Jump to content

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு


Recommended Posts

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

 
 
பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் தெரீஸா மே கூறியுள்ளார்.

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் சந்தேக நபரான சல்மான் அபெடி தாக்குதல் சம்பவத்தில் தனியோருவராக இயங்கினாரா என்று விசாரணையாளர்கள் முடிவுக்கு வராதததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரீஸா மே குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முக்கிய பகுதிகளை பாதுகாக்க ராணுவப் படையினர் தற்போது அனுப்பப்பட உள்ளனர்.

கடந்த திங்கள் மாலை மான்செஸ்டர் அரங்கத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 59 பேர் காயம் அடைந்தனர்.

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'விவேகமான பதில்நடவடிக்கை'

பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இசைக்கச்சேரிகள் உள்பட வரவிருக்கும் வாரங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் ராணுவ படையினரை காணலாம் என்று கூறியுள்ள மே, காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் இயங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அளவுக்குகதிமாக பொதுமக்கள் அச்சமடைவதை தான் விரும்பவில்லை என்றும், ஆனால் அதே சமயம் சரியான தேவைக்கேற்ற மற்றும் விவேகமான எதிர்வினை நடவடிக்கைகள் இவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சபட்ச அச்சுறுத்தல் அளவு என்பது கூட்டு பயங்கரவாதம் பகுப்பாய்வு மையத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

இதுவரை இருமுறைதான் உச்சபட்ச அச்சுறுத்தல் நிலை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-40025763

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.