Jump to content

மலேசியாவும், மனம் கோணா உணவுகளும்


Recommended Posts

KC_Malaysian-laksa-2-1180x520.jpg

 

 

மலேசியாவும், மனம் கோணா உணவுகளும்

மலேசியா என்கிற தேசம் எப்படி பரந்துபட்டதோ, எப்படி பல்வகைமை கொண்ட கலாச்சாரங்களையும் ஒரே இடத்தில் கொண்டிருக்கிறதோ, அதுபோல உணவு வகையிலும் எண்ணிலடங்காத வகைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மலாய் மக்களின் தன்னிகரில்லா தனித்துவமான உணவுகளானாலும் சரி, வந்தேறு குடிகளான இந்திய வம்சாவளியுடன் இணைந்த உணவுவகைகளானாலும் சரி, மலேசிய வாழ் சீனமக்களின் தாக்கம் கொண்ட உணவுவகையாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய தனித்துவத்தை கொண்டதாக மலேசியாவின் வீதியோரங்ககளையும், விலைமதிப்பில்லாத உணவகங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றன.

உலக சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு, எப்போதாவது மலேசியா என்கிற நாட்டையும் உங்கள் சுற்றுலா பயணத்தில் இணைத்துகொள்ளும் எண்ணம் இருப்பின், அங்கு கட்டாயமாக ருசிபார்க்கவேண்டிய உணவுகள் எவையென இப்பொழுதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நாசி லெமாக் (Nasi Lemak)

இலங்கையர்களுக்கு எப்படி சோறு இல்லாமல் வாழ முடியாதோ, அதுபோலவே மலேசியர்களுக்கும் சோற்றினை தவிர்த்துவிட்டு வாழ்வது கடினம் போல! அதனால்தான் என்னவோ, தமது தேசிய உணவாக நாசி லெமாக் எனும் சோற்றினை அடிப்படையாகக் கொண்ட உணவினைக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும், நாசி லெமாக் இலங்கையின் லம்ப்ரைஸ் போல வாழையிலை அல்லது மலேசியாவுக்கே உரித்தான பைன்மர (Bandan Leaves) இலைகளின் உதவியுடனே தயாரிக்கப்படுகிறது.

wacana.co_nasi-lemak-701x438.jpg

 

பாரம்பரிய மலேசிய முறையில் தயாரிக்கப்படும் நாசி லெமாக்கில் தேங்காய் பாலுடன் வேகவைக்கப்பட்ட சோறு, நிலக்கடலை கறி, காரமான சம்பல், வேகவைத்த முட்டை மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை கொண்டதாக பரிமாறப்படுகிறது. விரும்பியபோது இதனுடன் வேறுபட்ட இறைச்சி வகைகளும் (பன்றி தவிர்ந்து) இணைத்து பரிமாறப்படும். பெரும்பாலும், மலேசிய மக்கள் இதனை காலை உணவாக அல்லது மதிய உணவாக உட்கொள்ளுகின்றார்கள்.

இதே உணவை, மலேசியாவில் உள்ள இந்தியர்கள் சமைக்கும்போது, தமக்கு ஏற்றவகையில் அறுசுவை கறிகளையும் கொண்டு வாழையிலையில் பரிமாறுவதுடன், சீன மக்கள் சமைக்கும்போது, மேலதிகமாக பன்றி இறைச்சி கறியையும் அதனுடன் இணைத்துகொள்ளுகிறார்கள்.

நாசி லெமாக் போல, நாசி கிரபு (Nasi Kerabu) என்கிற உணவும் மலேசியாவில் பிரபலமாக உள்ளது. இதுவும், நாசி லெமாக் போல தயார் செய்யப்பட்டாலும், இதற்கு பயன்படும் அரசி ஒருவகை நீலநிற அரிசியாக உள்ளமை இதன் விசேடமாகும்.

விலை – RM4-RM10 (LKR136 – LKR340)

ரொட்டி கனாய் (Roti Canai)

roti-canai-701x468.jpg

 

பெயர் ஏதோ வித்தியாசமாக இருந்தாலும், இது நம்மை போன்ற இலங்கை-இந்திய மக்களுக்கு பரிச்சியமான ஒரு உணவுவகைதான். நமக்கு புரிந்த மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இதனை “பரோட்டாவும் கறியும்” என அழைக்கலாம். இதில் மலேசிய மக்களின் தனித்துவம் என்னவெனில், இந்த ரொட்டி கனாய்யினை தயாரிக்க அவர்கள் பயன்படுத்தும் வெண்ணெய்யே இதனை நமூர் பரோட்டாக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. மலேசிய மக்களின் அன்புபோல, இவ்வகை வெண்ணெய்களும் தாராளமாகவே ரொட்டி கனாய்யில் இருக்கிறது. இவ்வகை ரொட்டியுடன் எவ்வகை கறிகளையும் சேர்த்து உண்ண முடியும்.

