Jump to content

ஞானசார விரைவில் இஸ்லாத்தை ஏற்பார் இன்சா அல்லாஹ்; பஹத் ஏ.மஜீத் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,

மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,

இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால் வளர்க்கப்பட்டது, இஸ்லாத்தை இந்த உலகிற்கு பரப்பிய இறைத்துாதர்கள் மிகவும் அல்லல் பட்டனர், வஞ்சிக்கப்பட்டனர், அப்படித்தான் இறுதி துாதர் முஹம்மத் நபியவர்களும், அவர்களை பின்பற்றும் நாம் நிறைய விடயங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. உமர் (றழி) அவர்கள் நபியவர்களை வாளை எடுத்து வெட்டு வந்தவர் இறுதியில் கலீபா ஆனார், இன்னும் பலர் மிகக்கேவலாமாக பேசினர் பின்னர் அனைவரும் சுவர்க்க வாசிகள் ஆனர். அனைத்தும் நபியவர்களின் பொறுமையாலும் நடத்தையாலுமே.

ஆனால் இன்று எங்கள் நடத்தைகள் வாழ்க்கை முறைகள் இஸ்லாமியத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது, ஹிஜ்ரதுக்கு முன்னர் அண்ணலார் எதைச் செய்தார்களோ அதனை செய்ய வேண்டும், இனவாதிகளை எங்கள் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் மாற்ற வேண்டும். இன்று அதிகம் முஸ்லிம்கள் பற்றி அறியாமையிலே எங்கள் மீது சீறிப்பாய்கின்றனர். இஸ்லாத்தை அதன் துாய இலகு வழியில் அவர்களுக்கு சொல்ல வேண்டும். அவர்களின் மொழியில் அண்ணலாரின் பண்புகளை உரக்க உரைக்க வேண்டும். ஞானசார விதிவிலக்கல்ல.

ஞானசார தேரரை நான் ஒருமுறை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், நான் முஸ்லிம்களின் நண்பன் எனக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய அதிக அறிவு உள்ளது, நான் பிரச்சினை படுவது இனவாதம் கக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் அமைப்புகள் உடனுமே என்றார், இந்த நாட்டில் தேரவாத புத்த மதத்தை பரப்ப நான் பாடுபடுகிறேன், எனக்கு என்மதம் முக்கியம் அதனை உலகறிய செய்ய வேண்டும். முஸ்லிம் மக்கள் எனக்கு விரோதிகள் அல்லர் நான் அதிகம் கோபப்படுவது தவ்ஹீத் ஜமாஅத் உடனும் றிசாத் பதியுதீன் உடனுமே என்றார் காரணம் அவர் காட்டை அழிக்கிறார், தவ்ஹீத் எங்கள் பிள்ளைகள மதம் மாற்றுகின்றனர் என்றார்.

இப்படி இந்த கலந்துரையாடல் காரசாரமாக நீண்டாலும், ஞானசார ஒரு ஏவுகோல்தான் அவரை ஏவி விடுவுார்தான் சூத்திரதாரிகள் என்பதை புரிந்து கொண்டேன், நான் சொன்னேன் இன்னும் நன்றாக படியுங்கள், நபியவர்கள் காலம், கலீபாக்கள் காலம், உமையாக்கள் காலம் என்பவற்றை படியுங்கள். இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் நீங்களும் சத்தியத்தை ஏற்பீர்கள் என்றேன். அவர் கோபத்துடன் சிரித்தார்.

பொதுபலநேனா பற்றிய முழுவிவரக் கட்டுரையினை யாத்து அவரிடம் சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்தேன், அப்போது அவர் முஸ்லிம்கள் கெட்டிக்காரர்கள் என்றார். அந்த கட்டுரையின் லின்க் (தமிழ் வடிவம்) http://fahathofficialblog.blogspot.com/2016/12/blog-post_9.html

இறைவன் அவருக்கு ஹிதாயத் வழங்க வேண்டும், அவர் இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் இஸ்லத்தை ஏற்பார், ஏற்க வேண்டும். என்றார் பஹத் ஏ.மஜீத்

http://www.ceylonmuslim.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு சுன்னத்துச் செய்யும் நிகழ்வை ஆப்கானிஸ்தானில் வைச்சால்.. நல்லது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அவருக்கு சுன்னத்துச் செய்யும் நிகழ்வை ஆப்கானிஸ்தானில் வைச்சால்.. நல்லது. tw_blush:

:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அவருக்கு சுன்னத்துச் செய்யும் நிகழ்வை ஆப்கானிஸ்தானில் வைச்சால்.. நல்லது. tw_blush:

நாங்களும்  பார்க்கவேணும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

அவருக்கு சுன்னத்துச் செய்யும் நிகழ்வை ஆப்கானிஸ்தானில் வைச்சால்.. நல்லது. tw_blush:

 

6 hours ago, alvayan said:

நாங்களும்  பார்க்கவேணும்.......

உங்க கேரளத்தில சாமியார் ஒருவருக்கு நடந்ததை நினைக்க, இவருக்கு வெட்டு 100% தான். இவரும் கள்ளச்சாமி தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.