Jump to content

9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தை நிறுத்தினால் எமக்கு ஆட்சேபனை இல்லை ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு


Recommended Posts

9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை

 

ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு
 நமது நிருபர்

முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரித்து ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள். சரி­ச­ம­னாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் சந்­தித்து உரை­யா­டி­ய­போது இவ் வேண்­டு­கோளை அவர் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில் வரு­மாறு;

கேள்வி: நீங்கள் அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்த போது வடக்கில் உள்ள இரா­ணு­வத்தை எப்­படி அகற்ற முடியும் என்­பது குறித்து தங்­க­ளிடம் ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பி­னாரா? அது குறித்து விளக்க முடி­யுமா?

பதில்: ஆம். முழு இரா­ணு­வத்­தை­யுமே வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­று­மாறு நான் கோரு­வ­தாக என் பேச்சு அமைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி கூறினார். “ஏன்! அதில் என்ன பிழை?” என்றேன். அப்­ப­டி­யானால் எங்கள் இரா­ணு­வத்தை எங்கே கொண்­டுபோய் நிறுத்தச் சொல்­கின்­றீர்கள் என்று கேட்டார். “முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரி­யுங்கள். ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள்” என்றேன். “எல்லா மாகா­ணத்­திலும் சரி­ச­ம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை” என்றேன்.

 கேள்வி: பொலிஸ் பயிற்சிக் கல்­லூரி வடக்கில் அமைய வேண்டும் என்று கேட்­டீர்­களா? அதற்கு ஜனா­தி­பதி கூறிய பதில் என்ன?

பதில்: ஆம். எம் இளைஞர், யுவ­திகள் களுத்­து­றையில் இருக்கும் பொலிஸ் பயிற்சிக் கல்­லூ­ரிக்குச் செல்­வ­தற்குப் பயப்­ப­டு­கின்­றார்கள். தமிழ் மொழிப் பொலிஸ் பயிற்சிக் கல்­லூ­ரி­யொன்று வடக்கில் அமை­வதே சாலச் சிறந்­தது என்றேன். அதற்கு ஜனா­தி­பதி வடக்கில் இருப்­ப­வர்கள் தெற்­கிற்கும் தெற்கில் இருப்­ப­வர்கள் வடக்­கிற்கும் வந்­தால்த்தான் புரிந்­து­ணர்வு ஏற்­படும் என்றார். “எமது அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னையை உடனே தீருங்கள். நாங்கள் யாவ­ருமே தெற்கு நோக்கி வரு­கின்றோம்” என்றேன். அதற்கு ஜனா­தி­பதி உள­மாரச் சிரித்தார்.

 

கேள்வி: வடக்கில் பல போராட்­டங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­பதால் இதற்கு மத்­திய அர­சிடம் தான் தீர்­வுள்­ளது. எனவே, அவர்­களை நேர­டி­யாக சந்­தித்துப் பேச­வ­ரு­மாறு ஜனா­தி­ப­திக்கு அழைப்பு விடுத்­தீர்­களா? 

பதில்: இல்லை. அவ்­வாறு நான் கேட்­க­வில்லை. பல விட­யங்­க­ளையும் நான் எடுத்­து­ரைத்து அவற்­றிற்­கான தீர்வைப் பெறு­வது மிகவும் அவ­சரம் என்றேன். ஜனா­தி­பதி ஒன்­பது மணி­யா­கி­விட்­ட­தாலும் வேறு ஒரு நிகழ்வு தமக்கு இருப்­ப­தாலும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யாட முடியாமல் இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு விரைவில் வடக்கிற்கு ஒரு நடமாடுஞ் சேவையை நடத்த வருவதாகக் கூறினார். அதன் போது தீர்வு காணா விடயங்கள் அனைத்துக்கும் தீர்வு காணலாம் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை

 

ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு
 நமது நிருபர்

 

பதில்: ஆம். முழு இரா­ணு­வத்­தை­யுமே வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­று­மாறு நான் கோரு­வ­தாக என் பேச்சு அமைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி கூறினார். “ஏன்! அதில் என்ன பிழை?” என்றேன்.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

உண்மைதானே. வடக்கிலோ கிழக்கிலோ பிரச்சனை ஒன்றும் இல்லை.
வட கிழக்கு   அமைதியான பூங்காவாக இருக்கின்றது என உலகத்திற்கு காட்டும் ஜனாதிபதி   முழு ராணுவத்தையும் அம்பாந்தோட்டைக்கே அனுப்ப வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.