Jump to content

முஸ்லிம்கள் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும் அதிகாரிகள் அத்துமீறவேண்டாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்.ரீ.ஹைதர் அலி: பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தகைய பிழையான நிர்ப்பந்தங்களை நிருவாகிகள் ஏற்படுத்துவதென்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்நாட்டில் உள்ள தேசிய இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய கலாச்சார உடைகளை அணிவதற்குரிய பூரண உரிமையுள்ளது. மேலும் இலங்கையில் ஆசிரியைகள் சேலை அணிந்துதான் கடமைக்கு வர வேண்டும் என்ற எந்தவொரு சட்டமும் கிடையாது.

தற்போது நாட்டிலே இனவாதம் தலை தூக்கியிருக்கின்ற ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்க நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும். அவர்களுக்கென பிரத்தியேகமான கலாச்சாரமும் மத உரிமைகளும் உள்ளபோது இவ்வாறு கட்டாயப்படுத்துவதென்பதனை ஒரு மனித உரிமை மீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு முன்னதாகவே தெரிவித்திருக்கின்றோம். இருப்பினும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இன்றும் இத்தகைய வற்புறுத்தல்கள் விதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறன விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும், உரிய அதிகாரிகளினதும் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்துள்ளதோடு இது விடயம் தொடர்பாக மாகாண சபையிலும் பேசியிருக்கின்றோம்.

ஆகவே நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது முஸ்லிம் பெண்களுடைய தனித்துவமான அபாயா (Abaya) உடைகளை அணிவதில் ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற பாடசாலை அதிபர்கள் அல்லது நிருவாகிகள் இருந்தால் கண்டிப்பாக அவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழ் பாடசாலைகளில் கடமை புரிகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் யாராவது இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால் அது விடயம் தொடர்பாக எங்களுக்கு உடனடியாக அறியத்தருவதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலும் இவ்வாறான நிபந்தனைகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சேலை அணிய வேண்டும் என்ற எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது நீங்கள் தொடர்ச்சியாக உங்களுக்கான பிரத்தியேக ஆடைகளை அணிய முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

lankamuslim.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளில் மதச் சீருடைக்கு இடமில்லை. யார் ஆகினும்.. பாடசாலை சீருடை மட்டும் தான் அணிய வேண்டும். பாடசாலை சீருடை என்பதே.. மத.. இன.. வர்க்க.. பேதமற்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து.. வேற்றுமையற்ற மனநிலையில்.. மாணவர்களிடம் கல்வியை ஆளப் போதிப்பதே நோக்கம்.

அதில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகள்.. பிற்போக்குவாதிகள்... குறுக்கீடு செய்வது வருந்தத் தக்கது மட்டுமன்றி.. அந்த மத ஒழுக்கத்தில் உள்ள சிலரின் பிற்போக்குத் தனமே... இவ்வாறான அடாத்தான.. விளக்கமற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது.  இவை கண்டிக்கப்படவும் தவிர்க்கப்படவும் வேண்டும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். 

எல்லாப் பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே. மதத்தால்.. அவர்களிடம் மமதையை.. மத வெறியை ஊட்டுவது.. தவறாகும். அது ஒரு வகை அதி தீவிரவாதமாகும். tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.