Jump to content

திரை விமர்சனம்: லென்ஸ்


Recommended Posts

 
lensreview_3166727f.jpg
 
 
 

கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான்.

அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’.

இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அரட்டையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்போதுதான் அது தனக்கு வைக்கப்பட்ட பொறி என்பது அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொறி என்ன? இணைய வக்கிரங்களின் விபரீதப் பரிமாணங் கள் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக் கதையின் மூலம் சொல்கிறார் இயக்குநர்.

வக்கிர ஆசாமியைப் பொறிவைத்து இழுக் கும் யோகன் (ஆனந்தசாமி) அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் அதிரவைக்கிறார். அரவிந் தின் நண்பன் காவல் துறையை நாட, அரவிந் துக்கும் யோகனுக்கும் என்ன தொடர்பு என்பது திரையில் விரிகிறது. அரவிந்தைப் போன்றவர் கள் தாங்கள் செய்யும் செயல்களின் முழு விபரீதத்தையும் உணரும் வகையில் திரைக்கதையின் போக்கு உள்ளது.

தனிநபர்களின் அந்தரங்கத்தைப் படம் எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றி அற்ப சுகம் அடையும் கும்பலின் நிஜ முகத்தை இயக்குநர் அம்பலப்படுத்துகிறார். சிறிய சபலம், பலவீனம் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாத அளவில் ஆழமான வக்கிரத்துடனும் தெளிவான வழிமுறைகளுடனும் செயல்படும் இந்தப் போக்கினைப் புரியவைக்கிறார். அடுத்தவரின் அந்தரங்கத்தை நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு பார்க்கும், பரப்பும், மனிதர்கள் தங்களுக்கோ, தங்களைச் சேர்ந்த வர்களுக்கோ அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போகிறார்கள் என்பதைக் காட்சிப் படுத்திய விதம் வலுவானது. இக்காட்சி இதுபோன்ற மனிதர்களின் மனசாட்சியைச் சிறிதேனும் அசைக்கும் வகையில் உள்ளது. தொழில்நுட்பம் என்பது பலமுனைகளிலும் கூரான கத்தி என்பதையும்; யாரும் அதற்கு இலக்கு ஆகலாம் என்பதையும் படம் காட்டிவிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களின் குமுறலை ஏஞ்சல் என்னும் பாத்திரத்தின் மூலம் மிக அழுத்தமாகக் காட்டுகிறார் இயக்குநர். இணையத்தில் தன் அந்தரங்கம் பதிவேற்றப் பட்டதையும் பலரும் அதை ரசித்துப் பார்ப்பதையும் அறிந்த அந்தப் பெண், தினமும் ஆயிரம் பேர் தன்னை வன்புணரும் வேதனைக்கு ஆளாவதாகக் குறிப்பிடுவது அடுத்தவரின் அந்தரங்கத்தைக் காண விழைபவர்களின் மனசாட்சியை உலுக்கக் கூடியது. எப்போதும் மெய்நிகர் உலகில் அற்ப சுகம் நாடும் கணவனைப் பற்றி மனைவியின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதையும் இயக்குநர் நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறார்.

அந்தரங்கங்கள் படம்பிடிக்கப்படுவது, பதிவேற்றம் செய்யப்படுவது ஆகியவை குறித்த காட்சிகள் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. ஆபாசத்தையே மையப் புள்ளியாகக் கொண்ட கதை என்றபோதிலும், இந்தப் படம் துளியும் ஆபாசமற்ற காட்சியமைப்பைக் கொண்டிருப்பது எடுத்துக்கொண்ட விஷ யம் சார்ந்த இயக்குநரின் நேர்மையான அக்கறையைக் காட்டுகிறது.

படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படத் தில் வசனங்களும் உதட்டசைவுகளும் பொருந்தவில்லை என்பதை மன்னித்துவிட லாம். மற்ற குறைகளை அப்படித் தள்ளிவிட முடியாது. பழிவாங்குவதற்காக மிகவும் மெனக்கெடும் ஏஞ்சலின் கணவன், அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவரைப் பொறுத்தவரை சரியான முடிவாக இருக்க லாம். ஆனால், அது எப்படி அரவிந்துக்கான தண்டனையாக இருக்க முடியும்? தன்னுடைய மனைவியை இழிவுபடுத்தியவனைத் தண் டிக்க அவனுடைய மனைவியைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத் தின் ஆதார உணர்வுக்கு வலு சேர்க்கிறது. எந்த இடத்திலும் அதிராமல் அதே சமயம் பார்வையாளர்களிடத்தில் தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் நுட்ப மாகச் செயல்பட்டிருக்கிறார் பிரகாஷ் குமார். எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் அரை இருட்டில் நடந்தாலும் காட்சிகள் தெளிவாக மனதில் பதியும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

அரவிந்தாக நடித்திருக்கும் ஜெயப்பிர காஷ், அவரைப் பொறிவைத்துப் பிடிப்பவ ராக வரும் ஆனந்த்சாமி இருவரும் தேவை யான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஏஞ்சலாக வரும் அஸ்வதி லால் அவமானத் தின் வேதனையைத் தத்ரூபமாக வெளிப் படுத்துகிறார்.

துல்லியமான தகவல்களுடனும் பொறுப்பு உணர்வுடனும் எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றக்கூடியவை. இது ஒரு திரைப்படமாகவும் நேர்த்தியாக உருப்பெற்றி ருப்பது கூடுதலான பாராட்டுக்குரியது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-லென்ஸ்/article9708941.ece?homepage=true

Link to comment
Share on other sites

"லென்ஸ்" - கவனம் பெற வேண்டிய அவசியம்

 
 
எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்
 

 

lens movie

பயணியின் கவிதையொன்று "கண்கானிப்புகள் மிகுந்த இந்த நகரத்தில்"என்ற வரிகளுடன் தொடங்கும்.நாம் ஆயிரம் கண்களால் கவனிக்கப்படுவது நவீன யுகத்தில் தவிர்க்க இயலாத செயல்.பல மன உளைச்சல்களை இது கொடுத்தாலும் ஒரு பகடியுடன் நாம் அதை கடந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆயிரமாய் நிர்வாண உடல்களை பதிவேற்றம் செய்யவும் அவற்றை  தரவிறக்கம் செய்யவும் வாய்ப்பளித்திருக்கும் அல்லது அப்படி ஒன்றுக்கு நிர்பந்திக்கும் பதட்டமிக்க நூற்றாண்டின் மனசாட்சியை கொடூர மௌனமாய் வெளிப்படுத்திருக்கும் திரைப்படமே "லென்ஸ்"

படத்தின் ஆக்க முறை கதைசொல் நேர்த்தி என எதிலும் சோடையாகாமல் தன் உலக சினிமா புத்தியை காட்டாமல் முழு திருப்தியளிக்கும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.வெற்றிமாறன் தயாரிப்பு என்பதை தவிர வேறெந்த எதிர்பார்ப்புகளையும் தூண்டாத படைப்பாக புதிய முகங்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

யாரும் எடுக்க தயங்கும் களம் ஆனால் எடுக்கப்படவேண்டிய களமாக இருந்த போர்ன் வீடியோக்கள்,ரொம்ப மலினமாய் கிடைக்கும் வீடியோ சாட்கள் என்று வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் சாத்தான்களை அப்பட்டமாய் எந்த வித சமரசங்களுக்கும் இடமளிக்காமல் தோலுரித்திருக்கிறது.அதிக ஒப்பாரி காட்சிகளையும் ஓவர் ஆக்ட் எமோஷன்களையும் வைத்து படைப்பை கெடுத்து கொள்ளாமல் எடுத்திருக்கிறார் இராதாகிருஷ்ணன்.

