Jump to content

இந்திய எதிர்ப்பு பயங்கரமானது


Recommended Posts

இந்திய எதிர்ப்பு பயங்கரமானது
 

தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அமைச்சராக இருக்கும்போது, வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த போது, ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து மக்கள் மத்தியில் நகைப்புக்கு ஆளானார்.  image_bace835263.jpg 

அந்தப் ‘போராட்டம்’ முடிந்த கையோடு, ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவத்துக்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டு, மற்றொரு முறை நகைப்புக்கு ஆளானார்.  

வீரவன்சவின் துரதிர்ஷ்டம் எவ்வளவு என்றால், அவரது கோரிக்கையை ஏற்க, அவரது அரசியல் அணியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவிலோ அல்லது அவரது அரசியல் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிலோ எவருமே இருக்கவில்லை.  

 நாட்டில், எங்குமே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எவருமே கறுப்புக் கொடி காட்டவில்லை. குறைந்த பட்சம் வீரவன்சவின் வீட்டிலாவது கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்ததாகத் தெரியவில்லை.  

மறுபுறத்தில், அரசாங்கம் மிகச் சாதுரியமாக அவரது கோரிக்கைக்கு வேறு அர்த்தம் கற்பித்து, அவரைக் கஷ்டத்தில் தள்ளிவிட்டது. பௌத்தர்களின் புனித நாளான வெசாக் தினத்தில், கறுப்புக் கொடி ஏற்றுமாறு கூறி வீரவன்ச, வெசாக் தினத்தை அவமதித்ததாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறினர். அதனை மறுக்க வீரவன்சவாவது முன்வரவில்லை.  
காலிமுகத் திடலில், மிகப் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்ட, பொது எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வீரவன்ச, இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மஹிந்த ராஜபக்ஷவும் அந்த மேடையில் இருந்துள்ளார்.  

அவரது கோரிக்கையை ஆதரித்து, அவரது அணியில் எவரும் பேசாவிட்டாலும் அந்த அணியில் சிலர் இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்ததை எதிர்த்து, பின்னர் கருத்து வெளியிட்டு இருந்தனர்.   

இனவாதக் கருத்துகளை வெளியிடுவதில் வீரவன்சவுடன் எப்போதும் போட்டியிடும், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில அவர்களில் ஒருவர். இந்தியப் பிரதமர், நாட்டில் ஒரு சமூகத்தை மட்டும் விசேடமாகச் சந்தித்ததன் மூலம், அவர் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.  

ஐ.நா மனித உரிமைப் பேரவையில், புலம்பெயர் தமிழர்களின் வாதங்களை முறியடிக்கவென, கடந்த மார்ச் மாதம், ஜெனீவா சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியும் முன்னாள் 
எம்.பியுமான சரத் வீரசேகர, வீரவன்சவின் கருத்தை ஆதரித்த மற்றொருவராவார். அவரும் மோடி, மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்ததை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தார். 

ஆனால், அவர்களது கருத்துகள் அவர்களது தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் செயலொன்றால் மூடி மறைக்கப்பட்டது. அதாவது, அவர்கள் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும் போது, அவர்களது தலைவர், மோடியைச் சந்தித்து, 45 நிமிடங்கள் கலந்துரையாடியிருந்தார். அவரோடு அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும் மோடியைச் சந்தித்திருந்தார்.  

மஹிந்த, மோடியைச் சந்திக்க முன்னர், மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் எனக் கூறி, நகைப்புக்குள்ளான வீரவன்சவை காப்பாற்ற முயற்சி செய்தார்.   

முன்னர், ஊடகவியலாளர்களைக் கடத்தியும் தாக்கியும் இம்சித்தும் வந்த ஆட்சியின் தலைவரான மஹிந்த, தமது தேர்தல் தோல்வியின் பின்னர், நாளாந்தம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து வருவது தெரிந்ததே. அவ்வாறானதோர் சந்திப்பின் போது, வீரவசன்சவின் கறுப்புக் கொடி கதையைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “அவர் அவ்வாறு கூறவில்லை” என மஹிந்த கூறினார்.  

தமது சகாவைக் காப்பாற்ற, அவர் அவ்வாறு கூறினாலும், நாட்டில் இவ்வருடம் நடைபெற்ற மிகப் பெரும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் அதற்கு சாட்சியாளர்களாக இருக்கின்றனர். 

மஹிந்த, மோடி சந்திப்பில் உள்ள மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், மஹிந்த ஆதரவாளர்கள், நோர்வூட் நகரில் வைத்து, மோடியின் வருகைக்கும் அவர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மத்தியில் ஆற்றிய உரைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, மஹிந்த தாமாகவே கேட்டு, அதே மோடியைச் சந்தித்து இருக்கிறார் என்பதாகும். இதைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.  

ஆயினும், இந்தியப் பிரதமரின் நோர்வூட் விஜயத்துக்கான எதிர்ப்பு, முற்றிலும் ஆதாரமற்ற, அடிப்படையற்ற எதிர்ப்பல்ல. இந்திய வம்சாவளி, வழி வந்தவர்களாக இருந்தாலும், மலையகத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் மக்கள், ஏற்கெனவே இந்நாட்டுப் பூரண பிரஜைகளாக மாறிவிட்டனர்.   

