Jump to content

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள்


Recommended Posts

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள்

p27-a97f05007375e67b0f66609a532eaf3c92d6ad23.jpg

 

முறையற்ற கட்டுமானப் பணிகளே 5 மாடிக்கட்டடம் இடிந்து விழக்காரணம்; விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல்

(ந.ஜெகதீஸ்)

வெள்­ள­வத்­தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டடம் முற்­றிலும் சட்­ட­வி­ரோத­மான முறையில் அமைக்­கப்­பட்­டதாகும். குறித்த மாடிக்­கட்­டடம் இடிந்து விழுந்­த­தற்கு அதன் முறை­யற்ற கட்­டு­மா­னப்­ப­ணி­களே கார­ண­மாகும். எனவே சம்பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு 

எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

அத்­துடன் மாடிக்­கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள இரு­வ­ரையும் பாது­காப்­பான முறையில் மீட்­ப­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும். இதே­போன்று 1800 சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் அப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்கு எதி­ரா­கவும் விரைவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வெள்­ள­வத்தை சார்லிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வர­வேற்பு மண்­ட­பத்தின் பின்னால் அமைந்­தி­ருக்கும் ஐந்து மாடிக்­கட்­டிடம் இடிந்து வீழ்ந்­த­மைக்­கான கார­ணத்தை தெ ளிவுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஊட­க­வி­ய­லாளர்  சந்­திப்­பொன்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. 

இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், வெள்­ள­வத்தை சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வர­வேற்பு மண்­ட­பத்தின் பின்னால் அமைந்­தி­ருக்கும் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டி­ட­மா­னது முற்­றிலும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அமைக்­கப்­பட்­ட­தொன்­றாகும். 

கடந்த 2009 ஆம் ஆண்டில் வெள்­ள­வத்தை சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரால் குடி­யி­ருப்­புக்­கான அனு­மதி நகர சபை­யிடம் கோரப்­பட்­டுள்ள நிலையில் குடி­யி­ருப்­புக்­கான அனு­ம­தியே நகர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு குறித்த உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த குடி­யி­ருப்பு பகு­தியில் தற்­போது வர­வேற்பு மண்­டபம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த மண்­ட­பத்­துக்­கான மதிப்­பீட்டு அறிக்­கை­யினை நகர சபை­யி­னூ­டாக அவ்­வு­ரி­மை­யாளர் இது­வ­ரையில் பெற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை.

அத்­துடன் குறித்த மண்­ட­பத்­துக்கு பின்னால் நகர நீரை வௌியேற்றும் கால்வாய் அமைந்­துள்­ளது. அக்­கால்­வாய்க்­கு­ரிய பகு­தியும் குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரால் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அப­க­ரிக்­கப்­பட்டு அவ்­வி­டத்­தி­லேயே குறித்த 5 மாடிக்­கட்­டி­டத்தை அமைத்­தி­ருந்தார். இந்த மாடிக்­கட்­டிடம் அமைக்­கப்­ப­டு­வது குறித்து நகர சபையால் அங்­கி­க­ரிக்­கப்­படும் திட்­ட­மிடல் மற்றும் மதிப்­பீட்டு அறிக்­கை­யி­னையோ அல்­லது அதற்­கான அனு­ம­திக்­கான அறிக்­கை­யி­னையோ உரி­மை­யாளர் பெற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. இதே­வேளை குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் தரை­தோற்றம் மற்றும் முறை­யற்ற கட்­டு­மா­னப்­ப­ணி­களே கட்­டிடம் இடிந்து விழுந்­த­தற்­கான கார­ண­மாகும். ஆரம்­பத்தில் 8 மாடிக்­கட்­டி­டத்தை கட்­டு­வ­தற்­காக திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த போதிலும் கீழ் தளங்கள் இரண்­டுடன் 7 மாடி­யுடன் குறித்த கட்­டு­மா­ணப்­ப­ணிகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தக் கட்­டிடம் இடிந்து வீழ்ந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் 23 பேர் காய­ம­டைந்­தனர். அத்­துடன் இன்னும் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள இருவர் குறித்து மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அவர்­களை பாது­காப்­பான முறையில் மீட்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த அனர்த்­த­துடன் தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­படும் குறித்த கட்­டி­டத்தின் உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் அவரை கைது செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கும் பணிப்­பு­ரை­வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த காலத்தில் எமது நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக யுத்தப் பகு­தி­யி­லி­ருந்த மக்கள் கொழும்பில் குடி­யே­றி­னார்கள் அவர்­களை இலக்கு வைத்தே இச்­சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்கள் பல கொழும்பில் அமைக்­கப்­பட்­டன. இவ்­வாறு அமைக்­கப்­பட்ட சட்ட விரோத குடி­யி­ருப்­புக்கள் தொடர்பில் அமைச்­சி­னூ­டாக தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­த­வ­கையில் இவ்­வ­ரு­டத்தின் கடந்த ஜன­வரி மாதம் முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கொழும்பு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில் 1800 சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸா ரினது உதவியினையும் பெற்றுள்ளோம். இதற்கான வேலைத்திட்டமொன்றையும் தற்போது ஆரம்பித்துள்ளோம். இதன் முதற்கட் டமாக கொழும்பில் நீரை வௌியேற்றும் கால்வாய் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். வெள்ளவத்தை, பம்பலப் பிட்டி, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள் ளதுடன் அதனைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் குறித்த வேலைத்திட்டத்தை விஸ்த்தரிக்கவுள்ளோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.