Jump to content

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு


Recommended Posts

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

_96164886_gettyimages-671778380.jpg

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

_96166147_sanga.jpg

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட்  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வருகின்றார்.

“ நான் லோட்ஸ் மைதானத்தில் 4 நாள் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே இறுதி சந்தர்ப்பமாகும். இன்னும் சில மாதங்களில் எனக்கு 40 வயதாகின்றது. பிராந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதற்கான சரியான நேரமும் இதுதான். ஒவ்வொரு கிரிக்கெட், அல்லது விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வுக்கான நாளொன்றுள்ளது. அதுவரும்போது விலகிச்செல்ல வேண்டும்” என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

 

முதல்தர போட்டிகளில் சரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, இந்த சீசனில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன் மிடில்செக்ஸ் அணிக்கெதிராக இரு சதங்களையும் பெற்றுள்ளார். 

 

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான தொடரையடுத்த முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20240

Link to comment
Share on other sites

முதல்தரப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் சங்கக்கார

 
Sanga Article Cover Photo
icc-champions-trophy-web-banner-728-90-with-logo.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, இந்த பருவகால கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னர்  முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்திலிருக்கும் குமார் சங்கக்கார, 2015ஆம் ஆண்டு  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெற்றார். தற்பொழுது இங்கிலாந்தின் சாரே கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வரும் நிலையிலேயே குமார் சங்கக்கார தனது ஓய்வு குறித்து பிபிசி  செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிபிசியிடம் சங்கக்கார கருத்து தெரிவிக்கும்பொழுது, ”கிரிக்கெட் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் சிறந்த நிலையில் இருக்கும்போதே ஓய்வை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே நான் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் 4 நாட்களை கொண்ட போட்டியின் இறுதி ஆட்டமாகும். இன்னும் சில மாதங்களில் நான் 40 வயதை எட்டி விடுவேன். மேலும்,  இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு இறுதி தருணமாகவும் இது உள்ளது” என்றார்.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெற உள்ள T-20 போட்டிகள் வரை சாரே பிராந்திய கிரிக்கெட் கழகத்துக்காக குமார் சங்கக்கார ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுற இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பருவகால போட்டிகளுக்காக சாரே அணியில் இணைந்து கொண்ட சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 11 இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக 57 என்ற ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.

இவர் கடந்த வருட பருவகால போட்டிகளில் 1,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்த போதிலும், கடந்த வாரம் நடைபெற்றிருந்த மிடில்செக்ஸ் அணியுடனான போட்டியில் இரண்டு சதங்களை விளாசியிருந்தார். இவ்வாறான ஒரு நிலையில், எதிர்வரும்  செப்டம்பர் மாதமே தன்னுடைய முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை பெற சரியான தருணம் என சங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

”உண்மையில், தமது தகுதியை விட பெரிதாக நாம் நினைக்கின்றமை பெரிய தவறாகும். கிரிக்கெட் மட்டுமல்ல ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வு பெற வேண்டிய ஒரு தருனம் உள்ளது. குறித்த அந்த தருனத்தில் நாம் வெளியேறியாக வேண்டும். நான் மிகுந்த அதிஷ்டம் மிக்கவன். ஏனெனில், வேண்டியளவு கிரிக்கெட் விளையாடி விட்டேன். எனினும், வாழ்க்கையில் அதைவிட ருசிப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன” என்றும் சங்கா குறிப்பிட்டார்.

கிரிக்கெட் உலகின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்திலே சங்கா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பல கிரிக்கெட் வீரர்கள் லோர்ட்ஸ் மைதானத்தில் முதல்தர போட்டிகளிலிருந்து இவரைப் போன்றே கௌரவத்துடன் ஒய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், லோர்ட்ஸ் அரங்கில் உள்ள கிரிக்கெட் உலக ஜாம்பவான்களாகிய முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜெயவர்தனவின் உருவப்படங்களுக்கு அருகே, குமார் சங்கக்காரவின் உருவப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

அது குறித்து கருத்து தெரிவித்த சங்கக்கார, “இதை ஒரு பெரிய பாக்கியம் மற்றும் கௌரவமாக நினைக்கின்றேன். உண்மையில் அந்த ஓவிய கலைஞர் என்னை விட அழகாக ஓவியத்தை வரைந்துள்ளார் என்று  நினைக்கிறேன்” என நகைச்சுவையாகவே கூறினார்.

லோட்ஸ் அரங்கில் சங்கக்காரவின் உருவப்படம் லோட்ஸ் அரங்கில் சங்கக்காரவின் உருவப்படம்

”லோர்ட்ஸில் நடைபெறவுள்ள எனது இறுதிப் போட்டியில் சதம் ஒன்றை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளேன். எனினும், பூஜ்யத்துக்கு ஆட்டமிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சதம் பெறுவது குறித்து நினைக்கக்கூடாது. சதம் பெற வேண்டும் என்றே நினைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து போட்டியின் தன்மையுடன் முயசிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

20,000 ஓட்டங்களைக் கடந்தது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான் பெற்றிருந்த ஓட்டங்களை மாத்திரமே அறிந்திருந்தேன். எனினும், குறித்த சாதனையை எட்டியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

 

குமார் சங்கக்கார ஜூன் மாத இறுதியில், மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக செல்லவுள்ளார். அந்த நேரத்தில் அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் சாரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

19 வருடங்கள் கிரிக்கெட் உலகில் பிரகாசித்த குமார் சங்கக்காரவின் சிறப்பம்சமாக உள்ள அவருடைய கவர் டிரைவ் துடுப்பாட்ட முறைமை விரைவில் அஸ்தமிக்க உள்ளது.

எனினும், தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு T-20 போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னுள் இன்னும் அதிரடி ஆட்டமானது உயிரோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.