மாநகரம்,8தோட்டாக்கள் போன்ற படங்களுக்கான ஊடக வெளிச்சம் இப்படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே..?திரைத்துறைக்குள் இயங்கிகொண்டிருக்கும் புதிய படைப்பாளிகளுக்குள் ஒரு உரையாடலை இது தோற்றுவிக்கலாம் என்றாலும் இதற்கான சரியான அங்கீகாரித்திற்கு சற்று குறைச்சலானதாகவே இருக்கும்.

"கதவுக்குள்ள நடக்குற விஷயம் கடைத்தெருவுக்கு வர காலம் இது"என்று வசனங்களில் கூட இணைய உலகத்தை சரியாக படம் பிடித்திருக்கும் படைப்பு தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் தாமதமான வருகையென்றாலும்.இப்பொழுதாவது இப்படி ஒரு படைப்பிற்காக சற்று சந்தோசம் கொள்ளலாம்.இருப்பினும் ஜனரஞ்சக பொதுப் புத்தியில் இதற்கான மதிப்பு என்பது ஒரு நீலப்படத்திற்கு ஒப்பானதாக இருப்பதை திரையரங்கில் காண முடிந்தது.வரக் கூடாத படமொன்றிற்கு வந்து விட்டது போலவே அனைவரும் தங்கள் ஒழுக்கம் இப்படத்தை காண்பதால்  கெட்டு விடுவது போன்ற உரையாடல்களே படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்தது.

பார்சினோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பிபிசியின் கவனத்தை ஈர்த்திருக்கும் படத்திற்கு இப்படியான வரவேற்பேயை பொதுஜன புத்தி வழங்குகிறது.அறிவு ஜீவி தளத்திலாவது கொஞ்சம் உரையாடல் நடக்க வேண்டுமென்பதே இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம்.

வாய் பேசும் திறனற்ற தன் ஊமை காதலியுடன் தனக்கு கிடைக்கும் புதிய உலகத்தின் அந்தரங்கங்கள் வீடியோ காட்சியாக இணையத்தில் பரப்பப்படுவதால் மீண்டும் சூன்யமாகும் தன் வாழ்க்கையை பழி தீர்த்து கொள்வதுடன் முடித்துகொள்ளும் சிறிய சராசரி மனதின் நியாயமான குரலே"லென்ஸ்"எங்கேயும் பார்வையாளனை குற்றவுணர்வுக்குள்ளாக்கி தன் நியாய கருத்துகளை உரைக்காத நேர்த்தியான படைப்பு.

தயாரிப்பு குழுவினரின் மார்க்கெட் திறமையினால் சில புதிய படைப்பாளிகளின் திரைப்படங்கள் ஊடக வெளிச்சமுடன் வசூல் வெற்றியையும் பெற்று விடுகின்றன.நல்ல படைப்புகள் கவனிக்கப்படும் போன்ற ஒரு ஜல்லியடிக்கும் விஷயத்தையும் இதனுள் புகுத்தி விடுகின்றன.அத்தகைய தந்திரங்களை கையால தெரியாத படங்கள் பெரிய உரையாடல்களை நிகழ்த்தாமல் விருதுகளுடன் அழுந்தி விடுகின்றன. அத்தகையை ஒரு இழப்பிலிருந்து காப்பாற்றப் பட வேண்டிய திரைப்படம்.

 

http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/33082-2017-05-17-06-26-50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தப்படத்தை இணையத்தில் பார்த்தேன். voyeurism எனப்படும் பிறருடைய அந்தரங்கத்தை பார்த்து ரசிக்கும் மனிதர்களின் மனநிலையை தெளிவாகக க‌ட்டப்படுள்ளது.

"அடுத்தவரின் அந்தரங்கத்தை நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு பார்க்கும், பரப்பும், மனிதர்கள் தங்களுக்கோ, தங்களைச் சேர்ந்த வர்களுக்கோ அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போகிறார்கள்"

இதுதான் கதையின் சுருக்கம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நேற்று வெள்ளி இரவை சந்தோசமாக கழிக்க ஒரு படம் பார்ப்பம்
என்று வெளிக்கிட்டு லென்ஸ் படத்தை பார்க்க தொடங்குகின்றேன்
முதல் 20 நிமிடங்கள் கழிகின்றது ... "ஏன்டா இதை பார்க்க தொடங்கினேன்.. இப்படி Dry ஆக இருக்குதே" என்று படத்தை இடையில்
நிற்பாட்டி 'தொண்டன்' படத்தை போட்டால் நல்லம் போல என்று மனைவியிடம் சொல்லிவிட்டு "ஆனால் சமுத்திரகன்னி
அட்வைஸ் செய்தே கொல்வாரே.. "  என யோசிக்கின்றேன்.

