Jump to content

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!


Recommended Posts

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

 

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://thuliyam.com/?p=68745

Link to comment
Share on other sites

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

முன்பு சிறிமாவோ ஆட்சிக் காலத்திலை கிந்தியாவுக்கு மின்வலுவைக் கொடுக்கப:போறனென்று ஒரு கதைஉலாவினது. பிறகு இல்லாமற்போய்விட்டது. ஒருவேளை அதனுடைய தொடர்ச்சியோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள புத்தர் சிலைகளின்...முதுகுகளில் , விகாரைகளின் முதுகுகளில்... சோலர் பனல் பொருத்துவதும் ஒரு நல்ல ஐடியா!

கொஞ்சம் பிரயோசனமாகவாவது இருக்கும்!

பாக்க வடிவாயும் இருக்கும்!

அது சரி....இவர் எப்படி வெளியால வாறதாம்?

 

Temple-Beth-El.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for long jump technique imageslong jump

1 hour ago, புங்கையூரன் said:

 

அது சரி....இவர் எப்படி வெளியால வாறதாம்?

 

Temple-Beth-El.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

கொழும்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட் கள் வடக்கு கிழக்கில் வரும் போது பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே  பலன் பெறுவோம்  யாரு யாரு என்று கேட்டு  கொண்டு இருந்தால்  ?? அரசாங்கமாவது அபிவிருத்தி செய்யட்டும் இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை   ( ஒரு சிலர்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைநீர் விரயம் அற்ற இப்படியானதுகளில் கவனம் செலுத்துவது நல்லது தானே..

Link to comment
Share on other sites

1 hour ago, தனி ஒருவன் said:

பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே  பலன் பெறுவோம்

Bildergebnis für இளநீர்

இளநீர் கிடைக்காவிட்டாலும் கோம்பையாவது கிடைக்குமல்லவா...!!

 

1 hour ago, தனி ஒருவன் said:

இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை

1958ல் இருந்து தமிழரின் முதலீடுகளைக் கொள்ளையடித்த யாரையுமே இன்றுவரை கைதுசெய்து தண்டித்ததில்லை. இந்நிலையில், எவ்வாறு .....??? 

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. :shocked: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

Bildergebnis für இளநீர்

இளநீர் கிடைக்காவிட்டாலும் கோம்பையாவது கிடைக்குமல்லவா...!!

 

1958ல் இருந்து தமிழரின் முதலீடுகளைக் கொள்ளையடித்த யாரையுமே இன்றுவரை கைதுசெய்து தண்டித்ததில்லை. இந்நிலையில், எவ்வாறு .....??? 

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. :shocked: 

1958 நடந்தது உலகிக்கு தெரிய வாய்ப்பில்லை தற்போது வீட்டில் ஒரு கறி ஆக்கினாலும் வெளி உலகிற்கு தெரிந்து விடுகிறது அந்த நாட் கள் வேறு இன்று இருக்கும் நாட் கள் வேறு  தொழிநுட்ப வளர்ச்சி  அதிகம் நமது வீட்டை கைபேசியிலே காண் காணிக்கும் போது ??

அன்று கொள்ளையடிக்கப்பதிலிருந்து  கன பேர் இன்னுமா மீள வில்லை அமெரிக்க அணுகுண்டு  போட்ட நாடே இன்று மிளிர்கிறது ஆனால் நாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் இருந்து நாவற்குழிக்கு வயர் போடலாமில்ல. போட்டாப் போச்சு. "நாவற்குழிய"  சிங்கள மக்களின் பூர்வீக பூமியாகிடும். "பூநகரிய".. சிங்கள மக்களின் தொன்றுதொட்ட தொல்பொருள் பூமி ஆகிடும். :rolleyes:

தமிழன் எல்லாத்தையும்.. பறிகொடுத்திட்டு.. சகோதரய.. என்று கொட்டாவி விட்டுக்க வேண்டியான்.tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.