Jump to content

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்


Recommended Posts

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்
 

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர், பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோயில்-உற்சவத்தில்-’தனிஈழ’-வரைபடம்/71-197246

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:
கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்
 

 புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர்,

உண்மையில் இலங்கையில் நல்லாட்சிதான் நடக்கிறது. நம்பலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கிளிநொச்சியில் சிங்கள கொடி கட்டுறான் போலீஸ் பார்த்துக்கொண்டு இருக்க “தனி ஈழம்” வரை படம் வைத்தால் குற்றம் என்கின்றானுக, ஒவ்வொரு தமிழனின் உள் மனதில் ஆழமாக பதிந்த “தனி ஈழம்” படத்தை நீக்க முடியாது என்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள் ஆட்ச்சியாளர்கள்.

Link to comment
Share on other sites

திரு­நெல்­வேலி காளி அம்­மன் ஆலயத்தில் தமி­ழீழ அலங்காரம்

I
திரு­நெல்­வேலி காளி அம்­மன் ஆலயத்தில் தமி­ழீழ அலங்காரம்
 

யாழ்ப்­பா­ணம், திரு­நெல்­வேலி சிறி காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­வி­ழா­வில் தமி­ழீ­ழத்தை சித்தி­ரிக்­கும் வகை­யில் காளி அம்­ம­னுக்கு அலங்­க­ரிக்­கப்­பட்­டமை தொட­ர்பில் ஆலய நிர்­வா­கத்தி­னர் மற்­றும் அர்ச்­ச­கர் புல­னாய்­வுப்­பி­ரி ­வி­ன­ரின் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

திரு­நெல்­வேலி சிறி காளி அம்­மன் ஆலய வரு­டாந்த அலங்­கா­ரத் திரு­விழா நடை­பெற்று வரும் நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற 3ஆம் நாள் திரு­வி­ழா­வின் போது காளி அம்­மன் புலி வாக­னத்­தில் தமி­ழீ­ழத்தை சித்­த­ரிக்­கும் வகை­யில் அலங்­க­ரிக்­கப்­பட்டு அடி­ய­வர்­க­ளுக்கு காட்­சி­ய­ளித்­தார்.

அம்­ம­னின் திரு­வு­ரு­வக் காட்சி ஒளிப்­ப­டம் ஊட­கங்­க­ளில் வெளி­யா­கி­யது.இந்த நிலை­யில் ஆலய சூழ­லுக்கு காலை­யி­லேயே சென்ற புல­னாய்­வுப் பிரி­வி­னர் அங்கு ஆலய நிர்­வாக சபை­யி­னர் மற்­றும் அர்ச்­ச­க­ரி­டம் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­னர்.

ஆல­யத் திரு­வி­ழா­வில் தமி­ழீ­ழத்தை சித்­த­ரிக்­கும் வகை­யில் அலங்­கா­ரம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் நேற்­றை­ய­தி­னம் காலை­யில் இருந்து இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் அந்­தப் பகுதி மக்­க­ளி­டம் திரு­விழா தொடர்­பில் விசா­ரித்­த­னர். அத­னால் ஆலய சூழ­லில் பெரும் பர­ப­ரப்பு நிலை காணப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://uthayandaily.com/story/4036.html

Link to comment
Share on other sites

அம்மன் அலங்காரத்தில் தமிழீழ வரைபடம் – இளைஞர் மீது விசாரணை

 

amma.jpg
திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் நாள் திருவிழாவான கடந்த  செவ்வாய்க்கிழமை  காளி அம்மன் தமிழீழ வரைபடத்தின் பின்னணியில், புலி வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண போலிஸ் புலனாய்வு துறையினர் நேற்று புதன் கிழமை  கோப்பாய் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

amma2.jpg

 

http://globaltamilnews.net/archives/27943

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.