Jump to content

''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது


Recommended Posts

''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ;  மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது

 

 

என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட  3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது.

fsfa.jpg

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

18762392_10207385698915407_169086883_n.j

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரியவந்தள்ளது.

18685381_10207385698835405_1351777039_n.

மாணவி தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

18741415_10207385699035410_1038878113_n.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.

சம்பவம் பற்றிமேலும்தெரியவருவதாவது,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

18679064_10207385699355418_519123820_n.j

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பொதியொன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நோக்கி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் குறித்த மாணவி மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் முன் நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் போது மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மாணவியின் உடலம் அதே புகை1478-2-ffccbc93f50f40e0366d6728f380ee56.யிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர் தன்னுடன் எடுத்துவந்த பொதியும் சோதனை செய்யப்பட்டது.

 

இதன் போது குறித்த மாணவி மனதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்தது.

 

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஏன் அம்மா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் , அன்பு, பாசம் என்பவற்றை நான் இழந்து நிற்கிறேன். உங்களால் தான் அதை நான் இழந்து தனியாக தவிக்கின்றேன். அம்மா உங்களுக்குத் தெரியுமா நாள் அம்மா அம்மா என்று பாசமுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை.

எனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு என்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைக்கிறீர்கள். தொடர்ந்தும் எனக்கு துரோகம் செய்ய நினைக்கிறீர்கள் என 3 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

1478-6-25c5893d63f0c95a718d84463fca2b0d.

இதேவேளை, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் நான் இறப்பதற்கு காரணம் என்று சொன்னால் எனது குடும்பமே காரணம் எனவும் அக்கடிதத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

 

தற்போது மாணவியின் சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் இல்லை. 

கோபம் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்து நன்றாக உள்ளது, தலையெழுத்துதான் தவறி விட்டது....!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

2 hours ago, Nathamuni said:

அனுதாபம் இல்லை. 

கோபம் மட்டுமே!

தல.. அவனவனுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும், திருகுவலியும். வெளிநாட்டில் என்றால் பரவாயில்லை.. அரசாங்கத்தின் தயவில் ஆவது காலத்தை ஓட்டலாம். இந்த சின்னப்பிள்ளைக்கு ஆதரவு இல்லாமல் போனது அவளின் குற்றமா? பெற்றவர்கள் மற்றும் சமூகத்தின் மேல்தான் பெரிய அளவு குற்றம் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இசைக்கலைஞன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்..!

தல.. அவனவனுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும், திருகுவலியும். வெளிநாட்டில் என்றால் பரவாயில்லை.. அரசாங்கத்தின் தயவில் ஆவது காலத்தை ஓட்டலாம். இந்த சின்னப்பிள்ளைக்கு ஆதரவு இல்லாமல் போனது அவளின் குற்றமா? பெற்றவர்கள் மற்றும் சமூகத்தின் மேல்தான் பெரிய அளவு குற்றம் இருக்கு.

அம்மா திட்டுறத்துக்கு இது தான் தீர்வு என்றால்....

நானும் இல்லையை.... அட நீரும் இல்லையே...

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

அம்மா திட்டுறத்துக்கு இது தான் தீர்வு என்றால்....

நானும் இல்லையை.... அட நீரும் இல்லையே...

அட.. முழுப் பிரச்சினையும் என்ன எண்டு தெரியேல்ல.. எங்கட "பழைய" சமூக கட்டமைப்பில் அம்மா அப்பாவோடு பிணக்கு என்றால் மாமா, மாமி அல்லது சித்தப்பா, பெரியப்பாமார் தலையிட்டு தீர்த்து வைப்பினம். இந்த கட்டமைப்பு முறிந்தால் சிறு பிள்ளைகளுக்குத்தான் கெடுதல். ஒன்றில் சமூகம் பாதுகாப்பு தரவேண்டும்; இல்லாவிட்டால் அரசாங்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம் ஊரில் இப்போது இரண்டும் இல்லை என்பதுதான் நிலை. அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா.. tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கையெழுத்து நன்றாக உள்ளது, தலையெழுத்துதான் தவறி விட்டது....!

நானும் உண்மையில் கடிதத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போதே நீங்கள் எழுதியதைத்தான் நினைத்தேன்.
குடும்பத்துக்குள் என்ன பிரச்சனையோ யாருக்குத்தெரியும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

அட.. முழுப் பிரச்சினையும் என்ன அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா.. tw_anguished:

நான் கடிதத்தை வாசிக்கவில்லை.

அம்மா திட்டினால்.... அவருக்கு கொடுக்கும் மரணதண்டனை தான் தற்கொலை.

இவ்வளவு எழுதுற அளவு படிப்பு வழங்கப்பட்டுள்ளதே. ஓரளவு சிந்திக்க முடியாதா?

