Jump to content

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம்


Recommended Posts

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம்

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு  சபையில் நேற்றுக் கண்டனம்
 

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளுக்கு முதன்மை எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், தமிழ் முற்­போக் குக் கூட்­டணி ஆகி­யன நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கடும் கண்­ட­னம் வெளி­யிட்­டன.

அத்­து­டன் இன­வா­தத்­தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின.

சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

சம்பந்தன்.

“இனம் எதுவாக இருந்தாலும், மதம் எதுவாக இருந்தாலும் அமைதியாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில்,சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் வகையில் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. இவ்விதமான நிலமைகள் தொடர்வதற்கு இடமளிக்கமுடியாது.

தனியார் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் அமைதியாக வாழமுடியுமா? என்ற அச்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. எனவே, அனைவரும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்.

ஹக்கீம்

“முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களில் பெரியளவிலான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது பற்றிச் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், அரச தலைவரின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர். எனவே, உரிய வகையில் இந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

“வடக்கிலும், தெற்கிலும் இனவாதிகள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாமே மச்சான்மார்கள். எனவே, விளையாட வேண்டாமென இனவாதிகளுக்குக் கூறிக்கொள்கின்றேன். அரச பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, இனவாதிகளுக்கு இடமளிக்கமுடியாது.

இது விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் துரித நடவடிக்கைகளை எடுப்பார் என உறுதியாக நம்புகின்றேன். இது ப ற்றி அமைச்சரவையிலும் பேசப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கச் செய்வதற்கான சூழ்ச்சியாகவே இப்படியான செயல்கள் நடக்கின்றன” என்று அமைச்சர் மனோ கணேசன் கூறினார். (வ-5)

http://uthayandaily.com/story/3924.html

Link to comment
Share on other sites

தலை­தூக்­கி­யுள்ள இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த உடன் நட­வ­டிக்­கைகள் அவ­சியம்

 

சபையில் தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் அழுத்தம்

(ப.பன்­னீர்­செல்வம், ஆர்.ராம்)

அண்­மைக்­கா­ல­மாக தலை­தூக்­கி­யுள்ள இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உடன் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் சபையில் கடு­மை­யான தொனியில் அழுத்­த­ம­ளித்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக தலை­தூக்­கி­யுள்ள அடக்­கு­முறைச் செயற்­பா­டுகள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பி­ரே­ர­ணையை ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி னர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்தார்.

இந்தப் பிரே­ரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், முஸ்­லிம்­காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அமைச்­சர்­க­ளான ரிஷாட் பதி­யுதீன், மனோ­க­ணேசன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹுமான், இஷாக் ரஹுமான், உட்­பட அமைச்சர் சாகல ரட்­நா­யக்க மற்றும் ஜே.வி.பியின் பிமல் ரட்­நா­யக்க ஆகி­யோரும் உரை­யாற்­றி­னார்கள்.அவை வரு­மாறு,

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன்

இலங்­கையில் இனம் எது­வாக இருந்­தாலும், மதம் எது­வாக இருந்­தாலும் சரி தற்­போ­தைய நிலையில் மக்கள் அனை­வரும் சமா­தா­ன­மா­கவே வாழ­வி­ரும்­பு­கின்­றார்கள். நாட்­டிலே சிறு­பான்­மை­யி­னங்­களை அச்­சு­றுத்தும் வகையில் குழு­வொன்று செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வி­த­மான நிலை­மைகள் தொடர்­வ­தற்கு தொடர்ந்தும் இட­ம­ளிக்க முடி­யாது.

தனியார் சொத்­துகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. தகாத வார்த்­தைகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நாட்டில் சமா­தா­ன­மாக வாழ முடி­யுமா என்ற அச்சம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடயத்தை முளை­யி­லேயே கிள்ளி எறி­வ­தற்­கான கரு­மங்­களை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்­பான சம்­ப­வங்கள் மீண்டும் தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. தற்­போ­துள்ள அனை­வரும் யதார்த்­தத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

மக்­களை அச்­சத்­திற்கு ஊட்டும் வகையில் செயற்­படும் குழு­வுக்கு எதி­ராக அர­சாங்கம் துரி­த­மாக சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். கடமை உணர்­வோடு அர­சாங்கம் இதை செய்ய வேண்டும் என எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்­த ­சில நாட்­களில் பாரி­ய­ளவு அடக்­கு­முறை கட்ட விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக சிங்­கள, ஆங்­கில ஊட­கங்கள் உரிய கவனம் செலுத்­த­வில்லை.

