Jump to content

தலைமைப் பொறுப்பு தமிழனுக்கே வேண்டும்: பாரதிராஜா பேச்சு


Recommended Posts

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா
 
 

யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது, "பேரரசு என் மீது வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவன் என்னிடம் பணியாற்றியதில்லை. என் விழுதுகள் எத்தனையோ இருந்திருக்கிறது. அந்த விழுதுகள், இதுவரை வேருக்கு வியர்வை சிந்தியதுமில்லை, பாராட்டியதுமில்லை. ஆனால் எங்கேயோ வளர்ந்த செடி என் மீது படர்ந்து, என்னைப் பாராட்டி சீராட்டுகிறது. அதுதான் எனக்குப் புரியவில்லை.

டி.ராஜேந்தர் ஒரு சுயம்பு. அவரிடம் யாருடைய பாதிப்புமே கிடையாது. அவருக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்துள்ளார். யாருக்கும் பயப்பட மாட்டார். ஏனென்றால் உண்மை பயப்படவே பயப்படாது.

மூன்று ஜாம்பவான்களோடு உட்கார்ந்திருக்கும் போது தமிழ் நடிகனாக உணர்ந்தேன் என்று விஷால் பேசினார். அது தவறு. நீ எங்கிருந்தாலும் தமிழ் நடிகன்தான். இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது. வேறு எங்குமே போய் அரசியல் செய்ய முடியாது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். வேறு எங்குமே போய் தொழில் தொடங்குவது கடினம். ஆனால், இங்கு யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.

அனைவருமே தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றோம். பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து, முடிவிலேயே தான் தேசிய கீதம் இருக்க வேண்டும். இப்போது சட்டத்தை மாற்றியுள்ளார்கள். ஏனென்றால் தேசியகீதம் பாடியவுடன் போய்விடுவார்கள் என நினைக்கிறார்கள். போகிறவர்களை இழுத்து வைத்தா தேசியத்தைப் புகுத்த முடியும். எங்கள் தமிழ் தள்ளப்படுகிறதோ என்ற பயம் எனக்கிருக்கிறது. எங்களுக்கும் தேசியப்பற்று உண்டு. ஆனால், எங்கள் தாய்ப்பாலுக்கு பிறகுதான் உலகப்பால். நம்மை அறியாமல் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கே தமிழ் கலாச்சாரம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், தமிழ்த் திரையுலகம் விட்டுவிடக் கூடாது. யார் வேண்டுமானாலும் இங்கு சங்கமிக்கலாம். ஆனால், அடையாளத்தைத் தொலைத்துவிடாதீர்கள். யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார் பாரதிராஜா

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தலைமைப்-பொறுப்பு-தமிழனுக்கே-வேண்டும்-பாரதிராஜா-பேச்சு/article9710776.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Athavan CH said:

யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

ஒவ்வொரு பட்டி தொட்டிக்கும் ஒவ்வொரு பாரதிராஜாக்கள் உருவாகவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும்: சீமான் பேட்டி

 
சீமான் | படம்: வி.எம்.மணிநாதன்
சீமான் | படம்: வி.எம்.மணிநாதன்
 
 

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?

தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறேன். ஆனால், தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே அடிப்படை அமைப்பு கெட்டுப்போய் உள்ளது. இந்தியாவின் பொருளாதார கொள்கை, கல்விக் கொள்கை, நீர் மேலாண்மைக் கொள்கை இப்படி பலவும் கெட்டுப்போய் உள்ளன.

அடிப்படை அமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் ரஜினி கருத்தில் புதிதாக ஒன்றும் இல்லை"

இவ்வாறு அவர் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகத்தை-தமிழர்தான்-ஆள-வேண்டும்-சீமான்-பேட்டி/article9711277.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.