Jump to content

' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!' -விவேக்கிடம் கதறிய இளவரசி


Recommended Posts

' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!'  -விவேக்கிடம் கதறிய இளவரசி 

 

சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ' சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்' என்கின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். 

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை, தொடக்க காலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர். குற்ற வழக்கில் சிறைபட்டுள்ள ஒருவரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது அரசியல்ரீதியாக சர்ச்சையை எழுப்பியதால், அவர்கள் அமைதியாகிவிட்டனர். தற்போது எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் மற்றும் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டுமே அவரை அடிக்கடி சென்று சந்திக்கின்றனர். கடந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' சிறையில் சென்று சசிகலாவை சந்திப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அவர்கள் ஏன் சந்திக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது' எனத் தெளிவுபடுத்தினார். நேற்று பேட்டியளித்த நடிகர் கருணாஸும், ' சிறையில் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறார் சசிகலா. சோதனையான காலகட்டத்தில்தான் உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியும். தொண்டர்களிடமிருந்து வரும் கடிதங்களால் உற்சாகமாக இருக்கிறார். ' உயிரைக் கொடுத்தாவது கட்சியைக் காப்பாற்றுவேன்' என என்னிடம் கூறினார் சசிகலா' என்றார். 

" சிறை சந்திப்புகளுக்குப் பிறகு அ.தி.மு.க நிர்வாகிகள் இவ்வாறெல்லாம் பேட்டி அளித்தாலும், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார் சசிகலா. '15 நாள்களுக்கு ஒருமுறைதான் அவரைச் சந்திக்க முடியும். அதுவும் ஆறு பேர்தான் வர வேண்டும்' என்றெல்லாம் சிறை நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் உதவியால் அவருக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன. ரிவியூ மனு தொடர்பாகத்தான் அடிக்கடி சட்ட நிபுணர்களிடம் விவாதிக்கிறார். சசிகலாவைவிட இளவரசியின் நிலைதான் மிக மோசமாக இருக்கிறது" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர், 

இளவரசி" அ.தி.மு.க நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும் கட்சி நிர்வாகம் தொடர்பாகவும் ஆட்சி தொடர்பாகவும் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசுகின்றனர். இளவரசி மற்றும் சுதாகரனைப் பார்க்க அவர்களது உறவினர்கள் மட்டுமே வருகின்றனர். சிறையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இளவரசிக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததில்லை. சிறை சென்றதிலிருந்து இரண்டு முறை மயங்கி விழுந்துவிட்டார். அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை விவேக் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார். 'அவருக்கு, சிறைக்கு வெளியே மருத்துவம் பார்க்க வேண்டும்' என விவேக் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, இளைய மகள் ஷகிலா ஆகியோர் சந்திக்கச் சென்றனர். கிருஷ்ணபிரியாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஷகிலாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார் இளவரசி. அவர்களிடம், ' சாமிகிட்ட கும்பிட்டா பாட்டி வெளிய வந்துவிடுவேன்' எனக் கலங்கியிருக்கிறார்.

விவேக்தொடர்ந்து பேசியவர், ' ஜெயில்ல இருந்து வரும்போது நான் பொணமாகத்தான் வருவேன். இங்க ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு. நான் என்ன தப்பு பண்ணினேன்? எவ்வளவு சொத்து வாங்கிக் குவிச்சேன். இத்தனை வருஷ காலம், அவங்களுக்கு சமைச்சுப் போட்டதுக்கும் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டதுக்கும்தான் இப்ப நான் அனுபவிச்சுட்டிருக்கேன். என்ன குற்றச்சாட்டின்கீழ் என்னைக் கைது பண்ணியிருக்காங்கன்னுகூட எனக்குத் தெரியாது. உடம்பு முன்ன மாதிரி சரியில்லை. எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியலை' என அழுதவரிடம், ' கவலைப்படாதீங்க. இப்பவே போய் பிரே பண்றேன்' என கிருஷ்ணபிரியா மகன் ஆறுதல் கூறினார். இதேபோல், விவேக்கிடமும் கூறி அழுதிருக்கிறார் இளவரசி. இவர்கள் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, இளவரசியின் அண்ணன் கண்ணதாசன் சந்திக்க வந்திருந்தார். அவரிடமும், ' எப்படியாவது வெளிய வரனும். என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கூறியிருக்கிறார். அவரை யாராலும் தேற்ற முடியவில்லை" என்றார் விரிவாக. 

 

"ஆட்சி நிர்வாகத்துக்குள் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும் சசிகலாவின் கவனத்துக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். எந்த ஆலோசனைகளையும் அவர் தெரிவிப்பதில்லை. ' சீக்கிரம் வெளியே வந்துவிடுவோம்' என்று மட்டும் உறுதியாக நம்புகிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்களின் அதிருப்திகளை எல்லாம் கொங்கு கேபினட் சமாளித்துவிடும்' எனவும் உறுதியாக இருக்கிறார். ரிவியூ மனு மீதான தீர்ப்பு தள்ளிப்போவதைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறார். ' குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு விடுதலை ஆக வாய்ப்பு இருக்கிறது' எனவும் சிலர் உறுதிமொழி கொடுத்துள்ளனர். 'மத்திய அரசுக்கு எதிராக தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என குடும்ப உறவுகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கிறார். நேற்று திவாகரன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார் ஜெயானந்த். அதையும் சில நாள்களுக்குத் தள்ளி வைக்குமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தீவிரமாக ஆலோசித்தே முடிவு செய்கிறார் சசிகலா" என்றார் விரிவாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/90210-i-will-come-out-of-prison-only-as-a-dead-body---ilavarasi-tells-vivek.html?artfrm=news_most_read

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.