அதுவே என் கோபம்... இல்லை... ஆதங்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மா வேண்டுமென்றே தெரிந்தே அந்தப் பிள்ளையை தண்டித்து இருந்தால்/கஸ்டப்படுத்தி இருந்தால் தொலைஞ்சது சனியன் என்டு பேசாமல் இருப்பார். அவரை அறியாமல் பிழை விட்டு இருந்தால் அவரது வாழ்க்கை முழுக்க இதற்காக வருந்துவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவான கையெழுத்து!

நானும் இதைத் தான் நினைத்தேன்!

தலையெழுத்தை நான் நம்புவதில்லை!

இந்தப் பிள்ளையும் தலையெழுத்தை நம்பின படியால் தான், இந்த முடிவுக்கு வந்திருக்கு!

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கையாளும் தன்மை இப்போ பெற்றோரிடத்திலும் ஆசிரியர்களிடம் குறைந்து வருகிறது தாயகத்தைப் பொறுத்த வரை.  இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி அதிகரிப்பதோடு.. பாடசாலைகள் மாணவர்களின் மன உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணரும்.. வகையில் மன நல ஆலோசகர்களை கொண்டிருக்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

எல்லாப் பாடசாலைகளிலும் ஒரு மனநல ஆலோசனையாளரும்.. ஒரு வைத்திய தாதியும் இருக்கும் பட்சத்தில்.. இப்படியான மாணவ.. மாணவியர் வெளிப்படையாக தங்கள் பிரச்சனைகளைக் கூற அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டிருப்பின்.. இந்தப் பிள்ளை இந்த முடிவுக்குப் போயிருக்காது.

இதே முடிவு.. எவ்வளவு முட்டாள் தனமானது என்பதை அவள் சிந்திப்பதற்கு இடமளிக்காத குடும்ப.. சமூக.. பாடசாலைச் சூழல்களே இங்கு கண்டிக்கப்பட வேண்டியவை. 

இதே பிள்ளை.. அவனின் 21 வயதில்.. இப்படி ஒரு முடிவுக்கு போயிருக்க வாய்ப்பிருக்குமா என்று கேட்டால்.. குறைவு என்றே அர்த்தமாகும்.

பிள்ளைகளோடு.. நண்பர்களாக.. பெற்றோர் பழகும் போது.. இன்னும் பெற்றோர் - பிள்ளைகள் பிணைப்பும் இடைவெளியும் குறையும், மாறாக.. தாம் தாம் நினைத்ததை இரு தரப்பும் விட்டுக்கொடுப்புக்கு இடமின்றி.. செய்யப் போனால்.. நிலைமை இப்படித்தான் அமையும். தவிர்ப்பது கடினமாகும்.

எமது குடும்ப.. சமூக.. பாடசாலைச் சூழல்கள் நவீன காலத்திற்கு ஏற்ப பிள்ளைகளோடு உறவாட மாற்றி அமைக்கப்பட்டால் இன்றி.. இப்படியான சம்பவங்கள் பெருகுமே தவிர குறைய வாய்ப்பில்லை எனலாம். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

அந்தக் குழந்தையின் விழிகளில் இருக்கும் கூர்மை இதுவோர் அநியாய சாவு என்பதை உறுதிப்படுத்துகிறது!

பெற்றோர்கள் கண்டிப்பதில் தவறில்லை! கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கண்டிப்பின் பின்னரும் சிறு இடைவெளியில் பலமடங்கு பாசத்தை பொழிய வேண்டும்! பிள்ளைகள் மீது உண்மையான அக்கறையை, அன்பை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்! இதில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தவறிழைக்கிறார்கள். இதன் பின்னணியில் எமது கல்வி, மத, சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இருப்பதாக கருதுகிறேன்!

இவற்றை நிவர்த்தி செய்ய புத்திஜீவிகள் என்பவர்கள் முன்வரவேண்டும்! பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உன்மையில் தாய்ப்பாசத்துக்கு ஏங்கித்தான் இறந்திருப்பாளேயானால் ஆழ்ந்த அனுதாபங்கள்   இன்னும் சில பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

அந்தக் குழந்தையின் விழிகளில் இருக்கும் கூர்மை இதுவோர் அநியாய சாவு என்பதை உறுதிப்படுத்துகிறது!

பெற்றோர்கள் கண்டிப்பதில் தவறில்லை! கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கண்டிப்பின் பின்னரும் சிறு இடைவெளியில் பலமடங்கு பாசத்தை பொழிய வேண்டும்! பிள்ளைகள் மீது உண்மையான அக்கறையை, அன்பை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்! இதில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தவறிழைக்கிறார்கள். இதன் பின்னணியில் எமது கல்வி, மத, சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இருப்பதாக கருதுகிறேன்!

இவற்றை நிவர்த்தி செய்ய புத்திஜீவிகள் என்பவர்கள் முன்வரவேண்டும்! பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு!  

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.