Jump to content

பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்


Recommended Posts

பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

01-86dd075bf5485f859c9621ba8c92606435c44ae9.jpg

 

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் பொறுப்புக் கூறும் வகையில் நட­வ­டிக்கை அமைச்­ச­ர­வையில் மனோ கணேசன், ரிஷாத், ரவூப் ஹக்­கீமும் கடும் அதி­ருப்தி
(எம்.எப்.எம்.பஸீர்)

முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் தங்­களின் பொலிஸ் பிரிவில் இடம்­பெறும் இவ்­வா­றான வழிபாட்டுத் தலங்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் இன ரீதி­யி­லான செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வித­மாக இந்த திட்­டத்தை அமுல் செய்ய சாகல ரத்­நா­யக்­க­வுக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதன்­படி உட­ன­டி­யாக குறித்த விடயம்

அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதனை விட சட்­டத்தை கையி­லெ­டுத்து செயற்­படும் அனைத்து தனி நபர்­க­ளுக்கும் எதி­ராக பாரா­பட்­ச­மின்றி கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன சாக­ல­வுக்கு உத்­த­ர­விட்டார்.

ஜனா­தி­பதி தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் போதே இந்த உத்­த­ர­வு­களை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

 நேற்­றைய தினம் அமைச்­ச­ரவை கூட்டம் இடம்­பெற்ற போது சிறு­பா­னமை இனத்­த­வர்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் கெடு­பி­டிகள், தற்­போது உரு­வாகி வரும் அச்­சு­றுத்­த­லுடன் கூடிய சூழல் தொடர்பில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், ரிஷாட் பதி­யுதீன், ரவூப் ஹகீம், கபீர் ஹசீம், துமிந்த திஸா­ந­யக்க, தலதா அத்­து­கோ­ரள உள்­ளிட்­ட­வர்கள் அமைச்­ச­ர­வையின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

முதலில் இந்த விவ­காரம் குறித்து அமைச்­ச­ர­வையில் கருத்து தெரி­வித்த கனேசன்,

' இன்று ( நேற்று) அதி­காலை கூட காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. , சிறு­பான்­மை­யினர் மீதான திட்­ட­மிட்ட தாக்­கு­தல்கள் தொடர்­கின்­றன. எனது அமைச்­சுக்குள் அமைச்சில் பொது­பல சேனைவின் அத்து மீறு­கின்­றனர். இதன் முடிவு என்ன.யேன் இது குறித்து சட்டம் அமுல் செய்­யப்­ப­டு­வ­தில்லை.

எனது அமைச்­சுக்குள் அல்­லது நான் செல்லும் இடங்­களில் எந்த தீவி­ர­வாத சக்­திகள் வந்­தாலும், என்னால் அவர்­களை எதிர்­கொள்ள முடியும் எனது அமைச்­சுக்கு சிங்­க­மாக வந்த பொது­பல சேனா செய­லாளர் ஞான­சார தேரர் பூனை­யாக திரும்பி போனார். ஆனால், சாதா­ரண மக்­களின் நிலைமை அது­வல்ல. அவர்­க­ளுக்கு பெரும் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது. 2015ம் வருடம் நடை­பெற்ற இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஐக்­கிய தேசிய முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஆகிய கட்­சி­க­ளுக்கு நல்­லாட்­சிக்­காக வாக்­க­ளித்த சிறு­பான்மை மக்­களை, எமது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பிரித்து, எதிர்­வரும் தேர்தல் காலங்­களில் வாக்­க­ளிக்­காமல், அவர்­களை வீட்டில் இருக்க செய்யும் திட்­டமே இது­வாகும். என ஆவே­சத்­துடன் மனோ கனேசன் அமைச்­ச­ர­வையில் தீர்­மா­ன­மெ­டுக்க வேண்­டினர்.

இத­னை­ய­டுத்து அடுத்து, அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்கும் இன­வாத செயற்­பா­டுகள், அவர் மீது சட்­டத்தை அமுல் செய்ய அர­சாங்கம் தயங்­கு­வதன் பின்­னணி என்ன என்­பது குறித்து அமைச்­ச­ர­வையில் கேள்வி எழுப்­பினார். இதன் போது அமைச்­சர்­க­ளான கபீர் ஹசீம், ரவூப் ஹக்கிம், துமிந்த திசா­நா­யக்க, உள்­ளிட்­டோரும் இது குறித்து தத்­த­மது கருத்­துக்­களை பதிவு செய்­தனர். இத­னை­ய­டுத்து தற்­போது குறித்த செயற்­பா­டுகள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் செயன்­மு­றைகள் நடை­மு­றையில் உள்­ள­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்­துள்ளார்.

காவத்தை நகரில் நேற்று அதி­காலை இடம்­பெற்ற தீ வைப்புச் சம்­பவம் தொடர்பில், அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த அமைச்சர் தலதா அத்­து­கோ­ரல அமைச்­ச­ர­வையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அமைச்­சர்­களின் கருத்­துக்­களை மிக அமை­தி­யாக கேட்­டுக்­கொண்­டி­ருந்த நிலையில் அமைச்­ச­ர­வையில் எழுப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­வதில் என்ன பிரச்­சினை உள்­ளது என்று கேள்வி எழுப்­பினார். தயவு தாட்­சண்யம் இல்­லாமல் கடும் முறையில் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­மாறு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு, ஜனா­தி­பதி இதன் போது பணிப்­புரை விடுத்­துள்ளார்.

அதை­ய­டுத்து இந்த இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தல் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, விளக்­க­ம­ளித்­துள்­ள­துடன் எந்த வகையில் அவற்ரைக் கட்­டுப்­ப­டுத்­தலாம் என்­பது குரித்து ஆலோ­ச­னை­களை சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு வழங்­கி­யுள்ளார். சம்­ப­வங்கள் நடை­பெறும் பிர­தே­சங்­களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் நடை­பெறும் சம்­ப­வங்கள் தொடர்பில் பொறுப்பு கூறி­வைக்கும் நடை­மு­றையை உட­ன­டி­யாக அமுல் செய்­யு­மாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு இதன் போது பிர­தமர் பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இதன் போது தன்னை நேற்று ( நேற்று முன் தினம் ) முஸ்லிம் அமைச்­சர்கள், எம்­பீக்கள் சந்­தித்­த­தாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார். அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம், ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழ்னக்கியுள்ளார்.

இதேவேளை இனவாத மதவாத செயற்பாடுகள், வழிபாட்டு நிலையங்கள் மீதான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஊடாக பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.