Jump to content

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம் தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை


Recommended Posts

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம்

தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை

 
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம்
 

சிறு­பான்­மை­யி­னர் மீதான அச்­சு­றுத்­தல்­கள், அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வணக்­கத் தலங்­கள் மற்­றும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தும் சம்­ப­வங்­கள் தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தின் கஹ­வத்­தைப் பிர­தே­சத்­தில் தமிழ் மற்­றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் நேற்று அதிகாலை தீயில் எரிந்து சாம்பராகி யுள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிரான 11 தாக்குதல் சம்பவங்கள் கடந்த 10 தினங்களுக்குள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தைப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயர் கடையும், தமிழ் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிலையமுமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினரை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சிங்கள – பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர், சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

அதி உச்சபட்சமாக, மனோ கணேசனின் அமைச்சுக்குள் புகுந்து, இது சிங்கள – பௌத்த நாடு என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இனக் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துச் செல்கின்றன.

இதுவரை பதிவாகியுள்ள சம்பவங்கள் வருமாறு, கொட்டாபிட்டியாவில், முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான கடை மீது ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீசப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் மாயக்கல்லி மலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை அடாவடியாகப் பிடித்து, அதனுள் பொதுபலசேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் பிரவேசித்திருந்தார். இந்தச் சம்பவம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

பொலநறுவை மாவட்டத்தின் ஒநேகம பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் வசிப்பிடங்களுக்கு, ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் அத்துமீறிப் பிரவேசித்து அந்த மக்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது.

திருகோணமலை செல்வநகரில் கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். 6 ஏக்கரில் அங்கு விகாரை அமைந்திருந்தது. அந்த விகாரை 49 ஏக்கரில் அமைந்திருந்ததாகக் கூறி, முஸ்லிம் மக்கள் காணிகளைப் பறிக்க முற்பட்டனர்.

அதே தினத்தில் பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொக்கிலவத்த இப்பராஹிம் ஜூம்மா பள்ளி வாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இதே தினத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொக்கிலவத்த பள்ளிவாசல் மீது மீண்டும் கடந்த 16 ஆம் திகதி குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிலையங்கள் மீது பாணந்துறையில் கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வென்னப்புவவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மின்சார வர்த்தக நிலையம் பெற்றோல் குண்டு வீசி 18 ஆம் திகதி தாக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பள்ளி வாசல் மீது 21 ஆம் திகதி அதிகாலையில் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதே தினத்தில் எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான அழகுசாதன பொருள் விற்பனை நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மகரகம, விஜயராம சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான தோல் விற்பனை நிலையம் தீயினால் நேற்று முன்தினம் திங்கள்கிழமை எரிந்து சாம்பராகியுள்ளது.

http://uthayandaily.com/story/3913.html

Link to comment
Share on other sites

மிகத்திட்டமிட்டு சிங்கள அரசின் மறைமுக ஆதரவுடன் இத்தாக்குதல்கள் இடம் பெறுகின்றன. சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் குறிப்பாக  முஸ்லிம் மக்களின் சொத்துக்களை நாசமாக்கி அவர்களை நடுத்தெருவில் விடுவதே சிங்கள பேரினவாதத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆகும். இதற்கு சிங்களவர்கள் கட்சி வேறுபாடு இன்றி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் செயற்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

காவத்­தையில் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான இரு­ க­டை­களில் தீ பரவல்

 

பல­ச­ரக்­குக்­கடை முற்­றாக எரிந்து நாசம்

(எம்.எப்.எம்.பஸீர், இறக்­கு­வானை காவத்தை மேல­திக, பெல்­ம­துளை நிரு­பர்கள்) 

இரத்­தி­ன­புரி காவத்தை நகரில் இரு வர்த்­தக நிலை­யங்கள் நேற்று அதி­காலை தீப்­ப­ர­வ­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. தமிழர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான பல­ச­ரக்­குக்­கடை முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது . அரு­கி­லி­ருந்த முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான ஹார்ட்­வெயார் கடை பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது. இந்த சம்­பவம் நேற்று அதி­காலை 2 மணிக்கும் 2.30 க்கும் இடைப்­பட்ட  

நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலி ஸார் தெரி­வித்­தனர்.

பல­ச­ரக்குக் கடை முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­ன­மை­யினால் பல இலட்சம் ரூபா பெறு

­ம­தி­யான சொத்­துக்கள்

அழி­வ­டைந்­துள்­ளன. இந்­த­நி­லையில் குறித்த கடை­க­ளுக்கு எவ­ரேனும் தீ வைத்­த­னரா? என்ற கோணத்தில் காவத்தை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

குறித்த கடைகள் தீப்­பற்றி எரி­வ­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைக்­கும்­போது பல­ச­ரக்கு கடை­யா­னது முழு­மை­யா­கவே தீக்­கி­ரை­யாகி நாச­ம­டைந்­துள்­ளது. மற்­றைய கடை­யா­னது பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது. சம்­பவம் இடம்­பெற்­ற­போது காவத்தை நகரில் சன­ந­ட­மாட்டம் இருக்­க­வில்­லை­யெ­னக்­கூறும் பொலிஸார் உட­ன­டி­யாக இரத்­தி­ன­புரி மாந­க­ர­சபை தீய­ணைப்புப் படையின் உத­வி­யுடன் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­த­தாக தெரி­வித்­தனர்.

இந் நிலையில் நேற்று காலை ஸ்தலத்­துக்கு அரச இர­சா­யன பகுப்­ப­ய­வா­ளர்கள் உள்­ளிட்­டோரும் அழைக்­கப்­பட்டு தீ பர­வ­லுக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

 கடந்த ஒரு வாரத்­துக்குள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் இலக்கு வைக்­கப்­பட்டு இவ்­வா­றான தீ வைப்புச் சம்­ப­வங்கள் பல பதி­வ­கை­யுள்ள நிலையில், இந்த தீ பர­வலும் நாச­கார செய­லாக இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். அதன்­ப­டியே விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

 கடந்த புத­னன்று பாணந்­துறை நகரில் இரு முச்லிம் கட­டைகள் மீது பெற்றோல் குண்டு தக­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இத­னை­விட அத­னை­ய­டுத்த நாளில் வென்­னப்­பு­வையில் உள்ள பிர­மாண்­ட­மான ஆடை­யகம் ஒன்றும் தீக்­கி­ரை­யா­னது. அதன் பிறகு எல்­பிட்­டிய பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்று தீக்­கி­ரை­யா­னது. பின்னர் நேற்று முன் தினம் அம்­பாறை மற்றும் மஹ­ர­கம பகு­தி­களில் இரு முச்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­ய­க­கப்­பட்­டி­ருந்­தன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் அதிகாலை 1.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையிலேயே இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் மிகத் திட்டமிட்டு இவ்வாறான தீ வைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக சந்தேகிக்கபப்டும் நிலையில் சிறுபானமை வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.