விலை – RM1 (LKR34) (கறி தவிர்த்து) , One Portion Price – RM3-RM5 (LKR102-107) (கறிவகைகளுடன் சேர்த்து)

ரொட்டி ஜாலா (Roti Jala)

maxresdefault-701x394.jpg

 

நம்மவர்களின் சுருட்டப்பம் வகையறாவை சேர்ந்ததாக இது இருந்தாலும், சிறு சிறு வித்தியாசங்களுடன் இது வேறுபடுகிறது. பான் கேக் வகையான கலவையை கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இவை சிறு சிறு இடைவெளிகளைக் கொண்ட இடியப்பம் போல தயாரிக்கப்பட்டு பின்பு உருட்டப்பட்டு நீள் உருளை வடிவத்தை அடைகிறது. பெரும்பாலும் மலேசியாவாழ் மக்களின் மாலை நேர உணவாகவுள்ளது.

ரொட்டி ஜாலா தனியாகவும், மாமிச கறிகளுடனும் இணைத்து பரிமாறப்படும் வழக்கத்தினை கொண்டுள்ளது. ஆனால், இவை பெரும்பாலும் மாலைநேர தேநீரை அலங்கரிக்கும் விருந்தாக உள்ளது.

விலை – RM 0.60 – RM 3 (LKR 20 – 102)

அசாம் லக்சா (Asam Laksa)

2-pappa-asam-laksa-701x526.jpg

 

நாம் நூடில்ஸ் உணவையும், சூப் பானத்தையும் தனித்தனியே உணவாக அருந்தியிருப்போம். ஆனால், இவ்விரண்டு வகைகளையும் சேர்த்து அருமையான உணவாக அசாம் லக்சாவை மலேசியாவில் பரிமாறுகிறார்கள். மலேசியாவில் கடலுணவுகளுக்கு பஞ்சமில்லை என்பதானால், பெரும்பாலான அசாம் லக்சா உணவுகளை கடலுணவு வகைகளுடன் சேர்த்தே பரிமாறுகிறார்கள். பெரும்பாலும் காரசாரமான சூப் பானம், பெரியவகை நூடில்ஸ் ஆகியவற்றறை இந்த உணவில் காண முடியும். கடலுணவுகள் நம்மவர்கள் சமைப்பது போல முழுமையாக சமைக்கப்படாது, அரை அவியலாக இருப்பதால் அனைவருக்கும் இவ்வகை உணவு ஒத்துவராது. எனவே, புதியவகை உணவை ருசிபார்க்க விரும்புவர்களுக்கு இது ஒருவகை சுவாரசியமே!

விலை – RM 6.90 RM 10.50 (LKR 234.6 – LKR 357)

சாட்டே (Satay)

84f3d153dafbeda6d45ec374d617f61d-701x467

 

மலேசியாவில் எவ்வாறு இரவுநேர (முழுநேரமும் உள்ளவை உண்டு) வீதியோர உணவகங்கள் பிரபலமோ, அதுபோல சாட்டே உணவுவகையும் அங்கு மிகவும் பிரபலமானது. அரேபியர்களின் கேபாப்(Kebab) வகை உணவுகளை போல, குச்சிகளில் விதவிதமான மாமிசங்களை நெருப்பில் அழுத்தமாக வேகவைத்து சமைக்கும் ஒருவகை உணவாக உள்ளது. கேபாப் உணவில் மரக்கறிவகைக்கும் இடம் உண்டு. ஆனால், சாட்டே உணவில் தனியே மாமிசம் மட்டுமே உண்டு. அது மட்டுமல்லாது சாட்டே உணவுகையில் மலேசியாவின் பெயரை அழுத்தமாக பாதிக்கும் வகையில் நிலக்கடலை சோஸ் (sauce) உம் தடவப்பட்டே தயாரிக்கபடுகிறது.

விலை – RM 0.60 – RM 2.60 (One Piece) (LKR 20.4 – 88.40)

மீ கோரெங் (Mie Goreng)

mie-goreng-701x432.jpg

 

நூடில்ஸ் வகை உணவாக இருந்தாலும், இது நாம் சாப்பிடும் வழமையான நூடில்ஸ் வகை உணவில்லையென்பதனால் ஒருமுறை ருசிபார்க்க முடியும். சென்னையில் உள்ள பர்மா மக்களால் சமைக்கப்படும் தடிப்பமான நூடில்ஸ் வகையை பயன்படுத்தியே இந்தவகை உணவும் தயாரிக்கப்படுகிறது. மலேசியர்கள் கொஞ்சம் காரசாரமான உணவுக்கு பெயர் போனவர்கள் என்பதனால், இந்த நூடில்ஸ் வகையும் கொஞ்சம் உறைப்பு அதிகமானதாகவே இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

நூடில்ஸ்ஸுக்கு பதிலாக சோற்றினை பயன்படுத்தி செய்யும் உணவினை நாசி கோரெங் (Nasi Goreng) என அழைக்கிறார்கள். இது நம்மவர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சியமானதே!

