Jump to content

போயஸ் கார்டன் பங்களாவில் குடியேறுகிறார் தீபக்?


Recommended Posts

போயஸ் கார்டன் பங்களாவில்
குடியேறுகிறார் தீபக்?
 
 
 

ஜெயலலிதாவின் சொந்த வீடான, சென்னை போயஸ் கார்டன் பங்களாவில், விரைவில் குடியேற திட்டமிட்டுள்ளார் அவரின் அண்ணன் மகன் தீபக். இதுதொடர்பாக, ஜோதிடர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_177490820170522003548_318_219.jpg

 

பங்கேற்பு


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண் ணன், ஜெயகுமாரின் மகன் தீபக். அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சசிகலா உறவு களுடன் நெருக்கமாக இருந்தார். மருத்துவ மனையின் முக்கிய ஆவணங்களில், தீபக் கையெழுத்திட்டதோடு, ஜெ., இறுதி சடங்கிலும், சசிகலாவுடன் பங்கேற்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறை செல்லும் முன், தன் அக்கா மகன் தினக ரனை, கட்சியின் துணை பொது செயலராக

சசிகலா நியமித்தார். இதற்கு தீபக் எதிர்ப்புதெரிவித் ததுடன், 'தினகரனின் தலைமையை ஏற்க முடியாது' என்றும் அறிவித்தார். ஆனாலும், பெங்க ளூரு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தீபக் சந்தித்துப் பேசினார்.

சமீபத்தில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தீபக், 'என் அத்தையின், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீது, எனக் கும், என் சகோதரி தீபாவுக்கும் மட்டுமே உரிமை உள்ளது. நாங்களே அவரின் வாரிசு; உயிலில், ஜெ., அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்' என்றார்.
 

தங்களுக்கே சொந்தம்


'சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பங்களா, பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள வீடு, கோட நாடு எஸ்டேட், ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட முக்கிய சொத்துக்கள் தங்க ளுக்கே சொந்தம்' என்றும், தீபக் கூறினார்.

தற்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில்யாரும் வசிக்கவில்லை; காலியாக உள்ள தால், அந்த வீட்டில் குடியேற, தீபக் திட்டமிட்டுள் ளார். ஏற்கனவே, அந்த வீட்டில் உள்ள ஜெயலலிதா, சசிகலா அறைகள், பூஜை அறை, சமையல் அறை மற்றும் முக்கிய பொருட்கள் உள்ள அறைகள் அனைத்தும், பூட்டி வைக்கப் பட்டுள்ளன.

போயஸ் கார்டனில் தங்கியிருந்த பணிப்பெண்கள்

 

பலருக்கு சம்பளம் கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுஉள்ளது. இதனால், தென் மாவட்டங் களை சேர்ந்த சில பணிப்பெண்கள், பணியாற்ற விரும்பாமல் வெளியேறி விட்ட னர். சில பெண் ஊழியர்கள் மட்டும், வீட்டை பராமரித்து வருகின்றனர்.
 

ஆலோசனை


போயஸ் கார்டனில், சசிகலா இருந்த போது, தீபக்கிற்கு ஒரு அறை ஒதுக்கி தரப்பட்டிருந்தது. தற்போது, தன் குடும்பத்தினருடன், அந்த பங்க ளாவில் முழுமையாக குடியேற, தீபக் திட்ட மிட்டுள்ளார்.

அதற்கான நல்ல நாள் பார்த்துச் சொல்லும்படி, ஜோதிடர்களிடம் அவர் ஆலோசனை கேட்டுள் ளதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1774908

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.