Jump to content

மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து


Recommended Posts

மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து

 

 

இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

249945.4.jpg

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

 

இதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 79 ஓட்டங்களையும் சாமர கப்புகெதர 71 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

ஸ்கொட்லாந்து அணி சார்பாக பந்து வீச்சில் எவன்ஸ் மற்றும் விதின்காம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

 

அதன் பின்னர் 288 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பை உடைப்பதற்கு இலங்கை பந்து வீச்சாளர் பெரிதும் சிரமப்பட்டனர்.

 

இறுதியில் ஸ்கொட்லாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தது வரலாற்று வெற்றியினை பதிவுசெய்தது.

 

 

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கைல் கோட்சர் அதிரடியாக ஆடி 118 ஓட்டங்களை விளாசினார். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மெத்திவ் குரோஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை களத்தில் இருந்தார்.

 

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பில் எந்த பந்து வீச்சாளரும் பிரகாசிக்கவில்லை எனலாம். லக்மால் தவிர்ந்த அனைவரும் ஓட்டங்களை அதிகமாகவே கொடுத்தனர். இந்த வெற்றியின்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்கொட்லாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

http://www.virakesari.lk/article/20223

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்...சம்பியன் கப் வருது இவங்கள நம்பி எப்படி போட்டியில நான் இறங்கிறதுtw_cry:

Link to comment
Share on other sites

குசால் மெண்டிஸ் அதிரடி : அதிர்ச்சி தோல்வியிலிருந்து மீண்டது இலங்கை!

 

 

சம்பியன் கிண்ண போட்டி தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் பயிற்சி போட்டிகளில் மோதிவருகின்றது.

DM1becken-1024x529.jpg

இதன் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் மிக அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றயடைந்துள்ளது.

இந்தபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

Untitled-1.jpg

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய லக்ஷான் சந்தகன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்க சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, 22.5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து இலங்கை அணி வெற்றியிலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 51 பந்துகளில் 74 ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் தரங்க நிதானமாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

http://www.virakesari.lk/article/20287

Link to comment
Share on other sites

சந்தகனின் அபாரப் பந்துவீச்சால், ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை
LS623.jpg

சந்தகனின் அபாரப் பந்துவீச்சால், ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை

 
 
icc-champions-trophy-web-banner-728-90-with-logo.jpg

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து பயணித்திருக்கும், இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இன்று இடம்பெற்று முடிந்த இரண்டாவது ஒரு நாள் பயிற்சிப் போட்டியில், இலங்கை அணியானது 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியினைப் பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகியிருந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், டெஸ்ட் அந்தஸ்தினை இதுவரை பெறாது இருக்கும் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருந்தது.

இந்நிலையில், தொடரினை தீர்மானிக்கும் வகையில் அமைந்த இன்றைய போட்டியானது பெக்கன்ஹம் கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை கருத்திற் கொண்டு இப்போட்டியில் விளையாடியிருந்த இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்சிற்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்ததோடு உபுல் தரங்க அணியினை வழிநடாத்த நியமிக்கப்பட்டிருந்தார். அத்தோடு, நிரோஷன் திக்வெல்ல, நுவன் குலசேகர, சீக்குகே பிரசன்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் ஸ்கொட்லாந்து அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

இதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணிக்கு தமது வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் இலங்கை அணி வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

ஸ்கொட்லாந்தின் முதல் விக்கெட்டாக கடந்த போட்டியில் சதம் கடந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான கைல் கோட்சர் வெறும் ஒரு ஓட்டத்துடன், நுவன் குலசேகர மூலம் ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்தும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய நுவன் குலசேகர மற்றும் திசர பெரேரா ஆகியோர் இரண்டு மேலதிக விக்கெட்டுகளை குறுகிய நேர இடைவெளியில் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டனர்.

மத்திய வரிசையில் வந்த வீரர்களை தமது திறமைவாய்ந்த சுழல் பந்துவீச்சு மூலம் சீக்குகே பிரசன்ன மற்றும் லக்‌ஷான் சந்தகன் ஆகியோர் மைதானத்தினை விட்டு வெளியேற்றியிருந்தனர்.

இதனால் நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று, 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஸ்கொட்லாந்து அணி 166 ஓட்டங்களை மாத்திமே குவித்துக்கொண்டது. அவ்வணிக்காக தனியொருவராக போராடியிருந்த கிரைக் வொல்லஸ் 60 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றுத்தந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், லக்‌ஷான் சந்தகன் மொத்தமாக 10 ஓவர்கள்  வீசி 39 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும், சீக்குகே பிரசன்ன மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து, இலகு வெற்றி இலக்கான 167 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு துடுப்பாடக் களமிறங்கியிருந்த இலங்கை அணியானது, குசல் மெண்டிஸ் மற்றும் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோரின் அபார இணைப்பாட்டத்துடன் (114), வெறும் 22.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினைத் தொட்டது.

இலங்கை அணியின் சார்பில் அதிரடி காட்டியிருந்த குசல் மெண்டிஸ் வெறும் 51 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 74  ஓட்டங்களையும் உபுல் தரங்க 53 ஓட்டங்களையும் பெற்றுத்தந்தனர்.

இலங்கை அணியில் இன்று அலஸ்டைர் இவான்ஸ் இன் பந்து  வீச்சில் ஒரேயொரு விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்த நிரோஷன் திக்வெல்ல 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து அணியுடனான பயிற்சிப் போட்டிகளை முடித்திருக்கும் இலங்கை அணியானது அடுத்ததாக, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தமது முதல் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) மோதுகின்றது.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.