அவ்வாறிருக்க, இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைச் சந்திப்பதானது, பிரிவு மனப்பான்மையை ஊக்குவிப்பதாகும் என்பதே அவர்களது வாதமாகும்.  

1988 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்த நாட்டில் நாடற்றவர்கள் என்று ஒரு சாரார் வாழ்ந்தனர். இந்திய வம்சாவளியில் வந்து, இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ பிரஜா உரிமை பெறாதவர்களே அக்காலத்தில் நாடற்றவர்கள் என்றழைக்கப்பட்டனர்.   

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக 1986 ஆம் ஆண்டிலும் 1988 ஆம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம், அவர்களுக்கு பிரஜா உரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டன. அதன் மூலம் அவர்கள் பூரண இலங்கைப் பிரஜைகளாகி விட்டனர்.  

எனவே, மோடி எதிர்ப்பாளர்களின் வாதத்தை, மலையகத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில், அவர்களே இதற்கு முன்னர், மலையக மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் கருத முடியாது எனக் கூறியுள்ளனர்.   

இந்த அடிப்படையிலேயே, தமது சமூகத்தைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் குறிப்பிட வேண்டாம் என, தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், கடந்த வருடம் சகலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.  

ஆனால், மலையக மக்கள், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அம்மக்கள் மத்தியில் உரையாற்ற நோர்வூட் நகருக்குச் சென்று, அவர்களுக்கு அவர்களது இந்தியத்தொடர்பை இந்தியப் பிரதமர் நினைவூட்டிய போது, அவரை வரவேற்பவர்களில் கணேசன் முன்னணியில் இருந்தார்.  

ஆனால், அந்த நிலையில் கம்மன்பில போன்ற இனவாதிகள், மலையக மக்கள் பூரண இலங்கைப் பிரஜைகள் என்ற நிலைப்பாட்டில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இது ஒரு விசித்திரமான நிலைமையாகும்.  

மோடியின் மலையக விஜயத்தை, கம்மன்பில போன்றோர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதைப் பாவித்து, இந்திய எதிர்ப்பை தூண்ட முயற்சித்த போதிலும், அவர் இலங்கையில், மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை. 2015 ஆம் ஆண்டு, வட பகுதிக்கு விஜயம் செய்தார். அப்போது அதற்கு கம்மன்பிலயோ, சரத் வீரசேகரவோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  image_7dfe49fb6a.jpg

இம்முறை மோடிக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு, அரசியல் நோக்கம் கொண்டதாகும். சர்வதேச ரீதியில் மஹிந்தவுக்கு மட்டுமே வரவேற்பும் மதிப்பும் கிடைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்.   

ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவம் மஹிந்தவின் காலத்திலன்றி, மைத்திரியின் காலத்தில் இலங்கையில் நடைபெறுவது, மஹிந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவித பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது போலும். எனவேதான், அவர்கள் கடந்தமுறை மோடியின் இலங்கை விஜயத்துக்கு இல்லாத எதிர்ப்பை இம் முறை தெரிவித்து இருந்தார்கள்.  

மோடி, கடந்த முறை வட பகுதிக்கு விஜயம் செய்தமையையும் இம்முறை மலையகத்துக்கு விஜயம் செய்தமையையும் சரியாகப் புரிந்து கொண்டால், மஹிந்த ஆதரவாளர்கள், இவ்வாறு இம்முறை கறுப்புக் கொடி காட்ட முற்பட்டு இருக்க மாட்டார்கள்.   

வட பகுதித் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் சந்திப்பதன் மூலம், மோடி, அம்மக்கள் மீது பரிவு கொண்டவர் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இது அவரது அரசியலாகும். வடபகுதி மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பரிவைக் காட்டி, தமிழக மக்களின் மனதை வெல்லவே மோடி முயற்சிக்கிறார்.   

நாட்டுக்குப் பாதகமான சில ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவே மோடி இம்முறை வருகிறார் என மஹிந்தவும் அவரது அணியினரும் கூறிய போது, மோடியின் இம்முறை இலங்கை விஜயத்தில், எவ்வித அரசியலும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.  

 ஆயினும், மோடி தமது விஜயத்தின் நோக்கங்களில் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முயற்சிக்கவில்லை. அவர் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தின பிரதான நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் நகருக்குச் சென்று மலையக மக்கள் முன் பேசும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் விஜயமே அரசியல் தான்.  

இவை எல்லாம் மோடி எதிர்ப்பாளர்களுக்குச் சாதகமான விடயங்களாக இருந்த போதிலும் அவர்கள் அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும்போது, மோடியை மஹிந்த, சந்தித்தமையானது அந்த எதிர்ப்பாளர்களின் முகத்தில் அறைந்ததற்குச் சமமாகும்.   

குறிப்பாக, அது மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட முற்பட்ட மஹிந்தவின், மிக நெருங்கிய சகாவான வீரவன்சவைப் பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்ட சம்பவமொன்றாகும்.  

