Jump to content

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?

ஆர்.

அபிலாஷ்

நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும்.

 இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் மீது இந்த வெறுப்பை தாராளமாய் கக்குவார்கள். மது சந்திப்புகளின் போது ஒரு கொள்கை ரீதியான கேள்வி கேட்கிறேன் எனும் போர்வையில் உங்களை காயப்படுத்தும் ஒரு கருத்தை சொல்வார்கள். இதை சொல்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள். மிகுந்த மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களை காயப்படுத்த எந்த காரணமும் இராது. ஆனாலும் ஒரு கண்மூடித்தனமாய் மூட்டமான கோபத்தை உங்கள் மீது அவர்கள் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்கவுண்டர் செய்வர்கள். என்கவுண்டருக்கு முன்பும் பின்பும் ஒரு பரிசுத்தமான புன்னகையை உதட்டில் தவழ விடுவார்கள். பல ஹாலிவுட் படங்களில் வரும் சைக்கோ கொலைகாரர்களைப் போல் இனிமையான குரலை கொண்டிருப்பார்கள். 

இலக்கிய வட்டாரத்தில் பலருக்கும் ஏற்படும் கசப்புக்கு, காயங்களுக்கு இந்த வெறுப்பே காரணம். யாருக்கும் யார் மீது தனிப்பட்ட கோபம் இல்லை; புகார்கள் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் டிராகுலாவாக தயங்க மாட்டார்கள். கடித்த பின்பும் உங்கள் மீது டிராகுலா முழுமையான காதலுடனே இருப்பார். உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். ஆனால் இருட்டில் மீண்டும் தனியாக மாட்டினால் கடிக்க தவற மாட்டார். இந்த வன்மத்துக்கு தீர்வே இல்லை.

இதற்கு விதிவிலக்கு உண்டா?

1)   வெள்ளந்தியான எழுத்தாளர்கள், 2) எல்லாரிடமும் நட்பு கொள்வதில் இயல்பான ஊக்கம் கொண்டவர்கள், 3) லட்சியவாதிகள்.

4) தினமும் பக்கம்பக்கமாய் எழுதுகிறவர்களும் விதிவிலக்கு (நிறைய எழுதும் போது மனதில் உள்ள விஷம் தீர்ந்து விடும்). தமிழில் அதிகமாக சர்ச்சையில் மாட்டும் எழுத்தாளர்களிடம் இந்த வெறுப்பு உண்மையில் இல்லை. அவர்களை நம்பி நீங்கள் எந்த பாதாளத்திலும் கூட செல்லலாம். இத்தகையோரை இனம் காண ஒரு சுலப வழி உண்டு.

நீங்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டினால் அதில் சற்றும் சம்மந்தப்படாத சிலர் எங்கிருந்தோ எழுந்து வருவார்கள். உங்களை கடுமையாய் சாடி எழுதுவார்கள். அல்லது அப்படி உங்களை சாடும் படி பிறரை தூண்டுவார்கள். உங்கள் மீது கண்டனங்கள் எழும் போது அவர்கள் அப்படி மகிழ்ச்சி கொள்வார்கள். இத்தனைக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இராது. வெளியே பார்த்தால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் நீங்களாக சென்று பேசினால் நட்பு பாராட்டுவார்கள். ஆனால் உங்களை காயப்படுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பொந்தில் இருந்து எழுந்து வருவார்கள். 

இவர்களின் பிரச்சனை என்ன?

1)   பொதுவாக எழுத்தாளன் துக்கத்தாலும், எரிச்சலாலும், கசப்பாலும் பீடிக்கப்பட்டவன். இந்த எதிர் உணர்வுகள் தாம் படைப்பு சக்தியாக அவனுக்குள் மாற்றம் கொள்கின்றன. ஆனால் எழுதாத போது இந்த எதிர் உணர்வுகள் எழுத்தாளனை அரித்துத் தின்னத் துவங்கும். அப்போது யார் மீது பொறாமை கொள்கிறார்களோ அல்லது யார் சொல்லும் கருத்து தமக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறதோ அவர்கள் மீது அல்லது சும்மா எதிரில் மாட்டும் யாராவது ஒருவர் மீது கசப்பை கக்குவார்கள். Zodiac படத்தில் வரும் சீரியல் கொலைகாரன் சொல்வான்: “எனக்கு தலைவலி அதிகமாகும் போது கொலை செய்வேன். தலைவலி உடனே போய் விடும்.” இவர்கள் அந்த வகை.

2)   இவர்கள் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள். அதை இலக்கிய வட்டத்திலும் பலரும் படித்து விட்டு வேண்டுமென்றே தன்னை உதாசீனிப்பதாய் கற்பிதம் கொள்வார்கள். அந்த கற்பிதத்தை வலுவாக நம்புவார்கள். ஆக, தன் தொகுப்பு பற்றி பேசாதவர்கள் அனைவரையும் கடும் விரோதத்துடன் காண்பார்கள். அல்லது நீங்கள் அவரை பாராட்டியிருப்பீர்கள். ஆனால் அதை ஒரு விமர்சனமாய் எழுதி பதிவு செய்ய உங்களுக்கு அவகாசம் இருக்காது. உங்களை சாகடிக்க முடிவெடுப்பார்கள். இப்படி ஒரு அற்ப காரணம் தான் வெறுப்பின் பின்னிருக்கும். பத்திரிகை ஆசிரியராய் இருப்பவர்கள், விமர்சகர்கள் இது போன்ற வெறுப்பாளரிடம் சிக்க வாய்ப்புகள் அதிகம்.

