் எங்கள் பக்கம்தான்' என்று காட்டிக் கொள்ள இரண்டு அணிகளும் போட்டி போடுகின்றன. நேற்று பிரதமரை சந்தித்த எடப்பாடி பழனிசாமியும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு உள்பட சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட்டார். சந்திப்பு முடிந்து வெளியே வந்தவர், ' மீட்டிங் சக்சஸ்' என அருகில் இருந்த அவரது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். ' பிரதமரிடம் என்ன பேசினார்?' என்பதை வெளியில் சொல்லவில்லை. இதன்பின்னால் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்றார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

எடப்பாடி பழனிசாமிபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த மன்னார்குடி உறவினர் ஒருவரிடம் பேசினோம். " அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் ரிவியூ மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசிய வழக்கறிஞர்கள், ' உச்ச நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட ரிவியூ மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி, நமது மனுவின் மீதான விசாரணை நடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. எனவே, ஜூலை 3ஆம் தேதி மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலே, நாம் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய முடியும்' எனச் சொல்ல, இதற்குப் பதில் அளித்த சசிகலா, ' ரிவியூ மனு மீது தண்டனை குறைப்பு நடக்குமா? இதே தண்டனை நீடிக்குமா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வெளியில் வர வேண்டும். கட்சி அழிந்துவிடக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது' எனக் கூறியிருக்கிறார். 

இதன்பிறகு, தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர் ஒருவரிடம், ' மத்திய அரசின் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு சென்றிருக்கிறோம். ' எந்தவிதத்தில் நாங்கள் எதிரியாகப் பார்க்கப்படுகிறோம். உங்களுக்கு ஜெயலலிதா மீதிருந்த கோபமே குறைந்துவிட்டது. உங்களுக்கு எதிராக நான் எந்த இடத்திலும் பேசியதில்லை. செயல்பட்டதில்லை. மத்திய அரசுக்கு எதிராக நான் செய்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள். காலம் முழுக்க சிறையிலேயே இருந்துவிடுகிறேன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசியதெல்லாம், நான் பேசியதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஜெயலலிதா இறந்த பிறகு, ' போயஸ் கார்டனுக்குள் என் கணவர் வரலாமா?' என உறவினர்கள் கேட்டனர். ' அக்கா இருந்தபோது என்ன நிலை இருந்ததோ, அப்படியே நீடிக்கட்டும். அவர் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டேன். அப்படி இருக்க நான், உங்களுக்கு எதிராக என்ன திட்டத்தைத் தீட்டி விட முடியும்?' என பிரதமர் கவனத்துக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன். என்னுடைய கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார் என நம்புகிறேன்' என விவரித்திருக்கிறார். அவர் யார் மூலம் பா.ஜ.கவுக்குத் தூது அனுப்பினார் என்ற தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ரிவியூ மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், சசிகலா மீதான பா.ஜ.கவின் கோபம் குறைந்துவிட்டது என அர்த்தம்" என்றார் விரிவாக. 

 

' எடப்பாடி பழனிசாமியா? பன்னீர்செல்வமா?' என்ற யுத்தம் தீவிரமடையும் சூழலில், ' நான்கு மாதங்களுக்குள் அரசியல் சூழல்கள் தனக்குச் சாதகமாக மாறும். சிறையில் இருந்து வரும்போது, என்னை வரவேற்கக் கூடிய முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி இருப்பார்' என நம்பிக்கையோடு பேசுகிறார் சசிகலா. பன்னீர்செல்வத்தை அரசியலில் இருந்து ஓரம்கட்டும் வேலைகளில் மன்னார்குடி உறவுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/90356-was-modi-convinced-with-sasikalas-demands.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.