Jump to content

வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி


Recommended Posts

வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம்

நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி

 
வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம்
 

‘வடக்கு மாகாண பாதை வலை­ய­மைப்பை அபி­வி­ருத்தி செய்­வ­தில் இந்­தியா வெகு ஆர்­வ­மாக உள்­ளது. இந்­தி­யா­வின் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்து ஆரா­ய­வுள்­ளார்’

இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ‘பல­மிக்­க­தோர் இலங்கை’ பொரு­ளா­தா­ரக் கலந்­து­ரை­யா­ட­லின் தலைமை உரை நிகழ்த்­தும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

நான் அண்­மை­யில் இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­தேன். இந்­தி­யா­வின் நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­சர் நிதின் கட்­க­ரி­யைச் சந்­தித்­துப் பேசி­யி­ருந்­தேன். அவர்­கள் வடக்­கின் பாதை வலை­ய­மைப்பை அபி­வி­ருத்தி செய்­வ­தில் ஆர்­வ­மாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பூந­கரி ஊடாக மன்­னா­ருக்கு விரை­வுப் பாதை அமைக்­கப்­ப­டும். அங்­கி­ருந்து கட­லோர விரை­வுப் பாதையை அமைத்து அதன் ஊடாக கட்­டு­நா­யக்கா பன்­னாட்டு வானூர்­தித் தளத்­து­டன் இணைப்­பது முத­லா­வது திட்­டம். மன்­னா­ரி­லி­ருந்து வவு­னியா ஊடாக திரு­கோ­ண­ம­லைக்கு விரை­வுப் பாதை அமைப்­பது இரண்­டா­வது திட்­டம். இவ்­வாறு அமைக்­கப்­ப­ட­வுள்ள பாதை­கள் அனைத்­தும் தற்­போ­துள்ள பாதை­க­ளுக்கு மேல­தி­க­மா­கவே அமைக்­கப்­ப­டும். இத­னை­விட வடக்­கின் உள்­ளுர் நெடுஞ்­சா­லை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்ய விரும்­பு­வ­தாக இந்­திய அமைச்­சர் கூறி­னார் – என்­றார்.

இப்­போதே யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக, நிதின் கட்­கரி, தலைமை அமைச்­ச­ரிம் கூறி­யுள்­ளார். தனது பய­ணம் பய­னுள்­ள­தாக அமைய வேண்­டும். பாதைக் கட்­ட­மைப்­புத் தொடர்­பில் செய­லாக்க ஆய்­வு­களை தயா­ரித்த பின்­னர் இது தொடர்­பில் நேரில் வந்து ஆராய்­வ­தா­க­வும், தலைமை அமைச்­ச­ரி­டம் கட்­கரி கூறி­ய­தா­கத் தெரிய வரு­கின்­றது.

http://uthayandaily.com/story/3611.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா உள்ள வர முயல்கிறது என்றுதான் இந்தியா உள்ளே வரும் நோக்கத்தில் 1983 ல் இருந்து பல இயங்களுக்கு ஆதரவும், பயிற்சியும் தந்தது. 87ல், அடங்காமல் இருந்த புலிகளை பலத்தால் மடக்கலாம் என்று வந்து, கையை சுட்டு வெளியேறியது.

புலிகள் கொரில்லாக்களாக இருந்து, ஓடி மறைய முடியாத படையாக மாறும் வரை காத்திருந்து, அழித்து இப்போது மீண்டும் உள்ளே வரப் போகிறது.

சிங்களம் முந்திக் கொண்டு சீனாவை இழுக்கிறது. சீனா தெற்கை மட்டுமே பார்க்கிறது.

இந்தியாவோ வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது, மலையகத்தினுள்ளும் பிடியை இறுக்குகின்றது.

மேற்குலகு இந்தியா பக்கமே நிற்கும்.

இரு வல்லரசுகளின் நலத்தின் ஊடாக நமது நலத்தை பார்த்திட வேண்டும்.

அதேவேளை தமிழருடன் அதிகாரத்தை பகிர விரும்பாமல் அரசியல் செய்து, ஊர் உலகத்து சண்டியர்களை நாடும் சிங்களம் அதற்காக ஒருநாள் வருந்தும். 

ஐரோப்பிய காலணித்துவம் இலங்கை, இந்தியாவில் நடந்தேறியதற்கு காரணம், தமது இடையேயான சண்டையில், தமது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருந்து பலசாலியாக இருந்த, வியாபாரத்துக்கு வந்தவர்களிடம் ஆதரவு கோரியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் உண்மையிலேயே ரோட்டுப் போட நினைக்கின்றார்களா இல்லை ரூட்டுப்   போட நினைக்கின்றார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வாத்தியார் said:

இவர்கள் உண்மையிலேயே ரோட்டுப் போட நினைக்கின்றார்களா இல்லை ரூட்டுப்   போட நினைக்கின்றார்களா

ரோட்டு, ரூட்டு..... என்ன வித்தாயாசம் வாத்தியார்? 

இருந்துதான் யோசிக்கவேனும்.... இல்லாட்டி வாத்தியார்... சாத்திப்போடுவார்... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ரோட்டு, ரூட்டு..... என்ன வித்தாயாசம் வாத்தியார்? 

இருந்துதான் யோசிக்கவேனும்.... இல்லாட்டி வாத்தியார்... சாத்திப்போடுவார்... ?

ரோட்டு.... மக்கள் பாவனைக்கு
ரூட்டு..... அதைப் போடுபவர்கள் பாவனைக்கு tw_blush::100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.