Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா


Recommended Posts

விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“வடக்கில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் வீண் முயற்சியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார்.

அவர் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். அவரது அழுத்தங்களுக்கு நாம் பணிய மாட்டோம்.

ஒவ்வொருவதும் போடுகின்ற தாளத்துக்கு அரசாங்கத்தினால் ஆட முடியாது.  வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள்.

பளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஊடகங்கள் தான் வேறு விதமான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன.

ஆனால் இதேபோன்ற துப்பாக்கிச் சூடுகள் பிலியந்தலவில், களுத்துறையிலும் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வழக்கமான சம்பவம் தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/05/22/news/23280

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.