மஹிந்த அணியின் மற்றொரு தலைவரும் மஹிந்த, மோடி சந்திப்பை வைத்து, மோடி எதிர்ப்பாளர்களை மேலும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார். பொது எதிரணியின் முன்னணி உறுப்பினரும் அவர்களது உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான பொதுஜன சுதந்திர முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மஹிந்த - மோடி சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அதன் விவரங்களை வெளியிட முடியாது” என்றார்.   
தமது ஆதரவாளர்கள் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதிச் செயற்படுவதாகக் கூறி, மோடியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, மஹிந்த அதே மோடியோடு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியாத விடயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.   

இலங்கைக்கு வந்த மோடி, அரசாங்கத்தின் தலைவர்களோடு இது போன்ற, வெளியில் கூற முடியாத விடயங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், மஹிந்த அணியினர் அதனை எவ்வாறு வர்ணித்து இருப்பார்கள் என்று ஊகித்துப் பார்க்க வேண்டும்.  

 அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டை இந்தியாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவே, அப்போது அவர்கள் கூறியிருப்பார்கள்.  

இந்தச் சந்திப்பின் போது,இந்தியாவுக்கு வருமாறு மஹிந்தவுக்கு, மோடி அழைப்பு விடுத்தும் இருக்கிறார். மஹிந்த, அதனை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். அவ்வாறாயின், மஹிந்த அணியில் சிலர் காட்டும் இந்த, இந்திய எதிர்ப்பின் அர்த்தம் என்ன?  

மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் இந்திய எதிர்ப்பைத் தூண்டி, அரசியல் இலாபம் தேட முற்பட்ட போதிலும், இலங்கை, இந்திய உறவில் பிராந்திய, பூகோள அரசியல் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும்.   

அதனை 2010 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரபல இந்திய ஊடகவியலாளர்  வி.கே. சஷிகுமாருக்கு வழங்கிய பேட்டியொன்றின் மூலம் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும்.  

“இந்தியாவுக்கு மட்டுமே எம்மீது இராணுவ ரீதியாகச் செல்வாக்குச் செலுத்த முடியும். இந்தியா என்பது, எமக்கு அருகில் உள்ள மிகப் பெரும் சக்தியொன்றாகும். அத்தோடு, இலங்கையில் நடப்பவற்றைப் பற்றி அக்கறையுடன் இருக்கும் தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கு அருகில் நாம் வாழ்கிறோம் என்ற காரணத்தையும் எடுத்துக் கொண்டால், எமது நிலைமை மிகவும் சிக்கலானதாகும்.

ஏனைய நாடுகள் எம் மீது பொருளாதார தடைகளைத் தான் விதிக்கலாம். ஆனால், இந்தியா எம் மீது இராணுவ ரீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நாடாகும் என்பதை நாம் அறிந்து தான் இருக்கிறோம்’ எனக் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.   

தமது வாதத்தை நிரூபிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு பிரிகேடியர் கொப்பேகடுவவின் தலைமையில், இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டை, புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொள்ள முயற்சித்த போது, இந்தியா ‘பூமாலை நடவடிக்கை’ என்ற பெயரில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, அதனை முறியடித்ததாகவும் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறினார்.

எனினும், இலங்கை அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இலங்கை மக்கள் மத்தியில், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய எதிர்ப்பை அடிக்கடி பாவித்து வருகிறார்கள்.  

இந்தியா பல நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்புகளால் ஆரம்பத்தில் அநுராதபுரத்தில் இருந்த இலங்கையில் தலைநகரம் யாப்பஹூவ, தம்பதெனிய, குருநாகல், கம்பளை மற்றும் கண்டி எனப் படிப்படியாகத் தென்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.   

இவற்றை விவரிக்கும் சிங்களப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாறானது இந்திய எதிர்ப்பை, சிறுவர்கள் மனதில் ஊட்டும் வரலாறாகவே இருக்கிறது.  எனவேதான், அரசியல்வாதிகள் அடிக்கடி மக்கள் மனதில் உள்ள அந்த இந்திய எதிர்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முனைகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி, தமது இரண்டு கிளர்ச்சிகளின் போதும் இந்திய எதிர்ப்பை அரசியலாக்கியிருந்தது.   

சிலவேளைகளில், இந்த இந்திய எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பாக மாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்னர், சில சிங்களப் பத்திரிகைகள், இந்தியா, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, கடும் இந்திய எதிர்ப்பை வளர்த்து வந்தன.

  அது, தமிழர் எதிர்ப்பாக மாறி இருந்த நிலையிலேயே, புலிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் வைத்து, 13 இராணுவ வீரர்களைக் கொன்றனர்.

ஏற்கெனவே, தமிழர் எதிர்ப்பு பரவியிருந்த நிலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கு எதிரான சிங்கள மக்களின் கொந்தளிப்புத் தான் பெரும் இனக் கலவரமாக வெடித்தது.  எனவே, வீரவன்ச போன்றோர்களின் இந்திய எதிர்ப்பானது சந்தர்ப்பவாதமாக இருந்த போதிலும் பயங்கரமானது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-எதிர்ப்பு-பயங்கரமானது/91-197231

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.