ஜனா­தி­ப­தியின் மாவட்­டத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் பொலி­ஸாரும் அச­மந்­த­மா­கவே செயற்­பட்­டனர். எனவே, உரிய வகையில் இந்த குழுக்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இந்த விடயம் சம்­பந்­த­மாக நானும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­தனும் ஜனா­தி­ப­தியை சந்­தித்­துள்ளோம். அவர் உரிய நட­வ­டிக்கை எடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்றார்.

அமைச்சர் மனோ கணேசன்

இந்த நாடு பல்­லி­னங்­க­ளுக்குச் சொந்­த­மான நாடு. வடக்­கிலும், தெற்­கிலும் இன­வா­திகள் இருக்­கின்­றனர். இவர்­க­ளெல்லாம் மச்­சான்மார். எங்­க­ளுடன் விளை­யாட வேண்டாம் என்று இன­வா­தி­க­ளுக்கு இந்த சந்­தர்ப்­பத்தில் கூறிக்­கொள்­கின்றேன். அரச பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீண்டும் தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

அவ்­வா­றி­ருக்­கையில் இன­வா­தி­க­ளுக்கு இட­ம­ளிப்போம் என்று கரு­த­வேண்டாம். இந்த இன­வாத விளை­யாட்டின் பின்னால் யார் இருக்­கின்­றார்கள் என்று எமக்கு நன்கு தெரியும். இந்த விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் துரித நட­வ­டிக்­கை­களை எடுப்பார் என உறு­தி­யாக நம்­பு­கின்றேன். இது பற்றி அமைச்­ச­ர­வை­யிலும் பேசப்­பட்­டுள்­ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்­துக்கு வழங்கும் ஆத­ரவை விலக்­கச்­செய்­வ­தற்­கான சுழ்ச்­சி­யா­கவே இப்­ப­டி­யான செயல்கள் நடக்­கின்­றன என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுர்தீன்

சகல இனங்­களும் சகோ­த­ரத்­து­வத்­துடன், சமத்­து­வத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே சகல இனத்­த­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­கி­றது. ஏப்ரல் 16ஆம் திக­திக்குப் பின்னர் 20இற்கும் அதி­க­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மத­குரு ஒருவர் தீவி­ர­மாக செயற்­ப­டு­கிறார். அவ­ரு­டைய பெயரைக் கூறி அவரை பெரி­ய­ம­னித­ராக்க விரும்­ப­வில்லை.

பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த புல­னாய்வுப் பிரிவு நாட்டில் உள்­ளது. சிறந்த புல­னாய்வுப் பிரிவு இந்த சம்­ப­வங்­களில் ஒரு­வரைக் கூட இன்­னமும் கைது­செய்­ய­வில்லை என்­பது கவ­லை­ய­ளிக்­கி­றது. ஒரு திருட்டுச் சம்­ப­வங்கள் இருக்­கின்­றன. சகல சம்­ப­வங்­க­ளையும் திருட்டுச் சம்­ப­வங்கள் எனக் கூறி­விட முடி­யாது. இன­வாத சக்­திகள் வன்­மு­றையைத் தூண்­டி­விட்டு சுய­லா­பத்தை அடை­வ­தற்கும், நாட்டில் மீண்டும் பல வரு­டங்கள் இரத்த ஆறு ஓடச் செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் சண்­டி­யன்கள் போன்று நடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற கோளை­க­ளாகும். தாம் சிறைக்குச் செல்­லாமல் இருப்­பதைத் தடுக்க உண்­ணா­வி­ரதம் இருந்து, இளை­ஞர்­களை தூண்­டி­விட முயற்­சிக்­கின்­றனர். நாட்டில் இரத்த ஆறு ஓட­வேண்டும் என்­ப­தற்­காக இவர்கள் வீரர்கள் போன்று நடிக்கும் திரு­டர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்கள் யாராக இருந்­தாலும் கைது­செய்­யப்­பட வேண்டும் என்றார்.

முஜிபுர் ரஹுமான் எம்.பி.

கடந்த ஆட்­சியில் நாட்டில் இன­வாதம், மத­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­டது. இதன் உச்­சக்­கட்­ட­மாக அளுத்­க­மவில் வன்­மு­றைகள் தலை­தூக்­கின. குறிப்­பிட்ட மதங்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.

இவ்­வா­றான ஒரு சுழ்­நி­லை­யி­லேயே கடந்த ஆட்­சியை மாற்­று­வ­தற்­காக அனைத்து இனத் தலை­வர்­களும் ஒன்­று­பட்டு செயற்­பட்டு 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக்கி ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கினோம்.