3)   கருத்து சொல்பவர்களை இவர்களுக்கு கண்டாலே அலர்ஜி. நீங்கள் உகாண்டாவின் அரசியல் பற்றி ஒரு பின்னூட்டமோ நிலைத்தகவலோ இட்டிருக்கலாம். ஆனால அதன் மூலம் உங்களை ஜென்மவிரோதியாய் கருதும் பலபேர் தோன்றி காத்திருப்பதை அறிய மாட்டீர்கள்.

4)   முகாம் அரசியல். நீங்க இன்ன முகாமை சேர்ந்தவர் என முத்திரை குத்தி விட்டால் உங்களுக்கு எங்கு அடி விழுந்தாலும் அதைக் கண்டு கைதட்ட பத்து பேர் தோன்றுவார்கள். பிறகு அவர்கள் கூட்டு சேர்ந்து நாலு ஊமைக்குத்து குத்துவார்கள். என்ன பிரச்சனை என்றே பல சமயம் அடிப்பவர்களுக்கு தெரிந்திராது. ”நீ என் நண்பனின் நண்பனின் எதிரின் நண்பனின் விரோதி, அதனால் சாவுடா” என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கும்.

 

இந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?

இன்று முகநூல் மூலம் இந்த வெறுப்பு பதிவாகிறது. ஒரு கருத்துப்போர் நடக்கிறது எனும் போர்வையில் தனிப்பட்ட வஞ்சமே வெளிப்படுகிறது. உங்கள் மீதான தாக்குதலுக்கு நீங்கள் பதிலளிக்கையில் நீங்களும் இந்த பாவனையில் பங்கு கொள்ள நேரிடும். முதல் படியாய், இது போன்ற பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் கூறக் கூடாது. மாறாக, இவர்களை நேரில் கண்டோ போனில் அழைத்தோ பேசி விட வேண்டும். பதிவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க மாட்டார்கள். நேரில் பேசும் போது அவர்களின் பொய் அம்பலம் ஆகி விடும். உங்கள் மீதான வெறுப்பு அவர்கள் குரலில் வெளிப்பட்டு விடும். மேலும் பொதுவெளியில் வைத்து உங்களை வறுத்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்படும். இன்னொரு சிறந்த வழி உள்ளது. இவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம், இவர்களின் உயரதிகாரியை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் புகார் செய்யுங்கள். அல்லது நேராக இவர்களின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் பேசுங்கள். இது கேட்க சிறுபிள்ளைத்தனமாய் தெரியலாம். ஆனா இலக்கிய வெறுப்பாளர்களின் வாலை ஒட்ட நறுக்க இம்மூன்றும் சிறந்த வழிகள். இவை நான் கண்டுபிடித்தவை அல்ல. சில இலக்கியவாதிகள் ஏற்கனவே பிரயோகித்து வெற்றி கண்டுள்ள மார்க்கங்கள் இவை. நான் முதல் வழியையே இப்போதெல்லாம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் நம் மீது வெறுப்பை துப்புபவர்கள் நம் நண்பர்களே. நேரடியாய் நாம் விசாரிக்கும் போது அவர்களுக்கு லஜ்ஜையாய் இருக்கும். குறைந்தது, இவனைப் பற்றி திட்டி எழுதினால் போனைப் போட்டு காதைக் கடிப்பானே என தயங்குவார்கள். எழுத்தில் பதில் சொல்லவே கூடாது.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/05/blog-post_6.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே யாழில் கருத்து எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு ....இதி வாசித்த பின்பு இன்னும் குறையும்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

ஏற்கனவே யாழில் கருத்து எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு ....இதி வாசித்த பின்பு இன்னும் குறையும்...:10_wink:

இப்ப என்ன எல்லோரும் போன் நம்பர் வாங்கி நேரிலேயே கதைக்கிறது , அல்லது அலுவலகத்துக்கு போறது அல்லது நேரடியாய் வீட்டுக்கே சென்று கதைப்பது நல்லது என்று நினைக்கிறீங்களா....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

இப்ப என்ன எல்லோரும் போன் நம்பர் வாங்கி நேரிலேயே கதைக்கிறது , அல்லது அலுவலகத்துக்கு போறது அல்லது நேரடியாய் வீட்டுக்கே சென்று கதைப்பது நல்லது என்று நினைக்கிறீங்களா....!  tw_blush:

வீட்டை போனால் கதை திறக்கமாட்டினம்,டெலிபோன் பண்ணினால் ரொங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடுவார்கள்....மேலதிகாரியை சொல்லமாட்டினம்?பிறகு எப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

வீட்டை போனால் கதை திறக்கமாட்டினம்,டெலிபோன் பண்ணினால் ரொங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடுவார்கள்....மேலதிகாரியை சொல்லமாட்டினம்?பிறகு எப்படி...

அப்ப நெட்டையோ குட்டையோ யாழ்களம்தான்  சிறப்பு ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

ஏற்கனவே யாழில் கருத்து எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு ....இதி வாசித்த பின்பு இன்னும் குறையும்...:10_wink:

நான் இதை  லைக்கு பண்ணுறன் புத்து

நமக்கும் இவங்களுக்கும் ரொம்ப தூரம்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.