Jump to content

பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்த பின்னணி என்ன? #VikatanExclusive


Recommended Posts

பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்த பின்னணி என்ன?⁠⁠⁠⁠ #VikatanExclusive

 
 

தம்பிதுரை

பிரதமர் மோடியைத் தம்பிதுரை எம்பி சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு, அவர்கள் தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் தரப்பு ஆவணங்களைக் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் தம்பிதுரை, பிரதமர் மோடியைச் சந்தித்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பிரதமருடன் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தடுத்த சந்திப்புகள் அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை எதற்காக தம்பிதுரை சந்தித்தார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம்.

"டெல்லிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி கொடுத்த தகவல் தம்பிதுரைக்கு தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே பிரதமர் மோடி புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்திருந்தார். அந்தவிழாவில் தம்பிதுரையும் கலந்துகொள்வதற்கான திட்டம் இருந்தது. விழாவில் பங்கேற்ற தம்பிதுரை, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியிடம் சில நிமிடங்கள் பேசியுள்ளார். அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சி அரசியல்குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்திலுள்ள விசாரணை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவருடன் 45 நிமிடங்கள் மோடி பேசியுள்ளார். அப்போது, தமிழக அரசியல், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்திலுள்ள முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. முன்மொழியும் வேட்பாளருக்குத் தம் அணியின் ஆதரவு நிச்சயம் உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியதாகத் கூறப்படுகிறது. இதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

பன்னீர்செல்வம்

இதற்கிடையில், மோடியிடம் இரண்டு அணிகள் ஒன்றிணைவதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் விரிவாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, 'ஒருவாரம் பொறுமையாக இருங்கள். நல்ல முடிவு வரும்' என்று பா.ஜ.க. மூத்த அதிகாரி ஒருவர் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலைச் சின்னம் முடக்கம் ஆகியவை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. கட்சியில் தங்களுக்குத்தான் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லி சசிகலா அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டிபோட்டு அஃபிடவிட்டை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் ஏற்கெனவே 43 லட்சம் பேரின் அஃபிடவிட் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. நேற்று, மேலும் 10 லட்சம் பேரின் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சசிகலா அணியில் 1,422 பேரின் அஃபிடவிட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் காலஅவகாசம் பெற்று, தற்போது அஃபிடவிட் தாக்கல்செய்ய அதிக முயற்சி எடுத்துவருகின்றனர்.

இரண்டு அணிகள் கொடுக்கும் அஃபிடவிட் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க உள்ளது. அந்த முடிவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக வந்தால், சசிகலா அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். அதேநேரத்தில், சசிகலா அணிக்கு சாதகமாக வரும்பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்த்து இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கின்றனர்.

அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது, அந்த அணியில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதற்கு தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்டுவதற்காகத் தங்களின் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இது, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒருபுறத்தில் ஓ.பன்னீர்செல்வம், இன்னொரு புறத்தில் தங்கள் தரப்பு எம்எல்ஏ-க்களால் கொடுக்கப்படும் நெருக்கடி. இதையெல்லாம் கருத்தில்கொண்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பு கவனமாகக் காய் நகர்த்திவருகிறது. அணிகள் ஒன்றிணைக்கும் விவகாரத்தில்கூட எந்தமுடிவையும் வெளிப்படையாக எடுக்க முடியாமல் அவர்கள் காலம்கடத்திவருகின்றனர்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், பா.ஜ.கவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சித்துவருகின்றனர். புத்தக வெளியீட்டு விழாவைப் பயன்படுத்தி, தம்பிதுரை மோடியைச் சந்தித்துள்ளார். அவரிடம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முன்மொழியும் வேட்பாளருக்குத் தங்களது ஆதரவு நிச்சயம் உண்டு என்பதையும் சொல்லிவிட்டு வந்துள்ளார். பா.ஜ.க-வின் கருணைப்பார்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருக்குக் கிடைத்தால், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும். அதற்கு இடம்கொடுக்கக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் கவனமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பதுபோல ஒரு பதிவு போடப்பட்டது. அதற்கான பல்ஸைப் பார்த்த பிறகு, அந்தப் பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/89854-why-thambidurai-met-narendra-modi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.