Jump to content

குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்


Recommended Posts

குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்

 

mosque-bombகுருநாகல் – மல்லவப்பிட்டியவில்  முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

mosque-bomb

கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா  அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்ததால், முரண்பாடுகள் தலைதூக்கியிருந்தன.

இதற்கிடையே, மல்லவப்பிட்டியவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ மத வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு வார காலப்பகுதியில் மூன்று வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்களுடன்  தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/05/21/news/23259

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவே... கண்டனம் தெரிவித்து விட்டது.
உலகத்தில் 46 முஸ்லீம் நாடுகள் இருந்தும், இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவே... கண்டனம் தெரிவித்து விட்டது.
உலகத்தில் 46 முஸ்லீம் நாடுகள் இருந்தும், இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

சுற்றிவரை முஸ்லீம் நாடுகளால் சூழப்பட்ட பலஸ்தீனத்தையே கண்டு கொள்ளவில்லையாம்....

Link to comment
Share on other sites

Bildergebnis für அமரிக்க பொய்

தமிழர்களைக் காக்க இந்தியா வந்ததுபோல்.....:unsure: முசுலீம்களைக் காக்க அமெரிக்கா வந்துவிட்டது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

Bildergebnis für அமரிக்க பொய்

தமிழர்களைக் காக்க இந்தியா வந்ததுபோல்.....:unsure: முசுலீம்களைக் காக்க அமெரிக்கா வந்துவிட்டது. :rolleyes:

இந்தியா போன்று "சமாதான படைகள்" என்ற அதி உன்னத இலட்சியத்துடனோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.