Jump to content

ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா


Recommended Posts

ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா

 

 
 
 
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்
 
 

1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார்.

2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார் பதக்கிடமிருந்து த்ரிஷாவுக்கு அழைப்பு வந்தது. அவர் இசையமைத்த ‘மேரி சூனரு உத் உத் ஜாயே’(Meri Chunar Udd Udd Jaye) என்ற இந்தி பாப் பாடலின் மியூசிக் வீடியோவில் ஓவியத்திலிருந்து இறங்கிவரும் தமயந்தியாக நடித்தார்.

3. அந்த மியூசிக் வீடியோவைக் கண்ட ப்ரியதர்ஷன் ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார். ஆனால், த்ரிஷா இரண்டாவதாக ஒப்புக்கொண்ட ‘மௌனம் பேசியதே’ அவரது முதல் படமாக வெளியாகி முந்திக்கொண்டது. ‘லேசா லேசா’ படத்துக்காக ஊட்டியில் அமைக்கப்பட்டிருந்த பண்ணை வீடு செட்டில் 45 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடக்க இருந்தது. கார்ப்பரேட் நிறுவனமொன்றில் உயர் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவந்த த்ரிஷாவின் அம்மா, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுடன் படப்பிடிப்புக்குச் சென்று தங்கினார். சினிமாவுக்காக மகளின் பெயரை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டதில் தொடங்கி, அன்றுமுதல் இன்றுவரை த்ரிஷாவின் கால்ஷீட் உள்ளிட்ட திரையுலக விவகாரங்களைக் கவனித்துவருகிறார் த்ரிஷா அம்மாவான உமா கிருஷ்ணன்.

4. விக்ரம், கமல் உட்படப் பலரும், ‘நீங்களும் நடிக்க வாருங்கள்’ என்று அழைத்தபோது “வீட்டுக்கு ஒரு நட்சத்திரம் போதும்” என்று மறுத்துவிட்ட உமா, மகளின் வற்புறுத்தலுக்காக பாஸ்மதி அரிசி விளம்பரம் ஒன்றில் த்ரிஷாவின் அம்மாவாகவே தோன்றியிருக்கிறார். த்ரிஷாவுக்கு சினிமா வாய்ப்பு வந்தபோது ‘கூடவே கூடாது’ என்று அடியோடு மறுத்தவர் அம்மா. “சினிமா வாய்ப்பு எல்லோரையும் தேடி வருவதில்லை” என்று ஆதரித்தவர் அப்பா. த்ரிஷா அப்பாவின் செல்லம். ஹோட்டல் நிர்வாகத் துறையிலிருந்த அப்பாவுக்கு ஹைதராபாத், மும்பையில் உலகத் தரத்தில் ரெஸ்டாரெண்ட் வைத்துக்கொடுக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் கனவாக இருந்தது. ஆனால், அந்தக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் காலமாகி விட்டார்.

5. நயன்தாரா உள்ளிட்ட போட்டிக் கதாநாயகிகள், கதாநாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவருடனும் நெருங்கிப் பழகி நட்புப் பாராட்டும் த்ரிஷாவுக்கு, கமல் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. ‘தூங்காவனம்’ படத்தில் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்க வைத்து, “இது உனக்கு 50-வது படம். இரவல் குரல் இல்லாமல் இனி நீயே உன் கதாபாத்திரங்களுக்குப் பேசு” என்று என்னை முதலில் டப்பிங் பேசவைத்தது அவர்தான். அவர் தந்த தன்னம்பிக்கைதான் இன்று ‘நாயகி’, ‘கர்ஜனை’ போன்ற ஆக்‌ஷன் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு ஊக்கம்” கொடுத்தது” என்கிறார் த்ரிஷா.

6. பள்ளிக் காலத்தில் தன் அம்மாவின் அம்மாவான சாரதா பாட்டியிடம் வளர்ந்தவர் த்ரிஷா. அவரை ‘டார்லிங்’ என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இன்றும் தன் பள்ளித் தோழிகளுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்களில் ஒருவர் ஹேமா. த்ரிஷாவுக்குத் தன் பாட்டியைப் போலவே கிரகித்துக்கொள்ளும் சக்தி அதிகம். வசனங்களை மனப்பாடம் செய்யாமல் ஒருமுறை சொல்லிக்கொடுப்பதை வைத்தே பேசிவிடுவார். எந்த மொழியில் நடித்தாலும் இதுவரை கதாபாத்திரத்துக்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டு அவர் நடித்ததில்லை. கதை சொல்லும்போது கேரக்டர் பற்றிக் கேட்டுக்கொள்வதோடு சரி.

7. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செனடாப் சாலையை மதியச் சாப்பாட்டு வேளையில் நீங்கள் கடந்துசென்றால் எந்த வீட்டின் வாசலில் பத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் உற்சாகமாகச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனவோ அதுதான் த்ரிஷாவின் வீடு. வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்க வசதியிருந்தும் தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்ப்பதையும், “உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ற நாய்களையே தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று பிரசாரம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கும் த்ரிஷாவிடம் தெரிவித்தால், காணாமல்போன செல்ல நாய்களைக் கண்டுபிடிக்க உதவுகிறார்.

8. மலையாள ரசிகர்கள் த்ரிஷாவை ‘ஜெஸ்ஸி’ என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கே அவர் பிரபலம். இதுவரை மலையாளப் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், பலமுறை தேசிய விருது வென்ற மலையாள இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி ஜோடியாக முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

9. ஆண்டின் 90 நாட்களைப் பல நாடுகளுக்கும் பயணம் செய்வதற்காகவே ஒதுக்கிவிடுகிறார் த்ரிஷா. முன்பெல்லாம் தன் அம்மாவுடன் சுற்றுலா செல்லும் அவர், தற்போது தனியாகப் பயணம் செய்கிறார். நியூயார்க், மியாமி, ப்ளோரிடா ஆகிய இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்ல விரும்புவார். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் பிரபலமான உணவை விரும்பி உண்ணும் த்ரிஷா, அங்கே இந்திய உணவைத் தேட மாட்டார்.

10. சென்னை பள்ளிகள் அளவில் நீச்சல் வீராங்கனையாகத் திகழ்ந்த த்ரிஷா, பல வகை ‘டைவிங்’ முறைகளை அறிந்தவர். தினசரி நீச்சலடிப்பதை முக்கிய உடற்பயிற்சியாக வைத்திருக்கிறார். தற்போது சாகசங்கள் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஸ்கூபா டைவிங் கற்றுக்கொள்ள 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்காக மொரிஷியஸ் நாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.

trisha_friend_3165803a.jpg

தோழியின் பார்வையில் த்ரிஷா

சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் தொடங்கி எத்திராஜ் கல்லூரியில் பி.பி.ஏ. இளங்கலை வரை ஒரே வகுப்பில் படித்து த்ரிஷாவின் நெருங்கிய தோழியாக இருக்கிறார் ஹேமா. தற்போது மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஹேமாவிடம் த்ரிஷாவைப் பற்றிக் கேட்டபோது…

முதல் வகுப்பிலிருந்தே நானும் அவளும் தோழிகள். பள்ளியின் பேண்ட் இசைக் குழுவில் இருந்தோம். 8-ம் வகுப்பு முடித்தபோது பள்ளியின் விளையாட்டு தினத்துக்கு அன்றைய முதல்வர், பள்ளியின் முன்னாள் மாணவி ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக வந்தார். அப்போது த்ரிஷாதான் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாள். ஜெயலலிதா மேடம் இதே பள்ளியில் படித்தபோது எல்லாவற்றிலும் எப்படி ஆல்ரவுண்டரோ அப்படித்தான் த்ரிஷாவும். ஜெயலலிதாவிடம் இருந்த தன்னம்பிக்கையைத் தற்போது த்ரிஷாவிடம் பார்க்கிறேன். திருமண நிச்சயம்வரை சென்றுவிட்டு வேண்டாம் என்று உதறிவிட்டு வர எத்தனை தன்னம்பிக்கை வேண்டும்.

திரைப்படமோ, நண்பர்களோ, தனக்குச் சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் அதிலிருந்து நாகரிகமாக ஒதுங்கிவிடுவாள். நட்புக்கு அதிக மதிப்புக் கொடுப்பவள். சென்னையில் இருந்தால் எனது பிறந்தநாளுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக்குடன் வீட்டின் கதவைத் தட்டுவாள். அவளுடைய வாழ்த்துதான் எனக்கு இன்றுவரை முதல் வாழ்த்தாக இருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு படித்தபோது ஒரு சம்பவம். பள்ளி முடிந்து அருகிலிருக்கும் வீட்டுக்கு நாங்கள் நடந்தே செல்வோம். அப்போது தெருவில் அநாதையாக நிற்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவாள். ஒருமுறை புறா ஒன்று சிறகில் அடிபட்டுப் பறக்க முடியாமல் கிடந்தது. அதைத் தூக்கிவந்து சிகிச்சை அளித்து காயம் ஆறியதும் பறக்கவிட்டாள். நாய்களைத் தத்தெடுத்து வளர்த்தாலும் அவற்றை அடைத்து வைக்கமாட்டாள். சுதந்திரத்தை நேசிப்பவள் த்ரிஷா. மற்றவர்களுக்கும் அதே சுதந்திரத்தைத் தருபவள்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/ஒளிரும்-நட்சத்திரம்-த்ரிஷா/article9707088.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.