நிரப்பின கிளாசையும் போட்ட படத்தையும் அரைவாசியில் கைவிட்டதாக நாளைக்கு வரலாற்றில் என்னைப் பற்றி எங்கும் வந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 'லென்ஸ்' படத்தின் மிச்சத்தையும் தொடர்கின்றேன்..

ஒரு 30 நிமிடம் கழிகின்றது... ஒரு பெண்ணின் ஆடையை ஒவ்வொன்றாக களையும் சீன் ஒன்று வருகின்றது...
"ஆஹா வெள்ளி இரவுக்கு ஏற்ற படமடா" என்று மனசுக்குள் ஆனந்தம் எழுகின்றது.

படம் தொடர்ந்து மையப்புள்ளிக்கு வருகின்றது..

கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளினூடாக அதிர்வலைகள் ஏற்படுகின்றன. நான் அடிக்கடி காணும் எண்ணற்ற Hidden camera காட்சிகளின் பின்னால் இருக்கும் அவலம், அதில் உள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள், அவ் வீடியோக்களை எந்தவித குற்றவுணர்ச்சியும் பார்க்கும்
என்னைப் போன்றவர்களின் மனவோட்டங்கள் என்று ஒவ்வொரு காட்சியும் மனசுக்குள் கத்தி கொண்டு கீறீ கீறி கடந்து செல்கின்றது...

நாம் மிகவும் இலேசாக கடந்து விட்டு செல்லும் ஒரு விடயத்தின் பின்னால் இப்படி ஒரு அவலம் இருக்கு என்பதை காட்டும் காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நிர்வாணமாக தோன்றும் பெண் தன் மனைவிதான் என்பதை முகத்தை பார்த்த பின் தான் கணவன் உணரும் ஒரு கட்டமும் அதை காட்டியன் நக்கலாக கேட்கும் காட்சி
உளவியல் சார்ந்த சாட்டையடி.
அதே போன்று வாய் பேச முடியாத பெண் தன் வலியை எழுதி எழுதி காட்டும் காட்சி மனசுக்குள் ஏற்படுத்தும் வலியும் மிகப் பெரியது

இப் படத்தை 14 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுடன் பார்க்க முடியாது /பார்க்கவும் கூடாது. நானும் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்கவில்லை.

ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இதை பார்த்ததால் நிழலி உடனே திருந்தி  நல்லவன் ஆகிட  மாட்டான்.
ஆனால் கண்டிப்பாக ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தெரியாமல் அவர்களின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்படும் hidden camera வீடியோக்கள் whatsup இலும் வேறு social media க்களின் மூலமும்
எனக்கு கிடைக்குமாயின் அதை இன்னொருவருக்கு forward பண்ணும் போது ஒரு சில வினாடிகளாவது சிந்திக்க வைக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பார்த்தனீங்கள்? யூ ரியூப்பிலா?

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

எங்கே பார்த்தனீங்கள்? யூ ரியூப்பிலா?

