Jump to content

இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்


Recommended Posts

இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில், சௌதி அரேபியாவை அடுத்து தற்போதுஇஸ்ரேலை வந்தடைந்துவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான சௌதி அரேபியாவில் இஸ்லாமிய தலைவர்களிடம் பேசிய பிறகு, விமானம் மூலம் இஸ்ரேல் வந்தடைந்தார்.

தனது இரண்டு நாள் பயணத்தில், டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இஸ்ரேலிய-பாலத்தீன தரப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய ஒரு அமைதி ஒப்பந்தத்தை ''இறுதி ஒப்பந்தம்'' என்று அதிபர் டிரம்ப் கூறியி்ருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தம் எந்த வடிவை எடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இல்லை.

இரு நாடுகளும் அவர்களுக்குள் நேரடியான பேச்சுவார்த்தை நடத்தி அதை முடிவு செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

டெல் அவிவ் வந்து சேர்ந்ததும் அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ''இணக்கம், செழிப்பு மற்றும் அமைதி " ஆகியவை நிலவும் ஒரு சகாப்தத்தில், ஒன்றாக இணைந்து வேலை செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சௌதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலுக்கு டிரம்ப் வந்த விமானம்தான் இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த முதல் விமான பயணமாக இருக்கும் ; இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் ராஜீய உறவுகள் இல்லை .

ஒன்றாக இணைந்து வேலைசெய்வதன் மூலம் தீவிரவாதத்தை தோற்கடித்து, இப்பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டு வர ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு வந்தவுடன் பேசிய உரையில் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

சௌதி அரேபியாவில் இருந்து வந்துள்ள டிரம்ப், சௌதியில் இஸ்லாமிய நாடுகளின் பல தலைவர்களை சந்தித்திருந்தார்.

அமெரிக்க அதிபரை வரவேற்ற இஸ்ரேலிய தலைவர் பெஞ்சமின் நெதன்யாஹு அமைதி தொடர்பான அவரது அர்ப்பணிப்பை தானும் பகிர்வதாக தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலத்தீனம் மோதலின் இரு பக்கமும் உள்ள இரு தரப்பினர், இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆழமான சந்தேகம் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

http://www.bbc.com/tamil/global-40000826

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன்ரை கையை தட்டிவிட்டா மனுசிக்காரி...:grin:

 

பப்பிளிக்கிலையே இப்பிடியெண்டால்......வீட்டுக்குள்ளை......கடவுளே நினைக்கவே பயமாய்க்கிடக்கு..tw_astonished:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.