விலை – RM 3 – RM 8.5 (LKR 102 – 289)

சார் குஎய் டோவ் (Char Kuey Teow)

char-kuey-teow-701x526.jpg

 

வாயில் நுழையாத பெயர்போல கொஞ்சம் சிக்கலாக தயாரிக்கப்படும் உணவு வகையாகவே இது உள்ளது. மீ கோரெங் உணவிலிருந்து இது வேறுபட காரணம், இங்கு பயன்படுத்தப்படும் நூடில்ஸ் வடிவமேயாகும். இங்கு நன்கு தடித்த, அகலமான அரிசிவகை நூடில்ஸ் பயன்படுத்தப்படுகிறது. சீன கடைகளில் பெரும்பாலும் இவ்வகை உணவானது பன்றி இறைச்சி கொழுப்பினை பயன்படுத்தியே சமைக்கப்படுவதனால், சாப்பிட போகும் முன்பாக ஒருகணம் முழுமையாக விசாரணை செய்து கொள்ளுங்கள்.

விலை – RM 5.50 – 10.50 (LKR 187 – 354)

அபம் பாலிக் (Apam Balik)

Apam-Balik-Feat-New-701x467.jpg

 

நம்மூர் வகை சுருட்டப்பத்தின் வேறு விதமான வடிவமே அபம் பாலிக். நமம்வர்களை போல, மலேசியர்கள் இதனைச் சுருட்டாமல், தட்டையாக ஒப்பீட்டளவில் பருமனாக தயாரிக்கிறார்கள். பெரும்பாலும், சுருட்டப்பத்தில் தேங்காய் சுண்டல் இருக்கும். ஆனால், மலேசியர்களின் உணவில் நிலக்கடலையை பயன்படுத்தி செய்யும் சுண்டல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இதனை தவிரவும், அபம் மாலிக்கில் சுண்டலுக்கு பதில் பாலாடைக்கட்டி, பழங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துவார்கள்.

விலை – RM 1.50 – RM 7 (LKR 51 – 238)

ஓட்டக்-ஓட்டக் (Otak-Otak)

Untitled-design-13-701x409.jpg

 

ஒரேவகை உணவுகளையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக உணர்ந்தால், இவ்வகை உணவுகளையும் ருசிபார்க்கலாம். பெரும்பாலும் ஓட்டக் எனும் இவ்வகை உணவை புரியும் படியாக சொன்னால், மீனை பயன்படுத்தி செய்யும் ஒருவகை கேக் எனலாம். இந்த உணவின் பிறப்பிடம் இந்தோனேசியாவாக இருந்தாலும், மலேசியாவிலும் இதன் தாக்கம் உண்டு. இதற்கென பிரத்தியேகமான மீனை கேக் போன்ற வடிவில் துண்டுகளாக்கி, அதனுடன் மரவள்ளிச் சாறு மற்றும் வாசனைத்திரவியங்களை உள்ளடக்கி, பைன்மர இலைகளால் அல்லது வாழையிலையினால் முழுமையாக மூடி, நெருப்பில் வாட்டி உருவாக்கப்படும் உணவாகும். இவை உடனடியாக சமைக்கப்படுபவையாக  அல்லது பதனிடப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுவகையாக உள்ளன.

விலை – RM 5 (LKR 170)

இவற்றினை தவிரவும், அயம் பெரிக் (Ayam Perik), ரெண்டங் (Rendang), புபூர் (Bubur), சம்பல் உடாங் (Sambal Udang) என்கிற மலேசிய வாசனைத்திரவியங்களையும், கடலுணவுகளையும், மாமிசங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படுகின்ற வேறுபட்ட கறிவகைகளும் உள்ளன. மலேசியா அரிசி சார்ந்த உணவுகளை அதிகமாக கொண்டுள்ளதால், இவ்வகை கறிகளையும் விதவிதமாக அவற்றுடன் இணைத்து இவற்றின் சுவையினை அனுபவிக்க முடியும்.

மலேசியா எப்படி பரந்துபட்ட எல்லைகளைக் கொண்டுள்ளதோ, அதுபோலவே அதன் உணவுசார்ந்த எல்லைகளும் ஒரு ஆக்கத்தில் அடக்கமுடியாத பல்வகமையைக் கொண்டுள்ளது. இதுதவிரவும், மலேசியாவுக்கென பெயர்போன தனித்துவமான குடிபான வகைகள் வேறாக உள்ளன. அவற்றினையும், அதன் வரலாற்றினையும் கண்டறிய தனி ஆக்கமே வேண்டும்.

மேலே குறிப்பிட்ட மலேசிய உணவுவகைகள் தவிர்த்து, நான் தவறவிட்ட ஏதேனும் சுவாரசியமான உணவுவகைகள் இருப்பின், மலேசியாவில் உள்ளவர்களோ அல்லது மலேசியா சென்று வந்தவர்களோ முகநூல் வழியாக அல்லது கருத்துரை வழியாக ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.

https://roar.media/tamil/travel/malaysian-dishes/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வெரைட்டியான உணவுவகைகள் ,  பார்க்க அழகாய், பரிமாற்ற தோதாய், பசியாற ருசியாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wacana.co_nasi-lemak-701x438.jpg

உந்த சோத்துக்கும் நெத்தலிகருவாட்டுக்கும் ஈடிணையாய் உலகத்திலை வேறை எந்தச்சாப்பாடும் இல்லை..tw_blush:

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.