Jump to content

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும்


Recommended Posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும்
 

image_0728012e1e.jpg-எஸ்.நிதர்ஷன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதென, ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

யாழ். நகரில், ஞாயிற்றுக்கிழமையன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன கலந்துகொண்டிருந்தன.

இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத்  தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதம் நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் பகிரங்கமாக கூறிவருகின்ற நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் என்பதே தேவையற்றது என, இந்தக் கூட்டத்தின்போது,  அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாகத்  தீர்மானிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களை நீக்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் எனவும், இந்த அழுத்தத்தை மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர, தென்னிலங்கையில் உள்ள முற்போக்குக் கட்சிகளும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்துக்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன், தமிழீழ விடுதலைக்கழக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் தலைவர் சுகு சிறிதரன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்சியின் பொதுச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, உப தலைவர் ஹென்றி மகேந்திரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் கலந்துகொள்ளவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/jaffna/பயங்கரவாத-எதிர்ப்புச்-சட்டத்தை-நீக்க-வேண்டும்/71-197115

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.