தரமான டிவிடி () நேற்று முந்தினத்தில் இருந்து இங்கு கிடைக்கின்றது ரதி.  அங்கும் அநேகமாக கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

தரமான டிவிடி () நேற்று முந்தினத்தில் இருந்து இங்கு கிடைக்கின்றது ரதி.  அங்கும் அநேகமாக கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி...கட்டாயம் பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

On 2017-6-18 at 0:16 AM, நிழலி said:

நேற்று வெள்ளி இரவை சந்தோசமாக கழிக்க ஒரு படம் பார்ப்பம்
என்று வெளிக்கிட்டு லென்ஸ் படத்தை பார்க்க தொடங்குகின்றேன்
முதல் 20 நிமிடங்கள் கழிகின்றது ... "ஏன்டா இதை பார்க்க தொடங்கினேன்.. இப்படி Dry ஆக இருக்குதே" என்று படத்தை இடையில்
நிற்பாட்டி 'தொண்டன்' படத்தை போட்டால் நல்லம் போல என்று மனைவியிடம் சொல்லிவிட்டு "ஆனால் சமுத்திரகன்னி
அட்வைஸ் செய்தே கொல்வாரே.. "  என யோசிக்கின்றேன்.

நிரப்பின கிளாசையும் போட்ட படத்தையும் அரைவாசியில் கைவிட்டதாக நாளைக்கு வரலாற்றில் என்னைப் பற்றி எங்கும் வந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 'லென்ஸ்' படத்தின் மிச்சத்தையும் தொடர்கின்றேன்..

ஒரு 30 நிமிடம் கழிகின்றது... ஒரு பெண்ணின் ஆடையை ஒவ்வொன்றாக களையும் சீன் ஒன்று வருகின்றது...
"ஆஹா வெள்ளி இரவுக்கு ஏற்ற படமடா" என்று மனசுக்குள் ஆனந்தம் எழுகின்றது.

படம் தொடர்ந்து மையப்புள்ளிக்கு வருகின்றது..

கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளினூடாக அதிர்வலைகள் ஏற்படுகின்றன. நான் அடிக்கடி காணும் எண்ணற்ற Hidden camera காட்சிகளின் பின்னால் இருக்கும் அவலம், அதில் உள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள், அவ் வீடியோக்களை எந்தவித குற்றவுணர்ச்சியும் பார்க்கும்
என்னைப் போன்றவர்களின் மனவோட்டங்கள் என்று ஒவ்வொரு காட்சியும் மனசுக்குள் கத்தி கொண்டு கீறீ கீறி கடந்து செல்கின்றது...

நாம் மிகவும் இலேசாக கடந்து விட்டு செல்லும் ஒரு விடயத்தின் பின்னால் இப்படி ஒரு அவலம் இருக்கு என்பதை காட்டும் காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நிர்வாணமாக தோன்றும் பெண் தன் மனைவிதான் என்பதை முகத்தை பார்த்த பின் தான் கணவன் உணரும் ஒரு கட்டமும் அதை காட்டியன் நக்கலாக கேட்கும் காட்சி
உளவியல் சார்ந்த சாட்டையடி.
அதே போன்று வாய் பேச முடியாத பெண் தன் வலியை எழுதி எழுதி காட்டும் காட்சி மனசுக்குள் ஏற்படுத்தும் வலியும் மிகப் பெரியது

இப் படத்தை 14 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுடன் பார்க்க முடியாது /பார்க்கவும் கூடாது. நானும் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்கவில்லை.

ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இதை பார்த்ததால் நிழலி உடனே திருந்தி  நல்லவன் ஆகிட  மாட்டான்.
ஆனால் கண்டிப்பாக ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தெரியாமல் அவர்களின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்படும் hidden camera வீடியோக்கள் whatsup இலும் வேறு social media க்களின் மூலமும்
எனக்கு கிடைக்குமாயின் அதை இன்னொருவருக்கு forward பண்ணும் போது ஒரு சில வினாடிகளாவது சிந்திக்க வைக்கும்.

 

பார்த்தபின் எனக்கும் இப்படிதான் இருந்திச்சு, நல்லதொரு சமூக விழிப்புணர்வு படம். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்தேன்...இந்தப் படத்தை முக்கியமாய் ஆண்கள் அதுவும் முக்கியமாய் ஒரு பெண் எப்ப காட்டுவாள் பார்க்கலாம் என்று அலையும் ஆண்கள்tw_angry: கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...படத்தில முகமூடியாய் சல்மான்கானை பயன்படுத்துவது சுப்பர்:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.