இன்­றைய அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடி­ன­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. பல சவால்­க­ளுக்கு மத்­தியில் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான பய­ணத்தை அரசு கடி­ன­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றது. இந் நிலையில் இதனை சீர்­கு­லைப்­ப­தற்கு இன­வா­தி­களும், மத­வா­தி­களும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்கள் யாரென்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும். இன­வாதம், மத­வாதம், அடிப்­ப­டை­வாதம் நாட்டில் உரு­வாக்கும் சக்­தி­களை தடுப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இந்த இன­வா­தி­களும் மத­வா­தி­களும் ஒரு காலத்தில் அமை­தி­யாக இருக்­கின்­றனர். ஆனால் திடீ­ரென இயக்­க செய்­தது போல் இவர்கள் தலை­தூக்­கு­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டி­கைகள் நாட்டில் அர­சியல் ஸ்திர­மான நிலை­மை­யையும் பாதிக்கும்.

எனவே கடந்த ஆட்­சி­யின்­போது இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தலை­தூக்கச் செய்து அர­சியல் செய்­ததால் தான் தோல்­வியை கண்­டார்கள். இதனை பாட­மாகக் கொண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும். எனவே ஆட்­சி­யா­ளர்கள் இப் பிரச்­சி­னையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இஷாக் ரஹ்மான் எம்.பி.

நோன்பு காலம் ஆரம்­பிக்­க­வுள்­ளது. 2014 காலப் பகு­தியில் முஸ்­லிம்கள் நோன்பு நோற்­க­மு­டி­யாத சுழல் காணப்­பட்­டது. இத­னா­லேயே அப்­போ­தைய ஆட்­சிக்கு எமது மக்கள் சிறந்த பாடத்தை புகட்­டி­யி­ருந்­தார்கள். நாட்டில் மீண்டும் ஒரு இன­வா­தத்தை, மத­வா­தத்தை சீர­ழிக்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் பின்­னணி சக்­தி­யொன்று செயற்­பட்டு வரு­கி­றது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கா­விட்டால் மீண்டும் பேரு­வ­ளை­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெறும். பொலிஸார் ஏன் இன்­னமும் மௌன­மாக இருக்­கின்­றனர். மௌன­மாக இருக்­காது விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பொலி­ஸுக்கு பொறுப்­பான அமைச்சர் மீது நானும், சக முஸ்லிம் எம்­பிக்­களும் நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்றோம். எமது நம்­பிக்கை வீண்­போ­கா­த­வாறு சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

பிமல் ரட்­நா­யக்க எம்.பி.

பயங்­க­ர­மான விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களை வெற்றி கொண்ட உளவுப் படை­யினர் எம்­மிடம் இருக்­கின்­றார்கள். அவ்­வா­றான உளவுப் படை­யி­னரால் இந்த மத­வாதக் குழுவை தடுப்­பதும் கைது செய்­வதும் பெரிய விட­மல்ல. ஏன் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

எனவே இதன் பின்­ன­ணியில் அரசின் யாரோ ஒரு நபர் இருக்­கின்றார். அரசின் சிலரின் ஆசீர்­வா­தமும் கிடைப்­ப­தா­கவும் நான் சிந்­திக்­கின்றேன். அண்­மையில் வடக்கில் இரா­ணுவ முகா­மொன்றில் கூட்­ட­மொன்று நடந்­தது. இதில் பல தமிழ் மக்கள் கலந்து கொண்­டார்கள். அவர்கள் இரா­ணு­வத்தின் மத்­தியில் கருத்து தெரி­விக்­கையில், வடக்கில் புத்த சிலைகள் உடைப்பின் பின்னர் வட பகு­தியில் யாரும் தொடர்­பு­ப­ட­வில்லை. கொழும்­பி­லி­ருந்து வந்தவர்களே புத்தர் சிலைகளை உடைக்கின்றனர் என்றார்.

அமைச்சர் சாகல ரட்நாயக்க

நாங்கள் இந்த விடயம் தொடர்பில் உயரிய பொலிஸ் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். சட்டம் சரிவர அமுல்படுத்தப்படுவதில்லை என மக்கள் மத்தியில் அவநம்பிக்கை எம்மீது உள்ளது. அந்நிலை தொடர இடமளிக்க முடியாது. சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவோம் என வாக்குறுதி வழங்கியே நாங்கள் ஆட்சி அமைத்தோம்.

இனவாத பிரச்சினைகளுக்கு பின்னால் வேறு விதமான பிரச்சினைகளும் உள்ளன. முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கோழி கடையொன்றில் அண்மையில் தீ வைக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்தப்பட்ட போது அங்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதேபோன்று கஹவத்தையில் வர்த்தக நிலையமொன்றில் தீக்கிரையாகியது. அதற்கு அப்பால் தமிழ் வர்த்கர் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றில் விளக்கொன்றின் மூலமே தீ பரவியுள்ளது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.